Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்குள்ள  இத்தனை ரகசியம் இருப்பது இப்பத்தான் தெரியுது.

நான் ஊரில் இருக்கும் போது ஒருமுறை புட்டும் புறாக்கறியும் :wub:  சாப்பிட்டனான்


அதுக்குப் பிறகு புட்டே வெறுத்துப் போட்டுது. :)

 

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் குறுகிய காலத்திலேயே எமது உணவுப்பழக்க வழக்கங்களைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்!

 

குறிஞ்சாப் புட்டு, மிகவும் பிரபல்யமானது. பனைமரங்களில் ஒட்டுண்ணியாக வளரும் குறிஞ்சா மரத்தின் இலைகள், நீரிழிவு போன்ற வருத்தங்களுக்கு ஒரு இயற்கை மருந்துமாகும்! மலையான், நீங்களும் எங்கட பக்கமா இருக்கும் போல கிடக்கு! :D

நல்ல பதிவுகள். புங்கை முல்லை இங்கிருக்கா?

இல்லையே, உடையார்!

 

ஊரிலையும் காணக் கிடைக்கேல்லை! 

 

கண்டிருந்தாக் கள்ளமா எண்டாலும், கருவாட்டுக்குள்ள வைச்சு, ஒரு குச்சித் தடியாவது கொண்டு வந்திருப்பனே! :lol:

நான் எதிர்பார்த்ததை விடவும், மிகவும் குறுகிய காலத்திலேயே எமது உணவுப்பழக்க வழக்கங்களைத் தொலைத்து விட்டு நிற்கிறோம்!

 

குறிஞ்சாப் புட்டு, மிகவும் பிரபல்யமானது. பனைமரங்களில் ஒட்டுண்ணியாக வளரும் குறிஞ்சா மரத்தின் இலைகள், நீரிழிவு போன்ற வருத்தங்களுக்கு ஒரு இயற்கை மருந்துமாகும்! மலையான், நீங்களும் எங்கட பக்கமா இருக்கும் போல கிடக்கு! :D

இல்லையே, உடையார்!

 

ஊரிலையும் காணக் கிடைக்கேல்லை! 

 

கண்டிருந்தாக் கள்ளமா எண்டாலும், கருவாட்டுக்குள்ள வைச்சு, ஒரு குச்சித் தடியாவது கொண்டு வந்திருப்பனே! :lol:

 

பொதுவாக பனை மரத்தை சுற்றி வளரும் என்பதற்காக ஒட்டுண்ணி என்று சொல்ல கூடாது. ஆல /அரச மரங்கள் மாதிரி தான் தன தேவைக்குரிய சத்தை மண்ணில் இருந்து தான் எடுக்கும். குருவிச்சை மாதிரி ஒட்டுண்ணி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முசுட்டை இலையையா புங்கையும் உடையாரும் முல்லை என்கிறீர்கள்??

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

 

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

 

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கொடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

 

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

 

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

இது முசுட்டை !

hdmalarnews_48916262389.jpg

 

முல்லை மரம் 

 

mullai_tree_3_67935_200.jpg

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேம்படிக் கூட்டங்களுக்கு ஒரு சாம்பலும் தெரியாது போல கிடக்கு!  :o

 

எனக்கும் வாய்ச்சதும், ஒரு வேம்படி தான்! :D

 

முல்லை வேற,முசுட்டை வேற, சுமோ! முசுட்டை இலை, கோடியில் வளரும். பெரிய வட்டமான இலை!

 

முல்லை இலை, மரத்தில் வளரும்!எல்லாக் கறிகளுக்கும் போடலாம். நல்ல வாசம்!

 

பி.கு: சுமோ. சும்மா பகிடிக்குத் தான் வேம்படியை இதுக்குள்ள கொண்டுவந்தனான்! போர்க்கொடியை, உயர்த்தி விடாதேயுங்கோ! :icon_idea:

 

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

ஒருத்தருக்கும் குறுஞ்சா புட்டு பற்றி தெரியாதோ? (நான் நினைக்கிறன் இது அம்மாவின் சுய கண்டுபிடிப்போ தெரியவில்லை) அரிசியை ஊறவைத்து இடிக்கும்போது, அதனுடன் குறுஞ்சா இலையையும் சேர்த்து இடிக்கவேண்டும். பச்சை நிறத்தில் மா இருக்கும். பின்னர் வழமைபோல் புட்டவித்து, தேங்காய் முதல்பாலுடன் சீனியும் சேர்த்து சாப்பிடவேண்டும் கைப்பாகத்தான், ஆனால் அந்தமாதிரி இருக்கும்.

