Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்மை குறைபாடுள்ள கணவன் மீது மனைவி போலீசில் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரோடு: ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Erode.jpg

ஈரோட்டை சேர்ந்தவர் குமார் வயது 32. இவரது மனைவி பெயர் ஸ்ரீவித்யா 24. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. முதலிரவு அன்று குமார் ஸ்ரீவித்யாவை புறக்கணித்துள்ளார். கூச்ச சுபாவத்தால் தான் குமார் இப்படி நடந்து கொள்கிறார், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் இரவில் ஸ்ரீவித்யாவை தினமும் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

இதில் வெறுத்துப்போன ஸ்ரீவித்யா ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீவித்யாவின் பெற்றோரும் குமாரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு குமார், எனக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லை என்று தெளிவாக கூறி இருக்கிறார்.

இது தங்களது மகளின் வாழ்க்கை பிரச்சனை என்பதால் குமாரை ஈரோட்டில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர் ஸ்ரீவித்யாவின் பெற்றோர். அங்கே குமாரை பரிசோதித்த மருத்துவர் குமாருக்கு ஆண்மை குறைபாடு நோய் உள்ளதாக கூறி இருக்கிறார்.

 
இதை தொடர்ந்து, ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன், அவரது பெற்றோர் மற்றும் கல்யாணத் தரகர் உள்பட நான்கு பேர் மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி.யிடம் ஸ்ரீவித்யா புகார் கொடுத்துள்ளார்.

ஈரோடு எஸ்.பி. பொன்னி உத்தரவின் பேரில் ஈரோடு மகளிர் போலீசார் உண்மை நிலை என்ன என்பதை விசாரித்து வருகிறார்கள்.

ஜி.பழனிச்சாமி

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14980

 

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, ஏன் குமாரும், ஸ்ரீ வித்யாவும் வெள்ளையாக இருக்கிறார்கள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு.. அன்பின் பாற்பட்டது.. புனிதமானது என்பவர்கள்.. இந்த உடல் இணைவுத் தாகத்தோடு அலையும் பெண்களைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்..???! அதுவும் இன்றைய உலகில்.. குழந்தை வேணும் என்றால்.. பல வழிகளில் பிறப்பிக்க வழி இருந்தும்... அதை நாடாமல்.. ஏன் காவல்துறையை.. நீதிமன்றை நாடுகிறார்கள்...????! ஆக திருமணம் என்பது றோட்டில நாய் செய்யுறதை மனிசனை கட்டில செய்ய வைக்கிற ஒரு கீழ்த்தரமான சடங்கு.. என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்..! அதன் பிறகு தான் மிச்சம். இதெல்லாம்.. புனிதம்...???!  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

.....திருமணம் என்பது றோட்டில நாய் செய்யுறதை மனிசனை கட்டில செய்ய வைக்கிற ஒரு கீழ்த்தரமான சடங்கு.. என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்..! அதன் பிறகு தான் மிச்சம். இதெல்லாம்.. புனிதம்...???

 

திருமணத்திற்கு இப்படியும் ஒரு விளக்கமா? :huh:

நீவீர் என்றும் வாழ்க! :)

 

 

அது சரி, ஏன் குமாரும், ஸ்ரீ வித்யாவும் வெள்ளையாக இருக்கிறார்கள்? :D

 

அது ஃபேர் & லவ்லியை தேய்க்காமல், தினமும் பற்பசையென நினைத்து உண்டதால் வந்த வினை! :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

 

இப்ப தான் விளங்குது ஏன் கலியாணம் வேண்டாம் எண்டு இருக்கிறியள் எண்டு? நெளிய வைக்கும் வியாக்கியானம் வேற கொடுக்கிறீர்கள்.

 

இவர்கள் கலியாணத்தினை வியாபாரமாக்கி தமது நோயினை மறைத்து, கொளுத்த சீதனம் வாங்கி கலியாணம் செய்வார்கள்.  பெண் வாழ்நாள் முழுதும் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் எப்படி?

 

எந்த காலத்தில் இருகின்றீர்கள்?

 

கடையில் வாங்கிய பொருள் ஏமாத்தி விற்கப் பட்டிருந்தால், பாவம், என்ன கஷ்டமோ,  காசை வைத்திருக்கட்டும் என்று விடுவீர்கள் போல இருகின்றதே.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

 

எந்த காலத்தில் இருகின்றீர்கள்?

