Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனுபவம் தரும் துணிச்சல்.

Featured Replies

அனுபவம் தரும் துணிச்சல்: 
போனவாரம் லோங்வீக்கென்ட் எனது அக்காவின் மகள் போன்பண்ணி எங்கேயாவது லாங்ட்ரிப் போவோமா என்று கேட்டார், அதற்கு நான் எங்கே போகலாம் என்றதற்கு அவர் Illinois, Indiana. Kentucky என்று சில பெயர்களை சொன்னார் அதில் எனக்கு இந்தியானா என்ற பெயர் பிடித்திருந்தது. காரணம் இந்தியா என்ற பெயர் மேலும் Indiana Jones பெயரில் வந்த படங்கள் பார்த்த பாதிப்பு. ஒருவழியாக கடைசி rental கார் கிடைத்துவிட்டது, பின் ஹோட்டல் booking, அது இன்டியானாவில் மாத்திரம் கிடைத்தது. பென்சில்வேனியா சென்று அங்கு Grovecity இல் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து இந்தியானா செல்வோம் என்று அக்காவின் மகள் விரும்பினார். நான், அக்கா, அக்காமகள், அண்ணன் மகள், நான்கு பேரும் சனி இரவு 8.30pm புறப்படோம். போகும் வழியில் இரண்டு மூன்று மான்கள் அடிபட்டு கிடந்தன, எங்கள் காரில் அடிபட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கவே பயமாக இருந்தது, அதனால் வேகத்தை குறைத்து ஓட்டிச்சென்றார் அக்கவின்மகள். பென்சில்வேனியா சென்று அங்கு ஹோட்டல்கள் மொட்டேல்கள் விசாரித்துப் பார்த்தால் எல்லாமே already booked. அதற்குள் ஒரு நரியையும் அடித்துவிட்டோம், அதுவேறு எல்லாருக்கும் ஒரு மாதிரியா போய்விட்டது. அலைந்து திரிந்து ஒரு இடமும் கிடைக்கவில்லை, நேரமும் இரவு மூன்றரையாகிவிட்டது, கடைசியாக விடியும்வரை காருக்குள்ளே படுப்பது என்று முடிவெடுத்து Grovecirty shopping mall parking lot இல் காரை பார்க் பண்ணிவிட்டு நித்திரை கொண்டோம். எங்கள் நல்லகாலம் எதுவித பிரச்னையும் வரவில்லை (எங்களில் முழித்த நரிக்கு கெட்டகாலம்)பின் காலை ஏழு மணியளவில் காலை சாப்பாட்டிற்கு பெயர் போன Ihope restaurant இற்கு சென்று சாப்பிட்டு காலை கடன்களையும் முடித்துக்கொண்டு பின் ஷாப்பிங் செய்து கொண்டு இன்டியானா சென்றோம். அங்கு டினோசர் musiam சென்று அறுபது மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புகளை தொட்டு பார்த்து மகிழ்ந்தோம். (அது வெறும் காஸ்ட் அல்ல ஒரிஜினல் bones என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது). சில நண்பர்கள் கேட்டார்கள் நாலு பெண்களும் தனியே செல்வது பயமா இல்லையா என்று. எங்களுக்கு அப்படியொரு எண்ணமே தோன்றவில்லை. எதுவித பிரச்னையும் இல்லாமல் ஞாயிறு இரவு இரண்டு முப்பது வீடு வந்து சேர்ந்தோம். இதில் காருக்குள் படுத்து தூங்கியது நல்ல அனுபவம். அக்காவின் மகள் அடுத்த ட்ரிப்புக்கு ஆயத்தப்படுதுகின்றார், இம்முறை போறவழியில் டென்ட் அடித்து தூங்க உத்தேசம்.

(மனைவியின் முக புத்தகத்தில் உருவியது .)

நான் நினைக்கிறன்...அமெரிக்காவில் அதிகாலை வேளையில் ஹோட்டல் தர பின்னிற்கிறார்கள் காரணம்...அவர்களுக்கு நீங்கள் 12:00 மணிக்கு மேல் நின்றாலும் ஒரு நாள் கட்டணம் தானே அறவிட போகிறோம் என்பதற்காக இருக்கலாம்...

