Jump to content

24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்தது யாழ்தேவி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையின் உத்தியோகபூர்வ வெள்ளோட்டம்-

22 செப்டம்பர் 2014

Bookmark and Share

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:-

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையின் உத்தியோகபூர்வ வெள்ளோட்டம்-

1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் உத்தியோகப்பூர்வ வெள்ளோட்டம் இன்று 22-09-2014 காலை 11 மணிக்கு பளை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.

பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வட மாகாண ஆளுநாத் ஜி.ஏ. சந்திரசிறி,பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமக்றக் குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸமதிரி அலென்ரின் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, புகையிரத திணைக்கள உயரதிகாரிகள், இந்திய ஜகோன் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தில் உத்தியோகபூர்வ வெள்ளோட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடக்குகான புகையிரத சேவை பணிகள் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரைக்கும் ஒரு கட்டமாகவும், கிளிநொச்சியிலிருந்து பளை வரை மற்றொரு கட்டமாகவும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் ஒரு கட்டமாகவும் நடைப்பெற்றது இதில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான பணிகளே தற்போது முடிவுற்று எதிர்வரும் மாத்தில் இருந்து புகையிரத சேவைகள் இடம்றெவுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரைக்குமான புகையிரத போக்குவரத்து பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

ஒண்டு சொல்லுறன் கோவியாதேயுங்கோ.

முதல்ல உங்க ஊரில இருக்கும் மக்களுக்கு வீட்டுக்கு ஒரு மலசல கூடம் கட்டிக்கொடுங்கோ அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ :)

இந்த கூரையை வேய்ந்ததே உங்கள் பாரத மணித்திரு நாட்டினர் தானுங்கோ :)

 

 

உண்மையான  மாற்றுக்கருத்து...... :(  :(  :(

 

இந்தியாவை பகைத்துக்கொண்டு  எதுவும் எமக்குக்கிடைக்காது

அதே கை தான் இதையும் சொல்கிறது

:(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புனர் நிர்மானப் பணிகள், திருத்தவேலைகள் செய்யும்போது, அச்சமயங்களில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுக்கும் அமைய வேலைகள் பின்பற்றப்படுவது வழமை. அது பின்பற்றப்படவில்லை என்பதை ராசவன்னியர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியன்மேல் உள்ள கடுப்பு, கோசன் சேயின் கண்களை மறைத்துவிட்டது போல் தெரிகிறது. ஆனாலும் அவரது கூற்று ஒன்று விளக்கமின்றி உள்ளது. 'அப்புறம் எங்களுக்கு ரெயில்வே ஸ்டேசனுக்கு கூரை எப்படி போடுவது என்று வகுப்பெடுங்கோ' என்றால் அதன் அர்த்தமென்ன? புனர் நிர்மானப் பணிகளைத் தமிழர்களிடம் ஒப்படைத்துள்ளனரா? உண்மையில் இந்தப்பணி அந்த மாகாண முதலமைச்சரின் ஆணைக்கும் அமையவே மேற்கொள்ள வேண்டும். போரின் காரணங்களைப் புதைத்துவிட்டு போரினால் ஏற்பட்ட அழிவுகளைச் சரிசெய்வதுபோன்றும், யாழ்மக்கள் தொடரூந்தையே வாழ்நாளில் காணதவர்கள் போன்றும் படம்காட்டுகிறார்கள்.  <_<
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நன்றி SLR,  இந்தியா மற்றும் IRCON. பல வருடங்களின் பின்னர் இந்தியா எமக்கு செய்த உருப்படியான ஒரு விடயம். இந்த போக்குவரத்து வசதிகளைப் பாவித்து சுற்றுலாத்துறை, வர்த்தக, உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைளை கட்டியெழுப்ப வேண்டும்.  

 

 

உங்கள் கருத்தோடு  முழுதாய  உடன்படுகின்றேன்..

 

சிங்களம் அரசியலுக்காக செய்தாலும்

தமிழன் அதை எவ்வளவு பயன்படுத்தணும் என்பதே இன்றைய நிலை

Link to comment
Share on other sites

உலகம் நவீன மயமாகிக்கிட்டு இருக்குது. இது இன்னமும் அரசியல் மயமாகிக்கிட்டே போகுது..????! :icon_idea::o

நானும் இதையே நினைக்கிறேன்...

