Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்போது சீமான் நிறம் பச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 

ப்போது சீமான் நிறம் பச்சை!

கறுப்புச் சட்டை தாங்கி பெரியார் தொண்டராக வலம் வந்த சீமான், இப்போது பச்சை உடை தாங்கி முருக பக்தராக மாறிவிட்டார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்​பாளர் பதவியில் இருந்து சீமான் நீக்கம் என சில வாரங்களுக்கு முன்பு எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த 7-ம் தேதி பழநியில், 'வீரத்தமிழர் முன்னணி’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் சீமான். இந்த அமைப்பு, நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் பிரிவாகச் செயல்படும் எனச் சீமான் அறிவித்திருந்தாலும் அந்த நாளில் சீமான் தாங்கிய உடைதான் அவரது அரசியலை வெளிப்படுத்தியது. பழநி பொதுக்கூட்ட மேடை இருந்த பேனரில் பழநி முருகனும், ராவணனும் இருக்க, ஒரு பக்கம் பிரபாகரனும், மறுபக்கம் சீமானும் சிரித்தார்கள்.

இதில் மைக் பிடித்த சீமான், ''நாம் தமிழர் வரலாற்றில், இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். பண்பாட்டுப் புரட்சி இல்லாமல், அரசியல் புரட்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்து எமது பண்பாடு காக்க, அழிந்து வரும் கலைகளைக் காக்க, வீரத்தமிழர் முன்னணி என்ற பிரிவைத் தொடங்குகிறோம். ஓர் அரசாங்கத்துக்கு தரை, கப்பல், விமானப் படைகள் இருப்பதுபோல, வீரத்தமிழர் முன்னணி, நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படை.

p8.jpg

இன்று முதல் நாங்கள் இந்துக்கள் அல்ல. அது எங்கள் மதமும் இல்லை. நாங்கள் ஆதித்தமிழர்கள். இயற்கையை, சூரியனை வணங்கும் வழி வந்தவர்கள். ராவணன் வழித் தோன்றல்கள். எனவே, ஆரியக் கடவுள்கள் எங்களுக்கு வேண்டாம். இனி, நாங்கள் ராமனை வணங்க மாட்டோம். ராவணன்தான் எங்கள் வழிபாட்டுக்கு உரியவர். எங்கள் முப்பாட்டனுக்கும் மூத்த பாட்டன் முருகனை வணங்குவோம். நேற்று வரை கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு பகுத்தறிவு பேசியவன் இன்றைக்கு முருகனை வணங்குவேன் என்கிறானே எனக் குழம்ப வேண்டாம். முருகன் என்னைப் படைத்த கடவுள் என நாங்கள் வணங்கவில்லை. எங்கள் பாட்டன் என்பதால் வணங்குகிறோம். இந்துக்கள் என்றாலே, 'வீரசிவாஜி’ படத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றனர். ஏன் தமிழகத்தில் வீரர்களே இல்லையா? சிவாஜியின் வீரத்தைத் தாண்டிய ஆயிரமாயிரம் வீரர்கள் எம்மண்ணில் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை மறக்கடித்து, சிவாஜியை​யும்  ராமனையும் காட்டி எம்மக்களை மழுங்கடித்துவிட்டனர். இனி, உங்கள் வேலை இங்கு நடக்காது.

 

எங்கள் முன்னோர்களை நாங்கள் முன்னிலைப்படுத்தி வணங்கப்போகிறோம். இனி எங்களுக்கென ஒரு மதம், எங்கள் வழிபாட்டுக்குரிய முன்னோர்கள் என எங்கள் பயணம் இன்று தொடங்குகிறது. எங்கள் மதத்தில் நாடார், நாயக்கர், கவுண்டர், தலித், பிள்ளைமார், தேவர் என எந்த சாதியும் இல்லை. எம்மதத்தின் பெயர் 'தமிழம்.’ குலத்தின் பெயர் 'தமிழ்க்குடி.’ எங்கள் மறை நூல் 'திருக்குறள்.’ சாமியாடுவது, அலகு குத்துவது, தீ மிதிப்பது போன்ற மூடநம்பிக்கைகள் இதில் இருக்காது.

