Jump to content

ஊழிக்காலம் (நாவல்) - தமிழ்க் கவி


Recommended Posts

  • Replies 55
  • Created
  • Last Reply

தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

நன்றி : யுவகிருஷ்ணா
முகனூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நூல்கள் வெளியாகின்றன என்ற செய்திகள் வருகின்றன. நல்லவிடயம். ஆனால் இவற்றையெல்லாம் எப்படி இலகுவாக வாங்கலாம் என்பதைப் பற்றிய தகவல்கள் இல்லை. தெரிந்தவர்கள் கூறவும்.

Link to comment
Share on other sites

india+996.JPG
தமிழ்க்கவியுடனான ஒரு சந்திப்பு

தமிழ்க்கவி என்கிற தமயந்தி (வயது 66)மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது இரண்டு மகன்களும் ஒரு பேத்தியும் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகிப் போனதோடு இவரது கணவரும் இறுதி யுத்தத்தில் இறந்து போனார். ஆரம்ப காலப் போராளிகளிற்கு அவர் அக்கா.அடுத்த கட்ட போராளிகளிற்கு அன்ரி.அல்லது மம்மி. அதற்குமடுத்த கட்ட போராளிகளிற்கெல்லாம் அவர் அம்மம்மா.இப்படி புலிகள் அமைப்பின் மூன்று தலைமுறை போராளிகளிற்கு நன்கு அறிமுகமானதும் அவர்களின் அன்பு கொண்டவருமான தமிழ்க்கவி புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு தவிர்ந்த புறக் கட்டமைப்புக்களான  அரசியல்.பிரச்சாரம்.கலை பண்பாட்டுக் கழகம். தொலைக்காட்சி. வானொலி. பத்திரிகை . இருபது வருடங்களிறகு மேலாக  பணியாற்றியவர்.இலங்கை இராணுவத்தால் கைதாகி முகாமில் அடைக்கப் பட்டு  புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப் பட்டு  விடுதலையானர்.இன்று  வன்னி இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியமாகி நிற்பதோடு தனது அனுபவங்களை  ஊழிக்காலம் என்கிற ஒரு நாவல் வடிவத்தில் தந்துள்ளார்.

இவர் சென்னை வந்திருந்ததை அறிந்து அவரது விலாசத்தினை பெற்றுக் கொண்டு அவர் இருந்த முகப்பேர் பகுதிக்கு என்னுடைய ஒரு நண்பரோடு  சென்றிருந்தேன். சென்னையில் இப்போ இருக்கின்ற சிறிய இடத்திலெல்லாம் குடியிருப்புக்களை சிறிது சிறிதாகக் கட்டி வாடைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது  முக்கிய தொழில். அப்படி ஒரு சிறிய அடுக்கு மாடி கட்டிடம் தான் அவரது விலாசம். ஒடுங்கிய படிக் கட்டுக்களில் அவரது வீட்டைத் தேடி  முதலாவது  இரண்டாவது என ஏறி நான்காவது மாடியை கடந்து மொட்டை மாடிவரை போய் விட்டேன்  அவரது வீட்டைக் காணவில்லை. மொட்டை மாடியில் ஏறி நின்று சுற்றி வர பார்த்தபோது அங்கு அமைக்கப் பட்ட சிறிய ஒரு அறையில் இருந்து சிரித்தபடியே இதுதான் எனது மாளிகை வாருங்கள் என வரவேற்றவர்.கவனம் குனிந்து உள்ளை வாங்கோ என்றார்.
மொட்டை மாடியில் இரண்டு மீற்றர் சதுர அளவில்  சுவர் எழுப்பி மேலே சீற் போட்ட கூரை.இதுதான் அவரது வீடு இங்கு அவரும் அவரது ஒரு பேரனும் வசிக்கிறார்கள்.நான் கவனமாய் குனிந்து உள்ளே போனதும் இஞ்சை கதிரையெல்லாம் கிடையாது என்றபடி ஒரு பாயை விரித்து விட்டு அவசரமாக தேனீருக்காக அடுப்பை மூட்டி தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு ஒரு பிஸ்கற் பக்கற்றை பிரித்தவர் அங்கு மிங்கும் பார்த்து விட்டு அங்கு கிடந்த ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்து நிலத்தில் வைத்து இதுதான் தட்டு என்றபடி அதில் பிஸ்கற்றுக்களை கொட்டி சாப்பிட சொல்லி விட்டு ரின் பால் பேணியை உடைத்து பால்தேனீர் போட்டு  கொண்டு வந்து அமர்ந்தார்.நீண்ட நேரம் அவரோடு உரையடிவிட்டு விடை பெற முன்னர் நாங்கள் வாங்கிப் போன அவரது புத்தகத்தில் வீரமும் தீரமும் விலை பேச முடியாதவை. வெற்றி அல்லது வீர மரணம் இதுவே எமது தாரக மந்திரம் அன்புடன் தமிழ்க்கவி என்று கையெழுத்திட்டு தந்தார்.

