Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாப்பாடு போட்ட நண்பரின் மனைவியை கூட்டிக் கொண்டு ஓடிய ”நல்ல” நண்பர்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூரத்: சாப்பிடுவதற்காக தனது நண்பரின் வீட்டுக்குப் போன நபர் அங்கு நண்பரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் விட்டார்.

நடிகை நமீதாவின் ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து விட்டனர்.

சூரத்தின் சர்தானா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் படேல். இவர் ஒரு வைரம் பாலிஷ் போடும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மகேந்திர கச்சாடியா என்பவரும் வேலை பார்த்தார்.

கச்சாடியா வேறு ஊரைச் சேர்ந்தவர். சூரத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. தனியாக தங்கியிருந்தார். அவருக்கு அந்த ஊர் சாப்பாடு ஒத்துவரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தார்.

இதைப் பார்த்த படேல், உனக்கு சரியான சாப்பிடும் இடம் கிடைக்கும் வரை பேசாமல் எனது வீட்டில் சாப்பிட்டுக்கோ என்று கூறியுள்ளார். இதையடுத்து தினசரி மதியம், படேல் வீட்டுக்கு சாப்பிட வந்தார் கச்சாடியா.

அப்போது படேலின் மனவி பினிதாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி கள்ள உறவுக்குள் கொண்டு போய் விட்டது. நீ பேசாமல் என்னுடனேயே வந்து விடு, நாம் எங்காவது போய் விடலாம் என்று கூறியுள்ளார் கச்சாடியா. இதை ஏற்றார் பினிதா.

இதையடுத்து தனது கணவர், இரு குழந்தைகளை விட்டு விட்டு கச்சாடியவுடன் ராஜ்கோட்டுக்குப் போய் விட்டார். ஆனால் அங்கு போய் சில வாரங்களிலேயே கச்சாடியாவுடன் அவருக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தனது கணவரிடமே திரும்பி வந்தார்.

இதையடுத்து படேல் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரின் பேரில் கச்சாடியாவைக் கைது செய்தனர்.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சில  கேள்விகள்..

 

1-  இந்த செய்தியில் நமீதா எதற்கு?

 

2- தப்பு செய்த பினிதாவுக்கு ஏன் தண்டனை  இல்லை

 

3-  பாவம் கச்சாடியா அவர் ஒரு அப்பாவி

 

எனது தீர்ப்பு

பழையபடி

இன்னொருவருடன் பினிதா ஓட வாய்ப்பிருக்கிறது..... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சில  கேள்விகள்..

 

1-  இந்த செய்தியில் நமீதா எதற்கு?

 

2- தப்பு செய்த பினிதாவுக்கு ஏன் தண்டனை  இல்லை

 

3-  பாவம் கச்சாடியா அவர் ஒரு அப்பாவி

 

எனது தீர்ப்பு

பழையபடி

இன்னொருவருடன் பினிதா ஓட வாய்ப்பிருக்கிறது..... :lol:  :D  :D

 

காந்தி ஜி மாநிலம் என்று போட்டிருக்கலாம்....காந்திக்கும் ஒரு மரியாதையாக இருந்திருக்கும்....நமிதா மாதிரி அவரும் கவர்ச்சியை காட்டிபோட்டா அதனால் இளைஞர் சபலமடைந்துவிட்டார் என செய்தியாளர் வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றார் போலும்

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட வீட்டிலேயே சாப்பாடு ரெடி.. யார் யார் நண்பரெல்லாம் வாறீங்கள் .. :lol:

 

 

டிஸ்கி: இந்த மனைவிகள் தொல்லை தாங்க முடியலைப்பா சாமி  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட வீட்டிலேயே சாப்பாடு ரெடி.. யார் யார் நண்பரெல்லாம் வாறீங்கள் .. :lol:

 

 

டிஸ்கி: இந்த மனைவிகள் தொல்லை தாங்க முடியலைப்பா சாமி  :icon_idea:

 

 

இப்படி  சில  நடந்தால்தான்...........

நம்மவர்களின்  நிழலை  நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சிவகுமார் சொன்னதுமாதிரி தோசைக்கல் சும்மா கிடந்துள்ளது. கச்சாடியா அதை சூடாக்கி பல தோசைகள் சுட்டுள்ளார்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாகப்பட்டது பினிதா கச்சாடியாவுடன் சிலவாரங்கள் தங்கியிருந்து சமையல் பழக்கியிருப்பார் என நம்புகின்றேன்.பினிதாவின் நல்ல குணத்தை நாம் பாராட்ட வேண்டும்.mens658wk.gif

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பிநிதாவின் சாப்பாட்டு ருசி தான், நண்பரை இழுத்து கொண்டு ஓட வைத்தது என்று சொல்ல வாறீங்கள் இல்லையா அண்ணே   :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக......சந்தேகத்திற்கு இடமேயில்லை  :icon_mrgreen:


வெள்ளை மனசை யாருமே புரிந்து கொள்ளவில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட வீட்டிலேயே சாப்பாடு ரெடி.. யார் யார் நண்பரெல்லாம் வாறீங்கள் .. :lol:

 

 

டிஸ்கி: இந்த மனைவிகள் தொல்லை தாங்க முடியலைப்பா சாமி  :icon_idea:

 

நீங்கள்  சரியாய்க் கவனிக்கேல்லைப் போல..! :)

 

ஆடிமாத நாய் ஓடிப்போய் பிறகு ஆவணில கோடிக்க வந்து கிடந்தமாதிரி , அவவும் திரும்பி வந்திட்டா பார்க்கேல்லையோ..! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

கோமாளிக் கணவணுக்கு இது வேண்டியதே. நட்பு எல்லாம் வீட்டுக்கு வெளியே இருக்கவேண்டியதே. ஒரு குடும்பத்துக்குள் மூன்றாவதாக இன்னொர் ஆணோ பெண்ணொ  நுழைவாராயின் அங்கு பெரும்பாலும் குழப்பங்கள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பனை கொண்டு வந்து வீட்டுக்குள் வைத்த நண்பனின் கதை.

