Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை ராஜவன்னியரே, எனக்கும் உந்த வயதுதான். என்னையும் அங்கே சேரத்துவிடுங்கோ. அ, ஆ,,,, என்று என் வாய்சொல்லாது, உடம்பேசொல்லும். ஆனாலும் இப்படி நான் கேட்டதாக வாத்தியாரிட்டைப் போட்டுக்குடுத்துடாதையுங்கோ. அப்புறம் நான் உ, ஊ,,,,, என்று கத்தவேண்டி வந்திடும்.

 

வாத்தியாரிட்டச் சொல்லி உங்களைப் பின் வாங்குக்கு அனுப்பிறன் பொறுங்கோ. 

 

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா.... இஸ்கூல்லையும். சமர் ஹொலிடே... நடந்து கொண்டிருக்கிற நேரம்,

வாத்தியார் எங்களுக்கு வகுப்பு நடத்துவது நல்லாயிருக்கா....

நான்... லீவு முடியத்தான்... பள்ளிக்கூடப் பக்கம் வருவன். :D

 

நீங்கள் படுத்திருக்கிறதைப் பாத்தால் அடுத்த வரிய லீவு முடியத்தான் வருவியள் போல கிடக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது வினாவெழுத்துக்கள பற்றியது.

சுட்டெழுத்துக்கள் போலவே தமிழ் மொழியில் வினாவெழுத்துக்களும் சிறப்பானவை.

 

எல்லா எழுத்துக்களும் வினாவெழுத்துக்களாக முடியாது.

வினாவொன்றைக் கேட்பதற்குப் பயன்படுத்தும் எழுத்துக்கள் வினாவெழுத்துக்களாகும்.

எ  ஆ ஓ ஏ என்பன தமிழ் மொழியில் இருக்கும் வினாவெழுத்துக்களாகும்

 

எ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்தில்  வரும்

உதாரணம் எது

 

ஆ ஓ  எனும் எழுத்துக்கள் சொல்லின் முடிவில்  வரும்

உதாரணம் அவனா அல்லது அவனோ  

 

ஏ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும்

உதாரணம் ஏன் ஏது ஆரம்பத்திலும்

 

வந்தானே  என முடிவிலும் ஏ எனும் எழுத்து வினாவெழுத்தாக வருகின்றது

 

ஏன் எங்கே என்ற சொற்களில் வினாவெழுத்துக்கள்

பிரிக்கமுடியாமல் அந்தச்சொல்லினுள்ளேயே இருப்பதால் அவற்றை அகவினா எனவும்

 

எவ்வூர் அவனா உண்டானோ என்ற சொற்களில்  பிரிக்கக்கூடியவாறு வினாவெழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் அவை புறவினா எனவும்

அழைக்கப்படும்

 

எ + ஊர் = எவ்வூர்

உண்டான் + ஓ = உண்டானோ

 

 

எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே !

(நன்னூல்)

 

நான் சரியா வாத்தி யார்?

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேன் ஐயா!

 

தமிழ்  மேல் கொண்ட  காதலால்

அதை உயிர்ப்பிக்கும்  தங்கள்  பணிக்கு தலைவணங்குகின்றேன் ஐயா

உங்கள் சேவை கடவுளுக்கும்  மேலானது

தொடர்க

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

 

 

முக்கியமாக

இவரை கரை ஏற்றுங்கள்.... :lol:

(இவரைக்கரையேற்றுங்கள் :icon_idea: )

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

 

அக்கோய் உங்களைவிட 10வயது குறைஞ்ச பிள்ளைகளே பேசாமிலிருந்து படிக்கிறம் மூச்சுக்காட்டாமல் பாடத்தை கவனியுங்கோ. :lol:  வாத்தியார் நானும் உள்ளேன் ஐயா.

 

முக்கியமாக

இவரை கரை ஏற்றுங்கள்.... :lol:

(இவரைக்கரையேற்றுங்கள் :icon_idea: )

 

இந்தா வந்துட்டினம் வித்துவானுகள் .......எல்லாரும் வணக்கம் சொல்லுங்கோ . இந்த வித்துவானுகளுக்கு பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வித்தியாசம் தெரியேலை :D :D .

