Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்!

Featured Replies

தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்!
 
 
தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்!
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
பல தகைமைகளுடைய ஆளுநர் ஒருவர் வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். எமது ஆளுநர் ஒரு ஆசிரியராக இருந்தவர். ஆசிரியராக இருப்பவர்கள் கொடுப்பதற்காக இருக்கின்றார்களே தவிர, எடுப்பவர்கள் இல்லை. எதையும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்ற அன்பு மனப்பாங்கினைக் கொண்டவர்கள்.
 
தமிழ் பேசும் ஒருவர். எமது மொழியை பேசும் ஒருவர் வடமாகாண ஆளுநராக வருகை தந்திருப்பது எமக்கு மகிழச்சி தரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. அத்துடன் அவர் எமது மனோநிலையை அறிந்து செயற்படுவார் என்பதில் தாம் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தோசமாக இருக்கு ,

உங்களுக்குள் அடிபடாமல் பணத்தை உங்கள் பையிற்குள் போடாமல் பாதிக்கபட்ட மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள் .

எங்களை போல் மற்றவர்களை நினைக்க படாது:rolleyes:

15 minutes ago, appan said:

எங்களை போல் மற்றவர்களை நினைக்க படாது:rolleyes:

கொடுத்து ஏமாந்தவர்கள் அப்படிதான் எழுதுவார்கள் மற்றவர்கள் ஏமாற கூடாது என்ற நல்ல எண்ணத்தில் 

ஏமாற்றியவர்கள் அப்படியொன்றும் நடப்பதே இல்லை என்றுதான் நிற்பார்கள் இன்னமும் காசு அடிக்கும் நோக்கில் .

இன்று ஐங்கரநேசனில் ஒரு வழக்கு பதிவாகி இருக்கு .

தமிழ்நாடு ஈழத்தமிழர்களையும் ஏமாற்றி பணம் அடிக்க இன்றும் புலம்பெயர்தேசமெங்கும் ஒரு கூட்டம் அலையுது .ஏற்கனவே சும்மா இருந்து பணம் பார்த்த கோஸ்டிகள் அவர்கள் .

மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுவது அவசியம் .அது சிலரின் பிழைப்பை கெடுப்பதாக அவர்கள் உணர்ந்தால் நான் ஒன்றும் செய்ய,முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அடிப்பது,அடித்தது போல் மற்றவர்களும் அடிப்பார்கள் என நாங்கள் நினைக்கக் கூடாது.

எங்களிலும் பார்க்க  கூட  அடித்திட்டால் என்ன செய்வது tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

எங்களை போல் மற்றவர்களை நினைக்க படாது:rolleyes:

சரி நீங்கள் சொன்னது போலவே உங்களைப்போல மற்றவர்களை நினைக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

தமிழ் பேசும் ஒருவர். எமது மொழியை பேசும் ஒருவர் வடமாகாண ஆளுநராக வருகை தந்திருப்பது எமக்கு மகிழச்சி தரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

குரேயை விட ஒரு தமிழரை அந்த இடத்திற்கு நியமித்திருந்தால் இன்னும் நல்லா தமிழ் பேசி இருப்பார்... சிலவேளை டக்கிளஸ் ஆட்கள் மாதிரி ஆக்கள் வந்திட்டாலும் பிரச்சனை தான்.

மலினமான சிங்களக் கட்டமைப்புக்குள்.. பலமான நியமனம் என்றிருக்க வழியில்லை தானே. அந்த வகையில்.. பலவீனத்தில் ஒரு பலம்.. என்று நினைக்கிறார் போல.. விக்கி ஐயா. பொறுத்திருந்து பார்க்கலாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் ஆளுனராய் இருந்த ஒரு தமிழரை, வங்க ஆளுனராய் இருந்த ஒரு வங்காளி, கேரள ஆளுனராய் இருந்த ஒரு மலையாளியை காட்டுங்கள் பாக்கலாம்.

