Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பா எங்கள் அப்பா !!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா எங்கள் அப்பா!!!!! 
நெஞ்சு வெடிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி...! மனம் பதைக்கிறது...!

பகிர்வுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய... காணொளி.

ஆனால் பார்க்க ஆட்களில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி...! மனம் பதைக்கிறது...!

ஆனால் பார்க்க ஆட்களில்லை .

 

 

வெள்ளைக்காரன்ரை கோல்ப் மட்டை காவிக்கொண்டு கெலியிலை போவதைவிட இதனைப்பார்த்து பெருமைகொள்ளும்நேரம் பெருமையான நேரம்..

Edited by alvayan
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

பகிர்வுக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பா இல்லாத குடும்பம் என்னாகும்....

இன்றைய தமிழரின் நிலையே சாட்சி.....

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

தமிழ் இருக்கும்வரை

உன் பெயரிருக்கும்......

 

பகிர்வுக்கு நன்றி அண்ணா!

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்தை ரணமாக்கும் உண்மை!!!  tw_cry:

காணொலியைப் பார்க்கும் போது எனது நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது. எத்தனை அப்பாக்கள், பாலகர்கள் விடுதலை என்ற பேரில் கொன்று ஒழிக்கப்பட்டார்கள். அப்பாக்கள் கொல்லப்படும் போது கதறிய, காலைப்பற்றி கெஞ்சிய பிள்ளைகள் எத்தனை பேர். நினைக்கும் போது என் நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது. பிள்ளைகளை கொல்லும் போது கதறிய அப்பாக்கள், அம்மாக்களின் கண்ணீர் நிறைந்த முகங்கள் நினைவுக்கு வந்து நெஞ்சை வெடிக்க வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை.

எத்தனை கொலைகள், எவ்வளவு சித்திரவதைகள். விடுதலையின் பேரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவைப் பற்றியும் பிள்ளைகள் கூறுவதாக இப்பதிவு இருந்திருப்பின் எனது நெஞ்சும் வெடித்து இரத்தம் வழிந்திருக்கும். ஆனால் இப்பதிவு எத்தனையோ அப்பா(வி)க்களின் உயிர்களை அர்த்தமற்று பறித்ததிற்கு காரணமான ஒரு தனி மனிதனின் சுய புராணம். பார்க்கும் போது எனது நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது - கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாக்களிற்காகவும். 

எனது இப்பதிவு தாயகத்தில் விடுதலையின் பேரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவுக்கும், சிதைக்கப்பட்ட அவரது குடும்பத்திற்குமானது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பழியையும் .....
தனி மனிதனில் திணிக்கும்போது மட்டும் 
நாங்கள் குறுநில மன்னர்கள் 


மற்றைய நேரமெல்லாம் ....
நாம்தான் உலக நீதிவான்கள். 

சிங்களத்திற்கு எதிராக போராடக்க்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயண்படுத்தி சாட்சிகளைத் திரட்டி நாம் போராடி எமக்கான நீதியைப் பெறவேண்டும்.இது தான் இன்றய நிலையில் தாயக மக்களுக்குத் தேவை , அதை விடுத்து இப்படியான திரிகளில் வந்து , சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கும் உங்கள் கருத்துக்களைப் பற்றி எதை சொல்ல.............

எனது இப்பதிவு தாயகத்தில் விடுதலையின் பேரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவுக்கும், சிதைக்கப்பட்ட அவரது குடும்பத்திற்குமானது.

எத்தனை அப்பாக்கள் ,அம்மாக்கள் ,அண்ணகள், தங்கைகளைச் சிதைத்து, அவர்களை அவர்கள் மண்னை விட்டு வெளியேற்றி , அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடித்து , அதே மண்ணில் அவன் கட்டிய தல்செவன சுற்றுலா விடுதியில் சென்று குதூகளித்து அதனை படமெடுத்து இணையத்தில் தரவேற்றி கொண்டாடும் நீங்கள் , இப்படிக் கூறுவதற்கு தகுதியானவரா.............?

பரவாயில்லை நீங்கள், நீங்கள் வாங்கும் காசுக்கு விசுவாசமாக இருங்கள், நாங்கள் நாம் பிறந்த இனத்துக்கு விசுவாசமாக இருந்துவிட்டுப் போகிறோம்................

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்தான் சர்வதேச நீதி மான்கள் 
நாங்கள் வாயை திறந்தால் ......

