Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்-(2)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

 

blog-jeya-1-dsc_0167.jpg

 

சரி.. கதைக்கு வருவோம்!

 

விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப்

பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, ஒரு கிணறு, துலா, மண்வெட்டி, மற்றும் சில கடகங்களும், சில பட்டைகளும் தான் அவரது மூலதனம்! மிகவும் முக்கியமான முதலீடு அவரது ‘அயராத உழைப்பு' மட்டுமே! அதிகாலையில் ‘குருவிகள்' எழும்ப முன்பே எழுந்து விடுவதால்.. அவரது பெயரும் ‘குருவியர்' ஆகி விட்டது!

 

தாயாரைப் பற்றி அதிகம் கூறுவதற்கில்லை! அவருக்கும் ஒரு பெயர் உண்டு! அது தான் ‘குருவியம்மா'! குருவியம்மாவும் வெறுங்கையோட வந்த மனுசியில்லை!  அந்தக்காலத்திலேயே ‘மூலைக்கை’ வைச்ச வீடு அவவுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது! மனுசியும் அதை பெருமையாய் இடைக்கிடை எல்லாருக்கும் சொல்லிக்காட்டுவதுண்டு!

 

மூத்தவனைப் படிப்பிச்சுப் போடுவம் எண்டு ‘குருவியாரும்' தலை கீழாய் நிண்டு பார்த்தார்! இந்த மண்ணைக் கிழறுற வேலை, தன்னுடைய தலை முறையோட முடிஞ்சு போய் விட வேண்டுமென்பது அவரது இரகசியமான ஆசை! ஆனால் அதை வாய்விட்டு ஒருவரிடமும் சொல்லியதில்லை! ஏனெனில், குருவியாரின் நண்பரொருவர் தனது மகன் படிக்கிறானா என்று ஊர் வாத்தியாரிடம் கேட்க..... அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும் என்று முகத்திலடிச்சது போல கூறியது.. அவரை வாய் திறக்கவே விடவில்லை! அவ்வளவுக்கு வாத்திமாரின் ‘ஊக்குவிப்பு' அந்தக்காலத்தில் இருந்தது! எனவே தனது ஊரில் படிப்பிக்காமல், பக்கத்துக்கு ஊர்ப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தார்! அவனும், ஊர் வாத்தியார் சொன்னதை உண்மையாக்கி விடுபவன் போல… அப்பு எனக்குப் படிப்பு ஏறுதில்லையணை, எங்கையாவது வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சுத் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில கட்டிக் குடுக்கலாம் எண்டு நினைக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு வந்தான்!

 

அவருக்கு வந்த கோவத்திலை… அடி செருப்பாலை என்று கூறியபடி.. ஒரு சுருட்டையும் எடுத்துக் கொண்டு வெளியால போய் விட்டார்!  அந்தச் சுருட்டுத்தான் அவரது ‘டென்ஷனைக்' கொஞ்சம் குறைக்கக் கூடிய சாமான் எண்டு அனுபவத்தில அவர் கண்டு பிடிச்சிருந்தார்! ஒரு சுருட்டைப் பத்தவைச்சு, அதை வாயில வைச்சு ஆழமாகப் புகையை இழுத்து விடும் போது.. ஒவ்வொரு இழுவைக்கும் அவரது ‘டென்ஷன்' கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வாறது வழமை!

 

கொஞ்சம் இருட்டின பிறகு வீட்டுக்குள்ளை வந்து.. கிணத்தடியில கால் முகத்தைக் கழுவிப் போட்டுக் குடிசை வாசலில் தொங்கிய தேங்காய்க் குடுவைக்குள்ளிருந்து ‘திருநீற்றை' எடுத்துச் சிவ..சிவா… என்ற படி நெற்றியில் தடவியபடி.. திண்ணையில் அமர்ந்தார்!

 

சிறிது நேரத்தில்  அவர் எதிர்பார்த்தது நடந்தது!

 

குசினிக்குள்ளிருந்து குருவியம்மா தேனீரோடு ‘என்னப்பா.. தம்பி சொல்லுறது சரி போலத் தானே கிடக்கு… என்ற படி.. குருவியருக்குப் பக்கத்தில் வந்து பவ்வியமாக, அமர்ந்து கொண்டார்!

 

“சரி.. இவர் வெளிநாட்டுக்குப் போய் என்னத்தை வெட்டிப் புடுங்கப் போறார்? உழுகிற மாடு.. ஊருக்குள்ளை விலை போகும் எண்டு சொல்லுவினம்! “

 

இல்லையப்பா. அங்க போய் அகதி எண்டு பதிஞ்சால்.. சும்மா காசு குடுப்பாங்களாம்! அப்பிடித்தான் எல்லாரும் இப்ப அங்கையிருந்து ஊருக்குக் காசனுப்புகினமாம்"

 

அப்ப.. இவர் அகதி எண்டு சொல்லுறதுக்கு.. இவருக்கு என்ன நடந்தது? மூண்டு நேரமும் வேளைக்கு வேளை விழுங்கிப் போட்டுத் திமிர் எடுத்த ஆக்கள் என்னெண்டு போய் அகதி எண்டிறது…?

