Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

60 ஆண்டுகள் ஏமாற்றிய பின்புமா எங்களை நம்புகின்றீர்கள்?: சம்பந்தனிடம் வினவிய சந்திரிகா

Featured Replies

கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய போது எழுத்து மூல ஒப்பந்தத்திற்கு மைத்திரி தரப்புச் சம்மதித்திருந்தது, எனினும் அதனை கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மறுத்திருந்தார்.

அதன்போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மைத்திரிபாலா சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரு. இரா. சம்பந்தனின் செயலால் அதிர்ச்சியடைந்தனர். 60 ஆண்டுகள் இங்கே சிங்கள இனம் உங்களை ஏமாற்றிய பின்புமா நீங்கள் ஒரு எழுத்து மூல ஒப்பந்தத்தை தவிர்க்கிறீர்கள் என திரு. இரா. சம்பந்தனை சந்திரிகா குமாரதுங்க வினாவியுள்ளார்.

இவ்வளவு காலமும் எழுத்தில் போடப்பட்ட எந்த ஒப்பந்தமும் நடக்காதபோது இப்போது மட்டும் ஏன் எழுத்தில் ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றது? என்ற கேள்வியை தலைவர் சம்பந்தன் அவர்கள் எழுப்பியதோடல்லாம், நீங்கள் நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்.

நாங்கள் இப்போது உங்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டால், அது மகிந்தவால் வேறு விதமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு அவர் வென்று விடுவார். எனவே நம்பிக்கையோடு செயற்படுவதைத் தான் நாங்கள் விரும்புகின்றோம், எழுத்தில் இருப்பதை விட உங்களின் மனதில் நாங்கள் செய்த உதவியிருந்தால் போதும் எனத் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்ததாக கனடாவில் வைத்து கூட்டமைப்பின் வெளிவிவகாரத் தொடர்பாளரான திரு.மா. ஏ. சுமந்திரன் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

சுமந்திரன் அவர்களின் கனடா விஜயத்தின் போது கனடாவின் இலங்கை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் 9 துணையமைச்சு மற்றும் அதிகார வட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளோடு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

மிகவும் காத்திரமாக நீடித்த, திரு. ஏகாம்பரம் சுமந்திரன் அவர்களுடனான கனேடிய அரசின் சந்திப்பில் வட-கிழக்கு வாழ் தமிழர்களின் இனப் பிரச்சினைத் தீர்வில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தது.

கனேடிய அரசு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுக்களில் வலுவானதாகவும், கனதியானதாகவும் திரு. .ஏ. சுமந்திரன் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/show-RUmtyDRZSUlt6J.html

 

  • கருத்துக்கள உறவுகள்

Abraham = ஏகாம்பரம் ?

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. சந்திரிக்காவே கேட்டாவாம்.. தான் உட்பட.. சிங்களத் தலைமைகள் 60 வருசமா ஏமாத்திட்டு.. வருகினம்.. அன்புக்குரிய சம்பந்தரே எப்படி என்னைப் போய் நம்புறீங்கன்னு..!

 

அதை ஒட்டுக்கேட்டு கனடாவில தமிழ் மக்களுக்கு சொல்லுறவர் யார் தெரியுமோ... இனப்படுகொலை மற புகழ்.. கூட்டமைப்பு வெளிவிவகார அமைச்சர்.. ச்சா..  வெளிவேசக்கார.. செயலாளர் நாயகம்... சுமந்திரன். 

 

எனி எப்படித்தான் வேசம் போட்டு கத்தினாலும்.. உண்மையான கோமாளித்தனம் வெளிப்பட்டிட்டு சுமந்திரன்..! கனடாவில உள்ளவை சிலர்.. ஏமாறலாம்... உலகத் தமிழினம் ஏமாறாது.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம்

சார்ஸ் அன்ரனி சீலன்

விக்ரர்

இவர்களும் கிறீஸ்தவர்களே.

