Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே - இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது.
 
இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி .... மகிழ்ச்சியாக இருக்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

நிழல் அரசை ஏன் நிறுவினார்கள் என்று தெரியவருகிறது.

இந்தச்செய்தி நேற்று இரவு என் காதிற்கு எட்டியது .ஆனாலும் உண்மையா ,பொய்யா என்று தெரியாமல் இருந்தேன் .இப்போ ஓரளவு நம்பக்கூடியதாய் இருக்கு .
 
அத்துடன் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று தீர்ப்பளித்ததும் இன்றி ,இத்தாலியில்  விடுதலைப்புலிகளுக்கு இருந்த தடையையும் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது ,மேலும் சிறை வைக்கப்பட்டிருந்த அனைத்து செயல்பாட்டாளர்களும் விடுதலை செய்யப்பாட்டார்கள் என்றும் ,மிக நம்பிக்கைக்குரிய ஒருவர் கூறியிருந்தார் .............
 
செய்தி உண்மையானால் மிக மிக மகிழ்ச்சியான நாளாக ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும் என்றால் அது மிகையாகாது .............எமது விடிவின் ஆரம்பம் என்றும் இதை கொள்ளலாம் .......
 

விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை இயக்கமே! இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

ltte_logo.jpgகடந்த 2008 யூன் மாதம் (18.06.2008) சர்வதேச பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் 2010 ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டு 2011 இல் நாப்போலி நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் எனவும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம மருத்துவம் நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்விக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் , அந்த வகையில் இத்தாலி தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அற்தமற்றது எனவும் மேலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க்குற்றங்கள் புரிந்திரிப்பின் அவற்றிக்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதி மன்றமே விசாரிக்க தகுதியானதென குறிப்பிட்டு 23-06-2011 நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அந்தவகையில் அவரது தீர்ப்பு தவறானது எனக்கூறி அரச தரப்பினர் மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கான வழக்கு விசாரணை     27-02-2014 மேல் முறையீட்டு நீதிமன்றில் ஒன்பது நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில மணி நேர இரு தரப்பு விவாதங்களின் பின்னர் முதல் கட்ட நீதிபதியின் தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.   

 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியத்தில்.... அங்கம் வகிக்கும் நாடு என்ற படியால்,
இந்தத் தீர்ப்பை, மற்றைய ஐரோப்பிய நாடுகள்... உன்னிப்பாக கவனிக்கும்.
ஒரு முடிச்சு ஒன்று... இத்தாலி மேல் முறையீட்டு நீதிமன்றத்தால்... அவிழ்க்கப் பட்டது, மகிழ்ச்சியை தருகின்றது. :)

 

இந்திய காங்கிரஸ் தலைவிக்கு, இத்தாலிய தீர்ப்பு... கொஞ்சம் கடுப்பை, ஏற்படுத்தலாம். :lol:

 

 

 

Edited by தமிழ் சிறி

பயங்கரவாததடை சட்டத்தின் கீழ். ஐரோப்பிய அமெரிக்க சிறைகளில் வாடும் எமது சனங்களின் கேசுக்களை மீளாய்வு செய்ய இந்த செய்தி உதவும்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மெல்லத்தான் வரும். வந்துவிட்டது. மகிழ்ச்சியைத் தருகிறது. மாவீரர்களின் ஆத்மா சாந்தியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மெல்லத்தான் வரும். வந்துவிட்டது. மகிழ்ச்சியைத் தருகிறது. மாவீரர்களின் ஆத்மா சாந்தியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..! ஏனைய நாடுகளிலும் தடைகள் விலக வேண்டும்...! :)

எல்லாம் முடிந்தபின் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறினாலும் .இந்த நேரத்தில் இந்த ஓர் அறிவிப்பு பல மாற்றங்களை நிச்சயம் கொண்டுவரும் ..................
 
தமிழரின் நிலை மாறும் ................................
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மெல்லத்தான் வரும். வந்துவிட்டது. மகிழ்ச்சியைத் தருகிறது. மாவீரர்களின் ஆத்மா சாந்தியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 

 

சரியாகச் சொன்னீர்கள்... பாஞ்ச்.

அவர்களின்... வீர மரணத்திற்கும், ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

நல்ல செய்தி... தடை செய்த எல்லா நாடுகளிலும் தொடரட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய  தடைகளால்  புலிகள்  இயக்கத்துக்கும்

தாயக  மக்களுக்கும் ஏற்பட்ட  இழப்புக்கள் எல்லோரம் அறிந்ததே

 

ஆனால் ஐரோப்பாவில் வேலை  செய்தவர்கள் அனுபவித்ததை எவரும் அறியார்

அவற்றை அனுபவித்தவர்களுடன் கூட  இருந்தவன் என்றவகையில் நானறிவேன்

இன்றும் கூட எல்லைகள் போடப்பட்டு

கூட்டுக்குள் வாழ்பவர் உள்ளனர்

அவர்களது பிள்ளைகள் கூட  மேல் படிப்போ

முக்கிய  வேலைகளுக்கோ  தெரிவாவதற்கு தடைகள் உள்ளன.