 

 

இந்துக்கள் என்ற பெயரில் எம்மக்களை ஏமாற்ற முடியாது. சாதிகள் என்ற பெயரில் எம்மை பிளவுபடுத்த முடியாது. இனி, நீங்கள் ராம்லீலா நடத்தினால், நாங்கள் ராவண விழா நடத்துவோம். ராமேஸ்வரத்தை, 'ராவணேஸ்வரம்’ ஆக்குவோம். நீங்கள் கோட்சேவுக்கு சிலை வைத்தால், நாங்கள் சிவராசனுக்கும் தனுவுக்கும் சிலை வைப்போம். இனி, என் தம்பிகள் ஆளுக்கொரு திருக்குறளை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று கற்பிப்பார்கள். இங்கு இருக்கும் தமிழர்கள்... இனி, அய்யப்பன் கோயிலுக்கும், திருப்பதிக்கும் செல்லமாட்டார்கள். இது ஒரு யுகப்புரட்சி. இப்போது இது சிலருக்கு கேலியாகத் தெரியலாம். ஆனால், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இது மட்டும்தான் இருக்கும். வடநாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி

எம்.பி தருண் விஜய், திருக்குறளின் பெருமையை எடுத்துச் சொல்கிறார் என அவருக்கு பாராட்டுவிழா நடத்திய வைரமுத்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தனை ஆண்டுகாலம் திருக்குறளை பரப்ப எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை ஏன் கண்டிக்கவில்லை? வள்ளுவர் கோட்டம், வானுயரச் சிலை அமைத்துவிட்டால் போதுமா, திருக்குறளை கற்றுக்கொள்ள ஒரு சிறப்புக் கல்விக்கூடம் ஏதாவது உண்டா..?'  என தி.மு.கவை வாரியவர், மறந்தும்கூட அ.தி.மு.கவையோ மற்ற அரசியல் கட்சிகள் பற்றியோ வாய் திறக்கவில்லை.    

 

 

இந்தக் கூட்டத்தில் தனது மனைவி கயல்விழி காளிமுத்துவையும் மேடையில் பேச வைத்தார் சீமான். ஓரிரு வார்த்தைகள் பேசிய கயல்விழியின் பேச்சைக் கேட்டு சீமான் கைதட்டி உற்சாகப்படுத்தவும், 'அண்ணி, அண்ணி’ என்ற குரல்கள் கூட்டத்தில் இருந்து எழுந்தன!

ஆர்.குமரேசன் படங்கள்: வீ.சிவக்குமார்

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=103542

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ராவணனை வணங்கிறது பொதுபல சேனாவுக்கு தெரியுமா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணி! அ... அ... அண்ணி! :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி சீமான் ஒரு தீர்க்கமான கொள்கைகள் & இலக்குகள் இல்லாமல் வேடங்கள் மாற்றினால் சீக்கிரம் மக்களால் ஒதுக்கப்பட்டு மறக்கப்படுவார்..

'வைகோ' அரசியல் வாழ்விற்காக, கொள்கைக்கு ஒத்து வராத கண்ட கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பெயரை கெடுத்தது போதாதென்று அடுத்து சீமானும் கிளம்பிவிட்டார்.

தமிழனின் தலையெழுத்து..! :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி சீமான் ஒரு தீர்க்கமான கொள்கைகள் & இலக்குகள் இல்லாமல் வேடங்கள் மாற்றினால் சீக்கிரம் மக்களால் ஒதுக்கப்பட்டு மறக்கப்படுவார்..

 

ராசவன்னியன் கருத்து 100% உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கனவு கலைந்து விட்டதா ? அல்லது சீமானை நம்பியவர்களின் கனவு கலைந்து விட்டதா? 

ஒன்றுமே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சொல்வது எல்லாம் அவர் ஏற்கனவே மேடைகளில் சொன்னவைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியார் என்றவர் இப்போது பாட்டன் முருகன் என்கின்றாரே.
அது தான் விளங்கவில்லை.இவரும் மதத்தைக் கையில் எடுக்கின்றார்.
இந்தியாவில் மதவாதிகளை எதிர்ப்பதற்கு இன்னொரு மதவாதம் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியார் என்றவர் இப்போது பாட்டன் முருகன் என்கின்றாரே.