பெரிய பெரிய அரசியல் மேதைகள் எண்டு தங்களை தாங்களே நினைத்து கொள்ளும் ஆக்கள் எல்லாரும் இதுக்காக அடையிற புளகாயிதம் கூட ஆச்சரியம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வரை மட்டுமல்ல கேகேஎஸ் வரை யாழ் தேவி ஓடலாம். அதையிட்டு மக்கள் சந்தோசம் அடைகின்றார்கள் என்பது மிகவும் அபத்தமானது.
வடபகுதி முளுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாழ் தேவியினால் தமிழ் மக்களுக்கு எத்தனை பாதிப்புக்கள் வரும் என எதிர்காலம் தான் சொல்லவேண்டும்.
டக்லஸ் தனது இந்திய விஜயத்தின் போது வைத்த கோரிக்கை நிறைவேறியதாகப் புழகாங்கிதம் அடையலாம்.
ஆனால் சிங்கள ராணுவப்பிரசன்னத்திற்கிடையில் இந்த யாழ்தேவியின் பங்களிப்பு இனவழிப்பில் இன்னும் அதிக பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

சுற்றுலா என்ற பெயரில் சிங்கள இனவாதிகளினால்  தொடரப்போகும் கலாச்சாரச் சீரழிவிற்கும் இந்த யாழ் தேவிதான் காரணம் ஆக இருக்கப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள வியாபாரிகளுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். யாழ்ப்பாணத்திலை வேலை செய்யப் போகும் சிங்களவர்களுக்கும் வசதியாக இருக்கும். கொஞ்ச நஞ்சமிருந்த வேலை வாய்ப்பும் தமிழனுக்கு இல்லாமல் போகப் போகிறது. சிங்களவர்களும் தயிழ்ப் பெண்களோடு கூடிக் குலாவ வசதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் வரை மட்டுமல்ல கேகேஎஸ் வரை யாழ் தேவி ஓடலாம். அதையிட்டு மக்கள் சந்தோசம் அடைகின்றார்கள் என்பது மிகவும் அபத்தமானது.

வடபகுதி முளுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த யாழ் தேவியினால் தமிழ் மக்களுக்கு எத்தனை பாதிப்புக்கள் வரும் என எதிர்காலம் தான் சொல்லவேண்டும்.

டக்லஸ் தனது இந்திய விஜயத்தின் போது வைத்த கோரிக்கை நிறைவேறியதாகப் புழகாங்கிதம் அடையலாம்.

ஆனால் சிங்கள ராணுவப்பிரசன்னத்திற்கிடையில் இந்த யாழ்தேவியின் பங்களிப்பு இனவழிப்பில் இன்னும் அதிக பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

சுற்றுலா என்ற பெயரில் சிங்கள இனவாதிகளினால்  தொடரப்போகும் கலாச்சாரச் சீரழிவிற்கும் இந்த யாழ் தேவிதான் காரணம் ஆக இருக்கப்போகின்றது.

 

வாத்தியார் அண்ணா, கடைசியாக நீங்கள் எப்போது யாழ்ப்பாணம் போனனீங்கள்?  கடைசியாக எப்போது யாழ்ப்பாணத்திலேயே தொடர்ச்சியாக வசித்த (1990 - 2014) உங்கள் உறவினர் அல்லாத ஒருவருடன் பேசினீர்கள்? எந்த அடிப்படையிலேயே, யாழ்தேவி ஓடுவதால் மக்கள் சந்தோசமடயவில்லை என்று கூறுகிறீர்கள்?

 

கலாச்சாரச் சீரழிவு என்றால் என்ன? ஆண், பெண் நண்பர்கள் வைத்திருப்பது கலாச்சாரச் சீரழிவா? வாகனம் மோட்டார் சைக்கிள் ஓடுவது கலாச்சாரச் சீரழிவா? புகைப்பிடிப்பது, மது அருந்துவது கலாச்சாரச் சீரழிவா? இவற்றை கோச்சியில வந்து சிங்களவன் பழக்குவதற்கு எம்மவர்கள் என்ன விரல் சூப்பும் பாப்பாக்களா? இவற்றில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டவற்றயோ புலம் பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் செய்வதில்லையா? இங்கு கருத்தெழுதும் எத்தனை பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஆண்/பெண் நண்பர்கள் பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருக்கிறார்கள்? எத்தனை பேர் இரவு கிளப்பிங் என்று ஊர் மேய்கிறார்கள்? எத்தனை பேர் புகை/மதுபானம் பாவிக்கிறார்கள்?  இங்க இருக்கிறவர்கள் செய்தால் கலாச்சாரம் சீரழியாது அங்க இருக்கிறவர்கள் செய்தால் சீரழியும். நல்ல நியாயமப்பா. தமது இணையங்களின் traffic ஐ அதிகரிக்க சில மூன்றாம் தர இணையங்கள் கலாச்சாரம் சீரழிவு என்று புலம்புவதை சீரியஸாக யாரும் எடுப்பதில்லை.

