Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் விக்கி, சம்பந்தர், சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பும் பதவியேற்பிற்கான எதிர்ப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த திங்கட்கிழமை இனக்கொலையாளி மகிந்தவின் முன்னால் சத்தியப்பிரமானம் செய்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் கொடும்பாவி முல்லைத்தீவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டது.13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக இந்தப் பதவிப்பிரமானம் நடைபெறும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பில் வந்திறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பதவிப்பிரமானம் முடிந்த கையோட்டு இந்திய அமைச்சர் தமிந்த் தேசியக் கூட்டமைப்பின் முண்ணனித் தலைவர்களை வரவேற்றதோடு வாழ்த்துக்களும் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனுடன் சேர்த்து சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரது கொடும்பாவிகளும் முல்லைத்தீவில் எரிக்கப்பட்டன. இந்த மூவரடங்கலாக நான்கு பேரைத்தவிர வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இந்த பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இனக்கொலையாளியான மகிந்தவின் முன்னால் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதன் மூலம் முதன்முதலாக விக்கினேஸ்வரன் அவர்கள் வட மாகாண மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். 

 

மாகாணசபைக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட விக்கினேஸ்வரன் மற்றும் இன்னொருவரும், நாடாளுமன்றத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சம்பந்தன் மற்றும் விநாயகமூர்த்திடஆகிய நால்வரைத்தவிர அனைவருமே இந்தப் பதவிப்பிரமானத்தை புறக்கணித்திருப்பதன்மூலம் இனக்கொலைக்கெதிரான தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்பையும், இலங்கையின்  ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கான தமது அடையாள் எதிர்ப்பையும் காட்டியிருக்க, விக்கினேஸ்வரன் அவர்கள் அதே அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு மகிந்தவின் முன்னால் தனது பதவிப்பிரமானத்தை எடுத்துகொண்டிருக்கிறார்.

 

அதேவேளை பதவிப்பிரமானத்துடன் சேர்ந்து நடந்த இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையை ஒற்றுநோக்கும்  கொழும்பின் அரசியல் அவதானிகள் தமிழ் மக்களுக்கான செய்தியொன்றை இந்திய இலங்கை அரசுகள் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றனர். இதற்குச் சாட்சியம் கூறுவதுபோல பதவிப்பிரமானம் இந்திய அரசாங்கத்தின் விருப்பப்படியே நடத்தப்பட்டதாக சம்பந்தன் உற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முண்ணனித் தலைவர்கள் திரும்பத் திரும்பக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களும், புனையுரைகளும்,

வெள்ளை வேட்டிகளுக்குள்,

மீண்டுமொரு முறை,

மறைந்து போகின்றன!

 

ஒளிச்சிதறல்களில்,

குளிர் காயக் காத்திருந்த,

நம்பிக்கைத் துளிகளும்,

வெம்மை தாங்காது,

வேதனையில் முனகுகின்றன!

 

அடிவானத்தில்,

விடிவெள்ளியின் வரவை,

எதிர்வு கூறியவர்களின்,

விழிகள் விரிந்த முகங்களில்,

கோழி முட்டைகளின் ஈரம்,

வழிந்து கொண்டிருக்கிறது! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூ: டீச்சர்.. டீச்சர்.. இவன் என்னோட பென்சில எடுத்துக்கிட்டான் டீச்சர்..

அமெரிக்கா: அவன்தான் கேக்கிறான்ல.. குடுடா..

மகிந்த: அதெல்லாம் முடியாது.. அம்மாகிட்ட கேட்டிட்டுத்தான் குடுப்பேன்.. என்ன சப்பாணி.. நான் சொலுலுறது கரக்டா??

இந்தியா: ரொம்ப கரக்ட்டு தம்பி.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயம் செய்திருக்கும் இந்திய அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை கொழும்பில் உத்தியோகப்பற்றற்ற முறையில் சந்தித்திருந்தாலும் கூட, செவாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடன்  "இருதரப்பு" கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். 

 

மக்களால் தெரிவுசெய்யப்படாமல் தேசியப்பட்டியல்  நியமனம் மூலம் பாராளுமன்றத்தினுள் நுழைந்த சுமந்திரன் அவர்கள் தான் செல்லவிருந்த வெளிநாட்டு நிதிச் சேகரிப்பு பயணத்தை நிறுத்தி கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டார்.

