Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை  -  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்:-

 

சர்ச்சைக்கு அகப்பட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
வலி.வடக்கில் விடுவிக்க ப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வியாழக்கிழமை மாலை அப்பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் சென்று இருந்தார்.
 
அதன்போது வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாம் இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வருமாறும் முதலமைச்சரை அழைத்து இருந்தார்.
 
அதற்கு முதலமைச்சர் ஊடகவியலாளர்களை காட்டி இவர்கள் நிற்கும் போது அந்த வீடுகளை சென்று நான் பார்வையிட்டால் "சர்ச்சைக்கு உரிய வீடுகளை பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் என செய்தியை வெளியிட்டு மேலும் சர்ர்சையை கிளப்பி விடுவார்கள், 
 
அதனால் இன்றைய தினம் செல்லாது இவர்கள் (ஊடகவியலாளர்கள்) இல்லாத ஒரு நாள் சென்று பார்வையிடுவோம் என மீள்குடியேற்ற தலைவருக்கு முதலமைச்சர் ஊடகவியலார்களை பார்த்து சிரித்தவாறே பதிலளித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக   வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை சென்றிருந்தார். அதன்போது வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வருமாறும் அழைத்தார்.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை சென்றிருந்தார். அதன்போது வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற இரு வீடுகளுக்கு அருகில் முதலமைச்சர் நின்றிருந்த வேளை மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் அந்த இரு வீடுகளுமே இராணுவத்தின் வதை முகாம் என சந்தேகிக்க படுகின்றது எனவும் அதனை மிக அருகில் சென்று பார்வையிட வருமாறும் அழைத்தார்.

   

அதற்கு முதலமைச்சர் ஊடகவியலாளர்களை காட்டி இவர்கள் நிற்கும் போது அந்த வீடுகளை சென்று நான் பார்வையிட்டால் "சர்ச்சைக்கு உரிய வீடுகளை பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் என செய்தியை வெளியிட்டு மேலும் சர்ர்சையை கிளப்பி விடுவார்கள், அதனால் இன்றைய தினம் செல்லாது இவர்கள் (ஊடகவியலாளர்கள்) இல்லாத ஒரு நாள் சென்று பார்வையிடுவோம் என மீள்குடியேற்ற தலைவருக்கு முதலமைச்சர் ஊடகவியலாளர்களை பார்த்து சிரித்தவாறே பதிலளித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148814&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கோழை

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முடிவு. இந்த ஊடகங்களின் அதிகப் பிரசிங்கத்தனம்.. சிங்களக் கொடுமையாளர்களுக்கே உதவி வருகிறது. தப்பித்தவறிக்கிடக்கும் ஓரிரு சான்றுகளையும் ஊடகங்கள் என்ற பெயரில் எதிரிக்கு காட்டிக்கொடுத்து அவன் அவற்றையும் சிதைத்துவிட வழி பண்ணுவதிலும்.. ஆதாரங்களை ரகசியமாகத் திரியட்டிய பின்.. தகுந்த இடங்களில் அவற்றை சமர்ப்பித்த பின்.. தகுந்தவர்கள் அதனை ஆராய இடமளித்த பின்.. ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்துவதே நல்லது.

அண்மையில் இனங்காணப்பட்ட ஓரிரு சான்றுகளையும் எதிரி ஊடகச் செய்தியின் பின் அழித்தொழித்துவிட்டான். இதற்கு முதலமைச்சரும் உடந்தையாக இருப்பதை தவிர்க்க கையாண்ட இந்த தந்திரம் நன்மையே. எஞ்சியுள்ள ஆதாரங்களையாவது திரட்டலாம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

சரியான கோழை

கை பட்டால் குற்றம்

கால் பட்டால் கற்றம் என்றால் அவர்தான் என்ன செய்யமுடியும்??

இப்ப எழுதாவிட்டால் எப்ப எழுதினீர்கள் என்று கேட்பார்கள் .

விக்கியரின் அரசியல் விரைவில் முற்றுபெறும் சேர்ந்த கூட்டம் அப்படி . 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும் அது விக்கியிடம் கொஞ்சம் கூட இல்லை.இவர் எல்லாம் அரசியலில் இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறார்

1 hour ago, ரதி said:

விசுகு அண்ணா ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும் அது விக்கியிடம் கொஞ்சம் கூட இல்லை.இவர் எல்லாம் அரசியலில் இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறார்

விக்கியர் மட்டும் தான் கோழையோ...? 