எனக்கும் சரியாக இதே மாதிரி ஒரு 10 வருடங்களுக்கு முன் நடந்தது...நாங்கள் 4பேர் motelகளில் கேட்கும் பொது அறை ஒன்றும் இல்லை என்றார்கள்...ஆனால் Marriott ஹோட்டல் ஒன்றில் அதிகாலை 3-4மணிக்கு கேட்கும் போது தந்தார்கள் (ஒன்றரை நாள் தங்களுக்கு ஒரு நாள் கட்டணமே அறவிட்டார்கள் :)  மற்றைய இடங்களில் இரண்டு நாள் கட்டணம் அறவிடுவார்கள்)...ஆகவே நேரம் கெட்ட நேரத்தில் சென்றால்...பெரிய ஹோட்டல் களை அனுகுவது நல்லது....

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவும் உரித்தும் அவருக்கு மட்டும்தான் தெரியும்...... :)

மற்றும்படி நாலு பொம்புளையளோடை இரவிலை ஹொட்டல் றூம் தேடினால் எவன்  குடுப்பான்? :icon_idea:  :o  :lol:  :D


சொந்த தாயோடை போனாலே உன்ரை கேள் ப்ரண்டா எண்டு கேக்கிற காலமிது. :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன்...அமெரிக்காவில் அதிகாலை வேளையில் ஹோட்டல் தர பின்னிற்கிறார்கள் காரணம்...அவர்களுக்கு நீங்கள் 12:00 மணிக்கு மேல் நின்றாலும் ஒரு நாள் கட்டணம் தானே அறவிட போகிறோம் என்பதற்காக இருக்கலாம்...

எனக்கும் சரியாக இதே மாதிரி ஒரு 10 வருடங்களுக்கு முன் நடந்தது...நாங்கள் 4பேர் motelகளில் கேட்கும் பொது அறை ஒன்றும் இல்லை என்றார்கள்...ஆனால் Marriott ஹோட்டல் ஒன்றில் அதிகாலை 3-4மணிக்கு கேட்கும் போது தந்தார்கள் (ஒன்றரை நாள் தங்களுக்கு ஒரு நாள் கட்டணமே அறவிட்டார்கள் :)  மற்றைய இடங்களில் இரண்டு நாள் கட்டணம் அறவிடுவார்கள்)...ஆகவே நேரம் கெட்ட நேரத்தில் சென்றால்...பெரிய ஹோட்டல் களை அனுகுவது நல்லது....

நீங்கள் எத்தனை மணிக்கு கொட்டல் எடுத்தாலும்  செக் அவுட் நேரத்திற்கு . மேல் நின்றால் கூடுதலான பணம் கட்டிதான் அக வேண்டும். அதனால் வர்களுக்கு லபாம்தான்.
உண்மையிலே  எல்லாம் நிறைந்து  இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்??
 
கொட்டலில் அதிக பணம் என்பதால் எல்லாம் நிறைவது எனபதற்கு குறைவான சாத்தியபாடே உண்டு.
அதனால் அங்கு அரை எடுப்பது உஅங்கலுக்கு இலகுவாக இருந்திருக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் தரும் துணிச்சல்: 

