Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நீங்கள் சுட்டால் நாங்களும் சுட வேண்டி வரும்” ரணிலின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வ எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் கொலை செய்யப்படுவதனை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் பிரமரை சந்தித்த போது தாம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் கருத்து தொடர்பில் இந்திய ராஜ்ய சபாவில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தக் கருத்து தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்த நேரிடும் எனவும் சுவராஜ் கடுமையான எச்சரிக்கை விடுத்தள்ளார்.

இலங்கையுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரையில் ஆழ் கடல் மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட வேண்டுமென பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117412/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானோடு இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் குஜராத் மீனவர்கள் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி அறிக்கை தருவாரா.. சுசுமா சுவராஜ்சு. சிங்களவன் சுடுவன் என்றாலும்.. இணக்கப்பாடு பற்றி சிந்திக்கும் இந்தியா.. பாகிஸ்தானோடு மட்டும்.. சூட்டுக்கு சூடு என்று காஷ்மீரை ஏன் நாசமாக்கிறது.. சுசுமா அவர்களே..?! :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

..

மீனவர்கள் சுட்டுக் கொலை செய்வதனை நியாயப்படுத்தினால் இரு தரப்பும் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்த நேரிடும் எனவும் சுவராஜ் கடுமையான எச்சரிக்கை விடுத்தள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117412/language/ta-IN/article.aspx

 

 

இந்த "செல்லக் கொஞ்சல்" விபச்சார வீட்டில்கூட நடக்காது ! :o:(:)

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடலுக்குள் வெறும் தண்ணி மட்டும்தான் இருக்கு. ஹெரோயின், தங்கம் கடத்தும் பேர்வழிகளை தவிர இலங்கை பிரசைகளுக்கு இந்திய எல்லை தாண்டும் அவசியம் இப்போ இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா நீங்க ஒண்ணு, அவங்கள் சப்பாத்தி சுடுகிறதைச் சொல்றாங்கள்.

 

சீனாக்காரன் அருணாசல் பிரதேசத்தை ஆட்டையை போட்டுட்டான். பாகிஸ்தான்காரன் சுதந்திர தினம் குடியரசு தினம் நல்ல நாள் பெருநாள்களிலெல்லாம் சுட்டுத்தள்ளுறான். போதாக்குறைக்கு, எழே ஏழு ஆயுதம் தாங்கிய பாகிஸ்தானியர்கள் முழு இந்தியாவையும் இரண்டு நாட்களாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்

 

அப்போதெல்லாம் சுடாத சூட்டை இப்ப சுடப்போகினமாம்.

 

பண்டிக்காச்சலிலை ஐந்தாயிரத்துக்கும்மேல செத்துப்போயிட்டினம் அதைக்கவனியுங்கோ. கதை கயிலாயம் தம்பி கால்நடை.

பாவி மக்கா, சாகப் போவது தமிழன்

ஏனப்பா இரண்டு தரப்பும் தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர்களை சுடுகிறீர்கள். இரண்டு கடற்படைகளும் ஆளுக்காள் சுடவேண்டியது தானே. அது உண்மையான வீரனுக்கு அழகு. அதை விட்டுவிட்டு இருதரப்பும் எம்தமிழ் உறவுகளை சுட்டுவீரத்தை காட்டுவார்களாம்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு தனது இந்திய விலங்கை உடைக்கும் வரை சாகப்போவது தமிழன் தான்.

ஹெலோ தமிழ்நாடு நாங்க ரெடி, நீங்க ரெடியா?

என்னது நீங்க சூப்பர் சிங்கர்ல ரொம்ப பிசியா !

ஆரோக்கியமான போட்டி , செய்யுங்கப்ப செய்யுங்க , சகாவ்ப்போறது தமிழன் தானே , துப்பில்லாத இந்தியா வெட்கமில்லை உங்களுக்கு ...... 