 

 

 

 

 

வைபரேற்றர்களும்.. ஐ வி எவ்வும் பிரபல்யமாகியுள்ள காலத்தில் வாழ்கிறோம்.

 

இதில என்ன நெளிய இருக்குது. அதில சொன்னதைத் தானே திருமணம் என்ற பெயரிலும்.. செய்ய எதிர்பார்க்கிறாங்க...!

 

அந்த ஆணுக்குள்ளது நோய் அல்ல. குறைபாடு. அதனைக் கடந்து அவருக்கும் ஒரு உள்ளம் இருக்குது.. அங்கு பல வித விருப்பங்கள் இருக்கலாம். வெறும் உடலிணைவு மட்டும் தான் திருமணம் என்றால்.. நாய்க்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு..????! அதைச் சொல்லிட்டு எங்களைத் திட்டுவது நல்லம்..??!

 

உலகத்தில் எது எதற்கோ எல்லாம் உரிமை கேட்கின்ற நாங்கள்... பாலியல் குறைபாடுள்ள மனிதர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதை எப்படியும் நியாயப்படுத்த முடியாது..! அதுவும் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்திக்க இன்று மருத்துவ உலகத்தில் பல வசதிகள் உள்ள நிலையில்....!

 

இதனை மருத்துவத்துறை சார்ந்தவன் என்ற வகையில் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இன்னும் பழைய.. காலத்தில் வைத்து திருமண பந்தங்களை நோக்கக் கூடாது. அதனைக் கடந்து நவீன அறிவியல் மாற்றங்களை உள்வாங்கி சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு அப்பால் மனித மனங்களை உணர்ந்து புரிந்து வாழ முனைவது நன்று..! :):icon_idea:

Edited by இணையவன்
படம் நீக்கப்பட்டுள்ளது.

நெடுக்கர்,

 

இப்ப தான் விளங்குது ஏன் கலியாணம் வேண்டாம் எண்டு இருக்கிறியள் எண்டு? நெளிய வைக்கும் வியாக்கியானம் வேற கொடுக்கிறீர்கள்.

 

இவர்கள் கலியாணத்தினை வியாபாரமாக்கி தமது நோயினை மறைத்து, கொளுத்த சீதனம் வாங்கி கலியாணம் செய்வார்கள்.  பெண் வாழ்நாள் முழுதும் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றால் எப்படி?

 

எந்த காலத்தில் இருகின்றீர்கள்?

 

கடையில் வாங்கிய பொருள் ஏமாத்தி விற்கப் பட்டிருந்தால், பாவம், என்ன கஷ்டமோ,  காசை வைத்திருக்கட்டும் என்று விடுவீர்கள் போல இருகின்றதே.

 

"இது தங்களது மகளின் வாழ்க்கை பிரச்சனை என்பதால் குமாரை ஈரோட்டில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர் ஸ்ரீவித்யாவின் பெற்றோர். அங்கே குமாரை பரிசோதித்த மருத்துவர் குமாருக்கு ஆண்மை குறைபாடு நோய் உள்ளதாக கூறி இருக்கிறார்."

 

பொடியன் மாமா, மாமி கேட்க ஓம் என்று  மருத்துவரிடம் போய் இருக்கிறான். அதனால் முழுக்க முழுக்க மறைபடாத சில விபரங்கள் தாய் தகப்பனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க சந்தர்பம் இருக்கு. ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையோடு மன சாட்சி இல்லாமல் விளையாடிய அவர்களைத் தான் பொலிசு  விசாரிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வைபரேற்றர்களும்.. ஐ வி எவ்வும் பிரபல்யமாகியுள்ள காலத்தில் வாழ்கிறோம்.

 

 

அந்த ஆணுக்குள்ளது நோய் அல்ல. குறைபாடு. அதனைக் கடந்து அவருக்கும் ஒரு உள்ளம் இருக்குது.. அங்கு பல வித விருப்பங்கள் இருக்கலாம். வெறும் உடலிணைவு மட்டும் தான் திருமணம் என்றால்.. நாய்க்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு..????! அதைச் சொல்லிட்டு என்னைத் திட்டுவது நல்லம்..??!

 

:):icon_idea:

 

:unsure:  :blink:  :unsure:

 

உங்கள் கருத்தில் நீங்களே முரண் படுகின்றீர்களே.