அதே பிரதேசத்தை சாராதவர்கள் ஆளுநனராய் வந்தார் போட்டி அதிகார மையம் ஏற்படாது.

அதனாலேதான் சுவாமிநாதன் மேல்மாகாணத்திலும் குரே வடமாகாணத்திலும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய அமைப்பு முறையே பிழை என்கிறம்.. பிறகு.. ஆளுனராய் எவர் இருந்தால் என்ன..??!

ஹிந்திய அமைப்பு முறையில்..  மொழி வாரி தேசிய இனங்களை ஹிந்தியம் என்ற இறையாண்மைக்குள் இரையாக்க உள்ள நடைமுறைகளை.. ஈழத்தில்.. சிங்களம் என்ற இறையாண்மைக்கு பலியிட நடக்கும் நாடகங்களை எல்லாம் ஏற்கும் நிலையில் இல்லை.

அமெரிக்காவில்.. அத்தனை மாநிலங்களுக்கும்.. இங்கிலிஷ் பேசுறவன் தான்.. ஆளுநர். ஏன் அதை உதாரணமா காட்ட வராதோ..?! tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

தமிழ் நாட்டின் ஆளுனராய் இருந்த ஒரு தமிழரை, வங்க ஆளுனராய் இருந்த ஒரு வங்காளி, கேரள ஆளுனராய் இருந்த ஒரு மலையாளியை காட்டுங்கள் பாக்கலாம்.

அதே பிரதேசத்தை சாராதவர்கள் ஆளுநனராய் வந்தார் போட்டி அதிகார மையம் ஏற்படாது.

அதனாலேதான் சுவாமிநாதன் மேல்மாகாணத்திலும் குரே வடமாகாணத்திலும்.

 

இங்கு அமெரிக்காவில் சொந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் 
ஆளுனராய் இருக்கிறார்கள் 
எல்லாம் நன்றாகத்தான் போகிறது 

இந்தியாவை விட சிறப்பாக இருக்கிறது.

வேறு ஒரு மாநிலத்தவர் என்ற தகமை 
எப்படி மாநிலத்தில் நன்மை பயக்கும் ?

 

ஆளுநர் 
போட்டி அதிகார மையம் ?

யார் போட்டியாளர்கள் ?
என்ன போட்டி ?

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கஸ்டம்தான் டிரை பண்ணுறேன்.

அமெரிக்க ஆளுனர் தேர்தல் மூலம் வரும் அரசியல்வாதி ஆகவே அவர் அந்த மாநிலத்தில் இருந்து வருவது வியப்பில்லை. 

இலங்கை இந்தியாவில் முதல்வர்கள் மாதிரி.

ஆனால் இலங்கை இந்திய ஆளுநர்கள் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களும் அதே மாநிலத்தில் இருந்து வந்தால், தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வருக்கு இணையாக அவர்களும் அரசியல் செய்யலாம். போட்டி அதிகார மையம் உருவாகலாம்.

தவிரவும் ஆளுனரும் முதலமைச்சரும் ஒரே பிரதேச/ இனத்தில் வரும் போது இருவரும் சேர்ந்து மத்திய அரசின் பங்கை குறைக்கலாம்.

இவற்றை தடுக்கும் ஒரு constitutional arrangement ஏ இது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இங்கு அமெரிக்காவில் சொந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் 
ஆளுனராய் இருக்கிறார்கள் 
எல்லாம் நன்றாகத்தான் போகிறது 

இந்தியாவை விட சிறப்பாக இருக்கிறது.

வேறு ஒரு மாநிலத்தவர் என்ற தகமை 
எப்படி மாநிலத்தில் நன்மை பயக்கும் ?

 

ஆளுநர் 
போட்டி அதிகார மையம் ?

யார் போட்டியாளர்கள் ?
என்ன போட்டி ?