அன்ரன் பாலசிங்கம்

சார்ஸ் அன்ரனி சீலன்

விக்ரர்

இவர்களும் கிறீஸ்தவர்களே.

 

இவர்கள் கிறிஸ்தவர்களா என்று யார் இப்ப கேட்டது. நீங்களா தனிய பினாத்துகிறீர்களோ

  • தொடங்கியவர்

ஆகா சம்பந்தனும் சுமத்திரனும் தப்பிச்சினம் :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் கிறிஸ்தவர்களா என்று யார் இப்ப கேட்டது. நீங்களா தனிய பினாத்துகிறீர்களோ

 

சாரைப்பாம்பு பயத்திலைதான் மனிசரை கடிக்கிறதாம்.. :D

சிலவேளை சம்பந்தர்  சந்திரிகாவுக்கு சொல்லியிருப்பார் நாங்களும் 60 வருடமா தமிழ் சனத்தை ஏமாற்றி கொண்டுதானே  வாறம். எங்களுக்கு இதில எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

இதை யார் சொன்னது? 

 

எனக்கென்னமோ இந்து கற்பனை கதை போலத்தான் தெரிகிறது. இருந்த்னாலும் நீங்கள் விட்ட குறையை தொடர நல்லதொரு தலைப்பு கிடைச்சிருக்கு வந்து வாசியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சூறா,

சுமந்திரனின் சிஆர்டி பேட்டியிலும் இது சொல்லப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கனபேர் தலைப்ப பார்த்துதான் கருத்தெழதுறவை போல. சுமத்திரன்ர பேட்டிய கேட்டமாதிரி தெரியவில்லை.

ஆணா அந்த திரியிலயும் கருத்திட்டவையல், உருப்பட்ட மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Abraham = ஏகாம்பரம் ?

கருத்த பாக்காம கலரபாருங்கோ, உதாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறம், தொடருங்கோ.

கருத்த பாக்காம கலரபாருங்கோ, உதாலதான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறம், தொடருங்கோ.

Edited by மலையான்

  • கருத்துக்கள உறவுகள்

சாரைப்பாம்பு பயத்திலைதான் மனிசரை கடிக்கிறதாம்.. :D

பாம்புகள் அனேகமாக பயத்திலைதான் மனிசரை கடிக்கிறது என்பது உண்மைதான். புடையன் பாம்பைத்தவிர.... :o புடையன் பாம்பு காவோலை சரசரத்தாலும் ஓடிப்போய்க் கொத்துமாம். 

 

snake-eyes-piercing-with-small-barbell.j

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அறுபது வருடமாகத் தமிழர்களை ஏமாற்றியதால்தானே நாங்கள் உங்களுடன் இப்போது கதைக்கும் பாக்கியத்தைப் பெற்றோம் இல்லாதுவிட்டால் தமிழர்களது தலையில் கனதியான அம்மிகளை நீங்கள் எப்படிக்காணமுடியும், நாங்களும் நீங்களும் சேர்ந்து மிளகாய் அரைப்பதற்கு வசதியாக.

 

வளர்முக நாடுகளில் எதாவது கலந்துரையாடல்கள் என்றாலே அது என்ன துறையாகவும் இருக்கட்டும் ஒரு குறிப்பேடும் பேனைவையும் கையில் ஆயத்தமாக வைத்துக்கொண்டே பங்குபெறுவார்கள். எதையாவது மறந்துவிட்டால் அல்லது அச்சந்தர்ப்பத்தில் யாராவது மறுதலித்தால் எதற்கும் இருக்கட்டும் என்பதற்காக.