போனவாரம் லோங்வீக்கென்ட் எனது அக்காவின் மகள் போன்பண்ணி எங்கேயாவது லாங்ட்ரிப் போவோமா என்று கேட்டார், அதற்கு நான் எங்கே போகலாம் என்றதற்கு அவர் Illinois, Indiana. Kentucky என்று சில பெயர்களை சொன்னார் அதில் எனக்கு இந்தியானா என்ற பெயர் பிடித்திருந்தது. காரணம் இந்தியா என்ற பெயர் மேலும் Indiana Jones பெயரில் வந்த படங்கள் பார்த்த பாதிப்பு. ஒருவழியாக கடைசி rental கார் கிடைத்துவிட்டது, பின் ஹோட்டல் booking, அது இன்டியானாவில் மாத்திரம் கிடைத்தது. பென்சில்வேனியா சென்று அங்கு Grovecity இல் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து இந்தியானா செல்வோம் என்று அக்காவின் மகள் விரும்பினார். நான், அக்கா, அக்காமகள், அண்ணன் மகள், நான்கு பேரும் சனி இரவு 8.30pm புறப்படோம். போகும் வழியில் இரண்டு மூன்று மான்கள் அடிபட்டு கிடந்தன, எங்கள் காரில் அடிபட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கவே பயமாக இருந்தது, அதனால் வேகத்தை குறைத்து ஓட்டிச்சென்றார் அக்கவின்மகள். பென்சில்வேனியா சென்று அங்கு ஹோட்டல்கள் மொட்டேல்கள் விசாரித்துப் பார்த்தால் எல்லாமே already booked. அதற்குள் ஒரு நரியையும் அடித்துவிட்டோம், அதுவேறு எல்லாருக்கும் ஒரு மாதிரியா போய்விட்டது. அலைந்து திரிந்து ஒரு இடமும் கிடைக்கவில்லை, நேரமும் இரவு மூன்றரையாகிவிட்டது, கடைசியாக விடியும்வரை காருக்குள்ளே படுப்பது என்று முடிவெடுத்து Grovecirty shopping mall parking lot இல் காரை பார்க் பண்ணிவிட்டு நித்திரை கொண்டோம். எங்கள் நல்லகாலம் எதுவித பிரச்னையும் வரவில்லை (எங்களில் முழித்த நரிக்கு கெட்டகாலம்)பின் காலை ஏழு மணியளவில் காலை சாப்பாட்டிற்கு பெயர் போன Ihope restaurant இற்கு சென்று சாப்பிட்டு காலை கடன்களையும் முடித்துக்கொண்டு பின் ஷாப்பிங் செய்து கொண்டு இன்டியானா சென்றோம். அங்கு டினோசர் musiam சென்று அறுபது மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புகளை தொட்டு பார்த்து மகிழ்ந்தோம். (அது வெறும் காஸ்ட் அல்ல ஒரிஜினல் bones என்பதை இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது). சில நண்பர்கள் கேட்டார்கள் நாலு பெண்களும் தனியே செல்வது பயமா இல்லையா என்று. எங்களுக்கு அப்படியொரு எண்ணமே தோன்றவில்லை. எதுவித பிரச்னையும் இல்லாமல் ஞாயிறு இரவு இரண்டு முப்பது வீடு வந்து சேர்ந்தோம். இதில் காருக்குள் படுத்து தூங்கியது நல்ல அனுபவம். அக்காவின் மகள் அடுத்த ட்ரிப்புக்கு ஆயத்தப்படுதுகின்றார், இம்முறை போறவழியில் டென்ட் அடித்து தூங்க உத்தேசம்.

(மனைவியின் முக புத்தகத்தில் உருவியது .)

இதில் பெண் புத்தி பின் புத்தி .... என்பதற்கு ஆதாரமாக சில விடயங்கள் இருக்கிறது.
இதுவே அர்ச்சுன் அண்ணாவின் (மனைவி) அக்காவின் மகன்கள் போயிருந்தால் ..........
மோட்டலில் தங்குவது என்று முடிவு எடுத்திருந்தால் ......... மோட்டலில் தங்கித்தான் வந்திருப்பார்கள்.
காரணம் இன்றைய நாளில் (10 வருடங்களாக ) அறைகள் காலியான மொட்டேல் களுக்கு போயிருக்க வேண்டிய தேவை இல்லை.
 எங்கு அறை இருக்கிறதோ அங்கு சென்று அறை எடுத்து தங்கி இருக்கலாம்.
 
அனுபவங்கள்தான் வாழ்க்கை !
பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற தொடங்கினால்தான் சமூகம் முன்னேறும். பெண்களை பூட்டி வைக்கும் எந்த சமூகமும் முன்னேறியதாக காணவில்லை.  

 

நீங்கள் எத்தனை மணிக்கு கொட்டல் எடுத்தாலும்  செக் அவுட் நேரத்திற்கு . மேல் நின்றால் கூடுதலான பணம் கட்டிதான் அக வேண்டும். அதனால் வர்களுக்கு லபாம்தான்.

நீங்கள் சொல்வது சரி..எங்களிடம் இரண்டு நாள் கட்டணம் அறவிட்டிருக்கலாம்...ஆனால் அவர்கள் செய்யவில்லை...

உண்மையிலே  எல்லாம் நிறைந்து  இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்??
 
கொட்டலில் அதிக பணம் என்பதால் எல்லாம் நிறைவது எனபதற்கு குறைவான சாத்தியபாடே உண்டு.
அதனால் அங்கு அரை எடுப்பது உஅங்கலுக்கு இலகுவாக இருந்திருக்கும். 

 

 

 

இண்டர்நெட் யுகத்தில் எங்கே இடம் இருக்கிறது என்று பார்த்துவிட்டு சென்றிருக்கலாம் (அர்ஜூனின் குடும்பத்தினர்...) தனி பெண்களாக இரவினில் (ஆட்கள் வேலை செய்யாத) service centre களில் இருப்பது..ஆபத்து...ஆனால் அவர்கள் இருந்த இடம் ஒரு ஷாப்பிங் சென்டர்..சிலவேளை அருகே நிறைய நடமாட்டம் இருந்திருக்கும்.....ஆகவே பாதுக்காப்பாக உணர்ந்திருக்கலாம்....