 

A 9 ல சிங்களவன் சுற்றுலா வாறதில்லையா? உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழ்தேவி வந்தே இருக்கக் கூடாது. உங்களுக்கு என்ன, நீங்கள் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா, நோர்வே, அவுஸ், டென்மார்க், அமேரிக்கா என்று எதோ ஒரு நாட்டில் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பீர்கள். யாழ்ப்பணத்தில இருக்கிறவன் ஒரு செந்தளிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் காஞ்சு கருவாடாக இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி.கொஞ்சம்,கொஞ்சமாக வட,கிழக்கு அபிவிருத்தி அடைந்து கொண்டு வர வேண்டும். அங்கு உள்ள மக்களும் புலத்தில் இருப்பவர்களை தங்கி இருக்காமல் சுயமாக,சொந்தக் காலில் நிற்க வேண்டும்

Link to comment
Share on other sites

 

A 9 ல சிங்களவன் சுற்றுலா வாறதில்லையா? உங்கள் கருத்துப்படி பார்த்தால் யாழ்தேவி வந்தே இருக்கக் கூடாது. உங்களுக்கு என்ன, நீங்கள் சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன், கனடா, நோர்வே, அவுஸ், டென்மார்க், அமேரிக்கா என்று எதோ ஒரு நாட்டில் சிறந்த வாழ்க்கைத்தரத்தை அனுபவிப்பீர்கள். யாழ்ப்பணத்தில இருக்கிறவன் ஒரு செந்தளிப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் காஞ்சு கருவாடாக இருக்க வேணும்.

 

"மக்கள் கஷ்டப்பட்டால் தான் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்" என்ற சிந்தனையுன் தொடர்ச்சி தான் இது......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவுக்கு வந்தால் புல்லட் ட்ரைன் வரணும்..இல்லை என்றால் ஒன்றுமே வரக்கூடாது.. :)

தலைவருக்கு ஏற்ற தொண்டன்....

 

 

உங்களுக்கு வந்தால் கடகட கொட்டி வரனும்... இல்லைன்னா ஒன்னும் வரக்கூடாது. :D

 

சிறீலங்கா அரசு... போக்குவரத்தை தனியார் மயப்படுத்தினால் அன்றி.. உதுகளுக்கு உய்வில்லை. இதே நூற்றாண்டு காலப் பழைய திட்டங்களோடு தான் இன்னும் இருந்து தொலையப் போகின்றன..! மக்களின் பணம் ஒரு நீண்ட.. 21ம் நூற்றாண்டில்.. எதிர்கால உலகின் சவால்களை எதிர்கொள்ளும்.. திட்டமிடல் இன்றி.. வெறும் சுயநோக்க.. கட்சி.. அரசியல் இலாபங்களுக்காக.. இப்படி வீணாகிறது. அதில் சிலருக்கு மட்டற்ற மகிழ்ச்சி..!! :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் முன்பே அங்கு சிங்கள வியாபாரிகள் இருந்தார்கள்,யாழில் சிங்கள மாகாவித்தியாலயம் இருந்தது புகையிரத நிலையத்தில் பணிபுரிய சிற்றூழியர்கள்,அதிகாரிகள் என பல சிங்களவர்கள் அரச விடுதிகளில் தங்கியிருந்தார்கள் இப்படியான ஒரு சூழலிலும் நான் எனது கலாச்சாரம்(? )பண்பாடு(?) எல்லாத்தையும் கலப்படமில்லாமல் அவுஸ்ரேலியாவுக்கு கொண்டுவந்திட்டேன் :D...... ..... புலம் பெயர்ந்த நான் அங்கு சென்று மீண்டும் எனது கலாச்சாரம் ,பண்பாடுகளை கலப்படமில்லாம் கடைபிடிப்பேனா என்பது மில்லியன் டொலர் கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் முன்பே அங்கு சிங்கள வியாபாரிகள் இருந்தார்கள்,யாழில் சிங்கள மாகாவித்தியாலயம் இருந்தது புகையிரத நிலையத்தில் பணிபுரிய சிற்றூழியர்கள்,அதிகாரிகள் என பல சிங்களவர்கள் அரச விடுதிகளில் தங்கியிருந்தார்கள் இப்படியான ஒரு சூழலிலும் நான் எனது கலாச்சாரம்(? )பண்பாடு(?) எல்லாத்தையும் கலப்படமில்லாமல் அவுஸ்ரேலியாவுக்கு கொண்டுவந்திட்டேன் :D...... ..... புலம் பெயர்ந்த நான் அங்கு சென்று மீண்டும் எனது கலாச்சாரம் ,பண்பாடுகளை கலப்படமில்லாம் கடைபிடிப்பேனா என்பது மில்லியன் டொலர் கேள்வி?

