Jump to content

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்


Recommended Posts

பொதுத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்...

பொதுத் தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்...

 

8வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றையதினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி அமைதியான முறையில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவுமின்றி மாலை 04.00 மணிக்கு நிறைவடைந்தது.

இதன்படி இன்று முழுமையாக வௌியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி, 5,098,927 வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களை பெற்று முன்னிலை வகிப்பதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4,732,669 வாக்குகளுடன் 83 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ள இலங்கை தழிழரசுக் கட்சி 14 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆசனங்களையும், மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் நான்கு ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் திகாமடுல்லையில் ஒரு ஆசனத்தையும் இம்முறை தமிழரசுக் கட்சி தனதாக்கியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி நான்கு ஆசனங்களை பெற்றுள்ளதோடு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.

இதன்படி இம்முறை பொதுத் தேர்தல் முடிகள் மாவட்ட அடிப்படையில் இதோ!

வட மாகாணம்

வன்னி


01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 89,886 (54.55%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 4

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 39,513 (23.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 20,965 (12.72%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

யாழ்ப்பாணம்

01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 2,07,577 (69.12%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 5

02) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 3,0232 (10.07%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 2,0025 (6.67%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு


01) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 127,185 (53.25%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 32,359 (13.55%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

03) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

பெற்ற மொத்த வாக்குகள் - 38,477 (16.11%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

திருகோணமலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 83638 (46.36%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 2

02) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 45894 (25.44%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

03) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 38463 (21.32%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 1

திகாமடுல்ல

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 151,013 (46.30%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 89,334 (27.39%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

03) இலங்கை தமிழரசுக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 45,421 (13.92%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

மத்திய மாகாணம்

கண்டி


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 440,761 (55.57%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 309,152 (38.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

மாத்தளை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 138,241 (49.84%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 3

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 126,315 (45.54%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

நுவரெலியா

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 228,920 (59.01%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 147,348 (37.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

மேல் மாகாணம்

கொழும்பு


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 640,743 (53.00%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 11

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 474,063 (39.21%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 81,391 (6.73%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

களுத்துறை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 310,234 (44.47%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 338801 (48.56%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 38,475 (5.52%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

கம்பஹா

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 577,004 (47.13%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 09

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 549,958 (44.92%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 08

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 87,880 (7.18%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

தென் மாகாணம்

காலி


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 265,180 (42.48%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 312,518 (50.07%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 06

மாத்தறை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 186,675 (39.08%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 250,505 (52.44%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

ஹம்பாந்தோட்டை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 130,433 (35.65%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 196,980 (53.84%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

03) மக்கள் விடுதலை முன்னணி

பெற்ற மொத்த வாக்குகள் - 36,527 (9.98%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 01

வடமேல் மாகாணம்

குருநாகல்


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 441,275 (45.85%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 07

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 474,124 (49.26%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 08

புத்தளம்

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 180,185 (50.40%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 153,130 (42.83%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

வட மத்திய மாகாணம்

அனுராதபுரம்


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 213,072 (44.82%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 229,856 (48.35%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

பொலன்னறுவை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 118,845 (50.26%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 103,172 (43.63%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

ஊவா மாகாணம்

பதுளை


01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 258,844 (54.76%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 179,459 (37.97%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

மொனராகலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 110,372 (41.97%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 02

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 138,136 (52.53%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 03

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி


01) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 323,636 (51.19%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 06

02) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 284,117 (44.94%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

கேகாலை

01) ஐக்கிய தேசியக் கட்சி

பெற்ற மொத்த வாக்குகள் - 247,467 (49.52%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 05

02) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

பெற்ற மொத்த வாக்குகள் - 227,208 (45.47%)
கிடைக்கப் பெற்ற ஆசனங்கள் - 04

(அத தெரண தமிழ்)

http://tamil.adaderana.lk/news.php?nid=71777

Link to comment
Share on other sites

  • Replies 571
  • Created
  • Last Reply

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு  மாற்றாக  ஒரு கட்சியும் வரக் கூடாது என்று இல்லை ஆனால் புலது தமிழர்கள்  'கிங் மேக்கராக ' செயற்ப்பட்டது தான்  தவறானதாக எனக்கு பட்டது . மற்றது   சிறிதரனோடு ஒப்பிடும் போது சுமந்திரன்   மேல் என்பது என் கருத்து..

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு  மாற்றாக  ஒரு கட்சியும் வரக் கூடாது என்று இல்லை ஆனால் புலது தமிழர்கள்  'கிங் மேக்கராக ' செயற்ப்பட்டது தான்  தவறானதாக எனக்கு பட்டது . மற்றது   சிறிதரனோடு ஒப்பிடும் போது சுமந்திரன்   மேல் என்பது என் கருத்து..

