Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார் விபூசிகா! - வழக்குகளும் வாபஸ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விபூசிகா விடயம் நீதிமன்றில் விடுவிக்கப்பட்டதால் சற்று கடினம். தாயாரும் பிணையில் உள்ளதால்.......???.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் யூகே சட்டத்தில் - யூகே பூகோள எல்லைக்கு வெளியே அசைலம் கேட்க வசதியில்லை. அடாத்தாக தூதரகத்துக்குள் புகுந்தால் முடியும்.

இது நான் திரியில் முன்பே சொன்னது - இதைதான் territorial asylum, diplomatic asylum என்று நீங்கள் சுட்டும் தளமும் சொல்லுது. ஆனால் தூதரகத்துக்குள் புகுவது முயல் கொம்பு. புகுந்தாலும் இலங்கை யில் இருந்து வெளியேற safe passage மறுக்கப் படலாம். அப்படி நடந்தால் ஜூலியன் அசாஞ் போல வீட்டுக்கைதிதான்.

இலங்கைக்கு திரும்பி அனுபுபவர்களை நீதி மன்று மீள அழைத்துள்ளது உண்மை. ஆனால் அது யூகேயில் வந்து தஞ்சம் கேட்டு, பிழையாக திருப்பி அனுபியவர்களை. இலங்கையில் இருந்த படி யூகேக்கு ஒரு போதும் வராமல், யூகே கோர்ட்டை அணுக முடியாது.

மீரா சொல்லும் நடைமுறை உண்டு - முன்பு உகாண்டா இந்தியர்களை, கொச்சோவார்களை, இப்போ குறித்தளவு சிரியர்களை யூஎன் எச் நீ ஆர் கோட்டாவில் எடுப்பதுண்டு. ஆனால் அவர்களும் நாட்டுக்கு வந்ததும், வழமையான முறையில் பரிசீலிக்க பட்டே அந்தஸ்து தரப்படும்.

சட்டத்துக்கு அப்பால் சென்று சிலரை கொண்டு வருவார்கள். ஆனால் பொதுவில் இப்படியானவர்கள் யூகே அரசுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர்களாய் இருப்பர். இவர்களுக்கும் கூட தஞ்சம் கொடுப்பதில்லை, உள்நாட்டு அமைசரின் தனி உரிமை அடிப்படையில் வீசா கொடுப்பார்கள்.

எல்லா வழக்குகளில் இருந்தும் தாயும் மகளும் விடுதலை, மனித உரிமை அமைபுக்களின் உதவி இருந்தமை, தொடர் அச்சுறுத்தல் இல்லை, நீதி தாமதமாகவேனும் கிடைத்தமை, இவற்றை வைத்து பார்க்கும் போது கஸ்டம்தான்.

மலாலா யூசூப் தெரியும்தானே --அவரை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் பின் தஞ்சம் கொடாமல் - தந்தைக்கு பாகிஸ்தான் ஹைகொமிசனில் ஒரு வேலையை போட்டுக் கொடுத்து, குடும்பத்தையே யூகேயில் தங்க வைத்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா தமிழ் பிரக்கிறாசிமாரிட்டயே கேக்கப் போறியள்? விளங்கின மாரித்தான் :)

  • கருத்துக்கள உறவுகள்

விபூசிகா விடயம் அவர்களிடம் கேட்டால் தான் சுலபம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் விபூசிகாவின் விருப்பத்தையும் கேட்டு விடுங்கள்! ஊர் கல்யாணப் பேச்சு மாதிரி கடைசியாகத் தான் பெண்ணுக்குச் சொல்வார்கள் போலிருக்கு! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தாயும் பிள்ளையும் இணைந்தது சந்தோசம்.
 
வெளிப்பார்வைக்கு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். வெளியே சொல்லக்கூடாத / சொல்ல முடியாத நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்களோ யாருக்குத்தெரியும்? என்றாலும் புலனாய்வு  அல்லது இராணுவத்தின் பார்வை இவர்கள் மீது எப்போதும் இருக்குமென நினைக்கின்றேன்.

ஒரு சந்தேகம் ,பயங்கரவாதம் என்று தப்பு பண்ணினது இந்த தாயும் பிள்ளையுமா ? அப்ப கோத்தா & கூட்டுகள் செய்ததுக்கு பெயர் என்னவாம் ? 

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் பிள்ளையும் இணைந்தது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரக்கிராசியாரிடம் பேசப் போன மீரா என்னவானார்?

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டேன்.

