Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் பெரிய மீன்கள் பிடிபடுகின்றன

Featured Replies

DSC02413(3).JPG
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் சமீப சில நாட்களாக பெரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சட்டவிரோத வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்துவருவதால் தற்போது பெரிய மீன்கள் பிடிபடுவது சாத்தியமாகியுள்ளதாக  மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார்.

சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு வாவி சூழ்ந்துள்ள ஏறாவூர், பன்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் வலையிறவு போன்ற பகுதிகளிலுள்ள  மீனவர்கள் தற்போது வாவியில் பெரிய மீன்பிடியில் ஈடுபடுவதாக ஏறாவூர் 3ஆம் குறிச்சி மீனவர் சங்கத் தலைவர் தாவூத் றம்ழான் தெரிவித்தார்.

தற்போது வாவியில்   3 கிலோகிராம் நிறையுடைய திலாப்பியா மீன்கள்  7 - 10 கிலோகிராம் நிறையுடைய கூரல் மீன்கள்  6 - 7 கிலோகிராம் நிறையுடைய களப்பு மணலை இன மீன்கள் பிடிபடுவதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஒரு வருட காலமாக சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் பாவிக்கப்படுவதை தடைசெய்வதில் தாம் மீனவர் சங்கங்களுடன் சேர்ந்து பாடுபட்டதின் பலனாகவே இந்தப் பெரிய மீன்களின் வளர்ச்சி காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

இருந்தபோதிலும் இன்னமும் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பாவித்து மீன்பிடிப்பதில் சிலர்; ஆங்காங்கே மறைமுகமாக ஈடுபடுகின்றார்கள் என்றும் அவர்களது தோணிகள் உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் தடைசெய்யப்படுகின்றன எனவும்; அவர் தெரிவித்தார்
DSC02402(1).JPG

 

DSC02405.JPG

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/79--image/124340-2014-08-28-07-51-14.html

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார்

நல்ல  செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

திலாப்பியா மீன். இது சுவையா..???! :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

திலாப்பியா மீன். இது சுவையா..???! :rolleyes::o

யாழ்ப்பாணத்தில் ஜப்பான் மீன் வறுமைப்பட்டவர்களின் வாழ்க்கை,மட்டக்களப்பில் நன்னீர் மீன் (ஜப்பான் மீன்) எல்லோருக்கும் பொதுவானது.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஜப்பான் மீன் வறுமைப்பட்டவர்களின் வாழ்க்கை,மட்டக்களப்பில் நன்னீர் மீன் (ஜப்பான் மீன்) எல்லோருக்கும் பொதுவானது.

 

மட்டக்களப்பை அண்டித்தானே பெரிய இந்து சமுத்திரமே இருக்கே. கடல் மீனே போதுமே. பொதுவாக மலையகத்தில் தான் திலாப்பியாவை அதிகம் புரதத் தேவை கருதி உள்ளெடுக்க ஊக்குவிப்பார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை முதலில் சந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். நாங்கள் சந்தித்தவர்கள்.. சம்பா அரசியும்.. விளை மீனும் பற்றித்தானே பேசுகிறார்கள்..! யாழ்ப்பாணத்தில் கூட சம்பா விளைவது குறைவு. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆறில்லாத யாழில் திலாப்பியாவை குளத்து மீன் என்று ஒதுக்குவோம். ஏழ்மை பட்டவரே உண்பர்.

ஆறுபாயும் மட்டில், திலாப்பியாவுக்கு அப்படி ஒரு social stigma இல்லை. ஆனால் விளைஅளவுக்கு மதிப்பில்லைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திலாப்பியாவுக்கு மட்டக்களப்பில் ஜப்பான்குறளியென்று ஒரு பெயர் இருந்தது.  பிற்காலத்தில் அதனைத் துரை வளர்த்தான் என்று கூறினார்கள்.  அதற்குப் பிறகு அதிலுள்ள புரதச் சத்தையும் போஷாக்கையும் உணர்ந்து செல்வன் என்று பெயர் வைத்தார்கள்.  தற்போது திலாப்பியா லண்டனிலேயே பிரபலமாக இருக்கிறது.  ஒரு தாழ்த்தப்பட்ட மீனினம் இந்தளவுக்கு முன்னேறி சமூகத்தில் முன்னிலை பெற்றதென்றால் அது திலாப்பியாவாகத்தான் இருக்க வேண்டும்.  தமிழினம் கற்றுக்கொள்ள அதனிடம் நிறைய இருக்கிறது.

