Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம்
Ca.Thamil Cathamil September 15, 2014 Canada
 
கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன்.
 
அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
 
இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உறவு கொண்ட பின் பல தடவைகள் அப் பெண்ணை அழைத்து பரிகாரம் என்ற பெயரில் உடலுறவு கொள்ளவே சந்தேகப்பட்ட பெண் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
 
இவரைக் கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். எதிர்வரும் 22ம் திகதி இவரை நீதிமன்றில் ஆயா்படுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனா். குறித்த ஜோதிடா் மேலும் பல பெண்களை இவ்வாறு தெரிவித்து பாலியல் உறவு கொண்டதாகத் தெரியவருகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

பெண் ரொம்ப லேட் பிக்கப்பா இருக்கிறாரே.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்குப்பின்னர் எதுக்கு காவல்த்துறை....?? :(

இது காவல்துறையிடம் சென்றது மிகவும் நல்ல விடயமே.   இப்படியெல்லாம் ஏமாறும் பெண்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் வெட்கமாக இருக்கிறது.   இப்படியான பரிகாரங்களை எல்லாம் நம்புவார்களா என்ன?  

 

இதற்குப் பின்னராவது இந்தியாவிலிருந்து படையெடுக்கும் ஜோசியர்களின் எண்ணிக்கை குறையட்டும்.   இந்தச் செய்தி மற்றையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நினைக்கிறேன்.   

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... சூப்பர் ஐடியா..

 

'நிழலியானந்த சரஸ்வதி சாஸ்திர மகா நிலையம்' என்ற ஒரு சாத்திர மடம் ஒன்றை கட்டி விரைவில் பிசினஸ்சை ஆரம்பிக்க வேண்டியதுதான்...

 

ஆகா, அஸ்க்கு பிஸ்க்கு....
 
நீண்ட விடுமுறையில் சென்று வந்தால், நல்ல செய்தி.
 
இமயம் சென்று சோதிட சாத்திரம் கசடறக் கற்று வந்துள்ள 'கண்டம் அறுப்பார்' சோதிடர் சிரோமணி 'நாதமுனி' என்று ஒக்கார வேண்டியது தான்.
 
அப்பெரசண்டிங்களா யாராச்சும் வர விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கப்பா.
 
10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஒருத்தர் 'பாம்புச் சாமியார்' என்ற பெயரில் புகுந்து விளையாடி விட்டார்.
 
முட்டாள் தனமாக போலிஸ் அதிகாரி மனைவி மேல கையை வைக்க, கைது பண்ணி சாத்து படி போட்டார்கள். 
 
நீதி மன்றில் இவ்வளவு பெண்களை நாசப் படுத்திப் போட்டாயே என்று கேட்ட போது  'ஐயா, பெண்ணுங்களா, இதுக, பிடாரிங்க ஒருமுறை வந்தால், ஆசையில திருப்பி வாறது, இப்ப நம்ள இங்க நிப்பாட்டி பிட்டாளுங்க' என்று போட்டாரே ஒரு போடு.
 
:wub:  :D  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களிலும் நிறையப் பிழைகள் இருப்பதனால் தான் இப்படியானவர்களின் சேட்டைகள் தொடர்கிறது.வீட்டில் ஒரு சின்னப் பிரச்சனை என்றதும் அதனை தீர்க்கத் தெரியாமல் தொடர வைக்கிறது.அது தொடர்ந்ததும் கோயில்,கோயிலா திரியனும் ஐயனுக்கு பணம்,பணமா அள்ளிக் கொட்டனும் அல்லது சாத்திரிக்கு கொட்டனும்.. சிலர் வளர் முக நாடுகளுக்கு வந்தும் முன்னேறாமல் இருப்பதற்கு இவர்கள் மனத்தில் இருக்கும் மனக் குறைகள் தான் காரணம் என்று சொல்லாம்..இப்போ எல்லாம் சில மோல்களுக்குள்  போனால் பின்னால் திரத்திக் கொண்டு வருகிறார்கள்....ஏன்  அவர்களுக்கு புரிகிறது  நம்மவர்களை இலகுவா ஏமாற்றலாம்.......