1 hour ago, ரதி said:

விசுகு அண்ணா ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும் அது விக்கியிடம் கொஞ்சம் கூட இல்லை.இவர் எல்லாம் அரசியலில் இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறார்

ரதி அவர்களே தைரியத்தை இழந்து மற்றவர்களிடம் தொழுதுண்து வாழ்வதே சிறந்த ராஜ தந்திரம். லேற்றஸ் ஸ்ரைல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விசுகு அண்ணா ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும் அது விக்கியிடம் கொஞ்சம் கூட இல்லை.இவர் எல்லாம் அரசியலில் இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறார்

என்ன ராதியக்கா இப்படி சொல்லீட்டீங்க...
நானும் எதோ அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது உண்மையான இதய சுத்தியோடு பாகுபாடு இல்லாமல் மக்களின் நலன் குறித்து மட்டுமே வேலை செய்யும் குணம், ராஜதந்திரம் அப்டி, இப்டின்னு இல்ல நெனச்சுக்கிட்டு இருக்கிறேன்...நீங்க என்னடான்னா " ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும்னு" சொல்றீங்க.
சரி அப்பா நீங்க சொல்றது தான் சரி, ஏன்னா எனக்கு தெரிய தலைவர் பிரபாகரன், அண்ணன் தமிழ்செல்வம் எல்லாம் நீங்கள் சொல்லிய தைரியமும்,துணிச்சலும் "நெறையவே" இருந்த அரசியல் வாதிகள் தான்.
"ஆர்மி காம்ப்" அடிக்கும் அளவுக்கு தைரியம் துணிச்சல் உள்ள அரசியல்வாதிகள் அவர்கள் என்றால் பாருங்களேன்.

பி.கு 
ரதி அக்காவோடு ஒரு சிநேகமான சீண்டல்.. :)

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎8‎/‎2016 at 4:18 PM, arjun said:

இப்ப எழுதாவிட்டால் எப்ப எழுதினீர்கள் என்று கேட்பார்கள் .

விக்கியரின் அரசியல் விரைவில் முற்றுபெறும் சேர்ந்த கூட்டம் அப்படி . 

அப்படி முற்றுப்பெற்றால் தமிழன் திருவோடு ஏந்த வேண்டியதுதான்

5 hours ago, ரதி said:

விசுகு அண்ணா ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் தேவையானது தைரியமும்,துணிச்சலும் அது விக்கியிடம் கொஞ்சம் கூட இல்லை.இவர் எல்லாம் அரசியலில் இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறார்

தைரியமாகவும் துணிச்சலாகவும் பதில் சொன்னால் இங்க ஒரு கூட்டம் அவருக்கு அரசியல், ராஜதந்திரம் ஒன்றும் தெரியாதேன்றேல்லோ சொல்லுது :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல்வாதியிடம் முக்கியமாக இருக்க வேண்டியது என நான் நினைப்பது தைரியம்,துணிச்சல்,சமயோசித புத்தி[உந்த இடத்தை இந்த நேரத்தில் சுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது?...சம்மந்தனோ அல்லது சுமத்திரனோ இந்த இடத்திற்குப் இந்த சூழ்நிலையில் போனார்களா?...போக மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்,அப்படிப் போனால் அவர்களுக்கும் அப்படி நிலை வந்திருக்கும்.அதனால் தான் அவர்கள் போகவில்லை.],எதை,எங்கே,எப்போது,யாரிடம் கதைப்பது என்ற ஒரு அறிவு கொஞ்சம் கூட இல்லை,சுயமாக முடிவெடுக்க தெரியாதவர்?(எப்படி தெரியும் ஈழப் பிரச்சனைப் பற்றி தெரிந்தால் தானே முடிவு எடுக்க முடியும்),எடுப்பார் கைப்பிள்ளை இவர்,நிர்வகிக்கும் திறன் இவரிடம் கொஞ்சம் கூட இல்லை.இவரை விட பிள்ளையான் எவ்வளவோ பெட்டர்.முக்கியமாக சூழ்ச்சி,தந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.ராஜ தந்திரம் இவரிடம் அறவேயில்லை.இன்னும் கணக்க சொல்லலாம்....

இவர் இறைபக்தியுள்ள நல்ல மனிதராய் இருக்கலாம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்குரிய எந்தக் குணமும் இவரிடம் இல்லை.


  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு அரசியல்வாதியிடம் முக்கியமாக இருக்க வேண்டியது என நான் நினைப்பது தைரியம்,துணிச்சல்,சமயோசித புத்தி

[உந்த இடத்தை இந்த நேரத்தில் சுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது?...சம்மந்தனோ அல்லது சுமத்திரனோ இந்த இடத்திற்குப் இந்த சூழ்நிலையில் போனார்களா?...போக மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்,அப்படிப் போனால் அவர்களுக்கும் அப்படி நிலை வந்திருக்கும்.அதனால் தான் அவர்கள் போகவில்லை.]