பூரி பட்டாசு மாதிரி 
நீதியும் நிஜாயமும் சீறும். 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி குமாரசாமி அண்ணா !

சிங்களத்திற்கு எதிராக போராடக்க்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயண்படுத்தி சாட்சிகளைத் திரட்டி நாம் போராடி எமக்கான நீதியைப் பெறவேண்டும்.இது தான் இன்றய நிலையில் தாயக மக்களுக்குத் தேவை , அதை விடுத்து இப்படியான திரிகளில் வந்து , சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கும் உங்கள் கருத்துக்களைப் பற்றி எதை சொல்ல.............

 

எத்தனை அப்பாக்கள் ,அம்மாக்கள் ,அண்ணகள், தங்கைகளைச் சிதைத்து, அவர்களை அவர்கள் மண்னை விட்டு வெளியேற்றி , அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடித்து , அதே மண்ணில் அவன் கட்டிய தல்செவன சுற்றுலா விடுதியில் சென்று குதூகளித்து அதனை படமெடுத்து இணையத்தில் தரவேற்றி கொண்டாடும் நீங்கள் , இப்படிக் கூறுவதற்கு தகுதியானவரா.............?

பரவாயில்லை நீங்கள், நீங்கள் வாங்கும் காசுக்கு விசுவாசமாக இருங்கள், நாங்கள் நாம் பிறந்த இனத்துக்கு விசுவாசமாக இருந்துவிட்டுப் போகிறோம்................

ஆதவன் யாழ் களத்தில் எனது மதிப்புக்குரியவர்களில் நீங்களும் ஒருவர். எனது கருத்துக்களில் சிங்களத்திற்கு வக்காளத்து வாங்கும் தேவை எனக்கில்லை. சிங்களம் செய்த அட்டூளியங்களை மறுக்கவோ மறக்கவோ நான் தயாராகவும் இல்லை. இங்கு நான் குறிப்பிட்டது வேலியே பயிரை மேய்ந்த கதை. அதனால் ஏற்பட்ட கவலை, வெறுப்பின் விளைவு. 

எனது சொந்த ஊரான காங்கேசன்துறையின் இழப்பின் வலி நிச்சயமாக உங்களிற்கு இல்லை. நான் விளையாடிய கடற்கரை, சைக்கிள் ஓடிய வீதிகள், விளையாடிய மைதானங்கள் எதுவுமே இன்று இல்லை. வெறும் காடும் பற்றைகளும்தான் மிகுதி. எனது காங்கேசன்துறைக்கு செல்ல வேண்டின் தல்செவனவுக்கு மட்டுமே செல்லலாம். அதனை ஒட்டிய கடற்கரை ஒன்றுதான் எனது இளவயது ஞாபகங்களை மீட்க மிகுதியாக உள்ள இடம். நீங்கள் இதனை ஒரு தனிநபர் தாக்குதலாகவே செய்திருக்கின்றீர்கள். அவ்வளவு கருத்துப் பஞ்சமா?  உங்களுக்கு காங்கேசன்துறை விடுவிக்கப்படாத நகரங்களில் ஒன்று. எனக்கு ... சொன்னாலும் புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

"வேலியே பயிரை மேய்ந்த ("கதை" )" பற்றி கதைக்கும் போது உங்கள் கருத்து நிச்சியம் கருத்தில் கொள்ளப்படும் ஜீவன். இது அதுவல்ல ...
மும் மூர்த்திகளும் எதையும், எப்போதும், எப்படியும் அதுவாகவே பார்ப்பீர்கள்.
என்னத்தை சொல்ல!! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணொலியைப் பார்க்கும் போது எனது நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது. எத்தனை அப்பாக்கள், பாலகர்கள் விடுதலை என்ற பேரில் கொன்று ஒழிக்கப்பட்டார்கள். அப்பாக்கள் கொல்லப்படும் போது கதறிய, காலைப்பற்றி கெஞ்சிய பிள்ளைகள் எத்தனை பேர். நினைக்கும் போது என் நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது. பிள்ளைகளை கொல்லும் போது கதறிய அப்பாக்கள், அம்மாக்களின் கண்ணீர் நிறைந்த முகங்கள் நினைவுக்கு வந்து நெஞ்சை வெடிக்க வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை.