 

அன்று யாழில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள். இன்று வந்திறங்கும் சிங்களவர்கள், அரசினால் திணிக்கப்படும் சிங்களக் காடையர்கள். இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
 
தமிழரது கலாச்சாரம் என்ன? பண்பாடு என்ன? தமிழரது கடவுள்யார்? வடிவமென்ன? எதுவுமே இன்று வாழும் தமிழனுக்குத் தெரியாது என்பதே யதார்த்தம் சொல்லும் உண்மை!.... உங்கள் பின்னூட்டத்திலேயே இதற்கான வினாவும் உள்ளதே!.    
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று யாழில் வாழ்ந்த சிங்கள மக்கள் தமிழ்மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள். இன்று வந்திறங்கும் சிங்களவர்கள், அரசினால் திணிக்கப்படும் சிங்களக் காடையர்கள். இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு.
 
   

 

சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்த காலம்தொடக்கம் இதுதான் நடை பெறுகிறது 30 வருட போராட்டம் அதை குறைத்தது.....இனி மீண்டும் நடைபெறும்....காலப்போக்கில் இந்த காடையர்களும் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தும்பளையானின் கருத்துக்கள் இரசிக்கக்கூடியதாக இல்லை. யாழ்ப்பாணத்துக்கு தொடரூந்துச் சேவையால் அபிவிருத்தி அடைந்து விடும் என்பது அதிகபட்சமான கற்பனை. அது சிங்கள அரசுக்கான நிதித் தேடலுக்கான வழியே அன்றி வேறொன்றுமில்லை. இந்தத் தொடரூந்து வருகையின் பின்னர் நடக்கின்ற சில வேலைகளைச் சொல்ல வேண்டும். இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ஓடிய பேருந்துக்கள் நோக்கி கல் எறியப்படுகின்றன. கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. விபத்து நடப்பதாகக் காரணம் சொல்லிச் சிங்கள காவற்துறையும் மௌனமாக இருக்கின்றது. உண்மையில் தனியார் பேருந்துக்களினைத் தடுத்து, தொடரூந்துக்கான வருமானத்தைப் பெறும்பொருட்டே இப்படியான செயலைச் சிங்கள அரசு செய்கின்றது. இதை விடப் தொடரூந்துப் பெட்டிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு, தொடரூந்துப் பெட்டிகளை வாங்கப் போவது மகிந்தவின் மகனாவார். வடக்குக் கிழக்கு நோக்கிச் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் பணத்தை சிங்கள அரசு பெறும் நோக்கிலேயே இருக்கின்றதே அன்றி வேறு நோக்கமல்ல.

அரசாங்கம் செய்வது இருக்கட்டும். மக்கள் அபிவிருத்தி அடைந்துன்ளார்களா என்றால் அது இல்லை. இன்று யாழ்பாண இளைஞர்கள் ஒரு மோட்டார் வண்டியோ, விலையுயர்ந்த கைப்பேசியோடு திரிகின்றார்கள் என்பதால் அதன் பெயர் அபிவிருத்தியே கிடையாது. அவர்கள் வெளிநாட்டில் இருந்து யாரோ அனுப்பிய பணத்தில் வாங்கியது. அவர்கள் அப்படித் திரியக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படியான வீதிகளையும், இளைஞர்களின் செயற்பாடுகளையும் பார்த்து எம்மக்கள் அபிவிருத்தி அடைகின்றார்கள் என்ற புளகிதம் வேண்டாம்.

நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த காலப்பகுதியில் நானும் சென்று வந்தேன். ஆரம்பத்தில் வீதிகளைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுத் தான் போனேன். ஆனால் மக்களோடு உரைஙயாடும்போது, அது அவர்களின் தேவைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு வெங்காயம், 20ரூபா, கொழும்பில் 100 ரூபா. மாம்பழம் 20 ரூபா அளவில். கொழும்பில் 60 வரை போகின்றது. நான் பயணம் செய்த காலங்களில் அவதானித்த லொறி, அல்லது சமான் காவும் வாகனம் 2-3 அளவில் தான். இங்கே மக்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் எப்படிக் கிடைக்கின்றன என்றால் அதைப் பற்றிச் சிங்கள அரசு அலட்டிக் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

இலங்கையிலை சுறண்ட வந்த பிரிட்டிஸ் காறர் கூட இரயில் பாதை போட்டவை.. ஆகவே மக்களின் நலனுக்காக இரயில் விட்ட பிரிட்டிஸ் காறர் எண்டு பாராட்டினதா எங்கட அறிவுசார் தமிழினம்...??

யாழ்தேவி மக்களுக்கு நல்லதை வளங்கும் எண்டு புளகாகிதம் அடையிறவையிட்ட கேக்க எனக்கு நிறைய கேள்வி இருக்கு... இந்த இரயில் தமிழர்களின் யாரை ..? எதை ..? எங்கே...?? கொண்டு போக போகிறது...?? எதை கொண்டு வரப்போகிறது...???

வடக்கில் எந்த பொருட்கள் தெற்கே ஏற்றும் அளவுக்கு தன்னிறைவு கண்டு இருக்கிறது...?? விவசாயமா...?? இல்லை மீன் பிடியா..?? இல்லை அதையும் தாண்டி ஏதாவது...??

அண்றாடம் செலவுக்கு தவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழை இருக்கும் பல தமிழர்களில் எவ்வளவு பேர் இந்த இரயிலில் ஏறி தெற்கையோ இல்லை கிழைக்கேயோ போக போகிறார்கள்...? அரசாங்க வேலைகளிலையோ இல்லை தனியார் வேலைகளிலையோ இருக்கும் எத்தினை பேர் அடிக்கடி தெற்கை போக போகிறார்கள்...??

இதே இரயில் திருகோணமலைக்கும் , மட்டக்களப்புக்கும் , அம்பாறைக்கும் போய் வருகிறது... அங்கே இந்த இரையில் எதை கொண்டு வந்து தமிழர்களுக்கு கொடுத்தது எண்டது எனக்கு நன்கு தெரியும்..

Link to comment
Share on other sites

இதில் தும்பளையானின் கருத்துக்கள் இரசிக்கக்கூடியதாக இல்லை. யாழ்ப்பாணத்துக்கு தொடரூந்துச் சேவையால் அபிவிருத்தி அடைந்து விடும் என்பது அதிகபட்சமான கற்பனை. அது சிங்கள அரசுக்கான நிதித் தேடலுக்கான வழியே அன்றி வேறொன்றுமில்லை. இந்தத் தொடரூந்து வருகையின் பின்னர் நடக்கின்ற சில வேலைகளைச் சொல்ல வேண்டும். இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ஓடிய பேருந்துக்கள் நோக்கி கல் எறியப்படுகின்றன. கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. விபத்து நடப்பதாகக் காரணம் சொல்லிச் சிங்கள காவற்துறையும் மௌனமாக இருக்கின்றது. உண்மையில் தனியார் பேருந்துக்களினைத் தடுத்து, தொடரூந்துக்கான வருமானத்தைப் பெறும்பொருட்டே இப்படியான செயலைச் சிங்கள அரசு செய்கின்றது. இதை விடப் தொடரூந்துப் பெட்டிகளைத் தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு, தொடரூந்துப் பெட்டிகளை வாங்கப் போவது மகிந்தவின் மகனாவார். வடக்குக் கிழக்கு நோக்கிச் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் பணத்தை சிங்கள அரசு பெறும் நோக்கிலேயே இருக்கின்றதே அன்றி வேறு நோக்கமல்ல.