 

வைபரேற்றர்களும்.. ஐ வி எவ்வும் குறித்தும் பேசுகின்றீர்கள். அந்த ஆணின் மனதினைப் குறித்தும் பேசுகின்றீர்கள்.

 

நோய் இருந்தால் முதலிலேயே சொல்ல வேண்டியது தானே. அந்த பெண், அந்த ஆளை வைத்துக் கொண்டு எந்தக் கடையில் வைபரேற்றர்களும் வாங்கலாம், எந்த வைத்தியசாலையில் டாக்குத்தர் அய்யா நெடுக்கர் இருப்பார்,  ஐ வி எவ்வும் செய்து கொள்லாம் என்று ஐடியா போட உதவி இருக்கும், இல்லையா.

 

தெரிந்து கலியாணம் செய்து, பின் விவாகரத்து கோரினால் நீங்கள் சொல்வது சரியாகலாம்.

அவருக்கு நோயாம், உள்ளமாம், அதற்கு அந்த அப்பாவிப் பெண்ணா பலி?

 

நாய்களை இழுகின்றீர்கள். அதுகள் இடையேயும், பலம் உள்ள நாய் தான் பெண் நாயினை அடைய முடியும் என்பதனை அறிவீர்களா.

 

பலவீனமான, நாய்க்கு உள்ளம் இருக்கிறது. பெண் நாய் அனுசரித்து ஏனைய நாய்களை மறுக்க வேண்டும் என்று சொல்வீர்களோ?

 

:icon_mrgreen:  :D  :icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:  :blink:  :unsure:

 

உங்கள் கருத்தில் நீங்களே முரண் படுகின்றீர்களே.

 

வைபரேற்றர்களும்.. ஐ வி எவ்வும் குறித்தும் பேசுகின்றீர்கள். அந்த ஆணின் மனதினைப் குறித்தும் பேசுகின்றீர்கள்.

 

நோய் இருந்தால் முதலிலேயே சொல்ல வேண்டியது தானே. அந்த பெண், அந்த ஆளை வைத்துக் கொண்டு எந்தக் கடையில் வைபரேற்றர்களும் வாங்கலாம், எந்த வைத்தியசாலையில் நெடுக்கர் இருப்பார்,  ஐ வி எவ்வும் செய்து கொள்லாம் என்று ஐடியா போட உதவி இருக்கும், இல்லையா.

 

தெரிந்து கலியாணம் செய்து, பின் விவாகரத்து கோரினால் நீங்கள் சொல்வது சரியாகலாம்.

அவருக்கு நோயாம், உள்ளமாம், அதற்கு அந்த அப்பாவிப் பெண்ணா பலி?

 

நாய்களை இழுகின்றீர்கள். அதுகள் இடையேயும், பலம் உள்ள நாய் தான் பெண் நாயினை அடைய முடியும் என்பதனை அறிவீர்களா.

 

பலவீனமான, நாய்க்கு உள்ளம் இருக்கிறது. பெண் நாய் அனுசரித்து ஏனைய நாய்களை மறுக்க வேண்டும் என்று சொல்வீர்களோ?

 

:icon_mrgreen:  :D  :icon_mrgreen:

 

நாங்க எங்கும் சுய முரண்படவில்லை. வெறும் உடல்கலப்பு அல்ல திருமணம் பந்தம் என்பது. அப்படி என்றால் பெண்கள் உடல் உறவுக்கான பல தகுதிகளை ஆண்களுக்கு முதலே இழக்கும் நிலையில் அவர்களை திருமணமான ஆண்கள் கழற்றிவிட்டுக் கொண்டு எல்லோ இருக்கனும்..??!

 

திருமணம் என்பது உடல் கலப்புக்கு அப்பாலும் சென்று ரசிக்கப்பட வேண்டிய வாழப்பட வேண்டிய விடயம் என்றே சொல்கிறோம். குறைபாடுள்ளவர்கள்.. குழந்தைகள் வேண்டும் எனும் போதோ.. பாலியல் இச்சைக்கு தீர்வு வேணும் எனும் போதோ.. அதை குறையாக பார்க்காமல்.. நிவர்த்திக்க உள்ள மருத்துவத்தை நாட வேண்டும்.