கோவிக்க கூடாது மருதர்! அமெரிக்க ஆட்சி முறைகள் பற்றி இவ்வளவு தெளிவோடு எப்படிக் குடியுரிமைச் சோதனை பாஸ் பண்ணினீர்கள்? அமெரிக்காவில் வசிக்காத கோசானுக்குத் தெரிந்த அளவு (அமெரிக்காவில் கவர்னர்கள் அரசியல்வாதிகள், சீரியசான நிர்வாகிகள் அல்ல என்று) உங்களுக்குத் தெரியாமல் போவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கோவிக்க கூடாது மருதர்! அமெரிக்க ஆட்சி முறைகள் பற்றி இவ்வளவு தெளிவோடு எப்படிக் குடியுரிமைச் சோதனை பாஸ் பண்ணினீர்கள்? அமெரிக்காவில் வசிக்காத கோசானுக்குத் தெரிந்த அளவு (அமெரிக்காவில் கவர்னர்கள் அரசியல்வாதிகள், சீரியசான நிர்வாகிகள் அல்ல என்று) உங்களுக்குத் தெரியாமல் போவது ஏன்?

இதில் கோவிக்க ஒன்றுமில்லை 
இன்னொருவரை மட்டமாக்கும் மனோநிலையை கடந்து விட்டால் 
நாம் அறிய ஆயிரம் கோடி விடயமிந்த உலகில் இருக்கிறது.

கோசனின் விளக்கத்தில் 
உண்மையும் விசயமும் இருந்தாலும் 

இங்கு அவர் சொல்வதுபோல் விடயமில்லை.
அங்கு பெடரலில் இருந்து ஆளுனரை அனுப்புகிறார்கள் 

இங்கு மாநிலத்தில் இருந்து 2செனட்டரை அனுப்புகிறோம் 
அவர் சொல்வதுபோல் தேர்தல் மூலம் அனுப்புகிறோமே தவிர 
விடயம் ஒன்றுதான்.


எமது மாநிலத்திற்கு  எப்படி இன்னொரு மாநிலத்தவர் நன்மை பயக்கமுடியும் ?
இதுதான் எனது கேள்வி! 

அவருடைய விளக்கம் அவர் முதல்வருக்கு போட்டியாகலாம் என்பது 
(அதில் எனக்கு கூடிய தெளிவில்லை  ஆளுனர் முதல்வர் இவர்களின் அதிகாரம் எவளவு?
எனபதில் இருந்துதான் அதை நிர்ணயிக்க முடியும்)

இங்கு கோவேர்ணருக்கு 
செனடொர் போட்டியாக முடியாது 
இரு வேறு கட்சி தளங்கள் இருப்பதால் 
இங்குதான் போட்டி விடயம் அதிகம்.

இப்போ கூட ரேபப்ளிக்கன் 435இல் 246 ரேப்ரசெண்டிவ் வாக்கை தம் வசம் 
வைத்திருப்பதால் ஒபாமாவால் கூட எதையும் நிறைவேற்ற முடியவில்லை.  

1 hour ago, goshan_che said:

கொஞ்சம் கஸ்டம்தான் டிரை பண்ணுறேன்.

அமெரிக்க ஆளுனர் தேர்தல் மூலம் வரும் அரசியல்வாதி ஆகவே அவர் அந்த மாநிலத்தில் இருந்து வருவது வியப்பில்லை. 

இலங்கை இந்தியாவில் முதல்வர்கள் மாதிரி.

ஆனால் இலங்கை இந்திய ஆளுநர்கள் மத்திய அரசின் அதிகாரிகள். அவர்களும் அதே மாநிலத்தில் இருந்து வந்தால், தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வருக்கு இணையாக அவர்களும் அரசியல் செய்யலாம். போட்டி அதிகார மையம் உருவாகலாம்.

தவிரவும் ஆளுனரும் முதலமைச்சரும் ஒரே பிரதேச/ இனத்தில் வரும் போது இருவரும் சேர்ந்து மத்திய அரசின் பங்கை குறைக்கலாம்.

