Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் பேரவை கூட்டத்தை ஏன் மூடிய அறைக்குள் நடத்த வேண்டும் என மாவை கேள்வி

Featured Replies

மக்கள் பேரவை கூட்டத்தை ஏன் மூடிய அறைக்குள் நடத்த வேண்டும் என மாவை கேள்வி

 

தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் திங்கள் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பேரவை எனும் பெயரில் இரகசியமாக கூட்டம் நடாத்தபப்ட்டு உள்ளது. வெளியில் சொல்லப்படும் கருத்து நாங்கள் அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்று பிரச்சாரம் செய்கின்றார்கள்

தமிழரசி கட்சியுடனோ, அல்லது அதன் தலைமையுடனோ  யாரும் பேசவில்லை அப்படி ஒரு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அதேவேளை எமக்கும் அந்த அவசியம் இல்லை என நான் நம்புகின்றேன்.

தமிழரசு கட்சி சார்பில் பேராசிரியர் சி.க சிற்றம்பலம் கலந்துகொண்டதை நாங்கள் அறிவோம். அவர் தான் தமிழரசு கட்சியின் அனுமதியுடன் தான் வந்துள்ளேன் என தெரிவித்து இருக்கின்றார்.

அவர் சொல்வது உண்மை அல்ல, அவர் ஒரு பேராசிரியர் நீண்டகாலமாக தமிழரசு கட்சியில் இருப்பவர். மூத்த துணை தலைவர். அவர் இப்படி ஒரு கூட்டணி கூடுகின்றது, என்ன நோக்கத்தோடு கூடுகின்றோம். எனபது பற்றி எமக்கு தெரிய படுத்தி இருக்கலாம்.அல்லது அதன் ஏற்பாட்டாளர்கள் எமக்கு தெரிவித்து இருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு  ஆதரவாக செயற்படுவோம். என கூறுகின்றார்கள். அப்படி ஆயின் எதற்காக,  இரசியமாக மூடிய அறையில் நடத்த வேண்டும்.

தங்களுக்கு விரும்பியவர்களை அழைத்து கூட்டத்தை நடாத்தி விட்டு அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127308/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்க துரையப்பா விளையாட்டு அரங்கில் நடத்தனுமா. அதுசரி.. மகிந்தவோடு கூட்டமைப்பு என்ன பேசினது.. இப்ப மைத்திரியோடு என்ன பேசினது என்பதை நீங்கள் மக்களுக்கு அறிவிக்காமல் மூடிமறைக்க முடியுமுன்னா..?! தமிழ் மக்கள் பேரவை மூடிய அறைக்குள் தமக்குள்.. ஆலோசிப்பதை பிழைன்னு சொல்ல முடியாது தானே. இன்று வரை கூட்டமைப்பு சம் சும் கும்பல்...மகிந்தவோடு சுற்றுச்சுற்றா என்ன பேசினீங்கன்னு ஒருத்தருக்கும் தெரியாது.

மற்றவனைப் பார்த்து கேள்வி கேட்கவும் ஒரு தகுதி வேணும். அதைக் கூட்டமைப்பில் சம் சும் மாவை கும்பல் இழந்துவிட்டது. இவர்கள் மீது மக்களுக்கு சந்தேகமே அதிகம் மிஞ்சியுள்ளது. அதை இவர்களே தான் தங்கள் வாயால்.. செயலால் தேடிக்கொண்டார்கள். அதைப் போக்குவது அவ்வளவு இலகு அல்ல. இருந்தாலும் வெளிப்படையாக எனியாவது செயற்பட முயன்றுபாருங்கள். உங்களை விட தமிழ் மக்கள் பேரவை கூடிய அளவு ரான்ஸ்பெரன்ட் அமைப்பாகவே தெரியுது.  tw_angry:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது சதிகாரர்களின் இரகசியக் கூட்டமென்பதை மாவை அறியவில்லையா இல்லாவிட்டால் அறிந்தும் அறியாதவர் போன்று நடிக்கின்றாரா? புரியவில்லையே!