,எதை,எங்கே,எப்போது,யாரிடம் கதைப்பது என்ற ஒரு அறிவு கொஞ்சம் கூட இல்லை,

சுயமாக முடிவெடுக்க தெரியாதவர்?(எப்படி தெரியும் ஈழப் பிரச்சனைப் பற்றி தெரிந்தால் தானே முடிவு எடுக்க முடியும்)

,எடுப்பார் கைப்பிள்ளை இவர்,

நிர்வகிக்கும் திறன் இவரிடம் கொஞ்சம் கூட இல்லை

.இவரை விட பிள்ளையான் எவ்வளவோ பெட்டர்.

முக்கியமாக சூழ்ச்சி,தந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

ராஜ தந்திரம் இவரிடம் அறவேயில்லை.இன்னும் கணக்க சொல்லலாம்....

இவர் இறைபக்தியுள்ள நல்ல மனிதராய் இருக்கலாம்.

ஆனால் ஒரு அரசியல்வாதிக்குரிய எந்தக் குணமும் இவரிடம் இல்லை.

 

தெளிவான அரசியல் பார்வை 

அறிவுபூர்வமான  சிந்தனை 

மிகவும் தீக்க தரிசனாமான பார்வை 

நாக்கீரன் நாவில் மட்டுமே உதிக்க கூடிய சொற்கள் 

அர்சந்திரன் வாய்மை தோற்றாலும் தோற்கும் 

இன்றைய நேற்றைய நாளைய மிக துல்லியமான (டிஜிட்டல்) கணிப்பு 
 

On 1/8/2016 at 8:18 AM, arjun said:

இப்ப எழுதாவிட்டால் எப்ப எழுதினீர்கள் என்று கேட்பார்கள் .

விக்கியரின் அரசியல் விரைவில் முற்றுபெறும் சேர்ந்த கூட்டம் அப்படி . 

மிக சரியான கணிப்பு என்றுதான் நினைக்கிறேன் 
எப்படியும் இன்னொமொரு 15  வருடத்தில் அவருக்கு 80 வயது வரும் 
அவர் ஒதுங்கி விடுவார்.


அவ்வப்போது தீர்க்க தரிசிகள் புவியில் பிறப்புற்று 
எதிர்காலம் பற்றி துல்லியமாக கணித்து சொல்வார்களாம் 
என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

யாழ்களத்தின் புண்ணியத்தில் நேரிடையாக பார்க்கும் பாக்கியம் 
கிட்டியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஒரு அரசியல்வாதியிடம் முக்கியமாக இருக்க வேண்டியது என நான் நினைப்பது தைரியம்,துணிச்சல்,சமயோசித புத்தி[உந்த இடத்தை இந்த நேரத்தில் சுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இவருக்கு ஏன் வந்தது?...சம்மந்தனோ அல்லது சுமத்திரனோ இந்த இடத்திற்குப் இந்த சூழ்நிலையில் போனார்களா?...போக மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்,அப்படிப் போனால் அவர்களுக்கும் அப்படி நிலை வந்திருக்கும்.அதனால் தான் அவர்கள் போகவில்லை.],எதை,எங்கே,எப்போது,யாரிடம் கதைப்பது என்ற ஒரு அறிவு கொஞ்சம் கூட இல்லை,சுயமாக முடிவெடுக்க தெரியாதவர்?(எப்படி தெரியும் ஈழப் பிரச்சனைப் பற்றி தெரிந்தால் தானே முடிவு எடுக்க முடியும்),எடுப்பார் கைப்பிள்ளை இவர்,நிர்வகிக்கும் திறன் இவரிடம் கொஞ்சம் கூட இல்லை.இவரை விட பிள்ளையான் எவ்வளவோ பெட்டர்.முக்கியமாக சூழ்ச்சி,தந்திரம் தெரிந்திருக்க வேண்டும்.ராஜ தந்திரம் இவரிடம் அறவேயில்லை.இன்னும் கணக்க சொல்லலாம்....

இவர் இறைபக்தியுள்ள நல்ல மனிதராய் இருக்கலாம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்குரிய எந்தக் குணமும் இவரிடம் இல்லை.

 

இதையே முன்னரும் எழுதியிருக்கின்றேன் இவரைவிட முன்னாள் குழந்தைப் போராளி பிள்ளையான் சிறந்த நிர்வாகத் திறன்மிக்கவர். பிள்ளையான் கிழக்கில் செய்ததில் விக்கி சிறிதளவு கூட செய்யவில்லை (என்ன செய்தார் என்று என்னிடம் கேட்கவேண்டாம்). சும்மா நிதி கிடைக்கவில்லை என்று நொண்டிச் சாட்டு விடுறதும். அய்நாவிடம் இருந்து கிடைத்த நிதியை சொந்த நலன் கருதி திருப்பப் பண்னியதும் விக்கியின் சாதனை. இன்னும் கொஞ்ச தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கு அதோட நல்லாப் பச்சைத் தண்ணியிலை விக்கி பலகாரம் சுடுவாராம் எண்டும் கேள்வி!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சபை அறிந்து மக்கள் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையே ஊடகங்களில் சொல்லி இருந்தால்... திரிபுகள் தான் மிஞ்சி இருக்கும்.