india+1251.JPG
 நான் சென்னையை விட்டு புறப்பட முன்னர் அவரை தொடர்பு கொள்வதாக சொல்லி விடை பெற்றோம்.
நான் சென்னையை விட்டு புறப்படு முன்னர் அவரை புத்தக சந்தையில் சந்தித் திருந்த போது தான் அவசரமாக வேறு வீடு தேடுவதாக சொன்னார். காரணம் நாங்கள் மற்றும் வேறு பத்திரிகையாளர்களும் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்றதில் ஆத்திரமடைந்த வீட்டு முதலாளி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டாராம் என்றார்..வேண்டு மானால் வீட்டு முதலாளியோடு  நாங்கள் கதைத்து பார்க்கவா என்றதற்கு வேண்டாம் எங்களிற்கும் மான ரோசம் இருக்கு றோட்டிலை படுக்கிறது ஒண்டும் எனக்கு புதிசில்லை வீட்டை விட்டு போ.. எண்டு சொன்னதுக்கு பிறகு எனக்கு அங்கை இருக்க விருப்பம் இல்லை பாலத்துக்கு கீழை படுத்தாலும் இனி அங்கை இருக்க மாட்டன் வீடு தேடுறன் என்றார்.முடிந்தளவு நானும் உதவுவதாக கூறி விடை பெற்றேன்.அவரது ஊழிக்காலம் இன்னமும் முடியவில்லை...

 

Link to comment
Share on other sites

ஊழிக்காலம் பக்கம்.90.....மாவீரர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருந்தது.அதைக் கடந்து அலுவலகத்தினுள் நுளைந்தபோது பொறுப்பாளர் தியாகம் ஜயா முகம் நிறைந்த தாடி மீசையுடன் அமர்ந்திருந்தார்
வணக்கம் ஜயா
வாங்கம்மா
என்றவர் மாவீரர் பதிவுகள் சரியாக மேற் கொள்ளப் படுகிறதா என்றதை கவனித்தபடி இருந்தார்.அங்கு நின்ற பத்மாவிடம் எங்கை இருக்கிறீங்கள் என பார்வதி சம்பிரதாயமாக கேட்டதும் அவளது கண்கள் பனித்தன.மூங்கிலாத்திலைதான்.சொந்தக் காரரோடை போயிருப்பன்.எல்லாரும் தனியாத்தான் போகினம் என்னை வாறியா எண்டு ஒருத்தர் கூட கேக்கேல்லை.எங்கடை நிலைமையை பாத்தியளா??.போரிலை வெற்றியெண்டா எத்தினை பேர் வீட்டை வந்திருப்பினம்.இப்ப நான் தனி மரம்.நானும் சண்டைக்கு போகப் போறன் என்றாள்.
பத்மா அங்கு நின்றதற்கான காரணம் பார்வதிக்கு புரிந்தது களத்திலிருந்து வரும் வித்துடல்களோடு அல்லது வேறு வகையில் அவளது கணவனுடன் நிற்பவர்கள் வரக் கூடும் அவனும் வரக்கூடும் எனவே அவனை சந்திக்கவோ அல்லது அவனைப் பற்றி அறிய சந்தர்ப்பம் அவளிற்கு கிடைக்கும் .அதற்காக மாவீரர் துயிலும் இல்லத்தில் காத்திருந்தாள்

Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம்.95..உடையார் கட்டு மைதானத்தில் அதிகாரிகள் நிவாரணம் வழங்கினார்கள்.முல்லை மாவட்ட மக்கள் கிழக்கு மேற்காகவும்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் வடக்கு தெற்காகவும்.இன்னொரு வரிசை சுதந்திர புரம் வீதியை அடைத்து நின்றது.மன்னார் மாவட்ட மக்கள் தனி வரிசையில் நின்றனர்.பகல் 11 மணி இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தது ஓ..என்று அலறல் சத்தம் கேட்டது ஆனாலும் எவரும் வரிசையை விட்டு விலகவில்லை.எறிகணைகள் கூவிக் கொண்டு வரவும்.சிலர் நெளிந்து கொடுத்தார்கள் சிலர் இருந்தார்கள்.சிலர் படுத்தார்கள்.ஓடவோ வரிசையை கைவிடவோ இல்லை.உயிரின் விலை நிவாரணப் பொருட்களை விட குறைந்து போயிருந்தது.உயிரா??பசியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஒவ்வொரு பக்கமாக போட்டு கொண்டு வந்தால் எப்படி புத்தகத்தை வேண்டி வாசிக்க மனம் வரும் :( நூலைப் பற்றி அறியத் தந்த சயந்தனுக்கு நன்றி
 
Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம்155.காயமடைந்திருந்த பாலகுமார் பதுங்கு குழிஒன்றினுள் கதிரை போட்டு அமர்ந்திருந்தார்.பார்வதியை கண்டவர் வாங்கோ இருங்கோ என்றார்.காயமடைந்த இடது கையை மடக்கி தொங்க விட்டிருந்தார். புலிகளின் பொது நிருவாகங்கள் ஆரம்பித்த பின்னர் தலை தூக்கிய கீழ் மட்ட ஊழல்களால் பாலகுமார் மனமுடைந்து போயிருந்தார்.இருபது வருட காலத்தில் அவர் எந்த பதவியிலும் அமர்ந்ததில்லை.புலிகளின் மூத்த உறுப்பினர் என்பதோடு சரி.அவர் பேசட்டும் என்று பார்வதி மெளனமாக இருந்தாள்.கவலையோடை முகத்தை சுழித்தவர் காது குடுத்து கே்ககேலாது முககுடுக்கேலாத கதையள் .நாயள்.பேயள். தாங்க முடியேல்லை. வெற்றி எண்டது சண்டையிலை எடுக்கிறதில்லை யுத்தத்திலை வெற்றி தோல்வி சகஜம் ஆனால் மக்களை வெண்டிருக்கவேணும்.அதிகாரம் போட்டி எல்லாம் அழியும்.மக்களை காப்பாத்த எடுத்த ஆயுதத்தை மக்களை நோக்கி திருப்புவாங்கள்.நண்பர்களை கூட பார்க்க மனமில்லாமல் போகும்...

Link to comment
Share on other sites

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

Link to comment
Share on other sites

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

317 பக்கம் யார் தட்டச்சு செய்யிறதாம்.

Link to comment
Share on other sites

பச்சையும் வாழ்த்தும் சொன்னவர்கள் இனி சிவப்பும் பேச்சும் தரப்போகின்றார்கள் .

தமிழ்கவியும் ஓடிவந்தவர்கள் கைகளிலில் துரோகியாகி வதை பட போகின்றார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகத்தில் நிறைய விடயங்கள் இருக்கும்போல...! பரீசுக்குப் போனல் நிறைய சாமான்கள் வாங்க வேண்டும் ..ம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுப் புத்தகத்தையும் உப்பிடி ஒவ்வொரு பக்கமாகப் போட்டால் நாங்கள் சுகமாய் வாசிப்பமல்லே  :D நன்றி சாத்!

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<
Link to comment
Share on other sites

 

ஓ அந்த அம்மா வன்னியில் இருந்து கஸ்டப்பட்டு,படாத பாடுபட்டு தப்பி இந்தியா போய் ஒரு புத்தகம் எழுதினால் அதைக் கூட காசு கொடுத்து வேண்டிப் ப்டிக்காமல் ஓசியில் படியுங்கோ <_<

 

 

 

பகிடிகளுக்கு எல்லாம் ரென்ஷனாகாதீர்கள் ரதியக்கா  :)

Link to comment
Share on other sites

ஊழிக்காலம்.பக்கம் 175...என்ன அவல வாழ்க்கை எப்ப முடியப் போகுது என்றாள் சீராளனின் மனைவி. எங்கை முடியிறது இரண்டொருத்தர் அழியவேணும் அப்பதான் முடிவுக்கு வரும் என்றாள் பார்வதி. அவலப்பட்டு ஓடிக்கொண்டிருந்த வேளையிலும் போராட்டத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்ந்து நடந்தது.யார் போவார் அதனால் பலவந்தமாக கூடாரங்களிற்குள் புகுந்து பிள்ளைகளை பிடித்துக் கொண்டு போனார்கள்.ஊரிழந்து உறவுகளையிழந்து உடைமைகளை இழந்து ஓடிக்கொண்டிருந்த மக்களிற்கு மற்றொரு பேரிடியாக ஆட் சேர்ப்பும் வந்து விழுந்தது.சனங்கள் யாவராலும் கைவிடப் பட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