அரசாங்கம் செய்வது இருக்கட்டும். மக்கள் அபிவிருத்தி அடைந்துன்ளார்களா என்றால் அது இல்லை. இன்று யாழ்பாண இளைஞர்கள் ஒரு மோட்டார் வண்டியோ, விலையுயர்ந்த கைப்பேசியோடு திரிகின்றார்கள் என்பதால் அதன் பெயர் அபிவிருத்தியே கிடையாது. அவர்கள் வெளிநாட்டில் இருந்து யாரோ அனுப்பிய பணத்தில் வாங்கியது. அவர்கள் அப்படித் திரியக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இப்படியான வீதிகளையும், இளைஞர்களின் செயற்பாடுகளையும் பார்த்து எம்மக்கள் அபிவிருத்தி அடைகின்றார்கள் என்ற புளகிதம் வேண்டாம்.

நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த காலப்பகுதியில் நானும் சென்று வந்தேன். ஆரம்பத்தில் வீதிகளைப் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டுத் தான் போனேன். ஆனால் மக்களோடு உரைஙயாடும்போது, அது அவர்களின் தேவைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள நேரம் எடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு வெங்காயம், 20ரூபா, கொழும்பில் 100 ரூபா. மாம்பழம் 20 ரூபா அளவில். கொழும்பில் 60 வரை போகின்றது. நான் பயணம் செய்த காலங்களில் அவதானித்த லொறி, அல்லது சமான் காவும் வாகனம் 2-3 அளவில் தான். இங்கே மக்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் எப்படிக் கிடைக்கின்றன என்றால் அதைப் பற்றிச் சிங்கள அரசு அலட்டிக் கொள்வதில்லை.

 

வணக்கம், நான் யாரும் ரசிப்பதற்காகவோ, விசிலடிப்பதற்காகவோ எழுதுவதில்லை. சில யதார்த்தங்கள், குறிப்பாக எமது நிகழ்ச்சி நிரலின் படி போகாதவை இரசிக்கக் கூடியதாக இருப்பதில்லை.

 

புகையிரதம் வருவதால் யாழ்மாவட்டம் அபிவிருத்தி அடைந்து விடும் என நான் எங்குமே கூறவில்லை. அபிவிருத்தி அடைய வைக்கலாம் என்றே கூறிவருகிறேன். புகையிரத சேவையை எமது நன்மைக்காகப் பயன்படுத்துவது எமது கெட்டித்தனம். அதைவிடுத்துவிட்டு கடவைகளில் சனம் சாகப்போகுது, சிங்களவன் குடியேறப் போகிறான், கலாச்சாரம் பாதிப்படையப்போகுது என்று சொல்வதால் எதுவித நன்மைகளும் இல்லை. நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ தொடரூந்து ஓடத்தான் போகுது.

 

பளை - கொழும்பு தொடரூந்துகள் அனைத்துமே ஹவுஸ் புல்லாகத்தான் ஓடிக் கொண்டிருக்கு மூண்டு நாளுக்கு முன்னரே புக் பண்ணாவிட்டால் சீட் கண்டிப்பாகக் கிடைக்காது. பஸ்சுக்கு கல்லெறிந்து தான் சனத்தை கோச்சியில வரவைக்க வேணும் எண்டு இல்லை. பஸ்சுக்கு கல்லெறிந்ததுக்கு பெர்மிட் இல்லாமல் ஓடுற பஸ்காரருக்கும் பெர்மிட்காரருக்கும் வந்த கொளுவல் தான் காரணம். இதனுள்ளே அன்னை நாக பூசணி பஸ் காரர், D.S குணசேகராவின் பஸ்சுக்கு அனுராதபுரத்திலே ஆள் வைத்து கல்லெறிந்ததும் அடக்கம்.  இதவிட, பஸ் கட்டணத்தை விட கோச்சியின் கட்டணம் குறைவு, வேகமும் கூட, சொகுசும் அதிகம்.  