 

நல்லது வாத்தியார் தொடருங்கள்.

ஒரு ஓரமா இருந்து பாடங்களைக் கவனிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! வந்து எனக்குப் பக்கத்தில முன்னுக்கு இருங்கோ. பின்னுக்குப் போய் இருந்தியள் எண்டா எல்லாரும் உங்களைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கொண்டு இருப்பினம் வாத்தியார் பாவம் வீணா டென்சனாவார். :rolleyes:

 

சுமே நான் பின்னாலேயே இருக்கிறேன் முன்னுக்கு இருக்கிற ஆட்களைத்தான் வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்பார். அதோட முன்னால இருந்தால் கனக்க சங்கடங்கள் வரும் இப்பிடித்தான் போன வருசம் டியூசனில நானும் எனது சிநேகிதியும் முன்னுக்கு அள்ளி அடிச்சு இடம் பிடிச்சு இருந்திட்டம். எங்களுக்கு அண்டைக்கு வகுப்பு எடுக்கிற தமிழ்வாத்தியைப் பெடியளுக்குப்பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியாது. அவர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சுந்தர காண்டத்தை படிப்பிக்க பின்னால இருந்த பெடியள் வாத்திக்கு காகித அம்பு எறியத் தொடங்கிடாங்கள் முன்னுக்கு இருந்த எங்களுக்குமேலையும் அம்புகள் விழுந்திச்சு அதில ஒரு அம்பு என்ர சிநேகிதியின் தலையில வந்து செருகி தாழம்பூ மாதிரி நிற்க பெடியளும் சும்மா விட்டாங்களோ கொண்டையிலே தாழம்பூ என்று பாட்டுப்பாடத் தொடங்கிட்டாங்கள்...... அதுக்குப்பிறகு அவளை எங்க கண்டாலும் இவங்கள் தாழம்பூக் கொண்டைக்காரி தமிழுவாத்தி அண்டைகாரி தழுவ வரவா சண்டைக்காரி என்று ஓவராஎல்லாம் பாடுவாங்கள் அதால இப்ப அவள் படிக்கவே வராமல் விட்டுட்டாள். அண்டைக்கு மட்டும் அவளும் நானும் முன்வாங்கிலில இருக்காம விட்டிருந்தா இப்ப அவளும் இங்க படிக்க வந்திருப்பா....முன்னுக்கு இருந்தா  மேடையில இருக்கிற மாதிரி என்னவா இருந்தாலும் எல்லாரும் பாப்பினம். அதால நான் வரேல்லை நீங்கள் இங்க வாங்கோ...... :D

இந்தா வந்துட்டினம் வித்துவானுகள் .......எல்லாரும் வணக்கம் சொல்லுங்கோ . இந்த வித்துவானுகளுக்கு பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வித்தியாசம் தெரியேலை :D :D .

 

 

அதே மாதிரி மற்றவர்களின் பதிவுகளில் நீங்கள் சுட்டிக்காட்டுமுன் யோசிக்கனும். தமிழில் முடிந்தவரை பிழையின்றி எழுதினால் நன்று என்பதற்கே விசுகு இங்கு சுட்டிக்காட்டினார். அதே எண்ணமும் உங்களுக்கிருந்தால், அதை வரவேற்றிருக்கனும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் கலகலப்பாக இருப்பதைக்காண மகிழ்ச்சியாக இருக்கின்றது
:D

அப்படியே பாடத்திலும் சற்றுக் கவனமெடுத்துப்  படித்தால் சித்தியடைந்து விடலாம்
:)

வகுப்பிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா வந்துட்டினம் வித்துவானுகள் .......எல்லாரும் வணக்கம் சொல்லுங்கோ . இந்த வித்துவானுகளுக்கு பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் வித்தியாசம் தெரியேலை :D :D .