ஒரு பெண் வேறு ஒருவரதும் உதவியின்றி அந்த சாத்திரியிடம் எதற்காக போனார்....இப்படி எல்லாம் நடப்பதற்கு யாரு காரணியாக இருக்கிறோம் நாங்கள் தானே...வீட்டு பேஸ்மன்ற் சும்மா கிடக்கா ஆ... ஒரு கள்ளச் சாத்திரியைக் கூப்பிடால் போச்சு....கடையில ஒரு பகுதி சும்மா கிடக்குதா அதுக்கும் ஒரு சாத்திரியை கூப்பிட்டால் போச்சு..கூப்பிட்டு விடுகிறவர்களுக்கு காசு தொல்லை பாதியளவாவது குறைஞ்சுடும்...உலகத்தில் இல்லாத தோசம் எல்லாம் இருக்கு என்று சொல்லித் தான் சனத்தின்ட மண்டையைக் கழுவிறது. ஊரில் உள்ள விளப்பம் இல்லாததுகள் மாதிரி நடக்கிற சனத்தின்ட மண்டையைக் கழுவிட்டுத் தானே விடுகிறார்கள்...யார் என்றே தெரியாத ஒருவர்,எங்கயோ கிடந்து வந்த ஒருவர் சொல்வதற்கு எல்லாம் எப்படி அந்தப் பெண் சம்மதிப்பார்..முன் பின் தெரியாத ஆணுக்கு கிட்டப் போக எப்படி மனசு வரும்....

 

ஒரு வைத்தியத்தால் கடவுளுக்கு அடுத்த படியாக நம்பும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாது போகும் உயிரை. எப்படி ஒரு சாத்திரியால் காப்பாற்ற முடியும்......நடை முறைக்கு சாத்தியமற்ற ஒரு செயல்பாட்டை தடுக்கும் சக்தி அவரிடம் இருந்திருக்குமாக இருந்தால் தான் தொழில் என்று தேடி நாடு,நாடாக அலையவேண்டியது இல்லயே..

 

சாத்திரிமார் உண்மையாக குடும்பங்களை ஒற்றுமையாக்கி வைக்கிறார்களா சீர் குலைக்கிறார்களா என்பதற்கு இந்த செயல்பாடு ஒரு எடுத்துக் காட்டு..

உண்மையாக சில பெண்களைப் பார்த்தால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் மிகவும் மனம் வருந்தக்கதாகவே இருக்கு...நான் எடுத்த உடன் எதுவும் எழுத,பேச முன் வருவதில்லை..ஆனால் இது உண்மை.கடைகளுக்கு போனால் கூட  தேவைப் பட்ட பொருளை எடுங்க,நடையைக் கட்டுங்கள்..அதை விடுத்து மணிக் கணக்காக பேசிக் கொண்டே நிற்க வெளிக்கிடாதீங்க...

Edited by யாயினி

இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  ஒரு பெண்ணால் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும்?  பெண்கள் விருப்பப்பட்டுச் செய்வது என்பது வேறு.  ஆனால், இந்த நாட்டில் இருந்து கொண்டு ஒரு அந்நிய ஆணுடன் இப்படி நடந்து கொள்ள முடியுமா?  மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.  

 

நீங்கள் குறிப்பிட்டது போல, இங்கு ஒரே கடைத்தொகுதியிலேயே பல ஜோதிடர்கள் முகாம் போட்டுள்ளார்கள்.   அவர்களோடு அவர்களது மனைவிமார் வேறு வந்திருப்பார்கள்.   கடைக்குள் போய் உடன் வருவதற்குள்ளேயே காரில் அட்டை வைத்திருக்கப்பட்டிருக்கும்.   :)

 

யாயினி, தமிழ்க் குடும்பங்களுக்குள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க முடியுமா என்ன?  என்னதான் நாம் முயற்சி செய்தாலும் சில விடயங்கள் நமது கைகளில் இல்லை.  குடும்பம் என்ற அமைப்புக்குள் பெரியவர்களின் கையே இன்றும் ஓங்கியிருக்கிறது.  நாம் என்னதான் அவர்களைவிட அதிகமாகப் படித்திருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் ஒரு சிலரின் கைகள் மட்டுமே எப்போதும் ஓங்கியிருக்கும்.  நாம் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.   இதற்குள் பாரபட்சம் வேறு.   :(  :(    அடுத்த தலைமுறையோடாவது இது அழிந்து போகவேண்டும்.   :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவமே! :(

