Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாடிக்கார அண்ணே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன்.

அந்த நாளும் வந்தது.

கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள்.

புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர் அறிவித்தார்.

கையை கட்டிகொண்டிருந்தோர் எல்லோரும் கைக்கு சிறிய வேலைகொடுத்தனர். மண்டபம் ஒலி அலைகளை ரசித்தது. நித்திரை தூங்கியோர் திடுகிட்டு எழுந்தனர்.

 

குறுந்தாடி வைத்த, நனஷனல், பான்ட் அணிந்த 55க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய சு.கா புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை வைத்தார்.

பதின்ம வயதில் புத்தகங்கள் வாசிப்பு, மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்ற செயல்களால் சுரேஸின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முக்கியமாக அவனது இனம் வேற்று இனத்தவர்களால் ஒடுக்கப்படுவதை உணர்ந்த அவனது நண்பர்கள் போரட புறப்பட்டனர். ஒவ்வொருத்தரும் தனிநாடு வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெவ்வேறு பாதைகளில் சென்றனர்.

குகன் சுரேசின் தெருவில் வசிப்பவன். இருவரும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இருவரும் சுரேஸின் சைக்கிளில்தான் பாடசாலை சென்றுவருவார்கள். அன்று பாடசாலையிலிருந்து திரும்பி வரும்பொழுது

"மச்சான் இன்றைக்கு பின்னேரம் உன்ட சைக்கிளை ஒருக்கா தாடா, டவுனுக்கு போகவேணும் "

"பின்னேரம் வா தாரன்"

மூன்று தரம் கேற் கொழுக்கி தட்டும் சத்தம் கேட்டால் அது குகன் தான் என வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அம்மா அந்த சத்தத்தை கேட்டவுடன் கேற்றடியை பார்க்காமலயே தம்பி குகன் வந்திருக்கிறான் என குரல் கொடுத்தார். அடிவளவுக்குள் ஆட்டுக்கு குழை ஒடித்து கொண்டிருந்த நான் கொக்கத்தடியை அப்படியே மரத்தில் கொழுவி விட்டு , முற்றத்தில் நின்ற சைக்கிளை வந்து எடுக்கும் படி அழைத்தேன்.. நானும் அவனுடன் வருவதாக சொல்ல தான் திரும்பி வருவதற்கு நேரம் செல்லும் என்று சொல்லி என்னை அழைத்து செல்லவில்லை.

 

கிழமையில் ஒரு நாள் எனது சைக்கிளை எடுத்து செல்வான். ஆறு மாதங்களின் பின்பு என்னை அவனுடன் அழைத்து சென்றான். என்னை ஒரு கடையில் நிற்கும் படி கூறிவிட்டு அவன் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு தாடி வைத்த அண்ணருடன் வந்தான். இவர் சுதா அண்ணே என எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் .நானும் கலோ அண்ணே என்றேன் ,அவரும் பதிலுக்கு கலோ என்றார் .தேனீர் அருந்த வருமாறு பக்கத்திலிருந்த தேனீர்கடைக்கு அழைத்து சென்றார்.

தேனீர் குடித்தபடியே "தம்பி மட்டர்ன் ரோல் சாப்பிடுவீரோ" என்றார்.

"சாப்பிடுவேன் ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிட மாட்டேன்".

"தம்பி நல்ல பக்திமான் போலகிடக்கு"

சிரிச்சு சமாளித்தேன்.

நேற்று இரண்டு தமிழ்சனத்தை பொலிஸ் சுட்டவன். அப்ப உம்மட கடவுள் என்ன கண்ணை மூடிக்கொண்டே இருந்தவர்? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கும் சிரித்து மழுப்பினேன்.

 

அவர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தாலும் கடவுளை எதிர்த்து கருத்து சொல்லவில்லை.

