Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்

Featured Replies

xyuvan_2056036h.jpg.pagespeed.ic.WkQLr3c
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.

யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:

"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.

எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.

சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.

முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.

படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

 

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளை விசித்திரமானது. அது எதையாவது உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டால் அதுவே உண்மையும் என நினைக்க ஆரம்பித்துவிடும்.

யுவன் இருந்த நிலையில் விஜித தேரர் வந்து ஒரு விசிறியை கொடுத்திருந்தால், அவர் பௌத்தராக மாறியிருப்பார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளை விசித்திரமானது. அது எதையாவது உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டால் அதுவே உண்மையும் என நினைக்க ஆரம்பித்துவிடும்.

யுவன் இருந்த நிலையில் விஜித தேரர் வந்து ஒரு விசிறியை கொடுத்திருந்தால், அவர் பௌத்தராக மாறியிருப்பார்.. :D

 

 

நல்ல  காலம்

யெகோவாக்களின் கண்களில் படவில்லை... :(

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறியதற்காக என்னவெல்லாம் கதை அளக்கின்றார்.
புனித பாய் யுவனுக்கு மன அமைதியைக் கொடுக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறியதற்காக என்னவெல்லாம் கதை அளக்கின்றார்.

புனித பாய் யுவனுக்கு மன அமைதியைக் கொடுக்கட்டும்

 

 

உயிரோடு இல்லாத தாயின் பெயரை  இழுக்கின்றார்

அந்த ஆத்மா இவரை வாழ்த்தாது..... :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒன்று அவருக்கு மனநின்மதியை கொடுக்கும் எனில் அதையே தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நாலுக்கு இடமிருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர்.

 

 

உங்கள் தந்தை மூட நம்பிக்கையுடையவராக இருந்தாலும்....அவரை

இந்த உலகம் மகானாக போற்றுகின்றது.
இசையின் அருவியாக பார்க்கின்றது.
 
அவர் சாதித்தது உலகளவு. எட்டித்தொட முடியாத அளவிற்கு உயரத்தில் இருக்கின்றார்.
 
இவ்வளவிற்கும் அவர் ஓர் இந்து. :icon_idea:
 
மனிதனின் வாழ்விற்கும் மன நின்மதிக்கும் மதம் எவ்வித தடையுமில்லை.அதை உணரும் வரைக்கும் மனிதனின் வாழ்கையில் நின்மதியில்லை. :icon_idea:  :D
 
கலியாணம் கட்டின பொண்டாட்டியை வைச்சு சமாளிக்க தெரியேல்லை இதுக்கை மதம் ஒரு கேடு. :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
13-yuvan-shankar-rajsa-600.jpg

 

மீண்டும் திருமணத்துக்குத் தயாராகிறார் யுவன் சங்கர் ராஜா!

 

மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனக்கென ஒரு குடும்பம் வேண்டும், என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

 

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு 25ல் முதல் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்கள்தான் நிலைத்தது.

 

என் 30வது வயதில் இரண்டாவது திருமணம்.

ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. விவாகரத்துக்காக காத்திருக்கிறோம். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்ய வேண்டும், எனக்கென குடும்பம் வேண்டும் என உணர ஆரம்பித்துள்ளேன்.

 

என்னுடைய பிரச்சினையே, என் துணையுடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போவதுதான். ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் இசையமைக்க வேண்டியுள்ளது. அதில் எனது நேரம் முழுவதும் போய்விடுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

பல திருமணங்கள் செய்வதற்கு..... இஸ்லாம் அனுமதிப்பதால் மட்டுமே....

