Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனிபகவான் தலம்.

Featured Replies

 

எமது மூதையோர் எவளவோ நாள்கள் நேரங்கள் செலவழித்து எத்தனையோ அறிவு திறனை படைத்து வைத்தார்கள்.
 
எப்போ இந்த பாழ்பட்ட இந்துமதம் தமிழ் மண்ணை தொட்டதுவோ.
அன்று தொட்டதுதான் இந்த சனியன். இது இலகுவாக போகாது. மிகவு சக்தி பெற்று விட்டது.
 
ஜோதிகள் பற்றி மூதையோர் எழுதிவைதவையை ..... அடுத்தவனை ஏய்க்க ஜோதிடம் என்று ஆக்கினான் இந்து புறம்போக்கு. இன்றுவரை மக்களை ஏய்த்து பிளைத்துகொண்டுதான் இருக்கிறான்.
 
சித்த வைத்தியத்தை சிதறடித்து சிக்குண்டி சக்குண்டி சாமிகளை உருவாக்கி பல்லி பாம்புக்கு பால் ஊத்தி திரிய வைத்தான்.
 
கடவுளை யார் மிதிக்கிறானோ .............. அவன்தான் மதத்தை தூக்கி பிடிக்கிறான்.
கடவுள் மீது மதிப்பு இருந்தால் .......... அவனுக்கு மதம் தேவை இல்லை. கடவுளின் கீர்த்தி வேண்டி கருணைதான்  தேவை.
 
போலிகளுக்குதான் மதம் தேவை ............ மனிதனுக்கு மார்க்கம் மட்டுமே தேவை.
 
இந்து அரஜாகத்தை .... ஒரு இந்து மதவாதி மூடி மறைக்கிறான்.
சவூதி ரவுடிகளை ............. முஸ்லிம் சீலை போர்த்தி மூடுகிறான்.
கிறிஸ்தவ காம வெறியர்களை ....... கிறிஸ்தவன் வத்திகானை வைத்தே காக்கிறான்.
 
சக மனிதனையே சாகடிக்கும் குரங்குகளுக்கு மதம் ஒரு கேடு? இந்த சாக்கடையில் இப்படியான போலி செய்திகள்தான்  புனித நீராக ஓடும். அப்படியே அவர்கள் அள்ளி பருக வேண்டியதுதான்.
 
தயவு செய்து உங்கள் கைகளை மனிதத்தில் துடைகாதீர். உங்கள் கோவில் சுவர்களிலேயே துடைத்து கொள்ளுங்கள். 

 

 

ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வழிவிடுங்கள். மதங்களைத் தாக்கி, குறிப்பாக இந்து மதத்தினைக் கேவலப்படுத்தி எழுதுவதைக் கண்டிக்கிறேன். இவ்வாறான சாடல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

  • Replies 79
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வழிவிடுங்கள். மதங்களைத் தாக்கி, குறிப்பாக இந்து மதத்தினைக் கேவலப்படுத்தி எழுதுவதைக் கண்டிக்கிறேன். இவ்வாறான சாடல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

உங்கள் எண்ணமும் கருத்தும் கண்டிப்பும் உயர்வானது ............ அதை ஏற்றுகொள்கிறேன்.
 
இந்துமதத்தை இந்துக்கள்தான் கேவல படுத்துகிறார்கள். அவர்கள் (இந்துக்கள் என்று சொல்லி கொள்பவர்கள்) அளவிற்கு அதை வேறு யாராலும் செய்ய முடியாது.
அதற்கு முன்பு இந்து மதம் என்ன என்பதற்கு அல்லது அதன் வரையறைக்கு எல்லைகள் இல்லை.
பல குதர்கத்திட்கு கூட்டு பெயர்தான் இந்துமதம்.
இந்துமதம் என்று எதை அடையாள படுத்துவது? கடவுள் என்றோ மூல தத்துவாதாம் என்றோ எதையாவது வரையறுக்க முடிகிறாதா?
நான் இந்து என்று சொல்லி பெருமைகொள்பவன் ........... தான் யார் என்பதே தெரியதவனாக்தான் இருக்க முடியும். 
 
இதுதான் என்று நாம் கோடு கீறும்வரை வெறும் மூட எண்ணங்களை சார்ந்தே நாம் தள்ளபடுவோம்.
பாம்பும் பல்லியும் கடவுள் என்றால் ............. முதலையும் சிலந்திக்கும் கடவுள் இல்லாதிருக்க கூடிய தகுதிதான் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலைதேடியே நான் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
எனது கருத்துக்கள் எனது மதத்தை சீர்செய்ய வேண்டும் என்பதே. 
மூடர்கள் அதை விளங்காது போனால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. அவர்களது மூடத்தனம்தான் அன்றி வேறில்லை. 
 
மூதையாரின் உழைப்பை சாக்கடையில் என்னால் எறிய  முடியாது. மதம் என்று கூறி சாக்கடையில் எதிர்கால சந்ததியை  தள்ளி விடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
 
அடுத்த மதம் இப்போதைக்கு எனக்கு அடுதவனுடையதாகவே படுகிறது. எனது வீட்டிற்கு குண்டு வைக்க வந்தால்  அதையும் சீர் பார்க்கத்தான் வேண்டும்.  