 

சிலவேளை அங்கே ஏதாவது விடுமுறையாக இருந்திருக்கும்..எல்லா ஹோட்டல்களும் நிறைந்திருக்க

 

அமேரிக்கா வாகனத்தில் பயணம் செய்ய நல்ல இடம்..அதுவும் இவர்கள் பயணம் செய்த இடங்கள்....

  • தொடங்கியவர்

உறவும் உரித்தும் அவருக்கு மட்டும்தான் தெரியும்...... :)

மற்றும்படி நாலு பொம்புளையளோடை இரவிலை ஹொட்டல் றூம் தேடினால் எவன்  குடுப்பான்? :icon_idea:  :o  :lol:  :D

சொந்த தாயோடை போனாலே உன்ரை கேள் ப்ரண்டா எண்டு கேக்கிற காலமிது. :(

அண்ணை திட்டிற அவசரத்தில வடிவாக  வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: .

நான் அவர்களுடன் போகவில்லை . :)

அண்ணை திட்டிற அவசரத்தில வடிவாக  வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: .

நான் அவர்களுடன் போகவில்லை . :)

 

hahaha.....

  • கருத்துக்கள உறவுகள்

படித்து வரும் பாடத்தை விட அனுபவம் கற்றுத் தரும் பாடம் அதிகம்.ஒருக்கால் ஒன்றை தைரியமாக செய்து விட்டால் அதன் பின்னர் பயம் இல்லாமல் போய் விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் கிருபையால் உயிர் தப்பியதை

துணிச்சல் என்பதற்குள் கொண்டுவர  அர்யூன் அண்ணாவால் மட்டுமே முடியும்??

 

நாங்கள் கொஞ்சம் முன்னா போகும் யோடி என்று இங்கு எழுதியதாக ஞாபகம்?

இது தானா  அந்த முன்னேற்றம்?

 

எத்தனை  வசதிகள்  இருந்தும்

எதையும் ஒழுங்கு செய்யாது

எதையும் பாவிக்காது

குருட்டு வாக்கில்  தப்பிவருவது........???

ஒன்று நடந்திருந்தால்........??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
அட, மனிசிய தனிய பொம்பிளை பிள்ளைகளோட அனுப்பிப்போட்டு, பதறிக் கொண்டு நிண்டு போட்டு இப்ப 'அனுபவம் தரும் துணிச்சலாம்'.
 
முதலில் நானும் அண்ண தான் போய் இருக்கிறார் தான் என்று தான் நினைத்து வாசித்தேன்.
 
 இந்த மாதிரி, 'படு முட்டாள் தனங்களை' ஊக்கி விக்காதீர்கள் என கள உறவுகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
அமெரிக்கா, மிக ஆபத்தான இடம்...... ஏதும் நடந்த பின் கவலைப் பட்டு பிரஜோசனம் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

 

அட, மனிசிய தனிய பொம்பிளை பிள்ளைகளோட அனுப்பிப்போட்டு, பதறிக் கொண்டு நிண்டு போட்டு இப்ப 'அனுபவம் தரும் துணிச்சலாம்'.
 
முதலில் நானும் அண்ண தான் போய் இருக்கிறார் தான் என்று தான் நினைத்து வாசித்தேன்.
 
 இந்த மாதிரி, 'படு முட்டாள் தனங்களை' ஊக்கி விக்காதீர்கள் என கள உறவுகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
அமெரிக்கா, மிக ஆபத்தான இடம்...... ஏதும் நடந்த பின் கவலைப் பட்டு பிரஜோசனம் இல்லை. 

 

 

3  பேர் விருப்பு வாக்கு போட்டிருக்கினம்... :(  :(  :(

 

அட, மனிசிய தனிய பொம்பிளை பிள்ளைகளோட அனுப்பிப்போட்டு, பதறிக் கொண்டு நிண்டு போட்டு இப்ப 'அனுபவம் தரும் துணிச்சலாம்'.
 
 
 
 இந்த மாதிரி, 'படு முட்டாள் தனங்களை' ஊக்கி விக்காதீர்கள் என கள உறவுகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 

 

 

ஏன் நாதமுனி,

 

மனைவியை பொம்பிள்ளைப் பிள்ளைகளுடன் தனிய் அனுப்புவதில் என்ன முட்டாள்தனம் இருக்கின்றது?