தமிழக மீனவர்கள் பலரும் தமிழக அரசியல்வாதிகளால் நடத்தப்படும் இழுவைப் படகுகளைக் கொண்டு மீன் பிடிக்கின்றனர். இதனால் தமிழக கடல் எல்லைக்குள் மீன்வளம் முற்றாக அழிந்துவிட்டது. காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக ஆதரவோடு அண்ணாச்சி என பல பெரும்புள்ளிகளே தமிழக மீன்பிடியை தம் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். சிறுபடகு வைத்திருக்கும் ஏழை மீனவர்கள் அதிக தூரங்கள் போவதில்லை. இந்திய கடற்படைக்கு கூட இது தெரியும், சில படகுகள் அரசியல்வாதிகளுடையது என்ற தகவல் அறிந்து எல்லை தாண்ட விட்டுவிடுவார்கள், தடுத்தால் வேலைக்கே உலை வைத்துவிடும் என்பதும் அறிவார்கள்.. 

 

ஆனால் இலங்கையின் வடக்கில் நீண்ட கால யுத்தமும், ராணுவ இயக்க பிரச்சன்னமும், இழுவை படகுகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருப்பதாலும் அதிக மீன வளம் இருக்கின்றன. இதனை அள்ளிக் கொண்டு போகவே தமிழக மீனவர்கள் அதிலும் அரசியல்வாதிகளுடைய படகுகள் எல்லை தாண்டுகின்றன. இவர்களுக்காக வேலை செய்யும் மீனவர்களை சொல்லிக் குற்றமில்லை, பிழைப்புக்கு அதிக வருவாயுக்கும் அபாயகரம் என தெரிந்தும் எல்லை தாண்டுகின்றனர். 

 

சும்மா கேட்கின்றேன் இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தானோ, வங்கதேச மீனவர்களோ மீன் பிடித்துக் கொண்டிருந்தால் இந்திய ராணுவம் சும்மா விடுமா என்ன. 

 

பாக் ஜலசந்தியில் இந்திய எல்லைக்குள் மீன அறவே கிடையாது. இதற்கு ஒரே தீர்வு இப் பகுதியில் இருக்கும் பல மீனவர்களை அந்தமானில் குடியேற்றி அந்தமானைச் சுற்றியுள்ள கடல்களில் மீன்பிடிக்க அனுமதிப்பதே. ஆனால் எங்கே அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் ஒரு புறம், எளிதாக இலங்கையில் மீன் பிடித்து சம்பாதிக்கலாம் என்ற பேராசை மறுபுறம் என கடல் கொள்ளை அரங்கேறி வருகின்றன. 

 

ஆனால் இந்த பிரச்சனைகள் மறக்கடிக்கப்பட்டு இதனை தமிழர் - சிங்களவர் பிரச்சனை எனவும், இந்திய மீனவரை இலங்கை சுடுகின்றன எனவும் போல திசைதிருப்பப்பட்டு வருகின்றது இந்தியாவில். இலங்கையின் வடக்கு மாகாண அரசும் இவை எல்லாம் தெரிந்தும் இந்தியாவின் தயவுக்காக வாய் மூடி மௌனிகளாகவே உள்ளன. மன்னாரில் உள்ள மீனவரிடம் கதைத்துப் பாருங்கள் எல்லாம் உண்மையும் வெளிக்கிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவெல்லோ இராசதந்திரம் 
south block இராசதந்திரம் 
இரண்டு நாடுகளும் ஒரு நாடு மற்றைய நாட்டு மீனவனை சுடுவதை தடுக்க தாங்களே தங்கள் மீனவர்களை சுடலாம் 
அதாவது மீனவர்கள் கடலுக்கு கிளம்பியதும் உடனே அந்ததந்த நாடுகள் மீனவர்களை அவ்விடத்திலேயே சுடுவதன் மூலம் 
இலங்கை இந்தியாவையும் இந்தியா இலங்கையையும் பழிவாங்கலாம் (எப்புடி....? இந்திய மீனவர்களை இந்தியாவே சுடுவதால் இலங்கையால் சுடமுடியாமல் போகும் எனவே இலங்கை பழிவாங்கப்பட்டுவிடும்...அதே போன்று இலங்கையும் செய்து இந்தியாவை பழிவாங்கலாம் ) :D  :D  :D 
இதெல்லாம் ஒரு நாடு இதுக்கெல்லாம் வெளி விவகார அமைச்சர் 

தமிழ் நாடு தனது இந்திய விலங்கை உடைக்கும் வரை சாகப்போவது தமிழன் தான்.