மதுரங்கேணி, உங்களது முன்னைய கருத்தாடல்களிலிருந்து நீங்கள் கிறிஸ்தவ மதத்தை ஆதரிப்பவர் என்றே புரிந்து கொண்டேன். 

மீண்டும், மத உணர்வுகளைச் சீண்டிக் குழப்பம் செய்ய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுரங்கேணி, உங்களது முன்னைய கருத்தாடல்களிலிருந்து நீங்கள் கிறிஸ்தவ மதத்தை ஆதரிப்பவர் என்றே புரிந்து கொண்டேன். 

மீண்டும், மத உணர்வுகளைச் சீண்டிக் குழப்பம் செய்ய வேண்டாம்.

 

ஆகா,
 
மருந்தங்கேணி, உங்கள் நம்பிக்கை வேறு மதத்தில் இருந்தால், தயவுடன் விலகிக் கொள்ளுங்கள். இது போன்ற பதிவுகள் தவிர்க்கப் பட வேண்டும். 
 
அடுத்தவர் மத நம்பிக்கைகளில் புகுந்து ரண களப் படுத்தாதீர்கள்.
 
நன்றி 
  • கருத்துக்கள உறவுகள்
சென்ற மதம் ஒரு திருமணத்திட்கு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்றேன்.......
ஐவர் கூடி நான் (டியூட்டி ப்ரீ) வாங்கி சென்ற ஒரு போத்தலை குடித்துக்கொண்டு பலத்தையும் பத்தையும்  கதைத்துக்கொண்டு இருந்தோம் ..... அப்படியே எமது மதத்தின் புனிதமும் சிறப்பும் பற்றி அளவளாவல் தொடங்கியது.....
 
ஒருவர் : இந்தியா எப்படி துப்பரவு ஆகும் என்றுதான் தெரியவில்லை ...... கங்கை ஆறே மிகவும் கேடாக இருக்கிறது.
 
இன்னொருவர்: அது குப்பையாக இருக்கிறதே தவிர ..... வெள்ளை காரன் ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறான் அதில் எந்த கிருமியும் இல்லை என்று. அவனுக்கே அது அதிசயமாக இருக்கிறதாம்.
 
எனக்குள் நான்: இப்படி மட்டமாக இருக்கும்போது இவர்கள் உண்மையை உரியகூடிய விகிதம் ஒன்று கூட இல்லை எப்போதோ ஒருமுறை சந்திக்கிறோம். பேசாமல் இருந்துவிட்டு சந்தோசமாக செல்லுவது உத்தமம்.
 
அப்படியே அது முடிந்து விமானம் ஏறிவிட்டேன் ............. விமானத்தில் மனம் பலவற்றை அசைபோட தொடங்கியது  அப்போது இதுவும் ஞாபகத்தில் வந்தது. இப்போது ஒரு குற்ற உணர்வு எனக்குள். அவர்கள் எனது நெருங்கிய  உறவுகள் அப்படி அவர்கள் மட்டமாக இருப்பது ஒரு குற்ற உணர்வாக பட்டது. அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ  ......... கங்கையில் கிருமி இல்லது இருக்க ஒரு வீத சாத்தியமும் இல்லை அப்படி என்று  சொல்லி இருக்க வண்டும் என்று மனம் உறுத்திக்கொண்டு இருந்தது.
கங்கை நதியில் கிருமி இல்லது இருந்தால் இந்தியாவின் மிக பெரிய மூலதனமே அதுவாகத்தான் இருக்கும்.
தவிர காற்று இருக்கும் இடத்தில் கிருமி இல்லாத இடம் உலகில் எங்கும் இல்லை.
இப்படி ஒரு அடிமுட்டாள் தனத்தை ................. நம்பும் அளவிற்கு எமது மதம் வெறும் மூடர்களை மட்டுமே உருவாக்குகிறது.
இந்த மதத்தால் யார் பயன் பெறுகிறான்? என்னை பொறுத்தவரை யாரையும் காணோம். அடுத்தவனை யார் எயக்கிறானோ  அவன் மட்டும் சுகமாக வயிறய் வளர்க்கிறான்.
சிறுவயதில் எமக்கு மிகுந்த பயம் இருந்தது .......... வைரவர் வீரவத்திரர் என்று ஒரே பயம். அதனால் நாம் பல தவறுகளை  செய்யாது இருந்தோம். அந்த ஒரு நன்மையை மட்டுமே நான் கண்டேன்.
ஆனால் அப்படியே கேள்விகள் ஏதும் இல்லாது இருந்து இருப்பின் ......... அதைவிட 100 மடங்கு ஏமாற்ற பட்டிருப்பேன்.
 
2000- 3000 வருடங்களுக்கு முன்பு கங்கை நதி புனிதமாக தெளி நீராக இருந்திருக்கலாம். இப்போது எப்படி இருக்கிறது  என்பதை கண்ணாலேயே பார்த்துகொண்டு.......... தமது சொந்த அறிவை (கடவுள் கொடுத்த) கொஞ்சமேனும்  பாவிக்காது அப்படியே மூடமாக இருப்பதற்கு பெயர் இந்து என்றால்............ அதை எப்படி விமர்சிக்காது  கடந்துபோக முடியும்?
ஏன் நீங்கள் அதை விமர்சிக்க வேண்டாம் என்று அடிக்கடி கட்டளை இடுகிறீர்????? 
 