அது தான் விளங்கவில்லை.இவரும் மதத்தைக் கையில் எடுக்கின்றார்.

இந்தியாவில் மதவாதிகளை எதிர்ப்பதற்கு இன்னொரு மதவாதம் தேவையா?

தந்தை பெரியாரை என்றுமே சீமான் முழுமையாக ஏற்றதில்லை.. அவரது பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் திராவிடக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயற்கையை வழிபட்ட தமிழர்கள் குழப்பப்பட்டு ஆரியக் கடவுள் வழிபாட்டுக்குச் சென்று விட்டார்கள் என்பதால் மீண்டும் இயற்கை வழிபாட்டுக்கு வரும்படி வலியுறுத்துகிறார்.

இயற்கை வழிபாட்டில் மூடத்தனம் எதுவும் இல்லைதானே.. நன்றி நவில்தலே அதில் முக்கியமானதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியாரை என்றுமே சீமான் முழுமையாக ஏற்றதில்லை.. அவரது பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் திராவிடக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயற்கையை வழிபட்ட தமிழர்கள் குழப்பப்பட்டு ஆரியக் கடவுள் வழிபாட்டுக்குச் சென்று விட்டார்கள் என்பதால் மீண்டும் இயற்கை வழிபாட்டுக்கு வரும்படி வலியுறுத்துகிறார்.

இயற்கை வழிபாட்டில் மூடத்தனம் எதுவும் இல்லைதானே.. நன்றி நவில்தலே அதில் முக்கியமானதாக உள்ளது.

 

சீமான் தன்னாலேயே தனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நிற்கின்றார். எங்கேயோ இருந்த அவரது இலக்கு இப்போது மதத்தின் மீது வந்து நிற்கின்றது.

 

அவரும் சராசரி அரசியல்வாதி ஆகி விட்டார் என்றே  நினைக்கத் தோன்றுகின்றது.

பண்பாடு என்ற போர்வையில் மதத்தையோ மக்களின் நம்பிக்கையையோ

எதிரிகளுக்காக விலைபேசுவது தவறு.

 

தமிழர்கள் மனித நேயம் கொண்டவர்களே தவிர மத வாதம் பேசுபவர்கள் அல்ல. விசப்பரீட்சையில் இறங்கி இந்திய அரசியல்   சாக்கடையில் இவரும் விழுந்து விடுவார் போலிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அட விடுங்க ஸார் நம்மட அண்ணி முருக பக்தையாக்கும்! ^_^

சீமான்  தம்பிகள்  தான்  பாவம் கருணாநிதி  போல  மாறி மாறி பல்ட்டி  :icon_idea:

 

இலக்கு ஒன்றே உண்டியல்  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுபடை வீடு தமிழ்நாட்டிலேயே அமைந்துள்ளது.

 

தொன்மை மிக்க நூல்களில் ஒன்று திருமுருகாற்றுப்படை. இது முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டுள்ளது.

 

சங்க கால தமிழ் நூல்களில் முருகன் பற்றி பேசப்படுகின்றது.

 

சீமானின் அரசியல் செயற்பாடுகள் தற்கால சூழ்நிலைகளிற்கு பொருத்தமானவையா என்பது விவாதத்துக்கு உரியது.

 

ஆனால், தமிழ், தமிழர் விடயத்தில் முருகக்கடவுளின் செல்வாக்கு தொன்று தொட்டு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://mytamilwire.com/load/Devotional/Hindu%20Devotional%20Songs/FILM_DEVOTIONAL/KANDAN_KARUNAI(IsaiTamil.In)/-Aarupadai_veedu_konda(MyTamilWire.com).mp3

சீமான்  தம்பிகள்  தான்  பாவம் கருணாநிதி  போல  மாறி மாறி பல்ட்டி  :icon_idea:

 

இலக்கு ஒன்றே உண்டியல்  :D

 

பழநி உண்டியலா?!!  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... தமிழகத்தில்,  திராவிடக் கட்சிகளின் தலைவர்களும்,

அவர்களின் தொலைக்காட்சி நிறுவனங்களும் கூட....