  

மோட்டார் சைக்கிள்களையும் வீதிகளையும் பார்த்து மக்களின் அபிவிருத்தியை அளவிடும் அளவுக்கு நான் இல்லை. ஆனால் நான் 2006 இல் ஊரை விட்டு வெளிக்கிட்ட போது இருந்ததை விடவும் எனக்கு தெரிந்த காலத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை விடவும் நன்றாகத்தான் இருக்கிறது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இரண்டு மணித்தியாலம் பயணம் செய்த எனக்கு அரை மணித்தியாலத்தில் போகக்கூடியதாக இருப்பதே ஒருவகை அபிவிருத்திதான்.

 

புலம் பெயர்ந்தவர்கள் ஊருக்கு அனுப்பும் காசைக் குறைத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்க வகை செய்யவேண்டும். ஆனால் நடப்பது எதிர்மறையானது, அங்கிருப்பவர்கள் இருநூறு கேட்டால் இவர்கள் இரண்டாயிரம் அனுப்புகிறார்கள். தாங்கள் இங்கு அந்தமாதிரி இருப்பதாக அவர்கள் வேஷம் போட இது பயன்படுகிறது.அங்கிருக்கும் தங்களின்/தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மதிலைக் கட்டுகிறார்கள்,  மகாராஜா கேட் போடுகிறார்கள், மாபிள் பதிக்கிறார்கள், ஏன் A/C கூட பூட்டுகிறார்கள். இவ்வாறு செய்யாவிட்டால் அதைப் பெரும் கௌரவக் குறைச்சலாக கருதுகிறார்கள். தாங்கள் காசனுப்புவதால் அங்கிருப்பவர்களைக் கட்டுப்படுத்தாலாம் எனவும் நினைக்கிறார்கள். விளைவு அங்கிருப்பவர்கள் புலம் பெயர்ந்தவர்களின் கைப் பொம்மைகளாக மாறிவிடுகிறார்கள், புலம் பெயர்ந்தவர்கள் எதைக் கேட்க வேண்டும் என விரும்புகிறார்களோ அதையே அவர்களும் சொல்லுகிறார்கள்.  

 

தற்போது அபிவிருத்தி செய்யக் கூடிய பல பாதைகள் திறந்திருக்கின்றன. இவற்றைப் புத்திசாலித்தனமாக பாவிப்பதும் செய்வதும் அவரவர் விருப்பம். நீங்கள் இரண்டு மூன்று சாமான் ஏத்தும் வாகனங்களைக் கண்டதாக குறிப்பிடிருகிறீர்கள், ஆனால் பண்டல் பண்டலாக புகையிலை, வெங்காயம், பழவகைகள், கடலுணவுகள், பனை சார்ந்த பொருட்கள் தெற்குப் பகுதிக்கு தினமும் கொண்டு செல்லப்படுகின்றன. தெற்கிலிருக்கும் சில கொட்டல்கள் யாழ் மாவட்ட இறால், நண்டு, திருக்கை, சுறா மீன் வகைகளை நேரடியாகவே கொள்வனவு செய்கின்றன. இவற்றை நீங்கள் அறியாதது இருக்கிறது. சந்தை வாய்ப்புக்கள் எம்மைத் தேடி வரமாட்டாது. நாம் தான் வர்த்தகர் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எமது சந்தை வாய்ப்புக்களை ஏற்ற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அபிவிருத்தி என்பது ஒரு இரவிலோ, ஒரு சில வருடங்களிலோ நடப்பது அல்ல.  

Link to comment
Share on other sites

இலங்கை மீது இந்தியத் தூதர் குற்றச்சாட்டு!

 

Y.K.Sinha-basil-300x210.jpgஇலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்திய  உயர்ஸ்தானிகர்  கவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என இந்திய உயர்ஸ்தானிகர்  வை கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.

வடக்கின் புகையிரத பாதையை பொறுத்தவரையில் இந்தியா பாரிய பொறுப்புடன் அதனை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தியாவின் அந்த செயற்பாடுகளை உள்ளுர் ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. கிழக்கில் பாரிய திட்டங்களை இந்தியா செய்கின்ற போதும் சீனாவின் பாத்திரத்துக்கே கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தநிலையில் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளில் பெரும்பாலானவை அன்பளிப்புகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா, இலங்கையுடன் 1998ம் மற்றும் 2000ம் ஆண்டுகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டது. 2012ல் தென்னாசியாவில் இலங்கை, இந்தியாவுக்கான பாரிய பங்காளியாக தொடர்ந்தது. 2009ம் ஆண்டு 2.03 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையுடன் இடம்பெற்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://tamilleader.com/?p=41818