பிற்குறிப்பு: வழக்கமாக இப்படியான சம்பவங்களுக்குப் பின்னர் கடிதம் எழுதும் பொயட் சார் ஏதாவது கடிதம் கிடிதம் எழுதினாலாவது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்ட்சார்  கக்கீமுக்கு கடிதம் எழுதியிருக்'கிறார் கக்கீமைக் கேட்டால் தெரியும்

சம்பந்தரும் சுமத்திரனும் உங்களுக்கே தெரியாமல் அலுவல் பார்க்கும் பொழுது ஏன் இந்தக் கேள்வி வரவில்லை. கூட்டமைப்பில் தேவையானவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள் அவர்கள் வந்திருக்கிறார்கள். மற்றும்படி நாய்வாலை நிமிர்த்த முடியாதென்று அவர்களுக்குத் தெரியும்.குடiடையயைக் குழப்பக் கூடியவர்களுக்கு அழைப்புத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பேரவை கூட்டத்தை ஏன் மூடிய அறைக்குள் நடத்த வேண்டும் என மாவை கேள்வி

 

எல்லாவற்றிற்கும் வழி காட்டி நீங்கதான்

கனடாவில் மூடிய அறைக்குள் எதற்காக உங்கள் ஆட்கள் கூட்டத்தை நடாத்தினார்கள்??

அடுத்தது

கேள்விகளை எழுதித்தாருங்கள்

பதில் தருகின்றோம்

அதுவும் வரும்....

பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வானொலியில் அறிவித்தல் கொடுத்து கோவிலில் யாரும் வரக்கூடியதாக மூடிய அறைக்குள்? கூட்டம் வைத்தார்கள் .

கூட்டத்திற்கு போன எங்களை விட  பரிசில் இருக்கும் அண்ணைக்கு நடந்தது எல்லாம் தெரியும் .

போராட்டமும் இப்படிதான் போராட போனவர்களை விட  ஓடி வந்தவர்கள் தான் இப்ப அதிகம் தெரிந்தது மாதிரி எழுதுகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தயில் என்ன பேசப்பட்டன என ஏன் மூடுமந்திரமாக உள்ளது மாவை அண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்

 அறை திறந்திருந்தால் ஏதோ ஒன்று நுழைந்து விடுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும் விக்கியரும் முத்த வெளியில் நின்று கதைத்ததாக சொல்கிறார்கள். மெய்யோ??:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே! இந்த நூற்றாண்டின் மிகமோசமான சனனாயகமீறலாகும். கண்டிக்கப்படவேண்டியதூ!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வானொலியில் அறிவித்தல் கொடுத்து கோவிலில் யாரும் வரக்கூடியதாக மூடிய அறைக்குள்? கூட்டம் வைத்தார்கள் .

கூட்டத்திற்கு போன எங்களை விட  பரிசில் இருக்கும் அண்ணைக்கு நடந்தது எல்லாம் தெரியும் .

போராட்டமும் இப்படிதான் போராட போனவர்களை விட  ஓடி வந்தவர்கள் தான் இப்ப அதிகம் தெரிந்தது மாதிரி எழுதுகின்றார்கள் .

கூட்டத்திற்கு நீங்கள் போனாலே காணுமே. ஒரு பானை  சோறுக்கு ஒரு சோறு பதமாம்.

 

இது உங்களுக்குத்தான் நல்லா பொருந்துது  போல  கிடக்குtw_bawling:

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

கூட்டத்திற்கு நீங்கள் போனாலே காணுமே. ஒரு பானை  சோறுக்கு ஒரு சோறு பதமாம்.

இது உங்களுக்குத்தான் நல்ல பொருந்துது  போல  கிடக்குtw_bawling:

இந்தக்கூட்டம்  பற்றி யாழில் ஏற்கனவே  பல கள உறவுகளால் பலமுறை எழுதப்பட்டுவிட்டது

அவருக்கு நேரம் இருக்கு

மீண்டும் தொடங்குகிறார்

நேரம் பொன்னாது காண்...

2 minutes ago, விசுகு said:

இந்தக்கூட்டம்  பற்றி யாழில் ஏற்கனவே  பல கள உறவுகளால் பலமுறை எழுதப்பட்டுவிட்டது

அவருக்கு நேரம் இருக்கு

மீண்டும் தொடங்குகிறார்

நேரம் பொன்னாது காண்...

அப்படியென்றால் ஏன் மூடிய அறைக்குள் நடந்தது ஒரு பச்சை பொய்யை எழுதினீர்கள் 

நேரம் பொன்னானது என்று பொய் புழுகு எழுத எப்படி நேரம் வருகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

அப்படியென்றால் ஏன் மூடிய அறைக்குள் நடந்தது ஒரு பச்சை பொய்யை எழுதினீர்கள் 

நேரம் பொன்னானது என்று பொய் புழுகு எழுத எப்படி நேரம் வருகின்றது 

அந்தக்கூட்டம்  எவ்வாறு நடந்தது??