 

பாலியல் நோய்கள் வேறு. குறைபாடுகள் வேறு. நீங்கள் இரண்டுக்கு இடையேயும் உள்ள வேறுபாட்டை உள்வாங்காமல் எழுதுகிறீர்கள். பாலியல் குறைபாடு ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களிலும் நிகழக் கூடியது. இங்கு அந்த ஆணின்  இடத்தில்  ஒரு பெண் இருந்திருந்தாலும் இதையே தான் நாங்க வலியுறுத்தி.. இருப்பம். :)

 

எங்க ஊரில தெருவுக்கு ஒரே ஒரு ஆண்.. குட்டை நாய் தான். அதன் பலம் பலவீனம் எல்லாம் குட்டிகளான போது தெரியவில்லை..!

 

பாலியல் என்று வரும் போது நாங்கள் இன்னும் துண்டுத் தசைகளை ஒட்டியே சிந்தனைகளை சிந்தவிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகம் அதனை எல்லாம் கடந்து போய்க்கிட்டு இருக்குது. :lol::D

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

 

உங்கட ஒழுங்கைகில இருந்தால் இரண்டு பெட்டை நாய்கள் பிடிச்சு தருவியளே.

 

உங்கள் அறிவுரைகளை கேட்கும் போது, பேசாமல் நாய்களுடன் செட்டில் பண்ணலாம் போல கிடக்குது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

 

உங்கட ஒழுங்கைகில இருந்தால் இரண்டு பெட்டை நாய்கள் பிடிச்சு தருவியளே.

 

உங்கள் அறிவுரைகளை கேட்கும் போது, பேசாமல் நாய்களுடன் செட்டில் பண்ணலாம் போல கிடக்குது.

 

இதனை நீங்கள் நாய் பிடிக்காரனிடம் சமர்ப்பித்தால் பயன் கிடைக்கலாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீவித்யா அட்டு ஃபிகராக இருந்திருந்தால் குமாருக்கு கிளர்ச்சி ஏற்படாமல் போயிருக்கலாம் அல்லவா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மைக் குறைபாடு என்றால்... என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்மைக் குறைபாடு என்றால்... என்ன?

 

 

 இரவில் நல்ல நித்திரை அடிப்பது. :lol:  :lol:

 இரவில் நல்ல நித்திரை அடிப்பது. :lol:  :lol:

 

தம்பியோ? அண்ணையோ? அலாரம் வாங்கி வைத்துக்கொண்டாலும் எழுந்திரிக்க கஸ்டமாக இருக்குமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு.. அன்பின் பாற்பட்டது.. புனிதமானது என்பவர்கள்.. இந்த உடல் இணைவுத் தாகத்தோடு அலையும் பெண்களைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்..???! அதுவும் இன்றைய உலகில்.. குழந்தை வேணும் என்றால்.. பல வழிகளில் பிறப்பிக்க வழி இருந்தும்... அதை நாடாமல்.. ஏன் காவல்துறையை.. நீதிமன்றை நாடுகிறார்கள்...????! ஆக திருமணம் என்பது றோட்டில நாய் செய்யுறதை மனிசனை கட்டில செய்ய வைக்கிற ஒரு கீழ்த்தரமான சடங்கு.. என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்..! அதன் பிறகு தான் மிச்சம். இதெல்லாம்.. புனிதம்...???!  :lol::D

 