 

கொழும்பு நிகழ்விற்கு வரவழைக்கப்பட்டிருந்த மூத்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் தனது கொழும்பு நிகழ்வு முடிந்து யாழ்ப்பாணம் திரும்பியபின்னர் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில் "தலமைத்துவத்தின் வற்புறுத்தலின்பேரில்த்தான் நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள நேரிட்டது. சுமந்திரன் என்னை இதற்குள் மாட்டிவிட்டார் " என்று அதிருப்தியுடன் கூறியிருந்தார். "தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் பதவியேற்பு நிகழ்வில் கட்டாயம் கலந்துகொள்வார்கள், ஆகவே நீங்களும் கட்டாயம் வரவேண்டும் என்று எனக்குச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அங்கே சென்றபோதுதான் எல்லாமே பொய்யென்று தெரிந்தது. ஆனால் அப்போது என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை, எல்லாமே முடிந்துவிட்டது"  என்று கவலையுடன் கூறியிருக்கிறார்.

 

தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், மாகாணசபை ஆரம்பத்தை சுமூகமாக ஆரம்பிக்க வேண்டும் என்கிற வெளிநாட்டு ஆலோசனைகளுக்கு அமைவாகவே தாம் செயற்பட்டதாகக் அவர்கள் மீண்டும் கூறியிருக்கிறார்கள்.

 

இந்திய அதிகாரத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக இயங்கும் கூட்டமைப்பின் "முக்கிய புள்ளிகளின்" அழுத்தத்திற்கு மத்தியிலும்கூட கிழக்கு மாகாண கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே இந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருக்கவில்லை. அதுபோலவே தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி தலைவர்கள்கூட இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

 

இந்த பதவியேற்பு நாடகம் கூட்டமைப்பின் அதிமுக்கிய புள்ளிகளும், அதிகார வர்க்கங்களின் ஆலோசனைப்படி செயற்பட்டு வருபவர்களுமான சிறுபான்மைக் குழுவுக்கும், வட மாகாண மக்கள் ஆதரவுடன் செயற்படும்  பெரும்பான்மை உறுப்பினர்களுக்குமிடையே இருக்கும் கொள்கை ரீதியான பிளவை பகிரங்கப்படுத்தியிருக்கிறது.

 

இந்த நிகழ்வின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிவஜிலிங்கம் கூறுகையில்,"இந்த பதவியேற்புப் புறக்கணிப்பின் மூலம்  கூட்டமைப்பின் அதிகார வர்க்கங்களின் எடுபிடிகளான  "சிங்கக்கொடி குழுவுக்கு " பெரும்பான்மை மாகாணசபை உறுப்பினர்களின் தெளிவான செய்தி கூறப்பட்டிருக்கிறது". இந்த பதவியேற்பு புறக்கணிப்பு நிகழ்வின் மூலம் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் சிவாஜிலிங்கத்துக்குமிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகளும் களையப்பட்டிருக்கின்றன.

 

இதற்கிடையில் இனக்கொலை புரிந்த சிங்கள அரசை காப்பாற்ற செயற்பட்டுவரும் இந்திய அமெரிக்க அதிகார வர்க்கங்களின் ஆலோசனைப்படி இனக்கொலையாளியின் முன்னால் சத்தியப்பைரமானம் செய்துகொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முன்னால் தம்மால் பதவிப்பிரமானம் எடுத்துக்கொள்ள முடியாதென்று வட மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் குழுவொன்று அறிவித்திருக்கிறது. மகிந்தவின் முன்னால் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதன் மூலம் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் மனங்களை நோகச் செய்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரான சித்தார்த்தன் அவர்களின் கடந்தகால இந்திய மற்றும் சிங்கள அரசுகளின் எடுபிடி செயற்பாடுகளுக்குப் பின்னரும் கூட வட மாகாண மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பது, அவரின் கடந்தகால செயற்பாடுகள் எப்படியிருந்தபோதும் கூட தேர்தலுக்கு முன்னதான பிரச்சாரங்களில்  தமிழ்த்தேசியத்தினதும், தமிழர்களின் தாயகத்தினதும் மீதான அரது வெளிப்படையான ஆதரவுப் போக்கே அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் அது மிகையில்லை. இது தமிழ் மக்கள் இவரின் கடந்தகால செயற்பாடுகளை மன்னித்து இவரையும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்பதனைக் காட்டுகிறது. ஆனால் கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சித்தார்த்தன் மேல் கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்து அவரையும் பதவிப்பிரமான நிகழ்வில் கலந்துகொள்ள வைத்துள்ளார்கள் என்று அறியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய அமெரிக்க அதிகார வர்க்கங்களின் ஆலோசனைப்படி இனக்கொலையாளியின் முன்னால் சத்தியப்பைரமானம் செய்துகொண்ட முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முன்னால் தம்மால் பதவிப்பிரமானம் எடுத்துக்கொள்ள முடியாதென்று வட மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களின் குழுவொன்று அறிவித்திருக்கிறது. மகிந்தவின் முன்னால் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதன் மூலம் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் மனங்களை நோகச் செய்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அவர்களின் ஆலோசனைப்படிதான் இந்த மாகாணசபை தேர்தல் நடந்தது என்பது சகல வேட்பாளர்களுக்கும்தெரியும்....தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்பு .... நான் கொலையாளி மகிந்தாவுக்கு சத்தியபிரமாணம் செய்யமாட்டேன் என்று அடம் பிடிச்சு ஒரு நன்மையும் இல்லை... மகாணசபையால் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது தெரிந்த விடயம்..