ஒரு பெரும் மூடத்தனத்தை மதத்தின் பெருமை என்று ஏமாற்ற பார்கிறார்கள் ........... திரி அப்படி தொடங்குகிறது.
இந்த மூட தனம் எங்கு இருந்து பிறக்கிறது? அப்படி என்று இந்த திரியில் பேசாதீர்கள் என்று .... ஏன் சொல்கிறீர்கள் என்றே  புரியவில்லை.
 
நீங்கள் தரும் ஞானஸ்தானத்தை அப்படியே ஏற்று .... ஒரு கிறிஸ்தவன் ஆகவே இருந்துவிட்டு போகிறேன்.
நான் ஏதும் பொய் எழுதுகிறேனா ?
இல்லாததை எழுதுகிறேனா ?
அப்படி நான் எழுதும்போது அதை சுட்டி காட்டுவதுதானே .... ஒரு கருத்தாடல்.  அதை விடுத்து எழுதாதே என்றால்? அது ஏன் என்று உண்மையிலேயே புரியவில்லை.
 
எனது வீட்டை ... எனது ஊரை ........... எனது நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் எல்லாவற்றையும் பற்றிதான்  எழுதுகிறேன். அதில் இந்துமதம் பெரும் பங்கு வகிக்கிறது ..... அதை ஒருபோதும் இப்படியே விட்டு விட்டு போகமுடியாது. இந்த சாக்கடையை கழுவாது எமது நாடு முன்னேறே வைப்பே இல்லை.
இவளவு வளம் இருந்தும் இந்தியா கெட்டுபோக இந்துமதமே மூல காரணம். போலிகளை மூடி மறைக்கவே விபூதி பட்டை  பெரிதும் உதவுகிறது.
தலை இடியை தடுக்கிறது அது இது என்று சும்மா கதை அளர்ப்பவர்கள் தான் தலை இடிவந்தால் பரசிட்டமோல்  போடுகிறார்கள். விபூதியை அள்ளி அப்ப வேண்டியதுதானே?? எதற்கு அஞ்ஞானத்தில் இருந்து விஞ்ஞாத்திட்கு  பல்ட்டி அடிக்கிறார்கள்???
 
பெரியவர்கள் சொன்ன மூலத்தை முழுதாக குழி தோண்டி புதைக்கிறார்கள்............. எத்தனை அறிவு சார் விடயங்களை  இன்று மூடமாக்கி வைத்திருக்கிறார்கள்.
நட்சத்திரம் பற்றி ஒரு பைனாகுலர் இல்லாத காலத்திலேயே கணித்து வைத்தார்கள். இன்று மூடர்கள்  குறிப்பு  கோதாரி என்று ஏமாந்து போகமட்டுமே பயன் படுத்துகிறார்கள். 

பொதுவாகவே எதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று எவ்வாறு, எவரால் கையாளப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாட்டின் பக்கம் பார்க்கப்படுகின்றது. இதைப்போன்று, மதத்தை பலர் தமது சுயநலத்திற்காகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ பாவிக்கிறார்கள் என்பதற்காக, மதத்தை குறை சொல்வதுதான் அடி முட்டாள்தனம்.

 

ஒரு கத்தியை நல்ல நோக்கிலும் பார்க்கலாம். தீய நோக்கிலும் பார்க்கலாம். அது பார்ப்பவரின் மனநிலையைப் பொறுத்தது.

 

எதிரில் ஒரு அழகிய பெண் வரும்போது... ஒருவர் முகத்தைப் பார்க்கலாம்.. இன்னொருவர் மார்பைப் பார்க்கலாம்.... பார்ப்பவரின் மனதில் என்ன இருக்கிறதோ, அதுதான் பார்வையில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதும் மெலெழுந்தவாறு நோக்கினால் முட்டாள்தனம்தான்.

 

அந்தந்த இடத்தில் இருக்கும் அது அதுகளை விட்டு, இருக்கக் கூடாத இடத்தில் இருப்பவைகளை எடுகோளாக்கினால்... எமக்காக யாவும் வளையும், ஆனால் அது உண்மை அல்ல.

 

பொது மலசலகூட சீமேந்துத் தரை நாறலாம். அதற்காக, வீட்டு சீமேந்துத் தரை நாறும் என்று முடிவெடுப்பது.....?!!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

 
நீங்கள் தரும் ஞானஸ்தானத்தை அப்படியே ஏற்று .... ஒரு கிறிஸ்தவன் ஆகவே இருந்துவிட்டு போகிறேன்.
நான் ஏதும் பொய் எழுதுகிறேனா ?
இல்லாததை எழுதுகிறேனா ?
 
அப்படி நான் எழுதும்போது அதை சுட்டி காட்டுவதுதானே .... ஒரு கருத்தாடல்.  அதை விடுத்து எழுதாதே என்றால்? அது ஏன் என்று உண்மையிலேயே புரியவில்லை.
 