எந்த துறையில் படிக்கபோறீர் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ வரப்போறீர் என்று அடுத்த கேள்வியை கேட்டார். இல்லையண்ணே, எங்களுக்கும் அதற்கும் வெகுதூரம் கொழும்பில போய் ஐ.சி.எம்.எ செய்யலாம் என்று இருக்கிறேன் என சொன்னேன்.

 

கொழும்பிலும் தமிழன் இனிவரும் காலங்களில் வாழமுடியுமோ தெரியாது. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றி அறிந்திருப்பீர். ஒசியில லங்காராணியில் யாழ்ப்பாணத்திற்கு வரவேணும் என்றால் கொழும்பில போய் படியும் என்று நக்கலடித்தார். அவரிடமிருந்து இருவரும் விடைபெறும் பொழுது தாடிக்கார அண்ணே குகனிடன் சொன்னார் அடுத்த வகுப்புக்கு தோழரையும் அழைத்து கொண்டு வருமாறு.

"அடே குகன் என்ன வகுப்படா தாடிக்காரன் எடுக்கப்போறான்"

"அரசியல் வகுப்படா காய் பேய்காய் ,லெபனான் ரிட்டன்., ஆயுதங்கள் எல்லாம் அந்த மாதிரி கழற்றி பூட்டும்"

"ஆயுதங்களடா , ஆளைவிடடா நான் வகுப்புக்கு வரவில்லை"

"நீ பயப்பிடாத,ஆயுதம் ஒன்றும் நீ தூக்க தேவையில்லை. முதலில் போராளிகள் அரசியல் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு அந்த அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.  பின்பு மக்கள் போராட்டம் வெடிக்கும். அது ஒரு புரட்சிக வெகுஜன போராட்டமாக இருக்கும்"

எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் போய் பார்ப்போம் என்ன நடக்குது என்று தாடிக்கரா அண்ணேயின்ட இருப்பிடத்திற்கு போக முடிவெடுத்தேன். நேரடியாக தாடிக்கார அண்னையின்ட வீட்டை போய் அரசியல் பாடம்படிக்கலாம் என நினைத்தபடி குகனுடன் சென்றேன். என்னை பெருமாள் கோவிலடி சந்தியில நிற்க்கும் படிசொல்லிவிட்டு குகன் சென்றுவிட்டான்.

 

அரை மணித்தியாலத்தின் பின்பு தனியாக நான் நிற்க்கும் இடத்திற்கு வந்தான். எங்கயடா அண்ணையை காணவில்லை என்று கேட்க, வருவார் தோழரிட்ட சொல்லிவிட்டனான், அவர் கூட்டிகொண்டு வருவார். ஏன்டா உனக்கு அவரின்ட வீடு தெரியாதோ என நான் கேட்க, அடே அவர் என்னைப்போல உன்னைப்போல சாதாரண ஆளே? லெபனான் ரிட்டேன் காய் . அடேய்! இன்னும் கொஞ்ச நாளில் என்னை சந்திப்பதும் இலகுவாக இருக்காது என நக்கலாகவும் அதே நேரம் நம்பக்கூடிய வகையில் சொன்னான்.

தனியாக வந்த தோழர், அண்ணே வர நேரமாகுமாம் என்னை வகுப்பு எடுக்க சொன்னவர், வாங்கோ தேர்முட்டி படியடியிலிருந்து கதைக்கலாம் என எங்களை அழைத்து சென்றார். தேர்முட்டியடியில் ஏற்கனவே எனக்கு அறிமுகமில்லாத இருவர் இருந்தனர். ஆனால் குகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போலதெரிந்தது. அவர்களின் உரையாடல் குகனை கணட அந்த இருவரும், தோழர் பீட்டர் எப்படி இருக்கின்றீர்கள் என சுகம் விசாரித்தனர். நான் குகனை திரும்பி பார்த்தேன். இங்கு எனது பெயர் பீற்றர் மச்சான் என்றான். சரி அண்ணே வரும் வரை நாங்கள் அரசியல் கலந்துரையாடுவோம் என மூத்த தோழர் தொடங்கினார்.