மீனிலையும் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு இருக்கா?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மீன்களுக்கே சாதி பார்க்கிற கேடு கெட்ட சமூதாயம் எமது சமுதாயம் என சண்டமாருதன் கோவிக்கப் போறார்

கனடாவில் வெள்ளையினத்தவர்கள் விரும்பி வாங்கி உண்ணும் மீன் இது. அநேகமான இடங்களில் தொட்டிக்குள் வைத்து வளர்த்து விற்பர். இதன் Fillets சும் விற்பதைக் கண்டுள்ளேன்.

 

ஒரு நாள் இதனை வாங்கி வீட்டில் வைத்து கழுவும் போதே அதன் வெடுக்கு மணத்தினால் வெறுத்து விட்டது. சரி என்று பொரிக்க வெளிக்கிட அப்பவும் அதன் வெடுக்கு மணம் மோசமாக இருந்து எறிந்து விட்டோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திலாப்பியாவுக்கு மட்டக்களப்பில் ஜப்பான்குறளியென்று ஒரு பெயர் இருந்தது.  பிற்காலத்தில் அதனைத் துரை வளர்த்தான் என்று கூறினார்கள்.  அதற்குப் பிறகு அதிலுள்ள புரதச் சத்தையும் போஷாக்கையும் உணர்ந்து செல்வன் என்று பெயர் வைத்தார்கள்.  தற்போது திலாப்பியா லண்டனிலேயே பிரபலமாக இருக்கிறது.  ஒரு தாழ்த்தப்பட்ட மீனினம் இந்தளவுக்கு முன்னேறி சமூகத்தில் முன்னிலை பெற்றதென்றால் அது திலாப்பியாவாகத்தான் இருக்க வேண்டும்.  தமிழினம் கற்றுக்கொள்ள அதனிடம் நிறைய இருக்கிறது.

என்னை பற்றி நானே பெருமை கொள்ளகூடிய மாதிரி எழுதி இருக்கிறீர்கள்.
(எனக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் என்பது எப்போதும் உச்சத்தில் இருக்கும். 16 வயதுவரை அமெரிக்க நாட்டை வரைபடத்தில் கூட பார்த்ததில்லை அப்படி ஒரு வறுமை நிலையில் இருந்தேன் 10 வருடம் கழித்து. சிக்காகோவில் அமெரிக்க விசாவுடன் வந்து இறங்கினேன. சிறுவயதில் திருவிழாவில் கச்சான் வாங்கி சாப்பிட்டால் செய்தி தாளாக இருந்தால் மடித்து பொக்கெட்டில் வைத்துவிடுவேன் மறுநாள் அதை வாசிப்பதே வேலை. அது 3 வருடம் முன்பு வந்த செய்தியாக கூட இருக்கும் எனக்கு அது புது செய்தி.)
 
இந்த தேலேப்பியா (ஜப்பான் மீன்) உண்ணுபவன் என்று என்னை சொந்தகார்களே சேர்ப்பது இல்லை. எமக்கு கடல் மிக அருகில் இருப்பதால் இதன் மகிமை அவர்களுக்கு புரியவில்லை. உண்மையில் இதை சுத்தம் பண்ணி  கழுவி எடுக்கும் மட்டும் மணம்தான். (மீனை தின்ன ஆசைபட்டால் முள் இருக்கும் ஒத்துகப்பா) 
எனது தோட்டத்திற்கு மறுபுறம் தொண்டமான் ஆறு இந்த மீனோ பிடிப்பார் அற்று வளர்ந்து கொண்டே இருக்கும் 
கடற்கரையில் ஆட்கள் எறியும்  சேதமான வலையை எடுத்து வந்து ஆற்றில் கட்டிவிடுவேன். தோட்டத்திற்கு தண்ணியெல்லாம் இறைத்துவிட்டு போனால். நிறைய மீன்  இருக்கும். தொண்டமான் ஆறும் உப்பு தண்ணிதான் மாரி காலத்தில் இரு முனையிலும் கடலுடன் தொடுத்தே இருக்கும். அதிகமான முரல் மீனும் பிடிபடும்  ஒருமுறை ஒரு சிங்கு றால் பிடிபட்டது. 
கழுவி துடைத்தால்தான் மனம் குணம் என்று வில்லங்கம் வரும்.நெருப்பை கொளுத்திவிட்டு அதற்குள் போட்டுவிடுவேன். நல்லா அவிந்து வர ... தோட்டத்தில் பச்சை மிளகாய் வெங்காயம் ப்ரேஷக இருக்கும்.( இளவயதில் ஆட்கள் பிடிக்கிற மார்பும் பிடிக்காத மீனும் ஒரு தனி சுவை என்று யாரோ பின்னாளில் சொல்ல கேள்விபட்டேன்) 
அந்த மூதேவிகளுக்கு அதன் பொருள் அப்ப விளங்கவில்லை .....
 