இவற்றை தடுக்கும் ஒரு constitutional arrangement ஏ இது.

பதிலுக்கு நன்றி !

ஆளுநருக்கு மத்திய அரசான்மையை மாநிலத்தில் நிறைவேற்றுவது 
முதல்வருக்கு மாநிலத்தை மத்தியிலும் உள்ளூரிலும் ஆள்வது எனுபோது 
எந்தவைகாயன போட்டி இருக்கும் ?

ஆளுநர் முதல்வருக்கு ஈடாகலாமா ?
அல்லது ஈடகிவிடலாம் எனும் நிலையை தடுத்து வைக்கிறார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கண்ணை என்னால் இதுக்கு மேல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரின் உண்மையான அதிகாரங்கள் என்ன என்ன 
என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது ....

ஓவரு முறையும் ஆளுனரை மாற்றும்போதும் செய்தி இருக்கும் 
பின்பு ஆளுனர் ஒருவர் இருப்பதே தெரியாது.

அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.
ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ? 

39 minutes ago, Maruthankerny said:

ஆளுநரின் உண்மையான அதிகாரங்கள் என்ன என்ன 
என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது ....

ஓவரு முறையும் ஆளுனரை மாற்றும்போதும் செய்தி இருக்கும் 
பின்பு ஆளுனர் ஒருவர் இருப்பதே தெரியாது.

அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.
ஆளுநரின் அதிகாரங்கள் என்ன ? 

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா, தகர்ப்பாரா?பொறுத்திருந்து பாப்போம்.

நம்மால, நமக்கெண்டு, நாமே நம்பி தேர்ந்து எடுத்து   அனுப்பினதுகள் எல்லாம் பதவிச் சுகம் கண்டவுடன், எங்களையும்  மறந்து, தங்கட கடமை, சொன்ன வாக்குறுதிகளையும் மறந்து எங்களையே விலைபேசி, எள்ளி நகையாடுதுகள்.

இது எவ்வளவுக்கு அவியுமோ, கருகுமோ? எப்படியிருந்தாலும் உங்களுடைய முரண்பாடற்ற பேச்சு வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

:grin:

 

6 hours ago, arjun said:

கொடுத்து ஏமாந்தவர்கள் அப்படிதான் எழுதுவார்கள் மற்றவர்கள் ஏமாற கூடாது என்ற நல்ல எண்ணத்தில் 

ஏமாற்றியவர்கள் அப்படியொன்றும் நடப்பதே இல்லை என்றுதான் நிற்பார்கள் இன்னமும் காசு அடிக்கும் நோக்கில் .

இன்று ஐங்கரநேசனில் ஒரு வழக்கு பதிவாகி இருக்கு .

தமிழ்நாடு ஈழத்தமிழர்களையும் ஏமாற்றி பணம் அடிக்க இன்றும் புலம்பெயர்தேசமெங்கும் ஒரு கூட்டம் அலையுது .ஏற்கனவே சும்மா இருந்து பணம் பார்த்த கோஸ்டிகள் அவர்கள் .

மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுவது அவசியம் .அது சிலரின் பிழைப்பை கெடுப்பதாக அவர்கள் உணர்ந்தால் நான் ஒன்றும் செய்ய,முடியாது .

ஏமாற்றி பணம் அடிக்க இன்றும் புலம்பெயர்தேசமெங்கும் ஒரு கூட்டம் அலையுது  ..

அர்ஜுன் அண்ணா 
தமிழ்கூறும் நல்உலகுக்கு ஒரு காரியம் செய்யுங்கள் இந்த கோஷ்டி (குறைந்த பட்சம் கனடாவில்) யார் என்பதை அறியத்தாருங்கள். நான் சென்று அவர்களிடம் விளக்கம் கேட்கிறேன். ஒரு ஈழ தமிழனாக இது என் கடமை என்பதாகவே உணர்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.