 

 

மீண்டும் தயவுடன்:
 
உங்கள் கருத்துகள் ஆபத்தானவை. இங்கே வேண்டாம்.
 
நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

 

உங்க இரண்டு பேருக்கு சனி பார்வை விழுந்துட்டுது !! அது தான் இந்த மாதிரி கேள்வியல் வருது.
 
சனியரோட  சொறிஞ்சால் கஞ்சிக்கும், சோத்துக்கும் அழவேண்டும் சிறியர்!!!  :icon_mrgreen:  அந்தாள்  ஒரு டைப் !!
 
இந்த  கட்டுரை  எங்கள மாதிரி ஆக்களுக்கு.
 
உங்களுக்கு எண்டு பெரியார் கணக்க எழுதி வச்சிருக்கிறார், வாசித்து சந்தோசமா இருங்க.  :icon_mrgreen:  :icon_idea:

 

 

என்னப்பா... இப்பிடி, பயப்பிடுத்துறீங்கள். :o  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோயில் கட்டுரை கட்டுக்கதை என்று ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்தியும் பிடிவாதமாக நம்புவோரைப் பார்க்கும்போது எமது சமுதாயத்தில் மூட நம்பிக்கை எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காணலாம். எதிர்த்துக் கதைத்தால் கடவுள் பழிவாங்குவார் என்ற பயமுறுத்தலும் இவற்றை நீண்ட தூரம் காவிச் செல்லும். இன்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் புராணக் கதைகளில் ஏறத்தாள அனைத்துமே கட்டுக் கதைகள்தான். முடிந்தால் பொய்யான விளக்கங்களைப் பரப்பாமல் இவற்றிலிருந்து அறிவியலைத் தேட முயலுங்கள். இதற்குள் பெரியார் என்ற மனிதன் தேவையில்லை.

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்:D

திருநள்ளாறு மட்டுமல்ல எல்லாக் கோவில்களுக்கும் பின்னாலும் காலகாலமாக கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகள் இருக்கின்றன. சரி பிழைகளுக்கு அப்பால் இந்த நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் எல்லா காலமாற்றங்களின் போதும் நின்று நிலைக்கின்றன. இவை சமூக ஓட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

 

திருநள்ளாறு சனிபகவான் தலத்துக்கு வந்தால் சனிபாவம் தீரும் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை ஒட்டி பதிவுகள் இடும்போது அது பிரச்சனையாகுவதில்லை. அது பின்பற்றுகின்றவர்களின் நம்பிக்கை சார்ந்தது.  ஆனால் அந்த நம்பிக்கையை துருப்பிடிக்க விடாமல் வைத்திருக்க நினைத்து அசட்டுத்தனமான அறிவியல் காரணாங்களை முன்வைக்கும் போதுதான் அவை பிரச்சனையான பதிவுகளாக பார்க்கப்படுகின்றன. மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் செய்மதிகள் 3 வினாடிகள் ஸ்தம்பித்து போகின்றன என்றும் கண்ணுக்கு தெரியாத நீல கதிர்கள் படுகின்றன என்றும் அசட்டுத்தனமாக அல்லது சந்தேகத்து இடமான விதமாக ஒருவர் பதிவினை இடும் போது தான் கேள்விகள் பிறக்கின்றன. அதற்குரிய அறிவியல் ரீதியிலான நம்பத்தகுந்த ஆதாரங்களை கேட்க வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன.

 

இன்னொரு உதாரணத்துக்கு:

 

புரட்டாசி சனிக்கு காகத்துக்கு சோறு கொடுக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அது பற்றி எழுதும் போது அவற்றினை அனுமதிப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் அப்படி சோறு சாப்பிட்ட காகத்தின் ஜீரண இயக்கத்தில் இருந்து பிறக்கும் செம்மஞ்சள் கதிர்கள் சனி கிரகத்தில் இருந்து மனிதனை நேரடியாக தாக்கும் நாவல் நிறக்கதிர்களை நிர்மூலமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் என்று ஒருவர் யாழில் பதிவு இட்டாராயின் கண்டிப்பாக அங்கு எம் (யாழ் நிர்வாகத்தின்) கேள்விகளும் நம்பத்தகுந்த அறிவியல்  ஆதாரங்களை காட்டுங்கள் என்று அழுத்தங்களும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் :D

மொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக் காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
இங்கே நாம் யாரும் serious இல்லை என்று நினைக்கின்றேன்.
 
இவை எல்லாம் அங்கே இருக்கும் படிப்பறிவில்லா மக்களுக்கு அல்லது கண் மூடித்தனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு., எழுதப் பட்டவை. எமக்கு இல்லை. அவர்களது நம்பிக்கையில், பத்திரிகை நடாத்தும் நாலு குடும்பம் ஒரு வேளை சோறு சாப்பிடும் என்ற எதிர்பார்ப்பில்.....
 