மிகச்சரியான பார்வை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விருப்பு வாக்கு நிலவரம் என்ன மாதிரி ?

Link to comment
Share on other sites

விருப்பு வாக்கு அடிப்படையில் முதலாவதாக நின்ற சித்தார்த்தனை சிறீதரன், மாவை போன்றோர் திட்டமிட்டு தமக்கு பின்னுக்கு வரச் செய்து இருக்கின்றனர். சரி, மூன்றாவதாக நின்ற சித்தார்த்தனை சுமந்திரன் தன்னை மூன்றாவதாக விடுமாறு கேட்டு அந்த அடிப்படையில் நான்காவது சித்தார்த்தன் சென்று இருக்கின்றார். இது அவர் அனைவரையும் சமாளித்துச் செல்லும் பலவீனமான குணத்தினால் வந்தது.

நான் தெரிவிக்கும் மேற்படி கருத்துக்கள் பொய் என்று நீங்கள் கருதினால் நேற்று வாக்களிப்பு எண்ணும் நிலையத்தில் நின்றிருந்த ஊடகவியலாளர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு கேளுங்கள்.

எது எப்படி இருப்பினும் புலத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நான் அறிய புளொட் மொத்தமாக இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பில் புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் வியாளேஸ்வரன் மாஸ்டரே வெற்றி பெற்றவர்களுள் மற்றும் ஒருவர் ஆவார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் (மோசடி) செய்யலாமா என உங்களுக்கு சந்தேகம் எனில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது செல்வராஜா கஜேந்திரனுக்கு இவ்வாறாக விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பதனை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சிறீதரனை கூட்டமைப்புக் கொண்டு வந்தது சுரேஸ் பிரேமச்சந்திரன். அவரை திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்து இருக்கின்றார் சிறீதரன். என்னைப் பொறுத்த வரையில் சுரேஸ் தோற்று இருக்கக்கூடாது. சரவணபவன் போன்ற வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது சுரேஸ் எவ்வளவோ பரவாயில்லை.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைய அல்லது ஒற்றுமை குலையுமாயின் அது சிறீதரனால்தான் ஏற்படும். அனைவரும் இருந்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மைத்திரியோடு சேர்ந்து 2016 இல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தரும்போது அவர்கள் இன்னமும் பலமாகவும் உறுதியாகவும் இருப்பார்கள்:oO:. எப்படி சிதைவடையமுடியும்?

மட்டக்களப்பு இறுதி வாக்குகளைப் பார்த்தேன். பிள்ளையான் 127 வாக்குகளால் எம்பியாக வரமுடியாமல் போய்விட்டது.

United National Party

32,359 13.55% - 1 MPs Selected

United People's Freedom Alliance

32,232 13.49%

 
 
 

 

 
Link to comment
Share on other sites

மேலதிக ஆசனங்கள் தொடர்பில் யாராவது இங்கே பதிந்தார்களா தெரியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக கிடைத்துள்ளது.

இந்த அடிப்படையில் பேராசிரியர் சிற்றம்பலம் வருவார். கிழக்கில் யாரை போடுகின்றார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

விருப்பு வாக்கு அடிப்படையில் முதலாவதாக நின்ற சித்தார்த்தனை சிறீதரன், மாவை போன்றோர் திட்டமிட்டு தமக்கு பின்னுக்கு வரச் செய்து இருக்கின்றனர். சரி, மூன்றாவதாக நின்ற சித்தார்த்தனை சுமந்திரன் தன்னை மூன்றாவதாக விடுமாறு கேட்டு அந்த அடிப்படையில் நான்காவது சித்தார்த்தன் சென்று இருக்கின்றார். இது அவர் அனைவரையும் சமாளித்துச் செல்லும் பலவீனமான குணத்தினால் வந்தது.

நான் தெரிவிக்கும் மேற்படி கருத்துக்கள் பொய் என்று நீங்கள் கருதினால் நேற்று வாக்களிப்பு எண்ணும் நிலையத்தில் நின்றிருந்த ஊடகவியலாளர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு கேளுங்கள்.

எது எப்படி இருப்பினும் புலத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நான் அறிய புளொட் மொத்தமாக இரண்டு ஆசனங்களை பெற்றிருக்கின்றது.