 

ஆனால் சம்பந்தன் நான் வாழும் நாட்டிற்கு வந்திருந்தார் அரச முறைச்சந்திப்புகளில் எந்தக்குறிப்பேடும் வைத்திருக்கவில்லை என்னடா இந்த மனிசன் எப்படி இவைகள் எல்லாவற்றையும் நினைவில வைத்திருக்கப்போகுது, நான் எதுக்கும் கொஞ்சம் விபரமாகக் குறிப்பெடுக்கவேண்டும் என நிறையவே அவதானமாக அனைத்தையும் குறிப்பெடுத்தேன், மனிசன் அதை திரும்பியே பாக்கவில்லை. அனைத்துச் சந்திப்புகளும் சுமூகமாக முடிவடைந்தது.

 

தம்பி நான் சொல்லுற நம்பருக்கு ஒருக்கால் தொடர்பெடுத்துத் தாங்கோ எண்டு கேட்டார், நானும் எதோ குறிப்பேடைப் பிரட்டப்போகுது மனிசன் எண்டு நினைச்சன் அனால் தொடர்ந்து கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து தொலைபேசி இலக்கங்களுக்கு எந்தவிதக் குறிப்பேடும் இல்லாது மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் உண்மையிலேயே சொல்லுறன் இந்தாள் சரியான மண்டைக்காய் தான். இதில் இந்திய தெற்கு மாடத்திலிருக்கும் அதிகாரிகளது இலக்கங்களும் அடக்கம் சுமந்திரன் தொலைபேசி இலக்கம் உட்பட.

 

சம்பந்தன் ஐயாவை நாங்கள் எதோ ஒரு காரணத்துக்காகவும்  என்றுமே இழக்கக்கூடாது. இன்னும் பல காலம் எங்களுடன், எங்களுக்காக வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுஞாயிறு.. போன் நம்பரை பாடமாக்கி வைக்கவா.. சம்பந்தரை தேடுறீங்க. இப்ப போனில போட்டே வைக்கலாம் தானே. அவருக்கு டெக்குனோலொஜி தெரியல்ல. அதுக்குப் போயீ...?!  :lol:  :D

சுவாரசியமான உரையாடல் ....
 
சந்திரிக்கா : என்ன சம்பந்தன் மாத்தையா , நாங்கள் எப்பவுமே தமிழர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் ஏமாற்றுவதே    எங்கள் வேலை .இது தெரிந்துமா எங்களை திரும்பவும் நமுபுகிண்றீர்கள் ?
 
சம்பந்தன்: மேடம் நீங்க வேற நாங்கள் எப்ப அரசியல் என்று வந்தோமோ அன்றில் இருந்தே தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பதே என்னுடைய கொள்கை . ரொம்ப பெரிய வார்த்தையை சொல்லிப்போட்டிங்க ...நான் மட்டும் போதாது என்று சுமந்திரனையும் சேர்த்து உள்ளேன் .
 
முட்டாள் தமிழர்கள் இப்பவுமே என்னை நம்புகின்றார்கள் ......
 
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்கர்,

 

இங்க சிலரது எண்ணம் புலம்பெயர் புலிவால்கள் என்றால் புலத்தில் ஏறுக்குமாறாய் எல்லாமும் நடக்கவேண்டும் நாங்கள் அதில குளிர்காய்வம் என குதியாட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றவர்கள் என்பதாக.

 

சத்தியமாகச் சொல்லுறன் என்னைத்தவிர எனது குடும்பத்தில் யாரும் புலம்பெயர்ந்து இந்த இழிநிலை வாழ்கையை வாழவில்லை. நான் மட்டுமே இங்கு தற்குறி.

 

தமிழர் கூட்டமைப்பு செய்வது எல்லாமே தவறு என்பதல்ல எனது வாதம். சரணாகதி அரசியல் மற்ரும் தமிழர்விரோத தேசம் இந்தியாவினது ஆட்டுவிப்புக்கு ஆடுவது இவையே இப்போது பெரிய பிரச்சனை.