எழுத்தாளர் சுஜாத்தா, ஒரு முறை சொன்னது போல, மனித வாழ்வு, ஓர் சூதாட்டம் போல், யாரவது ஏமாறினால், தோல்வி அடைந்தால் தான் அடுத்தவர் வாழும் நிலை. இது நூறு வீதம் உண்மை. 
 
பதிவு இட்டவருக்கும், பின்னோட்டம் கொடுத்தவர்களும் ஒரு  seriousness உடன் போடவில்லை என நான் கருதுகிறேன். இவற்றினை வாசிக்கும் போதே, நமக்கு நகைச்சுவை உணர்வு வரவேண்டும். இல்லாவிடில் நமது பார்வை தவறு.
 
சும்மா ரிலாக்ஸ்க்கு ஏதோ பதிவு போட்டால், ஏதோ நாம் இந்த கதைகளை நம்புவதாயும், அதுக்கு விளக்கம், ஆதாரம் கேட்டு... நமக்கு, வேற வேலை இல்லாதது போல... 
 
அட போங்கப்பா...
 
அடுத்தவர்களின் நகைச்சுவை உணர்வுகளை பகிர்ந்து என்ஜாய் பன்னுங்க, எல்லை மீறாமல், எல்லை மீறாதவகையில்..  
 
அம்புட்டு தான் சொல்ல முடியும்.... 
 
Take it easy mates!!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்களின் நன்மை தீமைகளை மனதில் வைத்து மதங்களை எடை போடுவது நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... இப்பிடி, பயப்பிடுத்துறீங்கள். :o  :D  :lol:

 

சும்மா டமாஸ். :icon_mrgreen:

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் :D

 

தவறான தகவல்கள் பரப்பப்படும்போது அது தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

 

கடவுள் நம்பிக்கை பற்றிக் கதைக்கவில்லை. நம்புவதும் நம்பாததும் அவரவர் பிரச்சனை. கடவுளை நம்பவைக்க மூட நம்பிக்கைகளையும் தவறான காரணங்களையும் ஏன் பரப்ப வேண்டும் ? 

 

முட்டாள் தனமான முறையில் ஒன்றை நம்ப வைத்துத்தான் மானிடத்தைக் கக்க வேண்டிய அவசியம் இல்லையே. உண்மையானதை உள்ளபடியே எடுத்துக் கூறி நம்ப வைக்க முடியாதா ? மதங்களில் உள்ள பொய்களை அதிக காலம் பாதுகாக்க முடியாது. அவற்றை விலக்கி நல்ல விடயங்களை வெளிக்கொண்டு வருவதுதான் மதத்துக்கும் நல்லது.

 

மத நம்பிக்கையால்தான் மானிடம் காக்கப்படுகிறது என்ற கூற்றும் பொய்யானது. மதங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உலகில் பெரும்பாலான பிரச்சனைகளின் பின்னணியில் மதங்களே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு கலியாணம் சாமத்தியம் எல்லாம் மூட நம்பிக்கைதான் அண்ணே முதலில் அங்கிருத்து ஆரம்பிப்பம் எங்காவது கட்டிட்டு போகட்டும் என்று விடுவமா நீங்க தயாரா அதுக்கு ..

 

காலையில் எழும்பி முகம் கழுவி சிவா சிவா என்று திருநீறு பூசிட்டு வந்து கணனியில் எதுவும் எழுதலாம் அண்ணே ஆனால் நிஜம் வேறு இல்லையா  :D  :icon_idea:

 

உங்களுக்கு பதில் எழுதுவது

நேரவிரயம்..

 

 

இப்போ

எனது குடும்பத்தை இழுத்து எழுதியதற்கான பதில்...

கிராம்சியம்பதி  முருகனின் தர்மகர்த்தாவின் மகன் நான்

அந்தக்கோவில் எனது ஒப்பாட்டனால் கட்டப்பட்டது.

 

எனது அப்பர் தான் வேட்டைத்திருவிழாவுக்கு போன முருகன்

வீடு திரும்பி உள்ளே போக வள்ளியிடம் அனுமதி  கேட்டு பாட்டுப்பாடுகிறவர்

அப்போ தான் பாடித்தான் வள்ளி  கதவைத்திறந்ததாக சொல்வார்

அவரது மூதாதையினர் அவ்வாறு  தான் சொல்லி  வளர்த்துள்ளனர்

எனக்கு இதில் கேள்விகள் எழுந்தன

இப்போ என் பிள்ளை அதை முற்றாக நிராகரிக்கின்றான்

இதைத்தான் தலைமுறை  வளர்ச்சி  என்கிறார்கள்

இதைத்தான் மூட நம்பிக்கை என்று சொல்லி  நிற்கிறார்கள்

ஒரு இந்து சமயத்தவன் என்றபோதும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாதவனாக இருந்தபோதும்

இது  மூடநம்பிக்கை தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது

 

மேலும்

எனது பிள்ளை

எனது பேச்சைக்கேட்டு திருமணம் செய்யும் என்பதும் உங்களது ஒருவித மூடநம்பிக்கையே...

நான் அந்தளவுக்கு இல்லை..

Edited by விசுகு

  • தொடங்கியவர்

உங்களுக்கு பதில் எழுதுவது

நேரவிரயம்..