திருந்துங்க ப்ளிஸ்

http://www.youtube.com/watch?v=6v-YMDp6-Y0

Edited by முதல்வன்

நடிகர் சிவகுமார் சொன்னதுமாதிரி தோசைக்கல் சும்மா கிடந்துள்ளது. கச்சாடியா அதை சூடாக்கி பல தோசைகள் சுட்டுள்ளார்.. :D

 

சிறு திருத்தம் இசை கலைஞரே தோசை கல் ஏற்கெனவே சூடாக இருந்துள்ளது. கச்சாடியா மள மளவென்று மாவை ஊத்தி பல தோசைகளை சுட்டுள்ளார். அவவின் கணவர் தோசை சுடாமல் விட்டதுதான் தவறுக்கு காரணம். எனவே தண்டிக்கபட வேண்டியவர் அவவின் கணவர் தான்.  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜடியா போட்டு வேண்டாப் பெண்டாட்டியை கழட்டி விட்டு விட்டார், பட்டேல்.

இனி என்ன, குய்யோ, முறையோ, ஆச்சா, போச்சா, அப்படியா, இப்படியா என்டு ஊரைக்கூட்டி, ஒப்பாரி வைச்சுப் போட்டு, சின்னவீட்டை பெரிய வீடாக்கிப் போடுவார்.

கொய்யால உக்காந்து யோசிச்சிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாதமுனி அண்ணே நீங்கள் ஒரு படி மேல ஜோசிக்கிறீங்க.. நல்லா வருவீங்க அண்ணே  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாதமுனி அண்ணே நீங்கள் ஒரு படி மேல ஜோசிக்கிறீங்க.. நல்லா வருவீங்க அண்ணே :lol:

முதல்வனே,

இந்தியாவில தமது மனைவி மாரை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதும், அந்நிய ஆடவரை எச்சரிக்கையுடன் தூரத்தே வைத்திருப்பதும் மிகவும் சாதாரணம்.

ராகுல் காந்தியை முத்தம் கொடுத்த பெண் எரித்துக் கொல்லப் பட்டாரே.

எனது நண்பர் இந்தியாவில் படித்தவர். அவரது காதல் மனைவி, அவருடன் ஒன்றாகப் படித்த இலங்கையர்.

அண்மையில் அவர்களிடம் இந்தியாவில் இருந்து, குடும்பத்துடன் இரு நாட்கள் தங்க வந்திருந்த, அவர்கள் இருவருடன் ஒன்றாகப் படித்த, நணபர், நண்பர் மனைவியை அண்ணி என்றே அழைத்தார்.

Edited by நிழலி
நீக்கப்பட்ட கருத்தினை மேற்கொள் காட்டியமையால்..

அண்மையில் அவர்களிடம் இந்தியாவில் இருந்து, குடும்பத்துடன் இரு நாட்கள் தங்க வந்திருந்த, அவர்கள் இருவருடன் ஒன்றாகப் படித்த, நணபர், நண்பர் மனைவியை அண்ணி என்றே அழைத்தார்.

 

இதில் என்ன சொல்லுறீங்க? அண்ணி என்று சொன்னது பிழையா? இல்லை தங்கை என்று கூப்பிடிருக்கனுமா?

விளங்கவில்லை

Edited by naanthaan

அண்மையில் அவர்களிடம் இந்தியாவில் இருந்து, குடும்பத்துடன் இரு நாட்கள் தங்க வந்திருந்த, அவர்கள் இருவருடன் ஒன்றாகப் படித்த, நணபர், நண்பர் மனைவியை அண்ணி என்றே அழைத்தார்.

 

இதில் என்ன சொல்லுறீங்க? அண்ணி என்று சொன்னது பிழையா? இல்லை தங்கை என்று கூப்பிடிருக்கனுமா?

விளங்கவில்லை

 

நண்பனின் மனைவி என்றால் பெயர் சொல்லியே அழைக்கலாம். அண்ணி, தங்கை போன்ற போலி மரியாதை தேவையில்லை என நினைக்கிறேன்.

நண்பனின் மனைவி என்றால் பெயர் சொல்லியே அழைக்கலாம். அண்ணி, தங்கை போன்ற போலி மரியாதை தேவையில்லை என நினைக்கிறேன்.

 

..போலி மரியாதை கொடுத்து குழைபவர்கள் தான் பிரச்சனைகளை உண்டு பண்ணுவது...

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆனால் அங்கு போய் சில வாரங்களிலேயே கச்சாடியாவுடன் அவருக்கு கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தனது கணவரிடமே திரும்பி வந்தார்.

இதையடுத்து படேல் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரின் பேரில் கச்சாடியாவைக் கைது செய்தனர்.

 

 

படேல்... படு கில்லாடி போலுள்ளது.

தனது மனைவி பினிதா, கச்சாடியாவுடன்... ஒடிப் போனவுடன், காவல் துறைக்கு அறிவிக்காமல்,

திரும்பி வந்தவுடன்தான், அறிவித்ததைப் பார்க்க....

மனைவியை  கழட்டி விட போட்ட திட்டம் போலுள்ளது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா மாட்டுப்பட்டது கச்சாடியா தானே:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா மாட்டுப்பட்டது கச்சாடியா தானே :D

 

 

இதிலிருந்து  தெரிவது என்னவென்றால்

ஏரியா  காவல்துறை  அவாவின்   (யா)பாக்கற்றுக்குள்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.