 

சரியான திட்டமிடல் இல்லாமல் சென்றது தவறாகப் படலாம், ஆனால் பெண்களை தனிய அனுப்புவதில் என்ன தவறு இருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுப்பட்ட பின்னர் பெண்களை வீட்டுக்குள் பொத்தி வைத்து வளர்த்த சமூகத்தில் இருந்து வந்தவர்கள் பெண்கள் தனியாக காரில் பலநூறு மைல்கள் அட்வெஞ்சர் ஹொலிடே போவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முக்கியமாக தமது பெண்கள் இப்படி நடப்பவற்றை அறியவே விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நாதமுனி,

 

மனைவியை பொம்பிள்ளைப் பிள்ளைகளுடன் தனிய் அனுப்புவதில் என்ன முட்டாள்தனம் இருக்கின்றது?

 

சரியான திட்டமிடல் இல்லாமல் சென்றது தவறாகப் படலாம், ஆனால் பெண்களை தனிய அனுப்புவதில் என்ன தவறு இருக்கின்றது?

 
ஏதோ ரயில், பிளேன், பஸ் ஏத்தி அனுப்பிறது போல, காரில் தூரப் பயணம் செய்வதை, அதுவும் பெண்கள் போனதை சொல்கிறீர்கள் நிழலி.
 
இங்கே தனியே பிஸி யான motorway (highway) யில் போன பெண், கார் டயர் flat ஆகி, தவித்த போது, டயர் மாத்த உதவுகிறேன் எண்டு, வந்த வேறு கார் ஓட்டுனரால் அதே காரில், பட்டப் பகலில், பலாத்காரம் செய்யப் பட்டார். 
 
Busy யான ரோட்டிலேயே, இந்த நிலைமை, ஆள் அரவம் இல்லாத இடத்தில்...... நரிகள், மான்கள் அடிபடக் கூடிய இரவு வேளையில்.... நமக்கே பயம் வருகிறது...
 
வேண்டாம், விதண்டாவாதம் பிடித்த போலிஸ் காரகள், கூட அங்கே பெண்கள் நின்றதற்கான காரணத்தினைக் கேட்டு அலுப்புக் கொடுத்திருக்கலாம்... வேறு தவறான காரணம் சொல்லி....  

Edited by Nathamuni

காரில் தூரப்பயணத்தில் ஆணுக்கும் கூட பல பிரச்சனைகள்  வருவதுண்டு. நீங்கள் சொன்ன மாதிரி ரயர் காத்துப் போய் நிற்க உதவி போன்று வந்து கொள்ளை அடித்து கொலையும் செய்யும் நிகழ்வுகள் ஆணுக்கும் கூட ஏற்படுவதுண்டு.

 

எனக்குத் தெரிந்து இங்கு பல தமிழ் பெண்கள் அவர்களின் வேலையின் நிமித்தமே பல நூறு மைல்கள் காரில் தனிய சென்று விட்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வருகின்றனர். அதுவும் மாதத்தில் இரண்டு மூன்று தடவையாவது இரவில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளவர்கள் அவர்கள். அவர்கள் போகும் முன்னரே தங்கும் விடுதிக்கான முன்பதிவு போன்ற விடயங்களை செய்து விட்டு செல்கின்றமையால் கூடியவரைக்கும் பாதுகாப்பாக செல்கின்றனர். 

 

கனடாவில் நரிகளும் மான்களும் அடிபடக் கூடிய வீதிகள், நகர்ப்புறத்தில் இருந்து 5 கிலோ மீற்றர் ஓடினாலே வந்து விடும்.

 

எல்லாப் பயணங்களிலும் ஆபத்து இருக்கு. தகுந்த திட்டமிடலும் போனால் அவற்றைக் குறைக்கலாம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காரில் தூரப்பயணத்தில் ஆணுக்கும் கூட பல பிரச்சனைகள்  வருவதுண்டு. நீங்கள் சொன்ன மாதிரி ரயர் காத்துப் போய் நிற்க உதவி போன்று வந்து கொள்ளை அடித்து கொலையும் செய்யும் நிகழ்வுகள் ஆணுக்கும் கூட ஏற்படுவதுண்டு.

 

எனக்குத் தெரிந்து இங்கு பல தமிழ் பெண்கள் அவர்களின் வேலையின் நிமித்தமே பல நூறு மைல்கள் காரில் தனிய சென்று விட்டு எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வருகின்றனர். அதுவும் மாதத்தில் இரண்டு மூன்று தடவையாவது இரவில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளவர்கள் அவர்கள். அவர்கள் போகும் முன்னரே தங்கும் விடுதிக்கான முன்பதிவு போன்ற விடயங்களை செய்து விட்டு செல்கின்றமையால் கூடியவரைக்கும் பாதுகாப்பாக செல்கின்றனர். 