பேசிகொண்டிருக்கும்பொழுது எப்படி தோழர்களே என கூறிக்கொண்டு அண்ணே எமது அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

"நாம் ஏன்போரட வேண்டும தோழர்களே" என அண்ணர் ஒரு கேள்வியை கேட்டார்.

 

ஒவ்வொருத்தரும் ஒரு பதிலை சொல்லிகொண்டிருந்தனர். எனது முறை வந்தவுடன் சொன்னேன் சிங்களவன் அடிக்கிறான் நாங்கள் அவனை திருப்பி அடிக்கவேணும் என்றேன்.

"சிங்களவன் என்று சொல்லக்கூடாது ,சிங்களவர்களிலும் நல்ல சிங்களவர்கள் பலர் உண்டு ஏன் எங்கன்ட ஆட்களை விட சிங்களவர்கள் நல்லவர்கள்".

சிறிது நேரம் மெளனமாக இருந்தது அந்த இடம். அண்ணரே மெளனத்தை கலைத்தார்.

நாளைக்கு யாரவது வெருளிகள் ஆர்மிக்கு கண்ணிவெடி வைக்குங்கள் அதில ஆர்மியும் சாகும் அதனால் எமது எமக்கு தமிழீழம் கிடைக்காது... மக்கள் போராட்டம் மூலம்தான் ஈழம் கிடைக்கும் "

கம்யுனிசம் பற்றி யாருக்கு தெரியுமோ? கம்னிஸ்ட் நாடுகள் எவை? என அடுத்த கேள்வியை அண்ணர் கேட்டார். ஒருத்தரும் பதிலளிக்காதபடியால் எனக்கு தெரிந்த இரண்டு கம்னிஸ்ட் நாடுகளாகிய சீனாவையும் ரசியாவையும் சொல்லி, எனக்கும் அரசியல் தெரியும் என்ற வகையில் அங்கு இருந்தவர்களை பார்த்து ஏளன புன்னகையை உதிர்ந்தேன்.

"தோழரே உலகத்தில் இன்னும் கம்னிஸ்ட் நாடுகள் என்று ஒன்றில்லை , எப்ப உலகம் பூராவும் சோசலிச சமதர்ம சமுதாயம் உருவாகுதோ அப்ப கம்னிஸ்ட் நாடுகள் சாத்தியம் "என்றார்  அண்ணை தோழர்.

இதென்ன கோதாரியா கிடக்குது என்றுபோட்டு அதன் பின்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துகொண்டேன். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம் இப்படி பல எமது பழக்கத்தில் இல்லாத சொற்களையெல்லாம் சொல்லி அரசியல் பாடம் எடுத்தார்.

 

இப்படியாக எமது அரசியல் பாடம் தொடர்ந்தது. அடுத்த வகுப்பை வேறு இடத்தில வைப்போம் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடினால் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என மூத்த தோழர் ஒருவர் கருத்து சொன்னார். அடுத்த வகுப்புக்கு மயிரத்தான் வந்தான் சிங்கன் என்று மனதில் நினைத்து விடைபெற்றேன்.

இனிமேல் குகன் சைக்கிளுக்கு வந்தால் கொடுங்கோ என்னை கூப்பிடவேண்டாம் என வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நான் பின் வளவில் ஆடுகளுக்கு குழை ஒடிப்பதற்க்கு சென்று விடுவேன். உயர்தர பரீட்சை எடுத்து பெறுபெறுகளுக்கு காத்திருந்தமையால் பாடசாலைக்கு செல்வதில்லை இதனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு குறைந்திருந்தது.