யார் யார் அனுமதிக்கப்பட்டார்கள்??

கேள்விகளை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதெல்லாம் இங்கே முதலே எழுதப்பட்டவை தான்...

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை நாம் என்ன செய்யமுடியும்??

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

அந்தக்கூட்டம்  எவ்வாறு நடந்தது??

யார் யார் அனுமதிக்கப்பட்டார்கள்??

கேள்விகளை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதெல்லாம் இங்கே முதலே எழுதப்பட்டவை தான்...

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை நாம் என்ன செய்யமுடியும்??

முடிந்தால் எடுத்து பதியுங்கள் ,

நீங்கள் லண்டன் ,ஆஸி கூட்டத்துடன் கனடா கூட்டத்தை கலந்துவிட்டடீர்கள் .

பத்திரிகையில் விளம்பரம் பார்த்து கூட்டத்திற்கு போன என்னைவிட வதந்திகளை நம்பி உங்கள் அரசியல் போகுது .

கேள்வி எழுதி கொடுக்க சொன்னது உண்மை அல்லது எம்மவர் நிலை யாவரும் அறிந்ததுதான் .மற்றபடி அனைத்து பொதுமக்களையும் அழைத்துத்தான் நடந்தது .யாழில் கூட அதை பதிந்திருந்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

முடிந்தால் எடுத்து பதியுங்கள் ,

நீங்கள் லண்டன் ,ஆஸி கூட்டத்துடன் கனடா கூட்டத்தை கலந்துவிட்டடீர்கள் .

பத்திரிகையில் விளம்பரம் பார்த்து கூட்டத்திற்கு போன என்னைவிட வதந்திகளை நம்பி உங்கள் அரசியல் போகுது .

கேள்வி எழுதி கொடுக்க சொன்னது உண்மை அல்லது எம்மவர் நிலை யாவரும் அறிந்ததுதான் .மற்றபடி அனைத்து பொதுமக்களையும் அழைத்துத்தான் நடந்தது .யாழில் கூட அதை பதிந்திருந்தேன் .

இருக்கலாம்

மூடிய அறைகளுக்கிடையிலான கூட்டங்களுக்கு இவர்கள் தான் முன்னோடி என்ற கருத்தில் மாற்றமில்லை.

 

Just now, விசுகு said:

இருக்கலாம்

மூடிய அறைகளுக்கிடையிலான கூட்டங்களுக்கு இவர்கள் தான் முன்னோடி என்ற கருத்தில் மாற்றமில்லை.

 

இங்குதான் நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று நிற்கின்றீர்கள் .

தெரியாமல் எழுதக்கூடாது அப்படி எழுதினால் வேறு ஒருவர் அதை சுட்டிகாட்டும் போது மன்னிக்கவும் என்றால் விஷயம் முடிந்தது அதை விட்டு சடைய தொடங்ககூடாது .

புலம்பெயர் நாடுகளில் மூடிய அறைக்குள் அவர்கள் கூட்டம் வைப்பதற்கு ஒரே காரணம் புனர்வாழ்விற்கு உட்படுத்த வேண்டிய பலர் இன்னமும் இங்கு இருக்கின்றார்கள் .ஆஸி கூட்டத்தை பார்த்தால் விளங்கியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, arjun said:

இங்குதான் நீங்கள் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று நிற்கின்றீர்கள் .

தெரியாமல் எழுதக்கூடாது அப்படி எழுதினால் வேறு ஒருவர் அதை சுட்டிகாட்டும் போது மன்னிக்கவும் என்றால் விஷயம் முடிந்தது அதை விட்டு சடைய தொடங்ககூடாது .

புலம்பெயர் நாடுகளில் மூடிய அறைக்குள் அவர்கள் கூட்டம் வைப்பதற்கு ஒரே காரணம் புனர்வாழ்விற்கு உட்படுத்த வேண்டிய பலர் இன்னமும் இங்கு இருக்கின்றார்கள் .ஆஸி கூட்டத்தை பார்த்தால் விளங்கியிருக்கும் .

இதுக்குத்தான்  சொன்னேன் நேரம் பொன்னாது என்று..