உங்கட கருத்துப்படி பார்த்தால் நெடுக்ஸ்,திருமணம் நடந்தபின் கட்டிய பாவத்துக்காக அத்தனையும் தாங்கிக்கொண்டு ஒரு பெண் இருக்கவேண்டுமென்கிறீர்களா???? அல்லது அன்பின் பாற்பட்டது ஆட்டுக்குட்டிக் கதை எல்லாம் மனதில் பதித்துக்கொண்டு கேடுகெட்ட ஆண்கள் தங்களுக்குச் சார்பாக, பெண்ணை அடக்கிவைக்க ஏற்படுத்திய அடக்குமுறைக்குள் அமிழ்ந்து போகவேண்டும் என்கிறீர்களா????. அன்பு இருக்கலாம். ஆனால் செக்ஸ் இல்லாது அன்புமட்டும் செலுத்திக்கொண்டு ஒரு பெண் ஒருவனுடன் இருக்க வேண்டுமெனில்,அப்படி ஒரு ஆண் எண்ணுவானாயின், அவன் சுயநலம் பிடித்தவனாகவே இருப்பான். அது நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காது. சாதாரண மனிதர்களுக்கு செக்சும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அது தேவையும் இல்லை. அப்போது அன்பாக ஆண்களுக்குச் சாகும் வரை சேவகம் செய்து மாள்வதே பெண்ணின் நிலை. செக்ஸ் உறவு தேவையில்லை அன்பு மட்டும் செலுத்திக்கொண்டு வாழலாம் என்றால் மேலே சொன்னவரின் குறைதான் அவருக்கும். இதே பெண் தனக்கு விருப்பம் இல்லை என்று சொன்னால் நீங்கள் அந்தப் பெண்ணை வைத்துக் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பீர்கள் என்று கூறுவீர்களானால் ஒன்று நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம் அல்லது உங்களுக்கும் ஏதும் பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தமே ஒழிய வேறொன்றுமில்லை. எப்பதான் திருந்தப் போறியளோ தெரியவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இங்கே சில பேருக்கு திருமண உறவு என்டால் என்ன என்பது விளங்கவில்லை.செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை ஆனால் திருமணத்தின் ஒரு முக்கிய அங்கமே செக்ஸ் தான்.ஒரு ஆண்,ஒரு பெண்ணோடு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாமல் ஒரு வீட்டில் நட்பாக இருக்கலாம் அதற்கு திருமணம் என்ட சடங்கு தேவையில்லை.மேலும் திருமணம் முடிப்பது தங்கட வம்சத்தை விருத்தி செய்வதற்கு தான்.
 
இந்த ஆணுக்கு திருமண வாழ்க்கையில்,உடலுறவில் விருப்பம் இல்லா விட்டால் எதற்காக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்தவர்?...தன்னில் குறை இருக்குது என தெரிந்தவர் திருமணம் முடிக்கும் முன்னர் வைத்தியரைக் கொண்டு அதை நிவர்த்தி செய்து விட்டு பின்னர் திருமணம் செய்து இருக்க வேண்டும் அல்லது பெண்ணிடம் எனக்கு இப்படி ஒரு குறை இருக்குது என்னை திருமணம் செய்ய சம்மதமா என கேட்டு அவர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்க வேண்டும்.
 
இதையே ஒரு பெண்,ஆணுக்கு செய்திருந்தால் பெட்டையள் எப்படி எல்லாம் பெடியங்களை ஏமாத்திறவை என்று தலைப்பை கொண்டு வந்து போட்டுட்டு குய்யோ,முய்யோ என்று கத்தி இருப்பினம்.சுமோ சொன்ன மாதிரி தாங்கள் செக்ஸ்க்காக திருமணம் செய்யவில்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் தங்களைத் தாமே ஏமாற்றுகின்றனர்.
  • கருத்துக்கள உறவுகள்

ரதி,
பெண்களில்... சங்கினி, மங்குனி, பங்குனி என்னும்... வகை உள்ளது போல்..
ஆண்களிலிலும் பல வகையுண்டு. சிலர் அமுசடக்கியாய் இருந்து காரியத்தை சாதிப்பார்கள். சிலர் வேட்டைக்காரன் மாதிரி, இருந்து... துவக்கை தூக்கப் பலமில்லாதவர்களாக இருப்பார்கள்.
என்ன இருந்தாலும்... அந்த ஆண், செய்தது குற்றமே....

 

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

பெண்களில்... சங்கினி, மங்குனி, பங்குனி என்னும்... வகை உள்ளது போல்..

ஆண்களிலிலும் பல வகையுண்டு. சிலர் அமுசடக்கியாய் இருந்து காரியத்தை சாதிப்பார்கள். சிலர் வேட்டைக்காரன் மாதிரி, இருந்து... துவக்கை தூக்கப் பலமில்லாதவர்களாக இருப்பார்கள்.

என்ன இருந்தாலும்... அந்த ஆண், செய்தது குற்றமே....

 

அதென்ன பிரிவு சங்குனி,மங்குனி,பங்குனி தயவு செய்து விளக்கம் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன பிரிவு சங்குனி,மங்குனி,பங்குனி தயவு செய்து விளக்கம் தேவை

 

முருங்கக்காய் புகழ் பாக்கியராஜ் படத்தில் வந்த வசனம் என்று நினைக்கின்றேன்.

