Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

26 நவம்பர் 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-


அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான்.

தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான்.

கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த யாழ். மாணவன்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த யாழ். மாணவன்

 

நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று வியாழக்கிழமை ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத வண்டிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவனின் சடலத்துடன், தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தினையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விடுதலையை கொடு ஒளியையூட்டு,

அதிமேதகு ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ஒரு அரசியல் கைதியேனும் சிறையில் இருக்க முடியாது.

இந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லையே என்பது வருத்தமளிக்கின்றது.

என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறித்த மாணவனின் சுயவிபரமும் எழுதப்பட்டுள்ளது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பல்கலைக்கழகம் போகும் வயதை அடைந்த.. மாணவன் சாவதனூடு சாதிக்க முடியாததை.. வேறுவழியில் சாதிக்க முற்பட்டிருக்கலாம். இப்படியான சாவுகள் விளலுக்கு இறைத்த நீராகவே முடியும்.. சொறீலங்கா.. மற்றும்... ஹிந்திய உபகண்ட நாடுகளில். இந்தச் சாவுக்கு பின்னாலும் எத்தனை பழிப்புகள்.. வரும். அதிலும் படிச்சுப் பட்டம் பெற்று அதனூடு ஏதாவது செய்ய முற்பட்டிருக்கலாம். :unsure:

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும். tw_cry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்

விடுதலைக்காக உயிர்தியாகம் செய்வதை இனிவரும் சந்ததியினர் விடவேண்டும்......பொலிஸ் அல்லது இராணுவ உயரதிகாரிகளாக வந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்

ஆழ்ந்த அனுதாபங்கள் .படங்களை பார்க்க நெஞ்சு கனக்கின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகனே, நீ  இதே  உணர்வோடு, உயிரோடு  நெடு காலம் இருந்திருக்கலாம்.
நீ வேண்டி நின்ற கைதிகளும் ஒரு நாள் வந்திருப்பார்கள்....
உன்னை நிரந்தரமாக பிரிந்து நிற்க்கும் உன் குடும்பக்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by சுவைப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!இந்த முடிவு வருத்தத்தக்கது.நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசுகிறோம்.விரைவில் விடுதலை பெற்றுத் தருவோம் என்று தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற தமிழ்த்தலைவர்களே இதற்குப் பொறுப்பு. இந்தப் பிஞ்சு வயதில் தன்னை அழித்துக் கொண்டது துயரமளிக்கிறது. சிங்களம் இந்தத் தியாகத்திற்கெல்லாம் மதிப்பளிக்காது.

விரக்தி...    கையறு நிலையில் தமிழினம் இருக்கும் போது அதீத விரக்தியில் தமிழர் தள்ளப்படுகின்றனர்.. அதில்  ஜெனீவாவில் தன்னை எரித்த மயூரனாகட்டும் , இந்த இளயவனாகட்டும் எல்லோரும் ஒண்றே..  

தமிழர் தலைமை(கள்) தமிழர்களின் உளவள மேம்பாட்டுக்கு ஆவன செய்ய முன்வரவேண்டும்..  

போருக்குள் இருந்த இனத்தை மற்றவர்கள் அழிப்பதை வேண்டும் எண்றாலும் ஏற்கலாம்.. ஆனால் தன்னை தானே அழிப்பதை ஏற்கவே முடியாது... 

இந்த இளைஞனின் பெற்றோருக்கு எதை சொல்லி ஆறுதல் சொல்ல எண்று தெரியவில்லை...

(கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன்,பாராளுமண்ற உறுப்பினர் மாவை  , சுமந்திரன் ,  முதலைமைச்சர்   விக்னேஸ்வரன் போண்றோருக்கு  வேண்டு கோளாக அனுப்பி வைக்கலாம் எண்று நினைக்கிறேன்..  அவர்களின் பயன்பாட்டின் தற்போது உள்ள  மின்னஞ்சல் முகவரி இருந்தால் தயவு செய்து தாருங்கள் )

 

 

 

இப்படியான வழிமுறைகளைக் கைவிட வேண்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜய்க்கும் அஜித்திற்கும் கட் அவுட்டுக்கு பாலூற்றும் இவர் வயதை ஒத்தவர்கள் இருக்கும் தேசத்தில் இப்படி தன் இனத்தின் மேல் அக்கறை உள்ள இவர்போன்ற இளைஞர்களின் இழப்பு மிகப்பெரியது.. இப்படி  சின்ன வயசிலேயே அரசியல் அறிவும் உணர்வும் உள்ள பிள்ளைகள் அநியாயமாக உயிரிழக்காமல் கிழட்டு நரிகள் அரசியல் செய்யும் இடங்களுக்கு வரவேண்டும்... இந்த பையனை இழந்து நிற்கும் குடும்பத்தின் வலி கொடியது..

Edited by Thirdeye

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

தனது உயிரைத் தானே எடுத்துக் கொள்ளும் நிலை... எனது எதிரிக்குக் கூட ஏற்படக்கூடாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீரஞ்சலியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.