மட்டக்களப்பில் புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் வியாளேஸ்வரன் மாஸ்டரே வெற்றி பெற்றவர்களுள் மற்றும் ஒருவர் ஆவார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் (மோசடி) செய்யலாமா என உங்களுக்கு சந்தேகம் எனில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது செல்வராஜா கஜேந்திரனுக்கு இவ்வாறாக விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பதனை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சிறீதரனை கூட்டமைப்புக் கொண்டு வந்தது சுரேஸ் பிரேமச்சந்திரன். அவரை திட்டமிட்டு தோற்கடிக்கச் செய்து இருக்கின்றார் சிறீதரன். என்னைப் பொறுத்த வரையில் சுரேஸ் தோற்று இருக்கக்கூடாது. சரவணபவன் போன்ற வியாபாரிகளுடன் ஒப்பிடும் போது சுரேஸ் எவ்வளவோ பரவாயில்லை.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைய அல்லது ஒற்றுமை குலையுமாயின் அது சிறீதரனால்தான் ஏற்படும். அனைவரும் இருந்து பாருங்கள்கித                                       இதை தான் நானும் சொல்கிறேன்

சிறிதரன் ஆபத்தனவர் அவரின் நோக்கம் பதவி

Link to comment
Share on other sites

 

மட்டக்களப்பு இறுதி வாக்குகளைப் பார்த்தேன். பிள்ளையான் 127 வாக்குகளால் எம்பியாக வரமுடியாமல் போய்விட்டது.

United National Party

32,359 13.55% - 1 MPs Selected

United People's Freedom Alliance

32,232 13.49%

 
 
 

 

 

கிருபன் நான் நினைக்கிறேன் ஹிஸ்புல்லா தான் அந்த வாய்ப்பை இழந்துள்ளார் என்று. எதுக்கும் விருப்பு வாக்குகள் வெளிவரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

விருப்பு வாக்குக்களை மாற்றம்  செய்தே 2004 இல் மாவை அண்ணன் வந்ததாக ஒரு தகவல் கேள்விப்பட்டேன். அன்று சிறி காந்தாவின் விருப்பு வாக்குக்கள் மாவை அண்ணரின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்ததாம்.

நான் அறிந்தவகையில் யாழில்  சித்தரே விருப்பு வாக்குக்களில் தேர்தலிற்கு முன்னரே மக்களின் தெரிவாக இருந்தார்.
இன்று சித்தார்த்தன் மட்டுமல்ல அருந்தவபாலன் ஐயாவின் விருப்பு வாக்குக்களும் சரா அவர்களின் பெயரிற்கு மாற்றப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

நிர்மலன் நீங்கள் பல நல்ல கருத்துகளை எழுதுபவர்தான்.

ஆனால் இது நம்பும் படியாக இல்லை.

முன்னைய தேர்தல்கள் வேறு. அப்போதும் வோட்டுப் போட்ட பின் விருப்பு வாக்கை மாற்றவில்லை. போடும்போதே கள்ள வாக்குப் போடுவார்கள்.

சித்தர் என்ன அவ்வளவு லூசா?

மாகாண சபையில் எடுத்த அதே அளவு விருப்பு வாக்கை எடுதுள்ளார்.

இதுதான் அவரின் எல்லை. 

உங்களைப் போன்றுதான் நானும் நம்பாமல் இருந்தேன். ஆனால் ஊடகவியலாளர்கள் அனைவரும் சித்தார்த்தனை திட்டியபடியே இந்த கருத்தினை தெரிவித்தனர். மற்றும் படி எனது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. இவ்வாறான கருத்துக்களை எழுதும் போது ஊடகவியலாளர்கள் என்னையே அடையாளம் கண்டு கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஜிஸ்பு மச்சான் தான் இழந்துள்ளார்.

ஓட்டமாவடி காளி பழி வாங்கீட்டா ?

நிர்மலன் -இப்ப போடுறதில்லை - நியமிப்பது ?

கிழக்கில் திருமலை அல்லது அம்பாறையில் இருந்து ஒருவர் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் நினைக்கிறேன் ஹிஸ்புல்லா தான் அந்த வாய்ப்பை இழந்துள்ளார் என்று. எதுக்கும் விருப்பு வாக்குகள் வெளிவரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

இருக்கலாம். முழுமையான தகவல் எங்கிருக்கின்றது என்று தெரியவில்லை.

 

Gnanamuttu Sri Nesan topped the ITAK list in the Batticaloa District with 48,221 preferential votes. Sathasivam Wijendran was second with 39,321 while Sinnathambi Yogeshwaran was third with 34,039.

Ali Zahir Moulana of the SLMC received 16,385 preferential votes while Ameer Ali of the UNP received 16,611 votes.

 

Link to comment
Share on other sites

 புலம் பெயர்  அமைப்புக்கள்   தேவையில்லாமல் ஓடாத குதிரை மேல்  பந்தயம் கட்டி புலிகளுக்கு  கெட்ட பெயர் கொண்டு வருகிறாரகள்  ......