இதுக்கு, விளக்கம் கேட்டு, எனது பொன்னான.. நேரத்தை வீணாக்காதீர்கள். :D  :lol:

இந்தப் பெண்ணிற்க்கு முதலில் வாழ்த்துக்கள். பலருக்கு முன்மாதிரியாக இவர் இருக்கின்றார்.

ஆணாதிக்கம் தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் அன்பு பாசத்தை கையில் எடுக்கின்றது. அதே அன்பு பாசத்தை கையில் எடுத்து வரதட்சணை வாங்காமல் கலியாணம் கட்டுறது? சாதிபார்க்காமல் கலியாணம் கட்டுறது? ஊனமுற்றவர்களை கலியாணம் கட்டுறது?

பிள்ளை இல்லாட்டில் இந்தச் சமூகம் மலடி என்கிறது. முழுவியளத்துக்கு உதவாது என்கிறது. சடங்குகள் நடக்கும் போது முன்னுக்கு வரக்கூடாது என்கிறது. அப்போதெல்லாம் அன்பு பாசம் மனிதநேயம் எங்கே போகின்றது?

ஒரு பெண் தான் திருமணமாகி தாயகாவேண்டும் என்று கனவுடன் இருந்தால் அது அவளின் உரிமை. ஆண்மைக்குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தது குற்றமே. அவ் உரிமையை அப் பெண்மணி விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஆண் நேர்மையாக இருக்கத் தவறிவிட்டார் அது குற்றமே.

வரதட்சணைக் கொடுமையால் வருடத்திற்கு லட்சத்துக்குமேல் பெண்சிசுக்கள் கொல்லப்படுகின்ற சமுதாயத்தில், பிறந்த பெண் குழந்தைகளை வீசுவதும் கொல்லுவதும் விற்பதும் என்ற நிலை உள்ள சமுதாயத்தில், ஆணாதிக்கம் தன்னை மனிதநேயம் அன்பு பாசம் கொண்டு நியாயப்படுத்துவதை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்கமுடியும்? நாகரீகமடையமறுக்கும் ஆணாதிக்க காட்டுமிராண்டி சமுதாயத்துக்கு இப்படிப்பட்ட பெண்களே மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு எல்லாத்தையும் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பார்த்துப் பழகிவிட்டது. அதிலும் சாண்டமாருதனுக்கு இப்பதான் விடிஞ்சே இருக்குது. ஏனெனில் காலம் காலமாக விவாகரத்து வழக்குகளில் இரு பாலாரும் விவாகரத்து வாங்க இதனைத் தான் மூல காரணமாகச் சொல்லி வருகின்றனர். அவருக்கு ஆண்மை இல்லை. இவாக்கு பெண்மை இல்லை என்று கொண்டு.

 

அதிலும்.. நம்ம சுமே அக்காட பகிடி என்னென்னா.. திருமணம் என்பதன் பெயரால் ஆண் பெண்ணுக்கு கட்டுப்பட்டு அந்தப் பெண்ணுடைய தேவைகளுக்கு செயற்படும் ஒரு பாலியல் இயந்திரமாக இருக்க வேண்டுமாம். அப்புறம் அதன் தேவை முடிந்ததும்.. பெண்கள் செய்யுற சேவகத்திற்கு கூலியாக அடங்கிப் போகனுமாம். இவர்கள் எல்லாம் ஆணாதிக்கம் பற்றிக் கூச்சல் போடுவது தான் வேடிக்கையாக உள்ளது.

 

மேலும் இன்னும் சிலர் திருமணம் என்பதே குழந்தை பெற்றுக் கொள்வதை தான் அடிப்படையாகக் கொண்டுள்ளதாம். அதாவது நாய் குட்டி போடுவது.. மனிதன் குழந்தை பெற்றுக் கொள்வது.. இரண்டும் ஒன்று தான். இனப்பெருக்கம் தான். குழந்தை பெற்றுக்க தான் இப்ப எத்தனையோ வழிமுறை இருக்கே.. அதற்கும் ஆண்மைக்கும் என்ன தொடர்பு..??! ஆண்மை என்பது ஒரு பெண்ணின் பாலியல் இச்சையை அடக்கும் வழிமுறை. அது கூட ஒரு அடக்குமுறை தானே...! அந்த அடக்குமுறையை மட்டும் பெண்கள் சத்தப்படாமல் அங்கீகரித்துக் கொண்டு.. மிச்ச சொச்சத்திற்கு ஆண்களை திட்டுவது எந்த வகையில் நியாயம்..!