 

எல்லாரும் அப்பிடித் தான் அப்பா செய்யினம்.. ஆமி அங்க அடிச்சான்.. இஞ்ச அடிச்சான் எண்டு சொல்லி பனையால விழுந்த காயத்தைக் காட்டிச் சனம் அகதியாகுதுகள். வெள்ளைக்காரனுக்கு பனையில ஆக்கள் ஏறி விழுகிறது என்னண்டப்பா.. தெரியும்?

 

அது சரி… இப்ப இவரை அனுப்பிறதுக்குக் காசுக்கு எங்கை போறது?

 

நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டு சத்தியம் பண்ணினால், நான் ஒரு வழி சொல்லுவன்!

 

சரி..சரி.. நீங்கெல்லாம் சேந்து முடிவு பண்ணினாப் பிறகு.. நான் கோவிச்சு எத்தைச் செய்யிறது?

 

உங்கட தோட்டத்தில மேற்குப் பக்கத்துத் துண்டைத் தனக்குத் தரச் சொல்லிச் சுப்பையர் கேட்டது உங்களுக்கு மறந்து போச்சே.. உங்களுக்கு வயசும் போகுது.. இந்தப் பெரிய தோட்டத்தை வைச்சு என்னண்டு சமாளிக்கப் போறியள்? பெடியளும் தோட்டப் பக்கம் போவாங்கள் எண்டு நான் நினைகேல்லை!

 

ம்ம்ம்ம்… என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர்… சரி ..சரி செயிறதைச் செய்து முடியுங்கோ என்ற படி.. கண்களை மூடியபடி.. கொஞ்ச நேரம். அப்படியே ஒரு வித தியான நிலையில் இருந்தார்.

 

ஒரு வேளை.. அவரது அப்பாவின் ஆவி அவரின்ர கண்ணுக்குள்ளை வந்து போகுதோ என்று குருவியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

அடுத்த நாளே அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களைக் குருவியம்மா ஆரம்பித்து விட்டாள்!

 

தோட்டக்காணியைச் சுப்பையருக்கு விற்பதை நினைக்கும் போதே... தன்னில் ஒரு பாதி.. பிரிந்து போவதாகவே குருவியார் உணர்ந்தார். ஆனால்..காணியை விற்பதை விடத் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும் இருந்தது!

 

வீட்டுச் சுவர் முழுவதையும்.. தனது மூத்த மகனதும்.. மகளதும்..விவேகானந்த சபையால் வழங்கப் பட்ட சான்றிதழ்கள்.. வேறு வேறு நிறங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தன!

 

நாளைக்கு மறக்காமல்.. ஞானம் ஸ்டூடியோவில போய் எல்லாரும் ஒரு படம் எடுத்து வைக்க வேணும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

 

 

தொடரும்…!

 
  • கருத்துக்கள உறவுகள்
அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும்
உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.
எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.
ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.

எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.

ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

 

மோராவது அவனுக்குக் குடுத்து அனுப்பியிருக்கலாமே வாத்தியார் :D

 

சிட்நீலையும் இப்பிடி விளக்குமாறாலதான் நிலம் கூட்டுறநீங்களோ???? புங்கை

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை தொடருங்கள்....

 

முழு கதையும் முடியத்தான் மொத்த பச்சையும் புங்கை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

இந்த விதமான திமிர் எங்கையிருந்து வந்தது எண்டது தான் எனக்கும் தெரியேல்லை புத்தன்!

 

புத்தக வெளியீடா? :o

 

நாங்கள் நவீன காலத்து இலக்கியம் தான்!  :lol:

 

புத்தகங்களை எழுத, அவற்றைக் கறையான் அரிக்க.. அவற்றுக்கு உயிர் கொடுக்க சேக்கிழாரும் இல்லை.. ராஜேந்திர சோழனும் இல்லை!

 

விண் வெளிக்கு, லைக்காவை அனுப்பின மாதிரி, புத்தனை முன்னால விட்டுப்.. பின்னால வருவம் எண்டு யோசிக்கிறன்! :icon_idea:

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகள் காவலூர் கண்மணி !

 

இனித்தான் 'கிளைமாக்ஸ்' இருக்குது..!

 

தங்கள் போன்றவர்களின் ஊக்குவிப்பு, மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

--------

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

தொடரும்…!

 

அடுத்த பகுதியை... வாசிக்க கடந்த எட்டு நாட்களாக காவல் இருக்கிறோம்.

எங்க, பொறுமையை.... ரொம்ப சோதிக்காதிங்க புங்கை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

நிழலி போலத்தான் நானும் புங்கை கதையை முடியுங்கோ அதன்பிறகு கருத்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ வாய்க்கால் வரப்பிலா எல்லாரையும் வரிசைகட்டி கூட்டிப்போறீங்க பார்வைக்கு எட்டின மட்டும் பசுமைகளால் நிறைஞ்சிருக்கு.... கதை இரம்மியமாக பசுமையான நிலையில் நகர்கிறது ..... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.