சம் சும் கும்பல் என்ன செய்திட்டு இருக்கு.. தன்னிச்சையாக...மகிந்தவுக்கு தேசிய தலைவர் அந்தஸ்து கொடுத்து கெளரவிச்சுக்கிட்டு.. வெளிநாட்டவர்களோடு.. ஹாட்டல்களில் தனிப்பட்ட சந்திப்புக்களை நடத்திக்கிட்டு இருக்குது. அதை விட விக்கி ஐயாவின் மக்கள் நலன்சார்ந்த.. மக்கள் மனவோட்டம் சார்ந்த அரசியல் எவ்வளவோ மேல். tw_blush:

20 minutes ago, Maruthankerny said:

தெளிவான அரசியல் பார்வை 

அறிவுபூர்வமான  சிந்தனை 

மிகவும் தீக்க தரிசனாமான பார்வை 

நாக்கீரன் நாவில் மட்டுமே உதிக்க கூடிய சொற்கள் 

அர்சந்திரன் வாய்மை தோற்றாலும் தோற்கும் 

இன்றைய நேற்றைய நாளைய மிக துல்லியமான (டிஜிட்டல்) கணிப்பு 
 

மிக சரியான கணிப்பு என்றுதான் நினைக்கிறேன் 
எப்படியும் இன்னொமொரு 15  வருடத்தில் அவருக்கு 80 வயது வரும் 
அவர் ஒதுங்கி விடுவார்.


அவ்வப்போது தீர்க்க தரிசிகள் புவியில் பிறப்புற்று 
எதிர்காலம் பற்றி துல்லியமாக கணித்து சொல்வார்களாம் 
என்று கேள்விபட்டு இருக்கிறேன்.

யாழ்களத்தின் புண்ணியத்தில் நேரிடையாக பார்க்கும் பாக்கியம் 
கிட்டியுள்ளது. 

விரைவில் என்றால் 15 வருட கணக்கு நல்லா இருக்கு ,அப்ப புலிகளின் யுத்தமும் விரைவில் முடிந்தது என்று சொல்ல உதவியாக இருக்கும் போல .

நல்லா தான் கணக்கு பார்கின்றாப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

விரைவில் என்றால் 15 வருட கணக்கு நல்லா இருக்கு ,அப்ப புலிகளின் யுத்தமும் விரைவில் முடிந்தது என்று சொல்ல உதவியாக இருக்கும் போல .

நல்லா தான் கணக்கு பார்கின்றாப்பா 

கணிப்பு என்பது 

ஏன் ?
எப்படி ?
எப்போது ?

நேரிடையான தாக்கம் 
எதிரிடையான தாக்கம் 

எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து விளக்கமாக சொல்வது.

ஆக குறைந்தது வரும் பாராளுமன்ற  தேர்தல் அல்லது சேனாதிபதி தேர்தல் 
அதன் தாக்கம் எவாறு இவரை பாதிக்கும். அதனால் இவருடைய அரசியல் எந்த இடத்தில் நிற்கும் 
என்றாவது எழுத வேண்டும்.

அதைவிட்டு விட்டு ....
எதோ தீர்க்க தரிசிபோல் ......... ஆண்பிள்ளைதான் பிறக்கும் தவறினால் பெண்பிள்ளை 
என்று யார்வேண்டுமானாலும் எழுதலாம். 

இதவிட ராதியக்க எழுதினது (தமிழில் அவதூறு என்று சொன்னாலும்)
பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்.

(தனிப்பட தமிழ் பேரவை அது இது என்று ரவுடிகள் எல்லாம் கூடி ஒன்றும் நடக்காது என்பதே எனது கருத்தும்) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்தும் மகிந்தவுக்கு தேசியத்தலைவர் பட்டம் கொடுத்த சம்மந்தம்...
சம்பந்தன் மாடிப்படி ஏறிப்போய் கட்சிக்கு வரச்சொல்லி கூப்பிட்ட அரைகுறை அனுபவமுள்ள சுமந்திரன்....
இவர்களை விட...

பொய் பேச தெரியாதவரும் சட்ட அனுபவமும் உலக அரசியலும் தெரிந்த ஒருவர் எவ்வளவோ மேல் tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/01/2016 at 3:52 AM, தயா said:

விக்கியர் மட்டும் தான் கோழையோ...? 

தைரியசாலிகள் சம்பந்தரும் சுமத்திரனும் தான்..tw_astonished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.