Link to comment
Share on other sites

தடம்புரண்டது யாழ்தேவி

 

பளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி ரயில் மஹவ பிரதேசத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதாக  மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.    இந்த விபத்து இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     இதனால் வட பகுதிக்கான ரயில் சேவை மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிஸ்டவசமாக ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எதுவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.    (படங்கள் உதவி அத இணையதளம்)   -

 

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=145873475325727354#sthash.dwrYx428.IfEPjYm2.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" மஹவ " எங்கே உள்ளது இந்த பிரதேசம் ?

Link to comment
Share on other sites

" மஹவ " எங்கே உள்ளது இந்த பிரதேசம் ?

 

ரந்தெனிகமவுக்கும் மாகோவுக்கும் இடைப்பட்ட பிரதேசம். தமிழ் ஊடகங்கள் ஈயடிச்சான் கொப்பி அடிப்பதால் ஒருத்தர் விட்ட பிழையை எல்லோருமே விட்டிருக்கினம்.

 

Yarl_Devi.jpg

 

 

Maho.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள். அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு. அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். 13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா? கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ? முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம். அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம். அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு, தமது வரலாற்று ரீதியிலான, பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள், சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு  ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.” அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது. அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது? அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி. இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான். உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன. எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு. உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது. திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன. இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும். எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த  ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா? எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும். கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல, தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம். ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். 15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது? தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர். அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார். அதாவது 13மைனஸ். மற்றவர் சஜித் பிரேமதாச. அவர் 13பிளஸ் என்று கூறுகிறார். ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா? மூன்றாவது அனுரகுமார. அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா? அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா? இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி, நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட, அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார். ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார். அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார். நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன, கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான். ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான். இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில், தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன? அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை. தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம். 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது. அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார். அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை. இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா? ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள், தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலை  ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன. இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது. சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி. அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்?   https://www.nillanthan.com/6770/
    • சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள் May 26, 2024   சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில் மூன்று, அமைச்சரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், Sheriza- Supreme group மற்றும் Hayleys கொம்பனி ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சிறிலங்கன் ஏர்லைன்சை கொள்வனவு செய்யும் மூன்று இறுதிப் போட்டியாளர்களில் ஆசியாவில் குறைந்த கட்டண விமான சேவையான Air asia-வும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட பொது நிறுவனங்களின் மறுசீரமைப்புப் பிரிவானது சிறிலங்கன் ஏர்லைன்சை தனியார் துறைக்கு எடுத்துச் செல்வதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து ஏலங்களை அண்மையில் கோரியதுடன், ஆறு நிறுவனங்கள் இதற்காக முன்வந்தன. AirAsia, Fitz Air, Darshan Elites Investment Holdings, Fitz Aviation, Sheriza Technologies Subsidiary Supreme Company, Treasure Republic Guardian Company மேலும் Hayleys இவ்வாறு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான தகுதிகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் பரிந்துரைகளை மதிப்பிட்டு சிறிலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு மூன்று நிறுவனங்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதில் இரண்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்கள் மற்றும் Hayleys இலங்கையைச் சேர்ந்தது. இது ஒரு முன்னணி பொது நிறுவனம் ஆகும். மேலும், சுப்ரீம் குளோபல் நிறுவனம் இலங்கையில் பல முதலீடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். மேலும், அந்த நிறுவனம் தனது லட்சிய முன்மொழிவை ஷெரிசா டெக்னாலஜிடம் முன்வைத்துள்ளது. இது கட்டார் நாட்டின் ஷேக்கான நயீப் பின் ஈத் அல் தானியின் முதலீடாகும். அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இயங்கி வரும் இலங்கையின் தேசிய விமான சேவையானது தனது முன்னேற்றத்தையும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், இனி விமான சேவையை பராமரிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/சிறிலங்கன்-விமான-சேவையை/
    • அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிதி நிறுவனத்தினாலும் பராமரிக்கப்படும் அனைத்து நடப்புக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203417/  
    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.