Link to comment
Share on other sites

தோல்வி அடைந்த போராட்டத்தை விமர்சிக்கும் முன்னாள் போராளிகள் வரிசையில் தமிழ்க்கவியும் இணைந்திருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே

Link to comment
Share on other sites

சில மாதங்களாகவே தமிழகத்தில் தலைவருன் பெயரை கூறத்தடை படத்தை போடத்தடை என்று இருக்கும்பொழுது ஒருவர் அங்கயே இருந்து கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி நேர்மையாக வெளியிட முடியாது என்பதே எமது கருத்து அப்பிடியே வெளியிட்டாலும் அதில் என்ன வகையான எழுத்துக்கள் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.....

எங்கே நாடு கடத்தபடுவமோ என்ற அச்சத்தில் விமர்சனங்களை அதிகமாக தூவி எழுதி இருக்கார் போல......

விமர்சனங்களை முன்வைக்கும் போது அந்த போராட்டத்தின் தியாகங்கள் எந்த சூழ்நிலையில் எப்பிடி யாரால் சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன போன்றவற்றையும் கணக்கில் எடுக்க வேண்டும் 30 வருட போராட்டத்தை எழுத்துக்களால் கூறும் போது மக்கள் மத்தியில் எவளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதனை ஒரு உண்மையான விடுதலை எழுத்தாளன் சிந்தித்தே எழுதுவான்

Link to comment
Share on other sites

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் கசக்கும் .(உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அப்படி நடந்தால் நல்லா விளங்கியிருக்கும் உங்களுக்கு )

 

 

தமிழ்கவிக்கு மட்டும் தான் இப்படி ஒரு வாழ்வு என்று இல்லைத் தானே.

சுனாமி,முள்ளிவாய்கால் இது இரண்டின் பின்பும் ஊரில் உள்ள ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை இழந்தவர்களாகத் தானே அந்த மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..ஒருவர் நல்லா இருக்கும் போது அவர்களைத் தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுவதற்கும், அவர் கொஞ்சம் கஸ்ரப்பட்டுட்டார் எண்டதன் பின் அவர்களை திட்டி தீர்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா...

 

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் எல்லாவற்றையும் சொல்ல சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை .சந்தர்ப்பம் அமைந்தாலும் பலர் ஏன் வில்லங்கம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் இருக்கின்றார்கள். 

இதில் தூக்கி பிடித்த தூற்றிய என்ற ஒன்றிற்கே இடமில்லை .உண்மையில் நடந்ததை, தான் கண்டதை அவர் சொல்லுகின்றார் .அதை அவர் ஏன் சொல்லகூடாது என்று நினைக்கின்றிர்கள் .

கட்டிப்போட்டம் இனி அடித்தாலும் உதைத்தாலும் புருசனை விட்டுகொடுக்க கூடாது என்பது போலிருக்கு .

 

Link to comment
Share on other sites

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் புத்தகங்களை இணையத்தினூடாக எப்படி வாங்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..

ஊழிக்காலம் - தமிழ்க்கவி

வேட்டைத் தோப்பு – கருணாகரன்

இனி எனது நாட்களே வரும் – நிலாந்தன்

ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழுதாசன்

கொலம்பசின் வரைபடங்கள் - யோ.கர்ணன்

 

 

ஒன்லைன் மூலம் வாங்க விருப்பம் என்டால் மருதங்கேணியிடம் கேளுங்கள்  

நிறைய விடயங்கள் துயரமானவை. ஆனாலும், Desperate times call for desperate measures என்று சொல்வார்கள். அவற்றை விவாதித்துப் பயனில்லை.

 

விட்ட பிழையில் இருந்து பாடம் படிக்கலாம்.இனி மேல் அப்படி ஒரு தவறு நிகழாமல் தவிர்க்கலாம்.
 
இறுதி யுத்தத்தின் இறுதி நேரம் வரை அங்கே இருந்த கர்ணன்,நிலாந்தன்,கருண்கரன் சொல்வது பிழை.தற்போது தமிழ்க்கவியையும் இங்கே இருந்து கொண்டு எம்மால் விமர்சிக்கத் தான் முடியும்.அதைத் தவிர எம்மால் என்ன செய்ய முடியும்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.