Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன் பேர் சொல்ல வேண்டும். .......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகவை பதினாறு காணும்
யாழ் மகளே நீ வாழி .
.கற்றோரும் மற்றோரும் 
கத்துக்குட்டிகளும் காளைகளும்
கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்..
கற்க வருபவருக்கும் நீ கலைமகள். 

 

கண்ட நாள்முதல் மீண்டும்
மீண்டும் காண வைத்தாய் ..
அனைவரையும்  அணைக்கும்
ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி
சகலருக்கும் சரி சமமாய்

 

பிறப்பிலிருந்து  இறப்பு வரை
அறிவிக்கும் கருவியாய்..

ஊரிலிருந்து உலக செய்திவரை 
அத்தனயும் தரும் அமுத சுரபியாய் .
.பருகத்தேவிட்டாத தேனாய்
நாளும்பொழுதும்  வளரும்
யாழ் களமே நீ வாழி

 

நான் மட்டும் மல்ல
ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
கொள்ளுபேரன் பேத்திகளும்
உன் பேர் சொல்ல வேண்டும். 
என்ன துயர் வரினும்
எழுகவே யாழ் களமே

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், நிலாக்கா!

 

யாழ் ஒரு கட்டிளங் காளையாக, வாலைக் குமரியாக, மகளாக, தோழியாக,கலைமகளாக, ஆசானாக, ஆலமரமாக.... எத்தனை உருவகங்களை எடுக்கிறாள் என்னும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது! 

 

மொத்தத்தில், யாழ், தமிழுலகில் தனக்கென ஒரு நிரந்தரமான இடமொன்றைப் பிடித்திருக்கிறாள் என்பது தெளிவாகத் தெரிகின்றது!

 

ஆங்கிலத்தில் Niche  என்று சொல்லப்படும், ஒன்றை அவள் தனக்காக்கியிருக்கிறாள்! இங்கே தான் அவள் 'வெற்றி' பெற்றிருக்கிறாள்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கான சிந்தனைக்கவிதை இது...வாழ்த்துக்கள் நிலாமதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அகஸ்தியர் குமாரசாமி அன்னார ..புங்கையூரன்  உங்களுக்கு என் நன்றிகள் .

 

.மேலும்  வாசித்த  அனைவருக்கும் இனி வாசிக்க இருப்போருக்கும்  நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
நான் மட்டும் மல்ல
ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
கொள்ளுபேரன் பேத்திகளும்
உன் பேர் சொல்ல வேண்டும். 
என்ன துயர் வரினும்
எழுகவே யாழ் களமே
 
கவிக்கும்  வாழ்த்துக்கும்  நன்றி  தாயே............. :) 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மட்டும் மல்ல
 ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும்
 கொள்ளுபேரன் பேத்திகளும்
 உன் பேர் சொல்ல வேண்டும்.
என்ன துயர் வரினும்
 எழுகவே யாழ் களமே

 

 

இதற்கு நாங்கள் நிறைய உழைக்க வேண்டும்
இளையவர்களை இப்பவே யாழுக்குள் அழைத்து வரவேண்டும்

கவிதைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா உங்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நிச்சயம் யாழைத்தேடி வருவார்கள். உங்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும். ஏனெனில் தங்கள் அம்மாவின், பாட்டியின். கொள்ளுப்பாட்டியின் எழுத்துகளை அவர்கள் தேடும்போது முதன்முதலாக அவர்கள் யாழுக்குள்தான் தேடுவார்கள். எதிர்பார்ப்புடனான கவிதைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..கதையோடு கதையாக உங்களை தேடும்போது உங்களுக்கு நாங்கள் எழுதியவற்றையும் எதிர்காலச் சந்ததியின் வாசிப்பார்கள் இல்லையா அந்தவகையில் என் கருத்தையும் அவர்கள் வாசிப்பார்கள் :wub:

தாத்தா பாட்டிக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து கவலை பட ஆரம்பிச்சுட்டாங்களே :(

கவலை படாதேயுங்கோ...

உங்க கொள்ளு பேரன் பேத்திக்கு உங்க ஒவ்வொருத்தரின்ட குட்டையும் நான் சொல்லிவிடரேன் :D

கவிதைக்கு நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்ததியையும் சேர்த்து விட்டு , சிந்திக்க வைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி...! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.