 

கனடாவில் நரிகளும் மான்களும் அடிபடக் கூடிய வீதிகள், நகர்ப்புறத்தில் இருந்து 5 கிலோ மீற்றர் ஓடினாலே வந்து விடும்.

 

எல்லாப் பயணங்களிலும் ஆபத்து இருக்கு. தகுந்த திட்டமிடலும் போனால் அவற்றைக் குறைக்கலாம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

 

அதைத்தானே நாம்மெல்லோரும் சொல்கின்றோம்.
 
திட்டமிடாமல் போய், பிரச்சனை இல்லாமல் வந்தவுடன், 'அனுபவம் தரம் துணிச்சல்' எண்டு பீலா விடுவது தவறு என்கிறோம்....
  • கருத்துக்கள உறவுகள்

:lol: இதுக்குத் தான், யாழ் கள உறவுகள் எங்க எங்க இருக்கீனம் எண்டு அறிஞ்சு வைச்சிருக்க வேணும். வீட்டை வந்திருந்தால் விறாந்தையில படுத்தெழும்பி விடியக் கோப்பியும் குடிச்சுப் போட்டு இன்டியானா போயிருக்கலாம். அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கு வரும் உறவுகள் கவனிக்கவும். வர முதலே திட்டமிட்டு தங்குமிடம் ஒழுங்கு பண்ணிப் போட்டு வாறது தான் நல்லது, உடன வந்து இந்தப் பக்கம் ஹோட்டல் அறை எடுக்கிறது கடினம். மேலும் பென்சில்வேனியா போன்ற இடங்கள் குற்றச் செயல்கள் கூடின மானிலங்கள் - ஆணோ பெண்ணோ வாகனத்தில் இரவில் தங்குவதைத் தவிருங்கள்!

  • தொடங்கியவர்

நான் இதை எழுதவில்லை .மனைவி முக புத்தகத்தில் பதிந்ததை அவருக்கு தெரியாமால் உருவி பதிந்தேன் .

போய் வந்த அனுபவத்தை ஒரு நல்ல அனுபவமாக பார்த்ததின் விளைவுதான் இந்த பதிவு .திட்டமிட்டு பயணம் செய்திருந்தால் இந்த பதிவே வந்திராது .அடுத்த முறை காம்ப் அடித்து நிற்க போகின்றார்களாம் நல்லது .

 

எனக்கு இது ஒரு பெரிய விடையமே இல்லை பல வருடங்களின் முன் மருமகள் ஒருவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்ததும் தானே காரை வாடகைக்கு எடுத்து சாமான் சக்கட்டுடன் தனியே போய் இன்று அங்கேயே பல் வைத்தியராக இருக்கின்றார் . 

பொம்பிளை பிள்ளைகள் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: .

அமேரிக்கா போகும் போது சரியான தங்குமிட address களுடன் போக வேண்டும் ..இல்லை என்றால் அமெரிக்க எல்லையை தாண்டும் போதும் பிரச்னை...

கனடாவில் இருக்கும் நிறைய பெண்பிள்ளைகள் நண்பிகளுடன் சுற்றுலா செல்கிறார்கள்....அவர்கள் எல்லாரும் தங்களால் என்ன செய்ய முடியும்...முடியாது என்பதையும் அறிந்தே இருப்பார்கள் என்று நம்புகிறேன்....தமிழ்பெண்கள் வேறு யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.....

 

ஆனால் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விட்டு செய்வதே நல்லது..இது ஆண்களுக்கும் தான்...

நான், எனது நண்பர்கள்...அடிக்கடி அமெரிக்கா சென்றதுண்டு...யாருமே இன்னும் எந்த பிரச்சனைக்கும் மாட்டுப்பட்டது கிடையாது...

நண்பர் ஒருவரின் கார் ஒன்று rednecks வசிக்கும் பகுதி மாதிரி ஒன்றில் அடிபட்ட பொழுது..(நண்பரே...முன்னால் போன ஒரு காருக்கு (அவனும் கல்யாண வீட்டுக்கு போய்கொண்டிருந்தவன்) உள்ளூர் மக்களே இருவருக்கும் உதவி செய்தார்கள் (நண்பர் தான் தொலைந்தேன் என்று பயந்ததாக கூறினார்..ஆனால் பின் அவர்களுக்கு உதவியவர்களது செயல் அவரை தன்னை நினைத்து வெட்கப்பட வைத்தது).....நண்பர் அடிபட்டவனுக்கு தான் கனடா போய் அவனது திருத்தும் செலவை அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டு ..கனடா வந்துதான் காசு அனுப்பினார்..ஆகவே நல்லதும் நடக்கலாம்..எமது கேட்ட காலம் கெட்டதும் நடக்கலாம்....