மத சம்பந்தமான விடயங்களை கையில் எடுத்துக் கொண்டு தான்... மக்களிடம் போகின்றார்கள்.
 

மதத்தின் மூலம், மக்களை நெருங்குவது, இப்போது இலகு.
அதே வழியை, சீமானும் பின் பற்றியிருக்கலாம்.
 

ஏதோ சீமானுக்கு  தமிழ் நாட்டு ஆட்சியை பிடிக்க கூடிய அளவிற்கு மக்கள் ஆதரவு இருந்தது போலவும் இப்படியான வேலைகளால் அது பறிபோகப்போகுது என்பது போலிருக்கு பலர் கருத்துக்கள் .

முப்பது வருடங்களாக கனவில் இருந்தவர்கள் அதை தொடர்வதில் தப்பில்லை ஆனால் சீமானுக்கு தனது பலம் தெரியும் அதுதான் அடிக்கடி செய்திகளில் வர வேஷம் போடுகின்றார் .

நாளைக்கு கோவணத்துடன் ஊர்வலம் போனாலும்  ஆச்சரியமில்லை . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியாரை என்றுமே சீமான் முழுமையாக ஏற்றதில்லை.. அவரது பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் திராவிடக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இயற்கையை வழிபட்ட தமிழர்கள் குழப்பப்பட்டு ஆரியக் கடவுள் வழிபாட்டுக்குச் சென்று விட்டார்கள் என்பதால் மீண்டும் இயற்கை வழிபாட்டுக்கு வரும்படி வலியுறுத்துகிறார்.

இயற்கை வழிபாட்டில் மூடத்தனம் எதுவும் இல்லைதானே.. நன்றி நவில்தலே அதில் முக்கியமானதாக உள்ளது.

 

 

சரியான கருத்து

அவர் மிதுள்ள காழ்ப்புணர்வால்

பலர் அவரது பேச்சை  செவிமடுக்காதது இங்கு தெரிகிறது

அவர் தொடர்ந்து சொல்லி  வந்ததைத்தான் செய்திருக்கிறார்

தமிழ்க்கடவுள்

தமிழன் என்ற இனம்

தமிழனுக்கென்று ஒரு கலாச்சாரம்

தமிழனுக்கென்று ஒரு அமைப்பு....

மற்றவை எல்லாம  புறந்தள்ளப்படணும்

அதற்க நாமே முன்னுதாரணமாக இருக்கணும்..

பிற மொழி

பிற கடவுள்

பிற கலாச்சாரம்

இவற்றிலிருந்து நாம் ஒதுங்காமல் விடுதலை இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் பண்பாட்டு இயக்கம்.. தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் தமிழர்களுக்கு அடையாளப்படுத்தும் புரட்சிகர ஆரம்பமாக இதனை கருத்தில் கொள்ளலாம். அத்தோடு தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றி அமைப்பதும்.. உலகில் தமிழனின் இருப்புக்கு மிக அவசியம். நாம் தமிழர் கட்சியின் தொலைநோக்கு வெற்றி பெற அண்ணன் சீமான் தலைமையிலான எம் தமிழ் தம்பியருக்கு தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் பல.

 

குழப்பம் விளைவிக்க ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும். அதை எல்லாம் கடந்து போனால் தான் கொள்கையை விதைத்து.. புரட்சியை உண்டு பண்ண முடியும். அதற்கான வழிகாட்டுதலை நாம் தமிழர் கட்சியின் முதன்மை வழிகாட்டி தேசிய தலைவர் பிரபாகரனே வழங்கியுள்ளார். அதனை என்றும்.. உறுதியோடு பற்றி நிற்பார்கள் என்று நம்புகிறோம். :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான கருத்து

அவர் மிதுள்ள காழ்ப்புணர்வால்

பலர் அவரது பேச்சை  செவிமடுக்காதது இங்கு தெரிகிறது

அவர் தொடர்ந்து சொல்லி  வந்ததைத்தான் செய்திருக்கிறார்

தமிழ்க்கடவுள்

தமிழன் என்ற இனம்

தமிழனுக்கென்று ஒரு கலாச்சாரம்

தமிழனுக்கென்று ஒரு அமைப்பு....