என்னைக் கேட்டால் அந்த சோதிடர் தான் பாவம் என்பேன்.  இன்றுள்ள நிலையில், அதுவும் ரொரன்டோவில் இருக்கும் ஒரு பெண்மணி இப்படியான பரிகாரங்களைக் கேட்டு ஏமாறக் கூடிய நிலையில் இல்லை. ஆயிரத்தெட்டு கோவில்கள் இருக்கும் இடத்தில் ஒரு சோதிடர் சொன்ன மிக வில்லங்கமான ஒரு பரிகாரத்தினை முழுமையாக நம்பி ஏமாறக் கூடிய நிலையில் எவரும் இல்லை. ஒரு சாத்திரியை நம்பாமல் பல சாத்திரிமார்களிடம் ஓடும் பழக்கம் தான் இப்போதுள்ளது. ஒரு சோதிடர் இப்படி பரிகாரம் செய்யச் சொன்னால், அதனை விரும்பாத ஒருவர் இன்னொரு சோதிடரிடம் போய் விசாரித்தே இருப்பார். சொன்ன பரிகாரத்தினை உவப்புடன் ஏற்பவர் மட்டுமே வேறு ஒருவரிடமும் செல்லாமல் அதனை அப்படியே ஏற்பர்.

 

இந்தச் செய்தி எழுதப்பட்ட விதத்தில் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஏதோ செய்யப் போய், கணவரிடமோ அல்லது குடும்பத்தினருடனோ மாட்டுப்பட்டு பின் தன்னில் இரக்கம் வருவதற்காக கணவன் இறந்துவிடுவார் என்றுதான் செய்தனான் என்று விளக்கம் கொடுப்பது மாதிரி இருக்கு. அல்லது ஒரு சின்ன விடயத்தினை ஊடகம் தன் கற்பனையை கலந்து கொடுத்து இருக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி சொல்லி இருப்பது போல் நாங்க கிடந்து கத்தோ,கத்து என்று கத்த வேண்டியது தான் நடப்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது..நான் கூட எத்தனையோ தரம் சாத்திரர்களின் மனைவிமார் தந்த விசிட்டிங்கார்ட்டை அவர்கள் முன்னாடியே கிளித்து எறிந்தும் இருக்கிறன்..ஒருவர்,இருவர் அப்படி நடந்தால் போல் எல்லாரும் அப்படி செய்யிறார்கள்,செய்வார்கள் என்று இல்லை..ஓரளவுக்காவது அனியாயங்களை கட்டுப்படுத்தனும் என்றால் முகத்துக்கு முன்னாடியே பதில் அடி கொடுத்தால் அன்றி எந்த வழியும் கிடையாது..

தமிழ் குடும்பங்களில் நடக்கும் குளறுபடிகளும் தெரியும்.சில வயது போனவர்கள் இருக்கும் குடும்பங்கள் என்றால் என்ன விதமான றாமா எல்லாம் போடுவார்கள் மற்றவர்களை எப்படி எல்லாம் நோகடிப்பார்கள்,குளப்பி விட்டு கூத்துப் பார்ப்பார்கள் என்பதும் தெரியும்..உங்கள் வீட்டில், என் வீட்டில்,பழகிய இடங்களில்  என்று நிறையவே பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் போஸ்ட்டர் அடிச்சு சொல்லிக் கொண்டும் திரிய ஏலாது...காதில் வாங்கியும்,வாங்காமலும்,கண்டும்,காணமலும் தான் காலத்தை இழுத்துக் கொண்டு போக வேண்டியவர்களாக இருக்கிறம்..

ஏதாச்சும் ஊண்டிக் கதைச்சுட்டால் பெண் என்ற ஒன்றை தூக்கி போட்டு வாய் திறக்கப் பண்ணாது தங்கள் நாடகத்தை தொடரும் உலகம் இது....இந்த எழுத்துக்களை எழுதும் போதும் கூட சில விடையங்களால்  மனம் பாதிக்கபட்டு கொண்டு இருக்கலாம்..ஆனால் என்ன செய்ய முடியும்...

 

செய்திகளைப் பரப்புவதில் பெரும் பங்கு வகிப்பது ஊடகங்கள் அந்த வகையில் நேற்றைய தினம் சி.பி 24ல் கூட இந்த செய்தியை எழுத்தோட்டத்தில் போட்டுக் கொண்டு இருந்தார்கள்...யாராவது பார்த்தீர்களா....??

astrologer-473x315.jpg

Bhaskar Muniyappa, 30, is accused of sexually assaulting his astrology client on Sept. 11, 2014. HANDOUT/Toronto Police Service

 

Police have arrested an astrologer accused of sexually assaulting a 38-year-old woman in North York this week.