 

 

இப்போ

எனது குடும்பத்தை இழுத்து எழுதியதற்கான பதில்...

கிராம்சியம்பதி  முருகனின் தர்மகர்த்தாவின் மகன் நான்

அந்தக்கோவில் எனது ஒப்பாட்டனால் கட்டப்பட்டது.

 

எனது அப்பர் தான் வேட்டைத்திருவிழாவுக்கு போன முருகன்

வீடு திரும்பி உள்ளே போக வள்ளியிடம் அனுமதி  கேட்டு பாட்டுப்பாடுகிறவர்

அப்போ தான் பாடித்தான் வள்ளி  கதவைத்திறந்ததாக சொல்வார்

அவரது மூதாதையினர் அவ்வாறு  தான் சொல்லி  வளர்த்துள்ளனர்

எனக்கு இதில் கேள்விகள் எழுந்தன

இப்போ என் பிள்ளை அதை முற்றாக நிராகரிக்கின்றான்

இதைத்தான் தலைமுறை  வளர்ச்சி  என்கிறார்கள்

இதைத்தான் மூட நம்பிக்கை என்று சொல்லி  நிற்கிறார்கள்

ஒரு இந்து சமயத்தவன் என்றபோதும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாதவனாக இருந்தபோதும்

இது  மூடநம்பிக்கை தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது

 

மேலும்

எனது பிள்ளை

எனது பேச்சைக்கேட்டு திருமணம் செய்யும் என்பதும் உங்களது ஒருவித மூடநம்பிக்கையே...

நான் அந்தளவுக்கு இல்லை..

இல்லாத நேரத்திலும் நேரம் ஒதுக்கி பதில் எழுதியதுக்கு நன்றி அண்ணே ..

 

மூட நம்பிக்கை வேறு மதம் வேறு அதை முதலில் புரிந்து கொள்ளவேணும் எம்மை கட்டுபடுத்தும் ஒருவர் இருக்கிறார் என்னும் ஒரு மாயைதான் இன்றும் பல தவறு நடக்காது காத்து நிக்கு பிழைகளை விடும்போதும் செய்யும் போதும் கடவுளுக்கு தெரியும்மே என்னும் மனச்சாட்சி இங்கு ஆழ்மனதில் எழுவதால் சிலவற்றி தவிர்த்து போகிறோம் அது மதம் என்னும் தேடல் இருப்பதால் மட்டுமே ...

 

 

வளைச்சு வளைச்சு நியாயம் எவ்வளவும் எழுதலாம் முதலில் நாம் அந்த வழிகளை பின்பற்றி கொண்டுதான் மற்றவர்களுக்கு இது பிழை என்று எடுத்து சொல்லவேணும் என்று நான் நினைக்கிறேன் அது எனது தனிப்பட்ட விடையம் எனக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இருக்கு என்பதால் அதுக்கா சாத்திரம் பார்த்துதான் பயணம் போகவேணும் என்று எல்லாம் இல்லை அப்படி போனால் அது மூடநம்பிக்கை எனலாம் ..

 

கடவுள் இருக்கிறாரா என்னும் கேள்வி நீங்கள் நான் என் பிள்ளை கேட்டு எனக்கு தெரிந்த விடையம் இல்லை இது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கு இன்னும் இதுக்கான விடை இல்லை ஆகவே கடவுள் இல்லை என்பதை நாம் தான் இப்ப கண்டுபிடிச்சது போல அலட்டிக்கொள்ள தேவையில்லை ..

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

அணுவை மோதி பிளந்த பின்னும் ஆராச்சியாளன் அதுக்கு கடவுள் துகள்கள் என்றுதான் பெயர் வைத்தான் ஒழிய கடவுள் இல்லா துகள் என்று பெயர் இடவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத நேரத்திலும் நேரம் ஒதுக்கி பதில் எழுதியதுக்கு நன்றி அண்ணே ..

 

மூட நம்பிக்கை வேறு மதம் வேறு அதை முதலில் புரிந்து கொள்ளவேணும் எம்மை கட்டுபடுத்தும் ஒருவர் இருக்கிறார் என்னும் ஒரு மாயைதான் இன்றும் பல தவறு நடக்காது காத்து நிக்கு பிழைகளை விடும்போதும் செய்யும் போதும் கடவுளுக்கு தெரியும்மே என்னும் மனச்சாட்சி இங்கு ஆழ்மனதில் எழுவதால் சிலவற்றி தவிர்த்து போகிறோம் அது மதம் என்னும் தேடல் இருப்பதால் மட்டுமே ...

 

 

வளைச்சு வளைச்சு நியாயம் எவ்வளவும் எழுதலாம் முதலில் நாம் அந்த வழிகளை பின்பற்றி கொண்டுதான் மற்றவர்களுக்கு இது பிழை என்று எடுத்து சொல்லவேணும் என்று நான் நினைக்கிறேன் அது எனது தனிப்பட்ட விடையம் எனக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இருக்கு என்பதால் அதுக்கா சாத்திரம் பார்த்துதான் பயணம் போகவேணும் என்று எல்லாம் இல்லை அப்படி போனால் அது மூடநம்பிக்கை எனலாம் ..