மற்றவை எல்லாம  புறந்தள்ளப்படணும்

அதற்க நாமே முன்னுதாரணமாக இருக்கணும்..

பிற மொழி

பிற கடவுள்

பிற கலாச்சாரம்

இவற்றிலிருந்து நாம் ஒதுங்காமல் விடுதலை இல்லை...

 

எதுவரை எல்லைகள் என்பது உணரப்பட வேண்டும். அல்லாமல், வெறுமனே பின்னோக்கிச்சென்று வாழ்வதற்கு பெயர் விடுதலை அல்ல. இப்போது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கூட இதைத்தான் தற்போது செய்ய முயற்சிக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய ஆசிய அரசியலில் மதவாதிகளின் ஆதிக்கம் தான் அதிகம். நரிகளின் குகைக்குள் நரியின் உதவி இல்லாமல் செல்வது கடினம். இவர் இப்படி செய்யா விட்டாலும் இவருக்கு அரசியல் தெரியாது என்று சொல்லுபவர்களும் இருக்கத் தான் செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எதுவரை எல்லைகள் என்பது உணரப்பட வேண்டும். அல்லாமல், வெறுமனே பின்னோக்கிச்சென்று வாழ்வதற்கு பெயர் விடுதலை அல்ல. இப்போது இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கூட இதைத்தான் தற்போது செய்ய முயற்சிக்கின்றது. 

 

 

உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்

அதற்கு முன்

தமிழரது   போராட்டத்தையும்  இந்த இசுலாமியரது பயங்கரவாதத்தையும் நாம்  ஒன்றுடன் ஒன்று சேர்த்தல் தப்பாகும்.

அத்துடன் மதவெறியிலாடும் இவர்களது செயல்களை

நாகரீகமான

பண்பான பண்பாடுகளைகக்கொண்ட தமிழர்களுடன் ஒப்பிடவே முடியாது.

அந்த அடிப்படையில் உங்களது பயம் அவசியமற்றது...

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது... தமிழகத்தில்,  திராவிடக் கட்சிகளின் தலைவர்களும்,

அவர்களின் தொலைக்காட்சி நிறுவனங்களும் கூட....

மத சம்பந்தமான விடயங்களை கையில் எடுத்துக் கொண்டு தான்... மக்களிடம் போகின்றார்கள்.

 

மதத்தின் மூலம், மக்களை நெருங்குவது, இப்போது இலகு.

அதே வழியை, சீமானும் பின் பற்றியிருக்கலாம்.

 

 

அல்லலூயா அல்லலூயா அல்லலூயா  அல்லலூ.....யா........ஆ...... :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய ஆசிய அரசியலில் மதவாதிகளின் ஆதிக்கம் தான் அதிகம். நரிகளின் குகைக்குள் நரியின் உதவி இல்லாமல் செல்வது கடினம். இவர் இப்படி செய்யா விட்டாலும் இவருக்கு அரசியல் தெரியாது என்று சொல்லுபவர்களும் இருக்கத் தான் செய்வார்கள்

 

உண்மைதான்

 

திராவிடக்கட்சிகள் ஒரு புறம் நாத்திகம் பற்றி  பேசினாலும் (கருணாநிதி உட்பட)

அவர்களது விடயங்களில் அவற்றை கடைப்பிடித்ததில்லை...

 

அதேநேரம் 

வை. கோ  கறுப்புச்சட்டைக்காரர்கள் சாதித்தது எதுவுமில்லை....

மேலும் அவர்களும் இன்று  சிவபுராணம் பாடத்தொடங்கிவிட்டனர்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்பதான் கலர் மாத்தினாலும் உள்ளுக்கை இருக்கிறது எல்லாம் ஒண்டுதான். திருச்சிற்றம்பல(ழ)ம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.