இலங்கையிலிருந்தவாறே அசைலம் கோர முடியாது. நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய அமெரிக்க நாடு ஒன்றிலேயே கோரலாம் அல்லது தென்கிழக்காசிய ஏதாவது நாடொன்றில் UNCHR மூலம் கோரலாம். ஏற்கனவே தாய்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுடைய கேசை சில விடயங்களுடன் மிகச்சுலபமாக முடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே ஒரு தமிழ் பிரக்கிராசியிடமும் சரியான தகவலை பெற முடிகிறதே :)

நெடுக்கு நானும் போய் என் resources ஐ சரிபார்த்ததில், நான் நேற்று சொன்னதுதான் சரியாக இருக்கிறது. மீராவின் ஆளும் அதையே உறுதி செய்கிறார்.

உங்களுடன் பேசிய நபர் ஏதோ ஒன்றை மறைக்கிறார் என்றே படுகிறது.

தமிழ் செல்வனின் மனைவி கூட ஏஜெண்ட் மூலம் பிரான்ஸ் வந்தே பின் தஞ்சம் கோரியது நினைவிருக்கலாம்.

என் கணிப்பில் இவர்கள் வந்து சேர்ந்தால் 80% வாய்ப்பிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருந்து திருப்பி அனுப்பட்ட சிலரையே.. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பிரிட்டன் தானே அழைத்த நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. விசேட ஏற்பாடுகளோடு அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பி அழைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும்.. நீதிமன்றத் தீர்ப்புகளால் உருவாகி இருந்த நிகழ்வுகள் உள்ளனவே.

ஒருவருக்கு அதி உச்ச அச்சுறுத்தல்.. மற்றும்.. தொடர் அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில்.. அது நிரூபிக்கும் பட்சத்தில்.. பிரிட்டன் அகதிஅந்தஸ்து கொடுத்து அழைத்து வந்த நிகழ்வுகள் உள்ளன. சில மனித உரிமை அமைப்புக்களின் சிபார்சும் இதற்கு உதவி இருக்கலாம்.

பொது நடைமுறைகளில் இல்லாத விசேட நடைமுறைகளுக்குள் இவை வரும். இதற்கு தகுதி அடைபவர்கள் வெகு சிலராகவே இருப்பர். :icon_idea:

சரிதான், ஆனால், விக்கிலீக்ஸ் காரர், இலண்டண் ஈகுவடோர், தூதரகத்தினுள், அந்நாட்டின் தஞ்சம் வழங்கப்பட்ட நிலையில், வெளியேற வகையில்வாது வருடக் கணக்கில் இருக்கிறார்.:o

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம் ,பயங்கரவாதம் என்று தப்பு பண்ணினது இந்த தாயும் பிள்ளையுமா ? அப்ப கோத்தா & கூட்டுகள் செய்ததுக்கு பெயர் என்னவாம் ? 

 

மகிந்த ஜனாதிபதியாக  இருந்த  வரையில் அவர்களின் பார்வையில் பயங்கரவாத ஒழிப்பாம்.அவர்கள் நாட்டைக்காத்த நல்ல பெரு மக்களாம்.

மைத்திரியின் ஆட்சியில் ஊழல்வாதிகளாம்.

சில வேலை ரணிலின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் ஒருவர்

வவுனியாவில் வைத்தியராக இருந்தார்

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தவேளை....

சுவிசின் காரியாலயத்தில் அகதியாக பதிந்தார்

2009 இல் அவருக்கு சுவிசுக்கான விசாகிடைத்து மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் சுவிசுக்கு வந்தார்...

அகதிமுகாமில் இருந்துவிட்டு

வெறுத்து மீண்டும் 2 வருடத்தில் ஊருக்கு போய்விட்டார்...

 

நாட்டில் நடக்கும் பல நல்ல விடயங்களை பொறுக்காமல் சிலர் எப்போ குண்டு விழும் என்று ஏங்குவது புரியுது .

நாட்டில் நடக்கும் பல நல்ல விடயங்களை பொறுக்காமல் சிலர் எப்போ குண்டு விழும் என்று ஏங்குவது புரியுது .

குண்டு போட்டதே உங்கள் விருப்பத்துக்குரிய சிங்கள சிறிலங்கா அரசு தானே. குண்டு போட்டவர்களோடையே அன்பாக நண்பர்களாக இருக்கும் நீங்கள் யாரை கற்பனையில் குற்றம் சொல்லுகிறீர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

குண்டு போட்டதே உங்கள் விருப்பத்துக்குரிய சிங்கள சிறிலங்கா அரசு தானே. குண்டு போட்டவர்களோடையே அன்பாக நண்பர்களாக இருக்கும் நீங்கள் யாரை கற்பனையில் குற்றம் சொல்லுகிறீர்கள்.

 

 

புலிகள் போட்டால் தான் குண்டு

மற்ற எவர் அணுகுண்டைப்போட்டாலும் அது பூ வகைக்குள்தான் வரும்..... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.