Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளொன்றின் வெற்றிடத்தில்...

Featured Replies

மகரந்தங்களின் கண்ணீரும்

பருவம் தப்பிப்போன

பாலணுக்களின் திட்டைக்களும்

நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில்,

 

சுடர் தின்ற விட்டிலின் கனவுகள்

கருகி பரவுகின்றன

 

அழகோடு இயைந்த நிலவினைப் புணர

தேடியலைகிறான் சூரியன்

இரவினை கொன்றும் பிறக்கிறது

இரவும் நிலவும்.

 

இலைகளை வெறுத்த கிளைகள்

காத்திருக்கின்றன,

பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

 

சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின்

மடிகள் கறக்கின்றன

ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு,

 

அன்பு...

ஒருவர் மனம் நெகிழும்படி

மற்றொருவர் வெளிப்படுத்தும்

பாசமும் நேசமும் நட்பும் என்று

தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.

 

அநேக நாக்குகளில் வழிகிறது

துர்நாற்றம் சிலவேளைகளில்

விசமாகவும்.

 

அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும்

விடைகளை சுமந்து  அலைகிறான்

கேள்வியை தேடி

மனிதனொருவன்.

 

இப்படிதான்

நிறைந்து போகிறது

நாளொன்றின் வெற்றிடம்.

 

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள்,தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியவில்லை கவிதையை வசித்து முடிக்க என் மனதிலும் எதோ ஓர் வெறுமை சூள்வதைத் தடுக்க முடியவில்லை.

அநேக நாக்குகளில் வழிகிறது

துர்நாற்றம் சிலவேளைகளில்

விசமாகவும்.

 

அருமையான வரி .!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் கவிதைகளைத் தாருங்கள் தாசன்
வெறுமைதான் மனிதர்களின்  விடுதலைக்கான அடித்தளம்
 

 

அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும்

விடைகளை சுமந்து  அலைகிறான்

கேள்வியை தேடி

மனிதனொருவன்.

 

இப்படிதான்

நிறைந்து போகிறது

நாளொன்றின் வெற்றிடம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகக்கனதியான கவிதை ஒன்று..வார்த்தைகளின் செறிவும் ரசித்து இழைக்கப்பட்ட இயல்பான அவற்றின் பிரயோகங்களும் பிரமிக்கவைக்கிறது.. எவற்றின்மீதும் பிடிப்பற்றுப்போகும்போதும் எழுத்துக்களை காதலிக்கவைத்து பிடிமானத்தை ரசிப்புகளினூடு உருவாக்குகின்றன இப்படி சிலரின் அரிய படைப்புக்கள்.. வாழ்தலுக்கான தேவை கலையாக இன்னும் மீதமிருக்கிறது என்று உணர்கிறேன்.. எழுதிக்குவியுங்கள் அண்ணா.. பொங்கிப்பரவட்டும் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் சற்றாவது...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இலைகளை வெறுத்த கிளைகள் 

காத்திருக்கின்றன,

பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

 

சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின்

மடிகள் கறக்கின்றன

ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு,

 

அருமை, நெற்கொழுதாசன்!

 

உவமானங்களும், உவமேயங்களும், உங்கள் கவிதையில் தூள் கிழப்புகின்றன!

 

கவிதையில், 'தளங்களை'  நீங்கள் அமைக்கின்ற விதம் அருமை!

 

திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை, உங்கள் கவிதை வரிகள் தூண்டுகின்றன!

 

தொடருங்கள்!....

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வரிகளையும் பல தடவை படிக்க வைத்த கவிதை. பாராட்டுக்கள் நெற்கொழு தாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை போடுவமெண்டால், யாழ் பெரிய புறியங்காட்டுது! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு அருமையான கவிதை.

வாழ்த்துக்கள் அண்ணா. :)

நேற்கொழுதாசன்.... உங்கள் கவிதைகளை மிக விரும்பிப் படிப்பவன் நான்.

உங்களின் கவிவரிகளின் உள்ளூர ஏதோவொரு உணர்வலையொன்று எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.

அதை அனுபவித்துப் படிக்கும்போது ஏற்படும் உணர்வே தனி. :)

நன்றிகளும் பாராட்டுக்களும் :)

நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்... :)

 


இலைகளை வெறுத்த கிளைகளை

காத்திருக்கின்றன,

பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

 

 "கிளைகள்" என வர வேண்டும். :rolleyes:
 

  • தொடங்கியவர்

நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்... :)

 

 

 "கிளைகள்" என வர வேண்டும். :rolleyes:

 

நன்றி துளசி.

 

நானும் கவனிக்கவில்லை இன்னுமொரு இடத்தில் எழுத்துப்பிழை இருக்கு. 

 

இரண்டையும் மாற்றி விடுகிறேன். 

மன்னிக்க வேண்டும். 

  • தொடங்கியவர்

கருத்துக்களோடு வந்து என்னை உற்சாகமூட்டிய இனிய உறவுகள் அனைவருக்கும் என் அன்புகள்.

 

வன்னத்துப்பூச்சிகளைப் பற்றி 

ஒவ்வொரு கவிஞனிடமும் 

ஒரு கவிதையேனும் 

இல்லாமல் போகாது. 

 

ஆனால் 

நமக்கு தெரிவதில்லை 

ஒரு கவிதைக்குள்ளிருந்து

ஒரு வண்ணத்துப்பூச்சியை

எப்படி விடுவிப்பதென்று .............................

 

என்று பாடினான் ஒரு கவி.

 

நானும் உங்களுடன் காத்திருக்கிறேன். எனக்கான கவியொன்றை எழுதுவதற்காக.......... அதற்கான தேடலும் காலமும் உங்களுக்கும் எனக்கும் வாய்க்கட்டும். 

Edited by நெற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு...

ஒருவர் மனம் நெகிழும்படி

மற்றொருவர் வெளிப்படுத்தும்

பாசமும் நேசமும் நட்பும் என்று

தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.

 

அநேக நாக்குகளில் வழிகிறது

துர்நாற்றம் சிலவேளைகளில்

விசமாகவும்.

 

 

நேற்கொழுதாசனவர்களே!

மற்றவர்களின்

வலியைக் குத்:திச்

சிரித்து மகிழும்

மனநோய் கொண்ட

மனிதக்(?)கூட்டத்தை

ஊடறுத்து வீழந்துள்ள காத்திரமான வரிகள்.

பாராட்டுகள்.........

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் கரைய வைத்த கவிதையிது நெற்கொழுதாசன். பாராட்டுக்கள்.

Edited by shanthy

நல்ல படைப்பு, வாழ்த்துக்கள்.

 

எனது நாளொன்றின் வெற்றிடத்தை நிறைப்பதில் இந்தக் கவிதையும் இருப்பதில் மகிழ்ச்சி.

 

 

 

 

Edited by சண்டமாருதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.