ஒரு கட்சி தன்னை மக்களிடம் நிலைப்படுத்துவதற்கு பெருமளவு நேரத்தையும் பணதத்தையும் செலவிட வேண்டியிருக்கும். அத்துடன் ஊடகங்களின் ஆதரவும் அதற்குத் தேவைப்படும். 

 

ஆனால் இவை எதுவும் இல்லாமலே தமிழ் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு கட்சியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மாறுவதற்கு சம்பந்தன் போன்றவர்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

 

இது நல்லதற்கா கெட்டதற்கா என்பதை இப்போதே கணிப்பது கஸ்ரம்....

இண்டைய நிலையில் கூட்டமைப்பை வீழ்த்துவது யாருக்கும் விருப்பம் கிடையாது... தலைமையில் இருக்கும் அதி நல்லவர்களை கூட வெளியேற்ற தேவை இல்லை...

ஒரிருவர் தாந்தோண்றி தனமாக முடிவெடுக்கும் நிலையை மாற்றி மத்திய குழு ஒண்றை உருவாக்கி அதிகூடியோர் கருத்து நிறைவேற்றும் நிலை கட்சி சட்டமாக்க படவேண்டும் என்பது கூட போதுமானதாக இருக்கும்...

இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைமை விடும் தவறுகள் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் சாராது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பகவத் கீதையை இங்கு எங்கே பிரயோகிப்பது??  :icon_mrgreen:

ஒரு கட்சி தன்னை மக்களிடம் நிலைப்படுத்துவதற்கு பெருமளவு நேரத்தையும் பணதத்தையும் செலவிட வேண்டியிருக்கும். அத்துடன் ஊடகங்களின் ஆதரவும் அதற்குத் தேவைப்படும். 

 

ஆனால் இவை எதுவும் இல்லாமலே தமிழ் மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் ஒரு கட்சியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மாறுவதற்கு சம்பந்தன் போன்றவர்கள் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

 

இது நல்லதற்கா கெட்டதற்கா என்பதை இப்போதே கணிப்பது கஸ்ரம்....

2010தேர்தலில் கனடாவிலும் ,புலம்பெயர் தேசத்திலும் உலகத்தமிழர் அமைப்பை சார்ந்த பத்திரிகைகள் ,இணையத்தளங்கள் ,தொலைக்காட்சிகள் இவர்களுக்குப் பின்னால்தான் அணிதிரண்டனர் ,நிதியும் சேர்த்து வழங்கினார்களே .

 

ஆதரவென்றாலும் அது குடநாட்டுக்குள்ளே தான் .

  •  

பகவத் கீதையை இங்கு எங்கே பிரயோகிப்பது??  :icon_mrgreen:

  • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
  • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
  • உன்னுடையதை எதை இழந்தாய் என்று எதற்காக நீ அழுகிறாய?

       

            இப்ப இவ்வளவும் காணும் .  :D

Edited by Gari

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ 77ம் ஆண்டுக்கே திரும்பி போன நினைப்பு எல்லாம் வருது.

விக்னேஸ்வரன் ஏதோ ஆசைப்பட்டுதான் மஹிந்தமுன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்த மாதிரியும், கோபமடையும் வடமாகாண மக்கள் தற்சமயம் உள்ள சூழ்நிலை விளங்காத பெப்பேக்கள் மாதிரியும் இருக்கில்ல.. 

எனக்கு என்னமோ 77ம் ஆண்டுக்கே திரும்பி போன நினைப்பு எல்லாம் வருது.

அரசியல் அறிவற்ற,புரிந்துணர்வில்லாத  ஆயுத போராட்டம் எம்மை உண்மையில் அங்கே தான் கொண்டுபோய் விட்டிருக்கு .

கடைசியா தமிழ் மக்களுக்கு தீரவில்லை 

 

கட்சி பிணக்குகளைத் தீர்கவே நேரம் சரியாப்போடும்.

 

அடுத்த தரம் தேர்தல் வந்தால் மக்கள் மகிந்தவுக்கே வாக்களிப்பார்கள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.