 

 

தமிழ்  படிப்போம்

தமிழ்  படிப்போம்............ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்  படிப்போம்

தமிழ்  படிப்போம்............ :icon_idea:

 

scharfe_messer.jpg

கத்தி வேண்டாமண்ணே பேசாமல் வகுப்பை கவனியுங்கோ

சுமே நான் பின்னாலேயே இருக்கிறேன் முன்னுக்கு இருக்கிற ஆட்களைத்தான் வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்பார். அதோட முன்னால இருந்தால் கனக்க சங்கடங்கள் வரும் இப்பிடித்தான் போன வருசம் டியூசனில நானும் எனது சிநேகிதியும் முன்னுக்கு அள்ளி அடிச்சு இடம் பிடிச்சு இருந்திட்டம். எங்களுக்கு அண்டைக்கு வகுப்பு எடுக்கிற தமிழ்வாத்தியைப் பெடியளுக்குப்பிடிக்காது என்று எங்களுக்குத் தெரியாது. அவர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சுந்தர காண்டத்தை படிப்பிக்க பின்னால இருந்த பெடியள் வாத்திக்கு காகித அம்பு எறியத் தொடங்கிடாங்கள் முன்னுக்கு இருந்த எங்களுக்குமேலையும் அம்புகள் விழுந்திச்சு அதில ஒரு அம்பு என்ர சிநேகிதியின் தலையில வந்து செருகி தாழம்பூ மாதிரி நிற்க பெடியளும் சும்மா விட்டாங்களோ கொண்டையிலே தாழம்பூ என்று பாட்டுப்பாடத் தொடங்கிட்டாங்கள்...... அதுக்குப்பிறகு அவளை எங்க கண்டாலும் இவங்கள் தாழம்பூக் கொண்டைக்காரி தமிழுவாத்தி அண்டைகாரி தழுவ வரவா சண்டைக்காரி என்று ஓவராஎல்லாம் பாடுவாங்கள் அதால இப்ப அவள் படிக்கவே வராமல் விட்டுட்டாள். அண்டைக்கு மட்டும் அவளும் நானும் முன்வாங்கிலில இருக்காம விட்டிருந்தா இப்ப அவளும் இங்க படிக்க வந்திருப்பா....முன்னுக்கு இருந்தா  மேடையில இருக்கிற மாதிரி என்னவா இருந்தாலும் எல்லாரும் பாப்பினம். அதால நான் வரேல்லை நீங்கள் இங்க வாங்கோ...... :D

 

அந்தநாள் நினைவுகளை சகாராவின் பதில் நினைவுபடுத்துகிறது. முன்வாங்கில இருந்த நாட்களும் அதன் பின்னரான நினைவுகளும்....அடுத்த கதையை எழுதீடலாம் போல. வாத்தியார் பிரம்பு வர முதல் தப்பீட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணாவர்கள் கலகலப்பாக இருப்பதைக்காண மகிழ்ச்சியாக இருக்கின்றது

:D

அப்படியே பாடத்திலும் சற்றுக் கவனமெடுத்துப்  படித்தால் சித்தியடைந்து விடலாம்

:)

வகுப்பிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்

 

வாத்தியாருக்கும்... டங் சிலிப் பண்ணிப் போட்டுது. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கும்... டங் சிலிப் பண்ணிப் போட்டுது. :D

 

அதுக்குத்தான்   முன்னோர்கள்

முன்பே  சொல்லி  வைத்தார்கள்

யானைக்கும்  அடிசறுக்கும்   என்று.

இதைச்சொல்லியே  வாத்தியார்  தப்பித்துக்கொள்வார்............ :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய்யெழுத்துக்கள்

 

அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது மெய்யெழுத்துக்கள்
 

இவை தானாக இயங்கமாட்டாதவை.
பிற ஒலிகளின் உதவியினால் இயங்கக்கூடியவை.

உயிர் உள்ள உடம்பினைப் போன்று இவை இயங்க உயிர் எழுத்துக்களே இவ்வெழுத்துக்களுடன் சேர்ந்து அவற்றை இயக்கவேண்டும்

 

மெய்யெழுத்துக்கள் பதினெட்டாகும்
க்,ங்,ச், ஞ், ட், ண் ,த், ந், ப் , ம் , ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய எழுத்துக்களை மெய்யெழுத்து என்பர்
 

மெய்யெழுத்துக்கள் மூன்றுவகைப்படும்
அவை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும்
 

ஒரு எழுத்தை ஒலிக்கும்போது சிறிதளவு முயற்சியுடன் வன்மையாக ஒலிக்கப்படுவதால்

அவ்வொலிகளுக்கு வல்லின எழுத்துக்கள் என்று பெயர் வந்தது.