The woman said it happened on Thursday, when she went to the Sri Vinayaka Astrologer on Keele Street, south of Lawrence Avenue West.

Officers arrested Bhaskar Muniyappa, 30, and charged him with sexual assault.

He’s due in court on Oct. 22.

Police believe there may be more victims and are asking anyone with information to call them.

 

http://www.citynews.ca/2014/09/13/astrologer-accused-of-sexually-assaulting-client/

  • கருத்துக்கள உறவுகள்

astrologer-473x315.jpg

 

முனியாப்பாவின் முகத்தை பார்க்க, அப்பாவியாய் இருக்கிறார் :lol: . 

அப்படிச் செய்யக் கூடியவர் மாதிரி தெரியவில்லை :D .
சாத்திரம் பார்த்த, சோதிடர் எக்கச்சக்கமாக மாட்டுப் பட்டுப் போனார். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நிழலி அண்ணா சொல்வது சரிபோல்தான் இருக்குது. வழக்கு விசாரணைக்கு வரும்போது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வயதிலேயே..... சோதிடக் கலையை கற்று.
இப்படி, ஆட்டையை.... போடத் தெரிந்த முனியப்பா ஒரு திறமைசாலிதான்.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பகல் இரவு வீட்ல என்ன நடக்கிது எண்டு தெரியாம டபுள் அடிச்சால் ஆட்டையைப் போடுவாங்கள்தானே!

இன்னும் நெடுக்கர் இந்தப் பக்கம் வரேல்லைப் போல கிடக்கு. இல்லாட்டி சார் அடங்கீட்டாரோ தெரியேல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் கனடாவில் இப்படியும் டேட்டிங் போறாய்களா.!!!

 

அவனும் பதமா (பதம் - வார்த்தை என்றும் அர்த்தம் பெறும்) தடவிக் கொடுக்க.. இவா இதமா விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கா. இதில.. சாஸ்திரம்.. கணவன்.. மரணம்.. 6 மாதம் எல்லாம்.. உதவிக்காரணிகள்.

 

கடைசியில.. பத்தினி வேசத்துக்கு பொலிஸ்...! கனடா எங்கையோ போய்க்கிட்டு இருக்கு. :lol:

 

(திருப்தியா வாலி. நாங்க அவசரப்பட்டு வந்து கருத்துச் சொல்லி இருந்தா.. அவன் அப்படித்தான் என்றிட்டு போயிருப்பாங்க. ஆனானப்பட்ட நிழலியே வந்து சொன்னதுக்கு அப்புறம் எனி என்ன சொல்ல வேண்டி இருக்கு..!) :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் காண்டத்தை காண்ட மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஊரில கொஞ்சமேனும் பள்ளிக்கூடத்துக்குப் போ என அப்பன் ஆத்தை சொல்லுறது பாத்துச் சூதானமா நடக்கத் தெரியவேணும். எல்லாவிசையத்திலையும்.

 

இதில் பெண்ணில்தான் பிழை இருக்கின்றது. உள்ளூர் நபர்களுடன் தொடர்புகள் இருந்தால் கொஞ்சம் அரசல்புரசலாகத் தெரிந்தாலும் முதலுக்கு மோசம், இப்படியெண்டால் சமாளிக்கலாம் எனவும் யோசிக்கலாம்.

 

இதுதான் நேரங்கெட்ட நேரத்தில எல்லாம் உணவகங்களில் கழுவப்போகப்படாது ஒண்டுக்கு இரண்டாக மோட்கேஜில வாங்கின சாமான்களுக்கு பட்டையடி அடிக்கவேண்டும் சாமத்தியவீடு "அந்தமாதிரிச்" செய்யவேண்டும். அப்போ யாராவது லவட்டிக்கொண்டுபோவான்கள்தானே.

 

உங்களுக்கு இன்னும் இருக்கு ஆப்பு.

 

எங்கட ஊரில இருந்தும் ஒருவர் சாத்திரியிண்டை சொல்கேட்டு கனடாவுக்குப் போயிருக்கிறார் எதுக்கும் வந்தாப்பிறகுதான் தெரியும்.

இங்கு தமிழ்பெண்கள் கன காசு செலவளித்து ஃபேஷியல் செய்வதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். காட்டுப்பண்டி கானக மயில் ஆகமுடியுமா ?
 
மோட்டுக் கூட்டங்கள். 
 