இவை எல்லாவற்றையும் எடுத்தெறிந்துவிட்டு காத்திரமான அரசியல் செய்யுமாகவிருந்தால் எமது குரல் இன்னமும் உரத்தொலிக்கும். உதாரணம் முதல்வர் விக்கு வினாகம் அவர்களது நடவடிக்கைகள் ஆரம்பத்தில் குளறுபடியாகத்தான் இருந்தது. ஆனால் குடாநாட்டில் வாழும் மக்களது நிலையை நேரடியாக அறிந்தோ என்னமோ எமக்கான நீதி சரியான நேரத்தில் கிடைத்தாகவேண்டும் என ஒரளவுக்காவது நினைப்பதாக இப்போது தெரிகின்றது.

 

தமிழர்களது தீவிரப்போக்கு மோடியை இலங்கை அரசின்பால் திரும்பச்செய்கின்றது என இந்திய அரசியல் ஆய்வாளர் அண்மையில் கூறியிருப்பது வடமாகாண முதல்வர் விக்கு வினாயகத்தின் நடவடிக்கைகளது போக்கினையொட்டியே. தமிழர் கூட்டமைப்பு தனதுபோக்கில் தீவிரமாகவிருந்தால் தமிழர்கள் மீது யார் கரிசனையாக இருக்கின்றார்கள் யார் வெளிவேச நடிப்பில் ஈடுபடுகின்றார்கள் எனும் பூனைக்குட்டி விரைவிலேயே வெளியில் வந்துவிடும். விக்குவின் நடவடிக்கையே ஓரளவுக்கு இந்தியாவைச் சினம்கொள்ளவைக்கின்றது எனில் தங்களது பிராந்திய நலன்களுக்கு பிரச்சனையாக தமிழர் தரப்பு இருக்கின்றது என முழுமையாக அவர்களை உணரவைப்பதன்மூலம் முள்ளிவாய்காலின் சூதிரதாரிகள் யார் என்பதை உலகுக்கு வெள்ளிடை மலையாக உணரவைக்கலாம்.

 

இப்போதைய தேவை இந்தியா தமிழர் நலனில் தொடுகிலும் அக்கறையில்லாத ஒரு தரப்பு என்பதை நாம் வெளிக்கொணரவேண்டும். விக்குபோல் கூட்டமைப்பின் தலைமையும் கொஞ்சம் விட்டுக்கொடுக்காதபோக்கைக் கடைப்பிடிக்குமாகவிருந்தால் இந்தியா எமது வழிக்கு வரும் சந்தர்ப்பமும் ஏற்படும்.

 

அதைவிட்டு கொக்குதலையில் நெய்யைவைத்துக் கொக்கைப்பிடிக்கிறம் எனக்கூறுவதுதான் பிரச்சனை.

 

தற்போதைய தேவை கூட்டமைப்பு தன்னுடன் கருத்துவேறுபாடு கொண்டுள்ள அனைத்துத் தமிழர்தரப்பையும் ஒன்றிணைக்குமாப்போல் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே அதில் புலம்பெயர் புலிவாலகளையும் (?) அடக்கலாம் (அவர்கள் எதுக்குள்ளையும் அடங்கமாட்டார்கள் எனும் கருத்தை ஓரம்கட்டி வைக்கவும்)

 

ஆனால் சுமந்திரன் சம்பந்தனுக்கு புலம்பெயர் தமிழர்கள் என்றால் தமது  அரசியல் எதிரிகள் என்பதே மனதில் பதிந்துவிட்டது அதை விட்டு எப்போது வெளிவருவார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி, தவிர புலம்பெயர்தேசத்திலுமப்புக்காத்துமாரௌக்கு ஜால்ராபோட்டு ஒருகூட்டம் அவர்களது தலைக்குமேல் ஒளிவட்டத்தை ஏற்படுத்திவிட்டது. இவைகள் அனைத்தும் நடந்தேகினால் தமிழன் உருப்படுவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
60 ஆண்டுகள் ஏமாற்றிய பின்புமா எங்களை நம்புகின்றீர்கள்?: சம்பந்தனிடம் வினவிய சந்திரிகா

 

 

உது சுமன்திறன் விட்ட ரீல்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.