 

 க், ச், ட்,  ,த்,  ப்,  ற் என்பன வல்லின மெய்யெழுத்துக்களாகும்
இவ்வொலிகள் மார்பின் அடிப்பகுதியில் இருந்து பிறக்கின்றன.

 

ஒலிக்கும்போது அவ்வளவான முயற்சியேதும் இன்றி மென்மையாக

ஒலிக்கப்படுகின்ற காரணத்தால் சில எழுத்துக்களுக்கு  மெல்லின எழுத்து எனப்பெயர் உண்டு
 

அவை ங், ஞ்,  ண் , ந்,  , ம் , ன் என்பனவாகும்
 

இந்த ஒலிகளை  ஒலிக்கும் போது மூக்குவழியாகக் காற்று வரும்.

அப்படி மூக்கினால் காற்று வருவதன் காரணத்தினால் மெல்லின எழுத்துக்களுக்கு

மூக்கினம் எனவும் பேர் உண்டு.

 

வன்மையாக ஒலிக்கப்படுவதற்கும் மென்மையாக ஒலிக்கப்படுவதற்கும் இடைப்பட்டு

ஒலிக்கப்படுகின்ற காரணத்தினால் சில எழுத்துக்களுக்கு இடையினம் எனப்பெயருண்டு.
 

ய், ர், ல், வ், ழ், ள் என்பனவே அந்த இடையின மெய்யெழுத்துக்களாகும்
இந்த எழுத்துக்கள் கழுத்தில் இருந்து ஒலிக்கப்படுகின்றன.

 

இதுவரை முதலெழுத்துக்களில் அதன் பிரிவுகளான
உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும்
அவற்றின் சிறு பிரிவுகளைப் பற்றியும் பார்த்தோம்
நாளை எழுத்தின் இன்னொரு பிரிவான சார்பெழுத்துக்களைப் பற்றிப் படிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. மெய்யெழுத்துக்கள் ஒலிக்கப்படும் விதத்தில் இவ்வளவு நுணுக்கங்களா?? அதுசரி.. ஆதி தமிழ் என்றால் பின்னை என்ன சும்மாவா??

நான் இவ்வளவு நாளும் மெல்லினம், இடையினம் என்றால் வேறு எதையோ நினைத்துக்கொண்டிருந்தன்.. :D நான் சும்மா பகிடிக்கு.. அடிச்சுப் போடாதையுங்கோ வாத்தியார்.. :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கும்... டங் சிலிப் பண்ணிப் போட்டுது. :D

 

இந்த மாணவன் இவ்வளவு நுணுக்கமாகப் படிப்பிலும்

 

வாசிப்பிலும் அக்கறையாக இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

 

 

திருத்தியுள்ளேன் ஐயா :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான்   முன்னோர்கள்

முன்பே  சொல்லி  வைத்தார்கள்

யானைக்கும்  அடிசறுக்கும்   என்று.

இதைச்சொல்லியே  வாத்தியார்  தப்பித்துக்கொள்வார்............ :lol:  :D

எழுதியதைத் திரும்பவும் வாசித்துப் பார்க்கும்போது

எங்கள் கண்ணையா அவர்கள் சாதுவாக என்னை ஏமாற்றிவிட்டார் :D  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் கலகலப்பாக இருப்பதைக்காண மகிழ்ச்சியாக இருக்கின்றது

:D

அப்படியே பாடத்திலும் சற்றுக் கவனமெடுத்துப்  படித்தால் சித்தியடைந்து விடலாம்

:)

வகுப்பிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்

 

வாத்தியார் நல்லாக் கணக்குவிடுகிறார். இவர் கணக்கு வாத்தியாப் போயிருக்கலாம். :D  செவ்வாய்க்கிழமை அடுத்தபாடத்தைத் படிப்பிப்பேன் என்று அடித்துச் சொன்னவர் நானும் சேட்டைகளை எல்லாம் மூட்டைகட்டிவிட்டுப் படிப்பதற்கு ஆவலாக இருந்தேன் ஆனால் செவ்வாயன்று அவர் ஓதிய தமிழ் இவ்வளவும்தான். :o

 