 

கடவுள் இருக்கிறாரா என்னும் கேள்வி நீங்கள் நான் என் பிள்ளை கேட்டு எனக்கு தெரிந்த விடையம் இல்லை இது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கு இன்னும் இதுக்கான விடை இல்லை ஆகவே கடவுள் இல்லை என்பதை நாம் தான் இப்ப கண்டுபிடிச்சது போல அலட்டிக்கொள்ள தேவையில்லை ..

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

அணுவை மோதி பிளந்த பின்னும் ஆராச்சியாளன் அதுக்கு கடவுள் துகள்கள் என்றுதான் பெயர் வைத்தான் ஒழிய கடவுள் இல்லா துகள் என்று பெயர் இடவில்லை .

 

மீண்டும்  மீண்டும் நான் எழுதியதை வாசிக்காது

உங்கள் பாணியில் மிளகாய் அரைக்கப்படாது....

 

கடவுள் இருக்கிறார்

இல்லை என்று எனக்குத்தெரியாது என்று தான் மேலே எழுதியுள்ளேன்..

 

எனக்கே முழுமையாக தெரியாதது பற்றி  நான் பேசுவதில்லை

அதில் எனக்கு  எந்த வெட்கமும் இல்லை

 

உங்களுக்கு முழுமையாக தெரிந்தால்

இங்கு அதை ஆதாரமாக வையுங்கள் என்று தான் இந்த திரியின் ஆரம்பத்திலிருந்து உறவுகளும்

நிர்வாகமும் கேட்டு நிற்கிறார்கள்

அதற்காக  கொஞ்சம  நேரத்தை செலவளித்தால்

நாமும் அறிந்து கொள்ளலாமே...

 

வாழ்வில் அடிபட்ட எனது அனுபவம்

உங்களது வயசைவிட அதிகம்

ஆனால் கடவுள் பற்றி  தங்களிடமிருந்தும் ஆதாரத்துடன் ஏதாவது வந்தால் ஏற்றுக்கொள்ள மனசு துடிக்குது..

ஏனெனில் நானும் ஒரு இந்துமதப்பற்றாளன்..

  • தொடங்கியவர்

மீண்டும்  மீண்டும் நான் எழுதியதை வாசிக்காது

உங்கள் பாணியில் மிளகாய் அரைக்கப்படாது....

 

கடவுள் இருக்கிறார்

இல்லை என்று எனக்குத்தெரியாது என்று தான் மேலே எழுதியுள்ளேன்..

 

எனக்கே முழுமையாக தெரியாதது பற்றி  நான் பேசுவதில்லை

அதில் எனக்கு  எந்த வெட்கமும் இல்லை

 

உங்களுக்கு முழுமையாக தெரிந்தால்

இங்கு அதை ஆதாரமாக வையுங்கள் என்று தான் இந்த திரியின் ஆரம்பத்திலிருந்து உறவுகளும்

நிர்வாகமும் கேட்டு நிற்கிறார்கள்

அதற்காக  கொஞ்சம  நேரத்தை செலவளித்தால்

நாமும் அறிந்து கொள்ளலாமே...

 

வாழ்வில் அடிபட்ட எனது அனுபவம்

உங்களது வயசைவிட அதிகம்

ஆனால் கடவுள் பற்றி  தங்களிடமிருந்தும் ஆதாரத்துடன் ஏதாவது வந்தால் ஏற்றுக்கொள்ள மனசு துடிக்குது..

ஏனெனில் நானும் ஒரு இந்துமதப்பற்றாளன்..

நீங்களும் வழமையான வார்த்தை ஜாலம் தான் மூடநம்பிக்கை என்பது என்ன .......மதம் என்பது என்ன அதை முதலில் விளக்கினால் எனக்கு சுகம் கடவுள் உண்டா இல்லையா என்று அறிய ..

 

 

என்ன அடைப்படியில் நீங்கள் கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வாறீங்கள்...அனுபவம் என்பது வயது சார்த்தது என்று நினைப்பதே முதலில் தப்பு அது ஒருவரின் வாழ்வியல் சூழலை பொறுத்தே அவர் அவர் அனுபவம் மாறுபடும் எனக்கு இருக்கும் அனுபவம் வேறானது உங்கள் அனுபவம் வேறானது ஆகவே இங்கு வயது என்பது நான் அதிகம் தெரிந்தவன் என்று சொல்ல பயன்படுமே தவிர அனுபவத்துக்கு அல்ல ..

 

ஒருவர் இறந்து விட்டால் தூக்கி போட்டுடு வேலை பார்க்காமல் அவருக்கு சகல கிரிகைகள் எல்லாம் யாருக்கு பயந்து செய்து தகனம் செய்ய வேணும் இறந்தவர் எழும்பி எண்டா எனக்கு சந்தனம் வைக்காமல் தீ மூட்டினே என்று கேட்கவா போகிறார் பின்னர் எதுக்கு இவ்வளவு ஏற்பாடு வீட்டில் படம் வைத்து மாலை போட்டு வருடா வருடம் அவருக்கு துவசம் கொடுத்து இது எல்லாம் மூடநம்பிக்கை இல்லையா கேட்ட அவர் என் அப்பா அம்மா அதனால் செய்கிறேன் என்று சொல்வீர்கள் ஆனால் அதன் பின்னால் உள்ள பயம் என்பதுதான் இறை .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம்

நேரம் பொன்னானது.........