ஹெலோ தமிழ்நாடு நாங்க ரெடி, நீங்க ரெடியா?

என்னது நீங்க சூப்பர் சிங்கர்ல ரொம்ப பிசியா !

 

தமிழ் ஈழம்  தனது இலங்கை விலங்கை உடைக்கும் வரை சாகப்போவது தமிழன் தான்.

ஹெலோ தமிழ் ஈழம் நாங்க ரெடி, நீங்க ரெடியா?

என்னது நீங்க சூப்பர் சிங்கர்ல ரொம்ப பிசியா !

 

இப்படியும் எழுதலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் எழுதலாம். ஆனால் உண்மை என்னவெனில் 30 வருடமாக நாம் சகலதையும் இழந்து விலங்கை உடைக்கப் போராடித் தோற்றுப்போனோம். தமிழ்நாடோ அப்பவும் எப்பவும் சூப்பர் சிங்கரில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் எழுதலாம். ஆனால் உண்மை என்னவெனில் 30 வருடமாக நாம் சகலதையும் இழந்து விலங்கை உடைக்கப் போராடித் தோற்றுப்போனோம். தமிழ்நாடோ அப்பவும் எப்பவும் சூப்பர் சிங்கரில்தான்.

 

சும்மா போராடி அழிந்து போவதைவிட சுப்பர்சிங்கரை ரசித்து இணக்க அரசியல் செய்யலாம் என்று அவர்கள் கணக்கு போட்டிருக்கலாம்...தீர்க்கதரிசிகள்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். 30 வருசமா இந்த சூட்சுமம் தெரியாம நாங்கள் அழிந்து போனோம். இப்போவாவது பாதையை மாத்துவோம் எண்டா, சீமான் கீமான் என்று தொடர்ந்தும் எம்மை உசிப்பேத்தவே முயற்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். 30 வருசமா இந்த சூட்சுமம் தெரியாம நாங்கள் அழிந்து போனோம். இப்போவாவது பாதையை மாத்துவோம் எண்டா, சீமான் கீமான் என்று தொடர்ந்தும் எம்மை உசிப்பேத்தவே முயற்சிக்கிறார்கள்.

 

இப்ப சீமான் கீமான் எல்லாம் மைனொரிட்டி இப்ப சுமத்திரன்&co நீங்களும் மஜொரிட்டி விசயத்தை கொண்டுசெல்லவேண்டியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சீமான் கீமான் எல்லாம் மைனொரிட்டி இப்ப சுமத்திரன்&co நீங்களும் மஜொரிட்டி விசயத்தை கொண்டுசெல்லவேண்டியதுதான்

 

நீங்க வேற.. அவருக்கு கடைசி 30 வருசம் தான் ஞாபகம் இருக்குது. அதற்கு முதல்..டொனமூர்.. சோல்பரி காலத்தில இருந்து... பல பத்து வருடங்கள் ஞாபகத்திலை இல்லை. கடைசி 30 வருடங்களில்.. இவர்களுக்கு வெளிநாட்டில் அகதி அந்தஸ்தும் பிரஜா உரிமையும்.. அங்க.. மாகாண சபையாவது மிஞ்சிச்சுது. அதுக்கு முதல் சங்கக்கடையும்.. வாசிகசாலையும் உள்ளூராட்சி சபைகளும் தான் மிச்சம்.  :icon_idea:  :lol:

விக்கியரே 66 வருட பிரச்சனை என்று சொன்ன பிறகும் சிலர் உசுப்பேத்தி குளிர் காய்ந்த தங்கட கிழட்டு கோஷடிகளை காப்பாத்த இப்பவும் 30 வருடம் என்ன கதையள்ளகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

டொனமூர் 31 இல் வந்தது, பிரச்சனை அதுக்குக்கும் முன்பானது. 30 வருடம் ஆயுதப் போர். எல்லாத்தையும் போட்டு குழப்பியடிச்சா இப்படித்தான் ஆகும்.

உசுப்பேத்தின கிழடுகள், உசுப்பேறின அரைக்கிழடுகள் எல்லாரும் எனக்கு ஒன்றே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.