இவரை நம்பிப் புண்ணியமில்லை ராஜவன்னியன். நாங்கள் எங்கடை கருமத்தை தொடருவம். அதுசரி வயதுபோன கிழடுகளுக்கு அ ஆ சொல்லிக்கொடுத்த சுந்தரியின் படம்மாதிரி, :rolleyes:   வயதுபோன கிழவிகளுக்கு அ ஆ சொல்லிக்கொடுக்கும் சுந்தரனின் படம் ஏதாவது கைவசம் இருக்கா? இருந்தா ஒருக்கா போட்டுவிடுங்கோ. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நல்லாக் கணக்குவிடுகிறார். இவர் கணக்கு வாத்தியாப் போயிருக்கலாம். :D  செவ்வாய்க்கிழமை அடுத்தபாடத்தைத் படிப்பிப்பேன் என்று அடித்துச் சொன்னவர் நானும் சேட்டைகளை எல்லாம் மூட்டைகட்டிவிட்டுப் படிப்பதற்கு ஆவலாக இருந்தேன் ஆனால் செவ்வாயன்று அவர் ஓதிய தமிழ் இவ்வளவும்தான். :o

 

இவரை நம்பிப் புண்ணியமில்லை ராஜவன்னியன். நாங்கள் எங்கடை கருமத்தை தொடருவம். அதுசரி வயதுபோன கிழடுகளுக்கு அ ஆ சொல்லிக்கொடுத்த சுந்தரியின் படம்மாதிரி, :rolleyes:   வயதுபோன கிழவிகளுக்கு அ ஆ சொல்லிக்கொடுக்கும் சுந்தரனின் படம் ஏதாவது கைவசம் இருக்கா? இருந்தா ஒருக்கா போட்டுவிடுங்கோ. :wub:

பாஞ்ச் வடிவாக இன்னொருமுறை கவனியுங்கள்

சும்மா அடாவடியாக வாத்தியாருக்கு எதிராக அள்ளி வைக்கக் கூடாது. :lol:

நான் நல்ல வாத்தியாராக்கும் :D  :lol:  :lol:

பாஞ்ச் வடிவாக இன்னொருமுறை கவனியுங்கள்

சும்மா அடாவடியாக வாத்தியாருக்கு எதிராக அள்ளி வைக்கக் கூடாது. :lol:

நான் நல்ல வாத்தியாராக்கும் :D  :lol:  :lol:

 

இருட்டடி வாங்குவது என தீர்மானித்த பிறகு, இனி என்ன சொல்லியும் பிரயோசனமில்லை வாத்தி :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

குழப்படி செய்யிற பஞ்சை மார்க்கண்டு வாத்தியாரின் வகுப்பில முன் வாங்கில கொண்டே இருத்திவிடுங்கோ.
அவர்தான் வகுப்பில நித்திரை கொண்டுட்டு, எழும்பின உடன முன்னுக்கு இருக்கிற பெடியள் எல்லாருக்கும் சணல் அடி குடுப்பார். :lol:

------------------

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கும்... டங் சிலிப் பண்ணிப் போட்டுது. :D

 

 

 

ரங்கு சிலிப் ஆகிறவை இது தான் முதல்ல படிக்கனும்..உங்க ஆசிரியர் வந்தால் இதில் ஒரு கொப்பி எடுத்து கொடுத்து விடுங்கோ பிள்ளைகள். :lol:

 

 

ல, ழ, ள உச்சரிப்பு சரியாக வராத சில மாணவர்களுக்கு, உச்சரிப்பு சரியாக வருவதற்காக 'அருணாசல புராணம்' என்ற நூலில் உண்ணாமுலை அம்மன் மீதுள்ள துதிப் பாடல் ஒன்றை பலமுறை படிக்கச் சொல்வாராம் கி.வா.ஜ.

காரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந்

தொழுகும் இரு கடை...க் கண்ணாளை

மூரலிள நிலவொழுகப் புழுகொழுக

அழகொழுகும் முகத்தி னாளை

வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்

தெரியாத மருங்கு லாளைச்

சீரொழுகும் பதத்தாளை அருணை உண்ணா

முலையாளைச் சிந்தை செய்வாம்.

நீங்களும் சொல்லிப்பாருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.