 

ஆண்மைக் குறைபாடுள்ள மனிதனின் வாழ்க்கை அப்ப என்ன அதோ கதிதானா..???! [இதற்காக இதனை பற்றிக் கதைப்பதற்காக கதைப்பவர்கள் எல்லாம் ஆண்மைக் குறைபாட்டுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற சுமே அக்காவின் அனுமானம்.. மிகவும் மோசமான பிற்போக்குத்தனமானது.] அவன் ஒரு திருமண பந்தத்தில் வாழ்க்கையில் ஒரு துணைக்கா..அன்புக்காக.. பாசத்திற்காகக்.. கூட இணையக் கூடாதா...???! உடல்கலப்பில் தானா.. அன்பும்.. பாசமும் பிறப்பெடுக்கிறது.. இல்லையே..??!

 

ஓரினச்சேர்கையாளர்களின் உரிமைக்காக வரிந்து கட்டும் கூட்டம்.. ஆண்மைக் குறைபாடுள்ளவர்களின் வாழ்க்கை அதோ கதியாவதில்.. சரியான அக்கறை ஏன் காட்டுகின்றனர்..! பெண்ணின் பாலினக் கிளர்ச்சியை அடக்க எத்தனையோ நவீன வழிமுறைகள் இருக்க.. ஏன் அதனை ஒரு ஆண்மைக் குறைபாடுள்ள மனிதன் பயன்படுத்தி.. தான் அன்புகாட்டி வாழ விரும்பும் பெண்ணுடன் வாழக் கூடாது..???!

 

எனக்குப் புரியேல்ல.. இங்குள்ளவர்கள் பேசும்.. புரட்சிவாதங்களும்.. மனிதாபிமானமும்..??!

 

இது அந்தப் பெண்ணின் முற்றிலும் ஒரு அறியாமை சார்ந்த முடிவு.. என்றால் மிகையல்ல. அதுவும் நவீன மருத்துவம் பற்றிய அறிவற்ற ஒரு முடிவு..! அவர் காவல்துறையை அணுக முதல்.. அந்த ஆணின் குறைப்பாட்டை தீர்க்க வழி இருக்கா அல்லது அதனை  வேறு ஒழுக்கமான வழிகளில் கடக்க முடியுமா என்று யோசிச்சிருக்கனும். அந்த நிலைக்குப் போகாமல்.. உடனவே காவல்துறையை தேடிப் போவது.. நிச்சயம்.. ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல..! அதுவும் இன்றைய காலத்தில்..! :icon_idea::)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், ஏன் ஒருவருக்கு ஒருவர் அடங்க வேண்டும். இருவருமே சமமாய் மதித்து நடந்தால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லையே. ஆண்மைக் குறை பாடுள்ள ஒருவர் வாழக் கூடாது என்று இல்லை. அவர் தனக்கு ஏற்ற தன்னைப் போல் குறை உள்ள பெண்ணை ஏற்று வாழலாம். பொய் சொல்லி ஒரு பெண்ணை ஏமாற்றுவது குற்றம். குறை இருப்பவர் குறை அற்ற பெண்ணில் ஆசை கொள்வதும் தவறு. பெண்களின்  இளகிய மனதை தவறாகப் பயன்படுத்தி ஆண்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தக் கூடாது.என்ன தான் நவீன மருத்துவம் வந்துவிட்டாலும் ஒன்றாலும் குணமாக்க முடியாத எத்தினை விடயங்கள்  உள்ளன. அந்தப் பெண் திருமணமான அடுத்த னாலேய புகார் கொடுத்தார். இல்லையே. அங்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாமல் நாம் மேற்கொண்டு அதுபற்றி விவாதிப்பது பயனற்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் ஒரு செயல் வீரர் அவர் கட்டாயம் இப்படி ஒரு குறைபாடுள்ள பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து தான் ஒரு சொல் வீரன் இல்லை செயல் வீரன் என நிரூபீப்பார்
 
வருங்கால தலைமுறைக்கு அவர் ஒரு வழி காட்டியாக இருப்பார் 
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விபச்சாரம் !

                                                                                                        அருந்ததி ராய் 
 
 
 
எனக்கு இதில் நூறு வீத சம்மதம் உண்டு. உண்மையை ஏற்காத மாதிரி நடித்தாலும் மனதுக்குள் மறுக்க முடியாதல்லவா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.