இங்கினே இப்ப பார்பி கியூ  கிறில் அது இது என்று பளுதாகின மீனும் கெமிக்கல் காய்கறி களுடனும் திரிகிறார்கள். ஏனென்டால் பெயர் எல்லாம் இங்க்லீசு ...... வெள்ளைக்காரன் வேற செய்யிறன்.
 
பித்தலாட்டம் ஆட தமிழனை விட்டால் உலகில் வேறு ஆள்  இல்லை. 
 
"தாங்கள்  உயர்வானவர்கள்" என்ற எண்ணம்தான் தமிழனுக்கு இப்போ உண்மையை உணர்த்தி இருக்கு.
நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது எனபது தமிழனுக்கு நல்லாவே பொருந்தி இருக்கு. 

கனடாவில் வெள்ளையினத்தவர்கள் விரும்பி வாங்கி உண்ணும் மீன் இது. அநேகமான இடங்களில் தொட்டிக்குள் வைத்து வளர்த்து விற்பர். இதன் Fillets சும் விற்பதைக் கண்டுள்ளேன்.

 

ஒரு நாள் இதனை வாங்கி வீட்டில் வைத்து கழுவும் போதே அதன் வெடுக்கு மணத்தினால் வெறுத்து விட்டது. சரி என்று பொரிக்க வெளிக்கிட அப்பவும் அதன் வெடுக்கு மணம் மோசமாக இருந்து எறிந்து விட்டோம்.

fillet வாங்கி oven இற்குள் வைத்து பாருங்கள். இங்கு தொட்டியில் வளர்பதால் ஒரு சுவையும் இல்லை பச்சை தண்ணிபோல் இருக்கும். 
நீங்கள் தமிழ் கடையில்  மீன் வாங்கி சமைத்து பழகி  இருந்தால் உங்களுக்கு பிடிக்காது.
கனடாவில் தமிழ் கடைகளில் நல்ல மீன் இருக்கிறது. 
 
இது எங்களைப்போல தமிழ் நடமாட்டம் இல்லாத இடங்களில் மாட்டுபட்டவர்களுக்கு அப்ப அப்ப கை கொடுப்பது. 

 

( இளவயதில் ஆட்கள் பிடிக்கிற மார்பும் பிடிக்காத மீனும் ஒரு தனி சுவை என்று யாரோ பின்னாளில் சொல்ல கேள்விபட்டேன்) 
அந்த மூதேவிகளுக்கு அதன் பொருள் அப்ப விளங்கவில்லை .....
 

 

 

இப்படி ஒரு வில்லங்கமான விசயத்தை ஊரில் ஒருத்தரும் சொல்லிக் கேள்விப்படவில்லை :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்களெல்லாம் ஊரிலை யப்பான் மீன் சாப்பிடுறேல்லை. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களெல்லாம் ஊரிலை யப்பான் மீன் சாப்பிடுறேல்லை. :mellow:

யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிக்குள் சில மீனவர்கள் வலைப்போட்டுப் பிடிப்பதைக் கண்டுள்ளேன்!

 

மிகவும் குறுகிய நேரத்தில், பெரிய அளவில் அள்ளுவார்கள்! 

 

நானும் வீட்டை வாங்கிக்கொண்டு போய், எனக்கு அண்டைக்கு நடந்த ' மங்கள ஆராத்தி' எனக்கும், என்னைப்படைத்தவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணக் கோட்டையின் அகழிக்குள் சில மீனவர்கள் வலைப்போட்டுப் பிடிப்பதைக் கண்டுள்ளேன்!

 

மிகவும் குறுகிய நேரத்தில், பெரிய அளவில் அள்ளுவார்கள்! 

 

நானும் வீட்டை வாங்கிக்கொண்டு போய், எனக்கு அண்டைக்கு நடந்த ' மங்கள ஆராத்தி' எனக்கும், என்னைப்படைத்தவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்! :wub:

 

கோட்டை அகழிக்குள் பிடிக்கும் மீனாவது பரவாயில்லை. அது கழிவு நீர் கலக்காத அகழி.

ஆனால்.... ஆரியகுளத்தில், புல்லுக்குளத்தில் பிடித்த மீனை, கொண்டு போய்... எங்கு விற்கிறார்களோ....? :o

அதை வாங்கி சமைத்தவனுக்கு, வருத்தம் வராமல் இருந்தால்..... உடம்பில்  நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்று அர்த்தம். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீனை(அதி குளிருட்டியது)அபிரிக்க இனத்தவர்கள் பெட்டி பெட்டியாக அள்ளிக்கொண்டு போவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.