(அமெரிக்காவிலிருந்து நிறைய சைக்கோ செய்திகளும் வெளி வருகிறது...) ஆகவே..அவதானமாக இருப்பது நல்லது..

 

houston, LA  சென்றால்...தெரியாத இடங்களில் தேவையில்லாமல் திரிய வேண்டாம் என்று கதை உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
எல்லோருடைய கருத்தும் ஒன்றானபட்டதே.
 
(அர்ஜுன் அவர்களுடன்  மற்றைய திரிகளில் மல்லுகட்டுவதால். இப்படி எழுதுகிறேன் என நினைக்க வேண்டாம். பெண்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு இனமே விடுதலை அடைய முடியும் என்பது. தேசிய தலைவரின் கொள்கைகளில்  ஒன்று)
 
"விசபரிட்சை வேண்டாம்" என்பார்கள். அதைதான் மேலே நாதமுனி விசுகுஅண்ணா அவர்கள் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். பரிசோதித்து பார்ப்பற்காக யாரவது விஷத்தை குடிப்பார்களா? அப்படி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
 
வேலை நிமித்தம் போகவேண்டியது என்பது கடமை. 
பொழுதுபோக்கை ஆபத்து ஆக்குவது என்பது படு முட்டாள்தனம்.
 
எனது வேலை சுற்றுலா சம்பந்த பட்டதுதான் எத்தனையோ இளம் தமிழ் பெண்கள்  கனடாவில் இருந்து மெக்ஸிகோ போகிறார்கள். பெயர்களை பார்த்த உடனேயே எனக்கு யார் (தமிழ்)என்பது தெரிந்துவிடும் ஆனாலும் அதுபற்றி நான் யாருடனும்  கதைப்பதில்லை. உள்ள நாட்டு கேளிக்கை கூத்துக்கெல்லாம் முன் கூட்டியே  பதிவு செய்து செல்வார்கள். எல்லோருக்கும் ஏதும் ஆவதில்லை.
ஆனால் ஆகி வருபார்களும் இருக்கிறார்கள். 
தமிழ் பெண் என்பதால் நானே ஒருதடவை கன்கூன் மெக்ஸிகோ சென்று ஒருவரை அழைத்து சென்று கனடா எம்பசியில்  விட்டு வந்திருக்கிறேன்.( அவருடைய நல்ல காலம் நான் தொலைபேசி அழைப்பை எடுத்தது) பாஸ்போர்ட்  பணம் எதுவும் இல்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பியதன் பலனை அவர் அனுபவித்து இருந்தார். ஆட்டம் போட்டுகொண்டு போகும்போது கனடியனாகத்தான் போகிறார்கள். ஆபத்து வந்தவுடன் அழுது நலிந்து தமிழ் ஆகிவிடுகிறார்கள்.
ஊரில் இரண்டொரு ஆங்கில சொற்கள் தெரிந்தால் தமிழை மறந்துவிடுவார்கள். நாயை அவிட்டு விட்டால் நன்றாக தமிழ் பேசுவோரை நாங்கள் எல்லோரும் பார்த்திருக்கிறோம். இவர்களும் அப்படிதான். அது ஒன்றும் செய்யமுடியாது ....... உள்ளே இருப்பதே நிஜமானது. வெளியில் இருப்பது வெறும் வேஷம் அதை ஆபத்து என்றவுடன்  தங்களை அறியாமலே களைந்துவிடுகிறார்கள்.
 
அமெரிக்கா ஓவரு இடமும் ஓவரு ஆபத்தை கொண்டது. இங்கு வசிக்கும் நாங்களே சில இடங்களுக்கு போவதில்லை. முடிந்த அழ;அவில் அதை தவிர்த்தே வருகிறோம். புதிதாக வருபவர்களுக்கு அந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஓரிடத்தில் சென்று மாட்டிவிட்டால் அதுவே விசா பரீட்சை ஆகிவிடும்.
 
அர்ஜுன் அண்ணா !
அடுத்தமுறை கம்பிங் அடிப்பதாக எழதி இருக்கிறார்கள் முன் கூட்டியே இன்டர்நெட் உதவியுடன் சில ஆய்வுகளை  செய்வதே நன்று. இங்கு கிரிமினல் வேலைகள் செய்து வீடு வாடகைக்கு எடுக்க முடியாத பலருக்கு  காம்பிங் இடங்கள்தான் வீடு. அப்படியானவர்கள் போக முடியாதபடி இருக்கும் சிறப்பான காம்பிங்  இடங்களும் உண்டு. அவற்றை தெரிந்து செல்வதே நல்லம்.
 