 
ஆண் பொன்ஸாக இருந்தால் இப்படித்தான் முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாத்திரியால் தன் கண்டத்தை காண்டம் மூலம் பார்க்க முடியவில்லை :D

 

ஏமாறும் கூட்டமிருக்கும் வரை இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். இவரின் கணவனில்தான் பிழை, குடும்பத்தையும் கவனித்திருக்க வேண்டும்

 

அதுதானே அவர் எல்லாத்தையும் கொண்டம் மூலம் கண்டுவிட்டாரே. எனி காண்டம் என்ன கண்டம் என்ன.. வேண்டிக் கிடக்கு. காண வேண்டியதை எல்லாம் கண்டுவிட்டார் சாத்திரி. எனி உள்ள போனாலும் கவலை இல்ல. :D:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்
இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:

Edited by Nathamuni

நிழலி குறிப்பிட்டது போல, உண்மையில் நடந்தது என்னவென்று தெரியவில்லை.   காவல்துறையிடம் முறையிட்டதால் கைது செய்யப்பட்டதாகவும் ஒக்டோபர் 22இல் கோர்ட்டிக்குச் செல்லவுள்ளதாகவும் மட்டுமே ஆங்கில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.  தமிழ் ஊடகங்கள் செய்தியைத் திரித்து எழுதியிருக்கின்றன.  நிழலி சுட்டிக்காட்டிய பின்புதான், ஒரு பெண் இத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டு அவரே காவல்துறையிடம் சென்றிருப்பாரா என்பது கேள்விக்குறியே.  எது எப்படியோ, கனடாவில், பரிகாரம் என்று சாத்திரிகளின் பின் செல்லும் பெண்களுக்கு இது நல்லதொரு பாடம்.  

 

இந்தச் சாத்திரிக்கு அவரின் சாத்திரமே அவருக்குத் தெரியவில்லை.   :lol:  :lol:  :lol:   

 

 

 

இதில் கேஸ் எதுவுமே கிடையாதே. பிணையில் வெளியில் வருவார் முனியப்பா.
 
போலீஸ் காரங்களுக்கு புரியவில்லை போல் தெரிகிறது. சாத்திரம், நம்பிக்கைகள் குறித்து நீதிமன்றம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அது தேவையில்லா விடயம். 
 
நீதிமன்றில், பலாத்காரம் எதுவும் இல்லை, பெண் சுஜமாக ஒரு இணக்கப் பாட்டுக்கு (Barter Negotiation) வந்தே தொடர்பினை வைத்து இருக்கிறார். அதுவும் முனியப்பாவின் இடத்துக்கே சுஜமாக வந்தே தொடர்பினை தொடர்ந்து இருக்கிறார் என்று வாதாடி வெளியே வருவார்.
 
இங்கே நெடுக்கர் சொன்ன வாதம், வீட்டில் மாட்டுப் பட்டவுடன், பத்தினி வேடம் போடுகிறார் என்பது  சரியானது.  :wub:

 

 

அவர் இந்தியாவிலிருந்து விசாவில் வந்து சாத்திரம் பார்ப்பவர்.  இவரை யார் பிணையில் எடுப்பார்கள்?  அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அவர்களால் அத்தனை பணம் செலுத்தி எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

 

இங்கு காதலனாக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றித் தொட்டாலே அது குற்றம்.  ஆகவே, இந்த வாதம் இங்கு எடுபடாது.  இவரால் வேறு பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் முன்வந்து காவல்துறையிடம் முறையிடுமாறும் காவல்துறை கேட்டுள்ளது.  ஆகவே, இது அவரைச் சிக்க வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாகக்கூட இருக்கலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. சப்பைக் கட்டு.. தாங்க.. முடியல்ல.

 

சும்மா சிவனேன்னு.. இந்தியாவில கிடந்தவனை.. கூப்பிட்டு வைச்சு.. தேடிப் போய்.. பரிசும் கொடுத்து.. உடம்பையும் கொடுத்திட்டு.... இப்ப கேசும் கொடுக்கிறதும்.. ஒரு பெண் தான்.

 

விபச்சாரிகளும்.. கேசு கொடுக்கலாம். வாடிக்கையாளர் தன்னை சரியா கையாளவில்லை.. காசு கொடுக்கல்ல என்று. மேற்படி.. சம்பவமும் அப்படி ஒன்று தான். இதுங்களுக்கு விபச்சாரிங்க எவ்வளவோ திறம். வெளிப்படையா நடத்துக்குதுங்க..! :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.