எனது கருத்தை உடைத்தால் மன்னிப்புக்கோரலாம்

இடத்தை உடைத்து என்ன பிரயோசனம்

அதைவிட கனடாவிலும் அப்படித்தான் நடந்தது என்பதுதான் உண்மை

வேண்டுமென்றால் உங்களுக்கு நன்றி  சொல்லலாம்

நான் ஒரு உதாரணம் காட்ட நீங்க மேலும் 2 கூட்டி எனது கருத்துக்கு வலுச்சேர்த்ததற்கு..tw_dizzy:

நன்றி அண்ணா.

Edited by விசுகு

5c4046f7-993e-41f1-83e9-c1fb19ac1baa_zps

  • கருத்துக்கள உறவுகள்

சரி மைத்திரியை ஜனாதிபதியாக்க மைத்திரி,சந்திரிகா,ரணிலுடன் எழுதப்படாத ஒப்பந்நதம் போட்டீரகளே அது என்ன வெளிப்படையாகவா கதைத்தீர்கள்.அவரும் அதிபராகிட்டார்.அந்த ரகசியம் என்ன?இப்போதாவது சொல்லுங்கள்.0

இதுதான் அண்ணையின் மூடிய அறையில் நடந்த கூட்டம் .

இனி எது எழுதினாலும் செல்லாது .tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

அப்படியென்றால் ஏன் மூடிய அறைக்குள் நடந்தது ஒரு பச்சை பொய்யை எழுதினீர்கள் 

நேரம் பொன்னானது என்று பொய் புழுகு எழுத எப்படி நேரம் வருகின்றது 

 

7 hours ago, arjun said:

5c4046f7-993e-41f1-83e9-c1fb19ac1baa_zps

முதலில நத்தார் பார்டியால வந்து கருத்து எழுதிறதுகளை ஏதாவது செய்யோணும்.

இப்படி விளம்பரம் போடாட்டி காசு எப்படி சேர்க்கிறது. அது சரி ஏன் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு. வேற பெயர் வைச்சால் சனம் ஏன் நாயெண்டும் கேளாது. அப்படித்தானே

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வெளிப்படைத்தனமை உள்ள ஆட்கள் நேருக்கு நேரான கேள்விகளைக் தவிர்த்து கேள்விகளை எழுத்து மூலம் வாங்கி வடி கட்டியது ஏன்?தங்களுக்குச் சாதகமான கேள்வியை மட்டும் தாங்களே எழுதிக் கொடுத்து விடை அளிப்பது ஏன்?இவர் வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பாக இருப்பது தமிழனின் தலைவிதி.

12 minutes ago, புலவர் said:

இவ்வளவு வெளிப்படைத்தனமை உள்ள ஆட்கள் நேருக்கு நேரான கேள்விகளைக் தவிர்த்து கேள்விகளை எழுத்து மூலம் வாங்கி வடி கட்டியது ஏன்?தங்களுக்குச் சாதகமான கேள்வியை மட்டும் தாங்களே எழுதிக் கொடுத்து விடை அளிப்பது ஏன்?இவர் வெளிவிவகாரத்துறைக்குப் பொறுப்பாக இருப்பது தமிழனின் தலைவிதி.

கேள்விகளை எழுதி வாங்கிப் பின்னர் அதற்குப் பதிலளிப்பது வழமையான விடயம்தான். சில இடங்களில் ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே கேட்கலாம் எனவும் மட்டுப் படுத்தப்படுவதுண்டு. இவையெல்லாம் கேள்வி நேரத்தில் சம்பாசனை இருவருடன் நின்றுவிடுவதை தடுப்பதற்கான முன்னேற்பாடு.

அதாவது ஒருவரது கேள்விக்கு பதிலளித்ததும் அவரே பதிலில் இருந்து அடுத்த கேள்வியை ஆரம்பிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுதான். இல்லாவிடின் ஒருவரே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார். அங்கு அது ஒரு வாக்குவாதமாக மாறலாம். அப்படி மாறுவதை நாகரீக சமுதாயம் விரும்புவதில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

நாகரிகசமுதாயம் விரும்புவதில்லை என்று நாசூக்காக சங்கடமான கேள்விகளை தவிர்க்கும் உத்தி உள்ளதே.உலகின் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திய தேசியத்தலைவர் சர்ச்சைக்குரிய கேள்விகள் வரும் என்று தெரிந்தும் உலகப் பத்திரிகையாளர்களின் சவாலான கேள்விகளுக்கு நேருக்கு நேர்முகம் கொடுத்தாரே.அப்படியிருக்க அவர் போட்ட பிச்சையில் எம்பியான கைபுள்ள சுமத்திரனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டுமோ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.