அப்படியே எங்கள் ஊர் பக்கமும் வந்துபோகலாம் .............. சிக்காக்கோ வந்தால் அங்கிருந்து 6 மனித்தியலம்தான். உணவுக்கும் உடைகளுக்கும்  இங்கே வரி அறவிடுவதில்லை. ஜப்பானில் இருந்து ஷாப்பிங்  இற்கு என்று மட்டுமே வந்து போகிறார்கள். மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றும் கூட. 
உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால் இங்கேதான் இருந்தது இப்போ துபாயில் பெரிதாக கட்டிவிட்டார்களாம். 
கனடாவிற்கு எல்லைதான் ஆனால் வினிபெக் பக்கம். 
 
சுதந்திரம் என்பது எல்லைகளுக்கு உட்பட்டதே. அதை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். சுதந்திர நாடு என்றால் கூட  சுற்றி எல்லை இருக்கிறது அல்லவா? 
என்னை கேட்டால் ஊரில் பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள் என்றுதான் சொல்வேன்.
குட்டை பாவடையை போட்டுவிட்டு இன்னொரு கையால் அதை முழுநேரமும் இழுத்து கொண்டிருப்பதிலும் விட. கொஞ்சம் நீளமாக போட்டுவிட்டு சுந்திரமாக இருக்கலாம்.
"மின்னுவதெல்லாம் பொன் அல்ல" இதை காதில் வாங்கி கொண்டால்  சில விடயங்களை புரிந்து   கொள்ளாலாம்.
இங்கே சாதிப்பதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதைதான் செய்து வாழ வேண்டும்.
 
 
எனது மந்திரம் வள்ளுவருடைய .......... இடம் பொருள் ஏவல் அறிந்து என்பதே ஆகும். இது பல சிக்கல்களை  தவிர்க்க  உதவுகிறது. உங்களுக்கும் உதவும்.    
 
(ஒரு சின்ன அறிவுரை முடிந்தால் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரடிட் கார்ட் (american express credit card)வைத்திருங்கள். எங்காவது நீங்கள் எல்லாவற்றையும்  களவு கொடுத்தால். வெஸ்டேர்ன் உனியன் (western union) ஊடாக  உங்களுடைய கார்ட் லிமிட்டை (card limit) பொறுத்து  உடனேயே காசு அனுப்பி வைப்பார்கள். தவிர உங்களுடைய எல்லா க்ரெடிட் கார்டையும் அவர்களே  உடனடியாக ரத்து செய்வார்கள் விசா மாஸ்டர் (visa master discover) எதுவென்றாலும்)  
  • தொடங்கியவர்

It was a moment that will never come to pass again exactly the same way - a sweet memory to cherish and tell tales of.

 

மருமகள் முக புத்தகத்தில் பதிந்தது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபத்துக்கள் வரும்வரை இவை துணிச்சல் தருபவையாகத்தான் இருக்கும்.  ஆபத்தில் மாட்டியபிறகுதான் அதன் விளைவுகள் தெரியவரும்.  வேலை நிமித்தமாக இருந்தாலும், வேலையிடங்களில் இரவில் தனியாகச் செல்வதை நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை.  இரவில் விமானங்களில் பயணிக்க மட்டுமே அனுமதிப்பார்கள்.  பகலில் மட்டுமே காரில் பயணம் செய்ய முடியும்.  அப்படி மீறிச் செல்லும் போது ஆபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க மாட்டாது.

  • 1 year later...
  • தொடங்கியவர்

இந்த வருடமும் அதே நாலு பெரும் காரை வாடகைக்கு எடுத்து கிளம்பிவிட்டார்கள் .இலக்கில்லாமல்  சும்மா அமேரிக்கா கொஞ்ச தூரம் சுற்றுவதுதான் அவர்கள் நோக்கம் .

சனிக்கிழமை பகல் கிளம்பினார்கள் ஒரு சுத்து சுத்திவிட்டு வரட்டும் அதுவரை பொறுத்து இருப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உங்களுக்கு மாத்திரம் அல்ல உங்களை மாதிரி புலம்பெயர் எல்லோருமே மேட்டுக்குடி வாழ்க்கைதான் வாழினம் இந்த நாடுகள் மாத்தி  விட்டுது ஏன் இங்கு சுய புலம்பல் விரும்பினால் இங்கு உங்க மனைவி எழுதலாம் அதைவிட்டு ...........

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.