 

இப்போது நினைவு வருகிறது, எனது மாமாவுக்கு சலரோகம் இருந்தது. அவருக்கு குறிஞ்சா இல்லை புட்டு அவித்து கொடுப்பார்கள்.

இதில் பன்னம் பிட்டு பற்றிச் சொல்லப்பட்டிருக்கு. இஸ்வும் ஒரு நோய்க்கு மருந்தாகத்தான் சொல்லப்பட்டிருக்கு. 

 

http://www.yarlmann.lk/viewsingle.php?id=535



இது மேலே சொல்லப்பட்ட பிட்டுகளில் ஒன்றுதானா தெரியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரும் குரக்கன் புட்டை பற்றி  இதுவரையில் பெரிதாக எழுதவில்லை.

வெளியே வந்த பிறகு அது ஒரு நாளும் சாப்பிட்டு இல்லை.

ஆரம்பத்தில் சீனி தேங்காய் பூவுடன் மட்டும் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

அதன் பின்னர் மரவள்ளிகிழங்கு கறியுடன் சாப்பிட பிடிக்கும்.

பின்னர் பழம் சோறும் பழங்(மரவள்ளி கிழங்குதான் அதிகம்)கறியுடனும் குரக்கன் புட்டை சேர்த்து சாப்பிடுவதுண்டு.

அது நல்ல அருமையாய். ஆனால் சப்பிட்டுவிட்டு பகல் பகலாக நிந்திரை கொள்வதுண்டு. :lol:

 

நானும் குரக்கன்புட்டு சாப்பிட்டு வளர்ந்தவன்......எங்கடை வீட்டை குரக்கன்புட்டு எண்டால் நல்ல முட்டுக்காய் தேங்காய்த்துருவலோடை சாப்பிடுவம்......அந்தமாதிரியிருக்கும் :wub: ......நாங்கள் ஊரிலை காணிபூமி,தோட்டம்துரவு,நல்ல சொத்துபத்தோடை வாழ்ந்தனாங்கள். <_<

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

ஜேர்மனியிலிருந்து சென்றிருந்த திருமதி. சந்திரவதனா செல்வக்குமார் அவர்கள்தான் இதைப் பற்றி எழுதியிருந்தார்.  அவரின் வன்னி பயணக் கட்டுரையை 2004இல் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

புட்டு திரி நல்லாதான் ஓடுது, யாராவது டுபாய் புட்டு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா?

 

2002 க்கு பிறகு போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு போனவர்களுக்கு இராபோசன விருந்தில் இந்த புட்டு பரிமாறியதாக போய் வந்தவர்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு  எழுதிஇருந்தார்கள்.கருத்துகளம் 1 அல்லது கருத்துகளம் 2 இல் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

 

 

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரவதனா அக்காவின் பதிவு பின்வரும் இணைப்பில் உள்ளது

http://www.yarl.com/node/198

 

இணைப்புக்கு நன்றி கிருபன்.. இன்றுதான் படித்தேன். கருத்து எழுத விருப்பம். ஆனால் எழுதவில்லை.. புட்டு திரி திசைமாறிவிடும்.

சந்திரவதனா அக்கா பயணத்துடன் நிறுத்தி விட்டா. தெரிந்தவர்கள் அது என்ன டுபாய் புட்டு என்று எழுதுங்களேன்.

என்னதான் வேம்படியை இழுத்தாலும் அசர மாட்டமெல்லோ நாங்கள். :D  இங்கு கடைகளில் குறிஞ்சா இல்லை விற்கின்றார்கள் தானே?

 

 

வேம்படிப் பெட்டையளைச் சொல்லி வேலையில்லை, வாய்காறக் கூட்டம்., அதோடை பட்ட அட்டகாசங்கள்!! :lol:  :lol:   அது சரி இல்லையை எங்கப்பா விக்கிறார்கள்?

நேற்றுப் பிட்டும் வெந்தயக் குழம்பும் செய்து சாப்பிட்டேன், நல்லாய் தான் இருந்தது!

