Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது: சி.வி

Featured Replies

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது: சி.வி
 

article_1449752629-cv.jpg- எஸ்.ஜெகநாதன்

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. 

இதன்போது, வடமாகாண சபைக்கு தெரிவிக்காமல் பல்வேறு விடயங்கள் நடைபெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எடுத்துக்கூறினார்.

அதாவது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமையாக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லையென்பதுடன், அது தொடர்பில் கதைக்கவும் இல்லை என்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நகரமயமாக்கல் திட்டம் தொடர்பில் வடமாகாண சபைக்கு எவ்வித விடயங்களும் கூறப்படவில்லை. வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கை அபிவிருத்தி தொடர்பில் வடமாகாணத்துக்கு எதுவும் கூறவில்லையென்றார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகங்களில் நடைபெறுகின்ற போது, அங்கு சென்று கூட்டத்தை அங்கிருந்து பகிஸ்கரிப்போம் என்றார்.

இதன்போது கருத்துக்கூறிய முதலமைச்சர், முன்னைய அரசாங்கம் எவ்வாறு வடமாகாண சபையை புறந்தள்ளிவிட்டு அனைத்து விடயங்களையும் செயற்படுத்தியதோ அவ்வாறு இந்த அரசாங்கமும் செய்கின்றது என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/161146/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B1%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B5-#sthash.3bOXdlLp.dpuf

திரியின் தலைப்புக்கு சம்பந்தமில்லாத அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கம் இல்லை..... எந்தச் சிங்கள அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் வட கிழக்குத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது வரலாறு.

கூட்டமைப்பின் தலைவரும் பேச்சாளரும் மைத்திரியின் அரசுடன்  
ஒட்டி உறவாடித் தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத்தரலாம்
என மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கி ஐயா அவர்கள் உண்மையைப் போட்டுடைப்பது அவர்களின் ஏமாற்று வேலைக்கு இடைஞ்சலாக இருக்கலாம்.  

 

பாதீட்டு நிதியில் 60 வீதமான நிதி ஏன் செலவிடப்படவில்லை? வடமாகாண சபையில் கேள்வி
[ வியாழக்கிழமை, 10 டிசெம்பர் 2015, 04:19.56 PM GMT ]
npc_meet_001.jpg
வடமாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியில் 60 வீதமான நிதி எதற்காக செலவிடப்படவில்லை என மாகாணசபையில் மாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் முன்மொழிந்த பிரேரணையினை தொடர்ந்து, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இணைந்து கடுமையான கேள்விகளை தொடுத்துள்ளன.

இந்நிலையில் நிதி ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்காமையே நிதி உரிய காலத்திற்குள் செலவிடப்படவில்லை என அமைச்சர் வாரியத்தின் சார்பில் பேசிய அமைச்சர் பா.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

டிசெம்பர் 31ம் திகதிக்கு முன்னதாக 95வீதமான நிதி செலவிடப்படும் என சபையில் உறுதிமொழி வழங்கியுள்ளதுடன், அடுத்த ஆண்டு திருத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

மாகாணசபையின் 40வது அமர்வு இன்று நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் அரியரத்தினம் மாகாண சபையின் 2015 பாதீட்டு நிதி 40 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருக்கும் நிலையில் மிகுதி நிதி எதற்காக செலவிடப் படவில்லை என கேள்வி எழுப்பியதுடன்,

நிதி செலவிடப்படாமை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனக் கோரும் பிரேரணையினை முன்மொழிந்திருந்தார்.

இதனையடுத்து மேற்படி நிதி செலவிடப்படாமை குறித்து சபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன கடுமையான கேள்விகளை தொடுத்திருந்தது.

குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் 2014ம் ஆண்டு நிதி 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் செலவிடப்பட்டுள்ளது எனவும் இது எவ்வாறு நடந்தது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆளும்கட்சி சார்பில் 60 வீதமான நிதியை 20 நாட்களுக்குள் செலவிட முடியுமா எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன், மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை பேசுகையில்,

உள்ளூராட்சி திணைக்களத்தில் ஊழல், இலஞ்சம் மலிந்து போயிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக உள்ளூராட்சி திணைக்களத்திற்கு கவருடன் சென்றாலே அதிகாரிகளை சந்திக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் செய்யப்படும் வேலைகளில் அதிகாரிகள் நாட்டம் காட்டவில்லை. என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இதன்போது பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அதிகாரிகளை மட்டும் குற்றஞ்சாட்டமுடியாது என குறிப்பிட்டதுடன், மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் செய்யப்படும் வேலைத்திட்டங்களை பல மாகாணசபை உறுப்பினர்கள் உரியகாலத்திற்குள் வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் வாரியத்தின் சார்பில் பேசிய அமைச்சர் பா.சத்தியலிங்கம்,

பாதீட்டு நிதி உரிய காலத்திற்குள் செலவிடப்பட முடியாமல் இருப்பதற்கு காரணம் நிதி ஆணைக்குழு அனுமதி தமக்கு தாமதமாக கிடைப்பதேயாகும். என சுட்டிக்காட்டியதுடன்,

2016ல் முன்னதாகவே இனங்காணப்பட்ட வேலைத்திட்டங்களுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கப்பட்டு, உரிய காலத்திற்குள் முடிக்கப்படும் எனவும் 2015ம் ஆண்டுக்கான நிதி டிசெம்பர் 31ம் திகதிக்குள் 95 வீதம் செலவிடப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
 

இதன்போது பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அதிகாரிகளை மட்டும் குற்றஞ்சாட்டமுடியாது என குறிப்பிட்டதுடன், மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் செய்யப்படும் வேலைத்திட்டங்களை பல மாகாணசபை உறுப்பினர்கள் உரியகாலத்திற்குள் வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

Quote

இதன்போது பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அதிகாரிகளை மட்டும் குற்றஞ்சாட்டமுடியாது என குறிப்பிட்டதுடன், மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் செய்யப்படும் வேலைத்திட்டங்களை பல மாகாணசபை உறுப்பினர்கள் உரியகாலத்திற்குள் வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

 

Edited by Gari

வடமாகாண சபையை முடக்க .. ரணில்/மைத்திரியை விட ... சும்/சம்/மாவை கூட்டு குத்தி முறிந்து தள்ளுகிறது! ... 

... இன்று கொலைகார குத்தியின் கும்பலுடன் கூட ... வடமாகணசபயை முடக்க .... சேர்ந்து விட்டார்கள் ... நன்றிகள் ஹரி ஆதாரம் தந்ததற்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகங்களில் நடைபெறுகின்ற போது, அங்கு சென்று கூட்டத்தை அங்கிருந்து பகிஸ்கரிப்போம் என்றார்.

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எங்க குழப்பங்காட்டலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும் ஒருவர். இந்தப் பகிஸ்கரிப்பு அவருக்கு அல்வா திங்கிறமாதிரி இருக்கும். ஒருக்கால் மாகாணசபைக் கூட்டத்தில் செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஒடினவர் இவர். மாவட்ட செயலகத்தில் என்ன நடக்கப்போகிதோ சிவசிவா!

Quote

இதன்போது கருத்துக்கூறிய முதலமைச்சர், முன்னைய அரசாங்கம் எவ்வாறு வடமாகாண சபையை புறந்தள்ளிவிட்டு அனைத்து விடயங்களையும் செயற்படுத்தியதோ அவ்வாறு இந்த அரசாங்கமும் செய்கின்றது என்றார்.