 

அத்துடன்

கள்ளர்

தூள்  விற்பவர்

பயங்கரவாதிகள்

மண்டை  கழண்டவர்கள்

தோற்றுப்போனவர்கள்

...............

....................  என எம்மவராலேயே இடங்கண்ட  இடத்தில் துப்புவதை அனுபவிப்பவர்கள் அவர்கள்

அந்த வேதனையை  அனுபவித்தவருக்கே  தெரியும்.....

 

அவர்கள் விடுதலை பெற்று வரும்போது

நிச்சயம் சுதந்திரக்காற்று எம்மை வருடுவதை  உணரலாம்

நன்றி  மறந்த இனம் வாழமுடியாது

அது தன்னை  துடைத்துக்கொள்ளணும்  உவ்வொன்றாக...

அதற்கான  முதற்படியாக இதனைப்பார்க்கின்றேன்

இது பெரும் மகிழ்வு தருகிறது எனக்கு.........

 

தர்மம் நிச்சயம் வெல்லும்

எமது அமைதியும்  பங்களிப்பும் தியாகங்களும் என்றுமே வீண் போகாது

 

நல்ல செய்தி... தடை செய்த எல்லா நாடுகளிலும் தொடரட்டும்.. :)


நல்ல செய்தி... தடை செய்த எல்லா நாடுகளிலும் தொடரட்டும்.. :)

நல்ல செய்தி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கனடாவும், பிளேக் கேட்டதற்காக புலிகளை தடை செய்தவர்கள். அவர்களிடம் தடை செய்தமைக்கான காரணங்கள் ஒன்றும் கோட்டில் கொடுக்கத்தக்க அளவில் இருக்காது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்திற்கு நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ! :D

 

காலப்போக்கில் இதன் விளைவுகள், எமது இனத்தின் விடுதலைக்கு ஒரு வழி சமைக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிய மேல் நீதிமன்ற தீரிப்பை எதிர்த்து,
தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள்... தீக்குளிப்பு.

 

 

செய்திகள்... தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

வடை தின்ற படியே... காட்சியளிக்கும்.... தமிழ்நாடு காங்கிரசு தலைவர், ஞானசூனியம் என்பவரை.. அவரின் வீட்டின்.. குளியலைறையில்...
பதுங்கிக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிய மேல் நீதிமன்ற தீரிப்பை எதிர்த்து,

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள்... தீக்குளிப்பு.

 

 

செய்திகள்... தொடரும்...

சோனியாவின் சேலைமட்டுமே எரிந்ததாம்....... அச்சேலை இத்தாலியில் நெய்யப்பட்டதா? இந்தியாவில் நெய்யப்பட்டதா? என்று தற்போது ஆராச்சியும் நடைபெறுவதாகக் கேள்வி...!

ஜேர்மனியில் வந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இத்தாலி நீதிமன்ற தீர்ப்பையும் புலம்பெயர்மக்கள் நன்கு பயன்படுத்தி மற்றைய நாடுகளிலும் தடைகளை உடன் நீக்க பாடுபடவேண்டும். இதன் மூலம் தமிழர்கள் எல்லாம் பயங்கரவாதிகளாக இலங்கை காட்டும் பூச்சாண்டிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்க முடியும்.. எதிர்காலத்தில் இப்படியான பூச்சாண்டிகள் அடக்கப்படும்.

அம்மா என்றால் சும்மாவா என்ற  மாதிரிதான் இதுவும் :icon_mrgreen:

நல்ல செய்தி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கனடாவும், பிளேக் கேட்டதற்காக புலிகளை தடை செய்தவர்கள். அவர்களிடம் தடை செய்தமைக்கான காரணங்கள் ஒன்றும் கோட்டில் கொடுக்கத்தக்க அளவில் இருக்காது.

அண்ணா,

கனடாவில் ஒரு பெரிய ஆதாரமும் இருக்கவில்லை. டொரொண்டொ ஸ்டாரில் காவல் துறை பேச்சாளர் தமக்கு ஒரு முறைப்பாடும் வரவில்லை என்று கூறினார்.

ஜோ பெக்கர் என்ற போலி மனித உரிமையாளர் சந்திரிக்கா பண்டரநாயக்காவின் போலி செஞ்சேனை நண்பர் வி. பொன்னம்பலத்தின் மூத்த மகன் இருட்டு படம் போட்டு அவரை காசு கேட்டு துன்புறுத்துவதாக நாடகமாடினார். பின் யாரோ ஒரு பெண். ஆதாரமோ, காவல் துறை முறைப்பாடோ இல்லாமல் தடை வந்தது.

இப்போது காலம் மாறிவிட்டது.

பயங்கரவாதிகளா இருந்த புலிகள் போராளிகள் ஆனார்கள். அரசாங்கமா இருந்த சிறி லண்கன்ஸ் ரெஜீம் ஆகிவிட்டார்கள். தமிழர் மீது நடந்தது ஜெனோசைட் என்று அதே டொரொண்டொ ஸ்டாரில் இப்போது வந்துவிட்டது.

தடை செய்ய பொய் சொன்ன கூட்டமும் அவர்களின் கிரிகெட்,சினிமா செய்தி வாசித்து அரசியல் பேசும் நண்பர் தான் இன்னும் இந்த பயங்கரவாத மிரட்டலில் ஈடுபடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.