பிட்டுக்கு பலாப்பழம்/ மாம்பழம்/ வாழைப்பழம் நல்லாய் இருக்கும்!

ஒடியல்மா புட்டு செய்முறை. கூகுள் புண்ணியத்தில..
 
அவர்கள் நொருவல் செத்தல் மிளகாய்த்தூள் போட்டு மாவைக் குழைப்பதைப்பற்றிச் சொல்ல வில்லை. மாவுடன் நொருவல் செத்தல் மிளகாய் சிறிதளவு எள்ளு என்பன போட்டுக் குழைக்கலாம்.
 
 

இடியப்பமும் சொதியும் ( முட்டைச் சொதி) அல்லது இடியப்பமும் உருளைக்கிழங்குக் குழம்பும் நல்ல சாப்பாடு  ஆனால் புட்டு மாதிரி நிண்டு பிடிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

 

 

உந்த டுபாய் புட்டுச் செய்முறையைப் பார்க்க ஒரு மாதிரி இருக்கு.

நன்றி சுமே அக்கா. அது புட்டு இல்லை என்பதால் இங்கே வருவது பொருத்தமில்லைத்தான். முயற்சி பண்ணிப்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பாத்தாப் 'புட்டுக் கழி' க்கும் ரெசிப்பி வரும்போல கிடக்கு, சுமோ! :D

 

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

 

  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக் களி எண்டும் ஒரு அயிட்டம் ஊரில இருக்கு. அனேகமாக இதை சில்லுக் களி என்றுதான் கூப்பிடுவார்கள். புட்டு மாதிரி குரக்கன் மாவில் அவித்து, கொதிக்கும் தேங்காய்ப்பால் + சீனி கலவையில் போட்டு எடுப்பது.

 

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

 

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

 

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

  • கருத்துக்கள உறவுகள்

டுபாய்  பிட்டு நான் இருமுறை உண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் புட்டு இல்லை பெயர் மட்டும் பிட்டு என்பதால் எழுதவில்லை.

தேவையான பொருட்கள்

நூடில்ஸ் ,கரட், குடமிளகாய், உருளைக் கிழங்கு,பிஞ்சுப் பச்சைப் பட்டாணி, ரவை, தேங்காய்ப்பூ.

முதலில் மரக்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டி அளவான உப்புச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். நூடிலையும் அவித்து தனியாக எடுக்கவும். அவிக்கும் போது சிறிது உப்புப் போட்டு அவிக்கவும். பின்னர் நூடிலையும்  சூட்டுடன் ரவையுள் கொட்டி தேங்காய்ப் பூவும் கலந்து வைத்துக் கொண்டு குழல் பிட்டு அவிக்கும் குழலில் போட்டு அவித்து எடுக்கவேண்டும். என்ன குழல் பிட்டுக்கு மாவுக்கிடையில் தேங்காய்ப் பூவைப் போடுவது போல், தேங்காய்ப் பூவுக்குப் பதிலாக மரக்கறிகளைப் போட்டு நூடில் கொஞ்சம் போட்டு  இப்படி மாறிமாறிப் போட்டு அவிக்கவேண்டும் . உடனே உண்ணச் சுவையாக இருக்கும். இதற்கு நல்ல ஆட்டிறைச்சிப் பிரட்டல் அல்லது டெவில்ட் மட்டன் என்றால் சுவையாக இருக்கும்.

 

டுபாய் புட்டு சமாதான காலத்திலை முக்கியமான  இரண்டுபேரோடை மட்டும்தான் சாப்பிடலாம். அதுவும் நீங்கள் இரண்டுதரம்  சாப்பிட்டிருக்கிறீங்கள். :lol: :lol:

நீங்க சொல்லுறது சரிதான், தும்ப்ஸ்!

 

ஆனால், இதுக்குள்ள இன்னொரு விசயமும் இருக்கு! :o

 

அது சின்னப்பிள்ளயளுக்கு விளங்காது! :D

 

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கைக்கு வேறை வேலையில்லை.  இந்தத் திரியின் திசையையே அது மாற்றப் போகிறது.

 

புட்டுத் திரியை மற்றத் திரியா மாத்த நாங்கள் விடமாட்டமெல்லே தமிழச்சி. :D  வரவுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.