மாகாணசபையில் நிர்வாகதிறன் மற்றும் வினைத்திறன் அற்ற முதலமைச்சர் ஒருவர் இருந்தால், மத்திய அரசாங்கம் தானே முன்னின்று செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. மாகாணசபை கூடுகின்றபோதெல்லாம் சும்மா தீர்மனங்களை மட்டுமே நிறைவேற்றும் செயற்றிறனற்ற ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவந்தது கூட்டமைப்பு செய்த பாரிய தவறு. என்னவோ அரசாங்கம் செய்கின்றது எனது திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியள் இருக்கேக்கை திட்டத்தொடங்கின சனம் இப்பவும் திட்டிக்கொண்டே இருக்கினம்.....:(
ஒரு வேளை இது அவையின்ரை குடிசை கைத்தொழிலாய் இருக்குமோ :rolleyes:

அப்பவே புலிகள் பிழை விடுகின்றார்கள் இப்பவும் அதன் தாக்கம் தொடருது என்பதுதான் அதன் அர்த்தம் .

6 hours ago, குமாரசாமி said:

புலியள் இருக்கேக்கை திட்டத்தொடங்கின சனம் இப்பவும் திட்டிக்கொண்டே இருக்கினம்.....:(
ஒரு வேளை இது அவையின்ரை குடிசை கைத்தொழிலாய் இருக்குமோ :rolleyes:

விடுதலைப்புலிகளின் போராட்டம். அவர்களின் அர்பபணிப்பு, அவர்களின் பலம், பலவீனம், அவர்களின் தவறுகள் என்பனவற்றை பற்றி மக்களும் கற்றறிந்த சான்றோர் அறிவர். சான்றோர்கள்கள் இதுபற்றி அலசி ஆராய்ந்துள்ளார்கள். புலிகளை பாராட்டியும் உள்ளார்கள். அதேவேளை  அவர்களின் தவறுகளை கண்டித்தும் உள்ளார்கள் ஆனால் மன வக்கிரம் காரணத்தினால்  புலிகளை திட்டுவதே நோக்காக கொண்டு,  அறிவிலித்தனமான ஆசாமிகள் சிலர்  அலைவதை மேன்மைமிக்க யாழ்களத்தின் வாசகர்கள் நன்கறிவார்கள். 

Edited by நியானி
ஒரு வரி தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

அப்பவே புலிகள் பிழை விடுகின்றார்கள் இப்பவும் அதன் தாக்கம் தொடருது என்பதுதான் அதன் அர்த்தம் .

அவர்கள் விட்டபிழை பெரும் பிழைதான்...அதுதான் இதையெல்லாம் பார்க்க வேண்டிகிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட (மாகாண சபை ஆயினும்) மறுக்கிறது என்பது புலனாகிறது. தான் நினைத்தவற்றை செய்வதற்காகவே இப்படி செய்கிறது என நினைக்கிறேன்.

  • 2 weeks later...
வியாழக்கிழமை, 24 டிசெம்பர் 2015, 01:50.57 AM GMT ]
sampantan.JPG
மாகாண சபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே இந்தச் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் ஒரு தொகுதி உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்புக்குச் சென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாணசபையின் வரவு - செலவுத் திட்டம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய நிதி உரியமுறையில் செலவு செய்யப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒதுக்கிய நிதியில் 58 சதவீதமான நிதியே செலவு செய்யப்பட்டு முடிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாலும், எஞ்சிய நிதி திரும்பிச் செல்லும் நிலையில் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்று சம்பந்தனிடம் மாகாண சபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் அதில் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் ஆராயவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, மாகாண சபை உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 27ம் அல்லது 28ம் திகதிகளில் கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

http://www.tamilwin.com/

மைத்திரி வன்னிக்கு வந்து இயற்கை முறை விவசாயத்தை தொடங்கி வைக்கும்போது முதல்வர் மைத்திரியை புகழ்ந்து தள்ளினார்.

அப்போதும் அதுக்குப்பிறகும் இதுகளைப்பற்றி மைத்திரியிடம் இவர் கதைத்து எதாவது பண்ணமுடியவில்லை அனாலும் தன்னுடைய இயலாமையை மூடிமறைக்க இவர் சிங்கள இனஎதிர்ப்பை நன்கே கையாள்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.