எத்தனை கொலைகள், எவ்வளவு சித்திரவதைகள். விடுதலையின் பேரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவைப் பற்றியும் பிள்ளைகள் கூறுவதாக இப்பதிவு இருந்திருப்பின் எனது நெஞ்சும் வெடித்து இரத்தம் வழிந்திருக்கும். ஆனால் இப்பதிவு எத்தனையோ அப்பா(வி)க்களின் உயிர்களை அர்த்தமற்று பறித்ததிற்கு காரணமான ஒரு தனி மனிதனின் சுய புராணம். பார்க்கும் போது எனது நெஞ்சும்தான் வெடித்து இரத்தம் வழிகின்றது - கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாக்களிற்காகவும். 

எனது இப்பதிவு தாயகத்தில் விடுதலையின் பேரால் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவுக்கும், சிதைக்கப்பட்ட அவரது குடும்பத்திற்குமானது.

 

விடுதலைப்புலிகளால் எனது அக்கா மகன் கொல்லப்பட்டார்
விடுதலைப்புலிகளால் எனது  மாமனார் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகளால் எனது நண்பர்கள் கொல்லப்பட்டனர்.
 விடுதலைப்புலிகளால் எனது ஆசிரியர் கொல்லப்பட்டார்.
விடுதலைப்புலிகளால் எனது மச்சானின் மாமனார்  கொல்லப்பட்டார்..

எனது சகோதரம் இருட்டறையில் அடைக்கப்பட்டார்.


அத்தருணங்களில் என்னிடம் எழுந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
ஒரு தமிழின விடுதலை அமைப்பால்  கொலை செய்யுமளவிற்கு இவர்கள்   என்ன செய்தார்கள்???

இருட்டறையில் அடைக்குமளவிற்கு  இவர்கள்  என்ன செய்தார்கள்?

தொடர்ந்தால் விடையுடன்  தொடரும்...

Edited by குமாரசாமி
ர் ழ் ட் ச் த் ப்...

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் அப்பாவிற்கு நாங்கள் கடிதம் எழுதினால் .......
அதுக்குள் அவர்களின் அப்பாவையும் திணிக்க வேண்டும்.

இந்த திணிக்கிற வேலையை ஒரு மனிதன் 
வெட்கபட்டு முகத்தை மறைத்தே செய்வான் 

இதை நீதி கதை[போல 
வைச்சு பினையும்போதே .....
ஓரளவு புரியவேண்டும்
மட்டம் எங்கினை என்று 

  • கருத்துக்கள உறவுகள்

 

விடுதலைப்புலிகளால் எனது அக்கா மகன் கொல்லப்பட்டார்
விடுதலைப்புலிகளால் எனது  மாமனார் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகளால் எனது நண்பர்கள் கொல்லப்பட்டனர்.
 விடுதலைப்புலிகளால் எனது ஆசிரியர் கொல்லப்பட்டார்.
விடுதலைப்புலிகளால் எனது மச்சானின் மாமனார்  கொல்லப்பட்டார்..

எனது சகோதரம் இருட்டறையில் அடைக்கப்பட்டார்.


அத்தருணங்களில் என்னிடம் எழுந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
ஒரு தமிழின விடுதலை அமைப்பால்  கொலை செய்யுமளவிற்கு இவர்கள்   என்ன செய்தார்கள்???

இருட்டறையில் அடைக்குமளவிற்கு  இவர்கள்  என்ன செய்தார்கள்?

தொடர்ந்தால் விடையுடன்  தொடரும்...

அண்ணா

வெற்றி  பெற்றிருந்தால் 

எல்லோருக்கும் அப்பா ஒருவர் தான்

தோற்றதனால் அப்பாவை மாற்றுகிறார்கள்...

சுயநலமான நபர்கள் எப்பொழுதும் வெற்றி சார்ந்தும்  தம் வாழ்வு சார்ந்துமே சிந்திப்பார்கள்

நான் என்று சிந்தித்தால் இவ்வாறு தான் தோன்றும்

என் வீடு என் சொத்து என்று.

அதனால் பெரியவர்கள் 

நாம்

நமது நாடு என்று சிந்தியுங்கள் என்றார்கள்...

மற்றும்படி நேரம் பொன்னானது அண்ணா

நித்திரை மாதிரி நடிப்பவர்களை........??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் பார்க்க ஆட்களில்லை .

தீபன் திரைப்படம் எதன் தாக்கத்தால் உருவானது? அதை யாரெல்லாம் பார்க்கின்றார்கள்?

 

இனவிடுதலைப்போராட்டத்தின் மூலம் ஆதாயம் தேடிய சகதிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.