கள நிலவரம் யதார்த்ததை உணர்ந்து செயற்பட்டால் நல்லது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி விருப்பு வாக்கு நிலவரம் என்ன மாதிரி ?

The ITAK also claimed victory in the Wanni electoral district, while Charles Nirmala Nadan, topped the list with 34,620 preferential votes.

S. Adaikalanathan was second with 26,397 votes. Sivashakthi Anandan received 25,027 votes while Siva Mohan received 18,411 votes.

Rishad Bathiyutheen was elected from the UNP with 26,297 votes. Abdul Masthan who contested from the UPFA, was elected with 7,198 votes. 

Link to comment
Share on other sites

விருப்பு மாற்றங்களில் மாற்றம் செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர், அவரவர்களுக்குள் ஏற்பாடும் உடன்பாட்டினைப் பொறுத்து என்கின்றார்.

இவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மையினை அறிய வேண்டுமானால் அரசாங்க அதிபர்களாக கடமையாற்றிய அல்லது தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களை கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 புலம் பெயர்  அமைப்புக்கள்   தேவையில்லாமல் ஓடாத குதிரை மேல்  பந்தயம் கட்டி புலிகளுக்கு  கெட்ட பெயர் கொண்டு வருகிறாரகள்  ......

கள நிலவரம் யதார்த்ததை உணர்ந்து செயற்பட்டால் நல்லது..

 

இதனைத்தானே நான் பல தடவை இங்கே கருத்துக்கள் பதிவிடும் போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால், என்னை எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு தாக்கினீர்களே.

கஜேந்திரகுமார் அணியுடன் தொடர்பில் உள்ள எனது நண்பரிடம் கஜேந்திரகுமார் ஆட்கள் புலம்பெயர் தமிழர்களின் சொற்கேட்டு நடக்காமல் சுயமாக நின்றால் மாத்திரமே வெல்ல முடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அந்த நண்பரும் இம்முறை கஜேந்திரகுமார் ஆட்கள் 2 சீட் எடுப்பினம் அப்ப பாரும் உமது கருத்துக்கள் யாவும் புஸ்வானம் ஆகும் என்றார்.

அவரை நேற்றில் இருந்து தேடுகின்றேன். இணைப்புக்கு வருகின்றார் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்கின்றார். அவரின் பெயர் சாந்தினி சிறீஸ்கந்தராஜா. (பெயரினை சரி பார்க்கவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி சச்சிதாநந்தமா?

ஐயகோ இன்னோர் அனந்தி?

Link to comment
Share on other sites

அரியநேந்திரனும் அவுட்டா:shocked:

 

அரியநேத்திரன் தொடக்கத்திலேயே தோல்வி என உறுதிப்படுத்தப்பட்டவர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோவிந்தம் கருணாகரன் (ஜனா) தெரிவாகவில்லை.

புளொட்டால் நியமிக்கப்பட்ட அமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ச.வியாளேந்திரன் தெரிவாகியுள்ளார். இவர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். அதாவது, வயதில் குறைந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை செல்கின்றார்.

சாந்தி சச்சிதாநந்தமா?

ஐயகோ இன்னோர் அனந்தி?

இல்லை சாந்தினி சிறீஸ்கந்தராஜா என்பதே சரியான பெயர். இவர் போரில் ஒரு காலை இழந்தவர். அதற்காக இவர் போராளி அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கிருபன் மற்றும் நிர்மலன்.

Link to comment
Share on other sites

மேலதிக ஆசனங்கள் தொடர்பில் யாராவது இங்கே பதிந்தார்களா தெரியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 ஆசனங்கள் மேலதிகமாக கிடைத்துள்ளது.

இந்த அடிப்படையில் பேராசிரியர் சிற்றம்பலம் வருவார். கிழக்கில் யாரை போடுகின்றார்களோ தெரியாது.

 தலைவருக்கு பொட்டு அம்மான் எனில்   சமந்தருக்கு சுமந்திரன்  என நினைக்கிறேன்...... அப்போ கருணா யாரா/?/ அது தான்  சிலவேளை  சிறிதரன் அந்த இடதுக்கு வருவார்...................

 

Link to comment
Share on other sites

135,000 தமிழ் வாக்குகள் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 69,200 வாக்குகள் பெற்று 11ம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி. எனது வாக்கு தொகையில் பங்களித்த முஸ்லிம், சிங்கள சகோதரர்களுக்கும் நன்றி.

-மனோ கனேசனின் முகநூல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.