  • கருத்துக்கள உறவுகள்

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

 

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

 

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

 

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

 

அடடா! null hypothesis ஐயும் alternate hypothesis ஐயும் (தமிழ் பதம் தெரியவில்லை, மன்னிக்கவும்!) இவ்வளவு எளிதாகச் சொல்ல முடியும் எண்டு இண்டைக்குத் தான் கண்டு கொண்டேன்! குருநாதா!, அடியேனையும் சிஷ்யனாகச் சேர்த்துக் கொள்ள ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமா? :D

 

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! null hypothesis ஐயும் alternate hypothesis ஐயும் (தமிழ் பதம் தெரியவில்லை, மன்னிக்கவும்!) இவ்வளவு எளிதாகச் சொல்ல முடியும் எண்டு இண்டைக்குத் தான் கண்டு கொண்டேன்! குருநாதா!, அடியேனையும் சிஷ்யனாகச் சேர்த்துக் கொள்ள ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமா? :D

விண்ணப்பத்துடன் ரூ.100 கட்டணத்தையும் சேர்த்து கட்டிவிடுங்கள்..  :huh: ஆனால் தலைமைச் சீடன் பதவியை ஒழித்துவிட்டேன்..  :unsure: ஒன்லி சீடிதான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

திருநள்ளாறு மட்டுமல்ல எல்லாக் கோவில்களுக்கும் பின்னாலும் காலகாலமாக கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகள் இருக்கின்றன. சரி பிழைகளுக்கு அப்பால் இந்த நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் எல்லா காலமாற்றங்களின் போதும் நின்று நிலைக்கின்றன. இவை சமூக ஓட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

திருநள்ளாறு சனிபகவான் தலத்துக்கு வந்தால் சனிபாவம் தீரும் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை ஒட்டி பதிவுகள் இடும்போது அது பிரச்சனையாகுவதில்லை. அது பின்பற்றுகின்றவர்களின் நம்பிக்கை சார்ந்தது.  ஆனால் அந்த நம்பிக்கையை துருப்பிடிக்க விடாமல் வைத்திருக்க நினைத்து அசட்டுத்தனமான அறிவியல் காரணாங்களை முன்வைக்கும் போதுதான் அவை பிரச்சனையான பதிவுகளாக பார்க்கப்படுகின்றன. மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் செய்மதிகள் 3 வினாடிகள் ஸ்தம்பித்து போகின்றன என்றும் கண்ணுக்கு தெரியாத நீல கதிர்கள் படுகின்றன என்றும் அசட்டுத்தனமாக அல்லது சந்தேகத்து இடமான விதமாக ஒருவர் பதிவினை இடும் போது தான் கேள்விகள் பிறக்கின்றன. அதற்குரிய அறிவியல் ரீதியிலான நம்பத்தகுந்த ஆதாரங்களை கேட்க வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன.

இன்னொரு உதாரணத்துக்கு:

புரட்டாசி சனிக்கு காகத்துக்கு சோறு கொடுக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அது பற்றி எழுதும் போது அவற்றினை அனுமதிப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் அப்படி சோறு சாப்பிட்ட காகத்தின் ஜீரண இயக்கத்தில் இருந்து பிறக்கும் செம்மஞ்சள் கதிர்கள் சனி கிரகத்தில் இருந்து மனிதனை நேரடியாக தாக்கும் நாவல் நிறக்கதிர்களை நிர்மூலமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் என்று ஒருவர் யாழில் பதிவு இட்டாராயின் கண்டிப்பாக அங்கு எம் (யாழ் நிர்வாகத்தின்) கேள்விகளும் நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரங்களை காட்டுங்கள் என்று அழுத்தங்களும் இருக்கும்.

உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  வைக்கப்படும் கருத்துக்களிலும் சரி

செயற்பாட்டிலும் சரி

 

மதம் நல்லது கெட்டது

சரி  பிழை என்று எவரும் வாதாடவில்லை

 

இணையவன்

நிழலி  உட்பட...

சாதாரணமாக இணையவன் இந்தளவுக்கு எழுதுபவர் அல்ல..

அவர் மினக்கெட்டு எழுதுகின்றார் என்றால்

இது எவ்வளவு முக்கியத்தவம் வாய்ந்தது என்பதை உணரணும்..

 

என்னைப்பொறுத்தவரை

எல்லோரும் இது   போன்ற தப்பான விளக்கங்கள்

மூடநம்பிக்கை விதைப்புக்கள்

உள்ளதையும் கேலிக்குரியதாக்கிவிடும்

இல்லாதொழித்துவிடும்  என்பதே பலரதும்

யாழினதும் கருத்தாக உள்ளது...

அதை எல்லோரும் புரிந்து கொள்ளணும்

ஏற்று பொறுப்புடன் எழுதணும் என்பதே வேண்டுகோள்......

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.