ஒரு நாள் சைக்கிளை திருப்பி வீட்டை கொண்டு வந்துவிடும் பொழுது சந்திக்கவேண்டியதாகிவிட்டது. மச்சான் என்னடா உன்னை காணக்கிடைக்கிதில்லை. வகுப்புக்கு வாரது என்று சொல்லிப்போட்டு காய்வெட்டிப்போட்டாய், அடுத்த வகுப்பு எங்கன்ட அம்மன் கோயிலில் தான் நடக்குது வாடா. அண்ணரும் உன்னை கேட்டவர் என்று சொல்லியடி சைக்கிளை மாமரத்தடியில் சாய்த்து வைத்தான். பார்ப்போம் நேரம் கிடைச்சா வாறன் என சொல்லி தொடர்ந்து கதையை வளர்க்காமல் அவனை விடை பெறவைத்தேன். அவனுடன் தொடர்ந்து நற்பை வளர்ப்பதா அல்லது துண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

அன்று அம்மன் கோயில் வகுப்புக்கு போவதற்கு முடிவெடுத்தேன். வழமைபோல தோழர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தாடி அண்ணர் எனது தோளில் கை போட்டபடி என்ன தோழர் உம்மை பிறகு காணகிடைக்கவில்லை, நீங்கள் எல்லாம் பின்நின்றால் எப்படி நாங்கள் மக்கள் புரட்சியை உருவாக்குவது? எல்லாம் வெல்லலாம் அண்ணே வகுப்பை தொடங்குங்கோ என்று கூறியபடி படிக்கட்டில் இருந்தேன்.

தொடரும்

நியானி: சீர் செய்யப்பட்டுள்ளது.

Edited by நியானி

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

  • கருத்துக்கள உறவுகள்

-------

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

 

நன்றாக.... அவதானித்து, எழுதப்பட்ட கட்டுரை புத்தன்.

அதிலும்... கிருபனின், கருத்து.... என்னையறியாமல், சிரிக்க வைத்து விட்டது. :D

சீக்கியரிடம் போய் எங்கட பிரச்சனை கதைத்தது கிருபனின் பிழை . :lol:

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,    :o  :D  :icon_idea: 

தொடரட்டும் புத்தர் . 

 
கிருபன், on 04 Apr 2015 - 5:53 PM, said:
புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!  :D  :icon_idea: 

தொடருங்கள் புத்தன்  :)

Edited by seeman

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் .

சரி தவறவிட்டாலும் அரசியல் ஞானி ஆகிவிட்டீர்களே :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

 

நன்றிகள் பகலவன் ..... தொடரும் எனது கிறுக்கல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

 

சும்மா ஒரு பார்வையாளனாக மட்டுமே .....இயக்க முகாமில் ஒரு நாள் தங்கியவனுக்கு இருக்கும் தகுதி கூட எனக்கு இல்லை, அவர்களின் அந்தரங்கத்தை விமர்சிக்கும் தகுதி.....நன்றிகள் நந்தன் என்னை தொடர்ந்து கிறுக்க ஊக்க படுத்தியமைக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

 

அந்த தாடிக்காரர்களில் அன்டன் பாலசிங்கமும் அடக்கம்:D நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்
கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ
புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.
ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்

கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ

புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.

ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

 

அப்பதான் மக்களுடன் இயக்கம் மின்கில் பண்ணமுடியும்,மக்களுடன் மின்கில் பண்ணினால் மக்கள் புரட்சி வெடிக்கும் ,மக்கள் புரட்சி வெடித்தால் சோசலிச சமதர்ம ஈழம் பிறக்கும்.....ஈழம்பிறந்தால் வி ஆர் கப்பி....நீங்கள் நாலு வகுப்புக்கு போனனீங்களா? தாடி வைத்திருக்கின்றீர்களா ....அப்ப நீங்களும் புரட்சி திலகம் ..முற்போக்கு சிந்தளையாளர் ...:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரட்டும் புத்தன்...........உங்கள் எழுத்துநடை மிகவும் சுவாரசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... கரத்துச் சொல்லத்தெரியேல்லை கிருபனின் நிலைதான் நம்மளதும்......புத்தனுக்கு பிடரியில சனியன் ஏதாவது ஏறிக் குந்திட்டுதோ என்னவோ :lol: :lol:

  • 2 weeks later...
  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

3வருடமாகிறது. தொடருங்கள் புத்தன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.