யுவன் சங்கர்ராஜா  மதம் மாறியுள்ளாரே தவிர.....
தாயின் மரணம் பாதித்தது என்று சொல்வதெல்லாம் சும்மா..... பேத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுவதென்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது! :D

 

ஆனால் தான் மாறியதற்காக, வியாக்கியானம் சொல்ல வருவது மட்டும் எனக்குப் பிடிப்பதேயில்லை! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூரா.. இவர் அப்பாட இசையில மனம் நெகிழுது. இவர் என்னடான்னா மன நெகிழ்வுக்கு பாயைத் தேடுறார். உருப்பட்ட மாதிரித்தான். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆறேழு  பெண்டாட்டிகளுடன்   அமோகமாய்  வாழட்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

யுவனின் எதிர்கால மனைவி ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருக்கலாம்
அதற்காக மதம் மாற வேண்டுமா? எந்த மதத்தவர்களும் இலகுவில்  வேறு
மதம் மாறுவதில்லை.  இந்து மதத்தவரைத் தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

வருசத்துக்கு ஐம்பது படங்கள் வரை இசையமைத்த தகப்பனுக்கு விவாகரத்து செய்ய வேண்டிய தேவை வரவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வருசத்துக்கு ஐம்பது படங்கள் வரை இசையமைத்த தகப்பனுக்கு விவாகரத்து செய்ய வேண்டிய தேவை வரவில்லை.. :D

 

மதம் மாறுகிற எவரைக் கேட்டாலும் என்னுடைய தேடல்(அப்படீன்னா ???? என்னன்னு விளக்கமும் சொல்றது இல்லை) நிறைவேறவில்லை இங்குதான் கண்டேன்னு ஒரு வியாக்கியானம் சொல்கிறார்கள்.

 

இதுவும் பின்நவீனத்துவமா இருக்குமோ? :o

 

இந்த இசையமைப்பாளர்ளை பார்த்தீர்கள் என்றால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த எம். எஸ் விஸ்வநாதன்  சந்தன குங்கும பொட்டுடன் காட்சியளித்தத்தை கண்டு தொடர்ந்து வந்த இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்றவர்களும் அதுபோல் காட்சியளித்தார்கள்.  அது தான் இசையமைப்பாளருக்குரிய ஸ்டைல் என்று நினைத்தார்களோ தெரியாது.

அதைப்போல இப்ப  ரஹ்மான் காலம். இப்போது கொடிகட்டி பறக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற  ரஹ்மான் போல வர விரும்பி யுவன் சங்கர் ராஜாவும் அதுபோல் செய்வது தான் இசையமைப்பாளருக்குரிய லட்சணம் என்று நினைக்கிறாரோ.

  • கருத்துக்கள உறவுகள்

யுவன் சங்கர் ராஜா.... மதம் மாறியதால்,
இளைய ராஜா... இனி இவர் தனது மகன் இல்லை என்று, ஒரு செம்பில் தண்ணீர்  எடுத்து,  தலை முழுகி விட வேண்டும்.
தனது சொத்தில்.... ஒரு செப்புக்காசு கூட யுவனுக்கு கொடுக்கப் படாது.
யுவனுக்கு சேரவேண்டிய.... சொத்தை. ஒரு அநாதை ஆச்சிரமத்து கொடுக்க வேண்டும்.


இந்த இசையமைப்பாளர்ளை பார்த்தீர்கள் என்றால் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த எம். எஸ் விஸ்வநாதன்  சந்தன குங்கும பொட்டுடன் காட்சியளித்தத்தை கண்டு தொடர்ந்து வந்த இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்றவர்களும் அதுபோல் காட்சியளித்தார்கள்.  அது தான் இசையமைப்பாளருக்குரிய ஸ்டைல் என்று நினைத்தார்களோ தெரியாது.

அதைப்போல இப்ப  ரஹ்மான் காலம். இப்போது கொடிகட்டி பறக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற  ரஹ்மான் போல வர விரும்பி யுவன் சங்கர் ராஜாவும் அதுபோல் செய்வது தான் இசையமைப்பாளருக்குரிய லட்சணம் என்று நினைக்கிறாரோ.

 

வாத்து, என்ன.... அன்ன நடை போட்டாலும், அன்னமாக முடியாது.
அன்னம் அன்னம் தான்.... வாத்து வாத்துத் தான்..... :D  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.