Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி

[ Saturday,7 May 2016, 04:30:02 ] 
b97d4ea7-52b9-4787-b15e-9285ac8bfc37.jpg

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த மோகனராசா நிசாந்தன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பரமநாதன் ரெஜராம் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் தொடரந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://ibctamil.com/news/index/23289

 

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் பயலுகள். 
ஆராவது... தண்டவாளத்தில் படுத்து நித்திரை கொள்ளுவானா? Smiley

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

முட்டாள் பயலுகள். 
ஆராவது... தண்டவாளத்தில் படுத்து நித்திரை கொள்ளுவானா? Smiley

சந்தேகமாய் இருக்கிறது. விபரம் வெளியில் வரலாம். முடக்கவும் படலாம். எல்லாப்  பேய்களும் தமிழனிலதான் வீரத்தைக் காட்டுதுகள். அதனால நம்மவர்களும் பேயாக மாறிவிட்டார்கள். அதனாலோ என்னவோ சுடலை என  மாறி தண்டவாளத்தில படுத்திட்டான்கள்.  

யாழில் தொடரும் சோகம் - மருதனார்மடத்தில் ரயிலில் மோதி இளம் பெண் பலி

1 HOURS AGO |  79 | 

8001b704a926529b75ff8a333dc2211c14f.jpg

யாழ்.மருதனார்மடம் புகையிரத நிலைத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில்  இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சுன்னாகத்தினை சேர்ந்த லோரன்ஸ் ரொமின்சினா (வயது 19) எனும் பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து நேற்றிரவு 8 மணியளவில் புறப்பட்ட  புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள். இச் சம்பவம் விபத்துச் சம்பவமா அல்லது  தற்கொலையா என்பது குறித்து  தெரியவரவில்லை.

இதேவேளை நேற்றுக் காலை கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் யாழில் மூவர் புகையிரத விபத்தில் உயிரிழந்தமை யாழ்.மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மூவரும் ஒரே  வயதை ஒத்தவர்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

http://onlineuthayan.com/news/jaffna/T0tGaDZwVmFZazQ9

  • கருத்துக்கள உறவுகள்

இந்  இருவரும் ரயில் தண்டவாளத்தில்  உறங்கிததாக  செய்திதாளில் வந்து இருக்கிறது 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஹெட்செட் போட்டுக் கொண்டு போனில் கதைத்துக் கொண்டு தண்டவாளத்தில் படுத்துக் கிடந்ததாக[படுக்க இடமில்லாமல்] ஒரு வானொலியில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைகள் ....யாருக்கு தெரியும் சிலவேளை தண்டவாளத்தில் படுத்திருந்து செல்பி எடுத்திருப்பினம். 

  • கருத்துக்கள உறவுகள்

800a9bc68b038658e8a2f2d2399ef36c347.jpg

கைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி ஸ்தலத்திலே சாவு!

கைபேசியில் உரையாடிக்கொண்டு தண்டவாளம் அருகாக நடந்த சென்ற இளைஞர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - பரந்தனில் நேற்று மாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் வட்டக்கச்சியை சேர்ந்தவரும் பரந்தனில் வசித்து வருபவருமான ரிக்ஷன் (வயது -24) என்பவரே மேற்படி சம்பவத்திலேயே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் இரு நண்பர்களுடன் நின்றிருந்தார் என்றும் அச்சமயம் வெளிநாட்டில் இருக்கும் அவரின் பெற்றோர் அழைப்பு எடுக்கவே கைபேசியில் பேசியவாறு தண்டவாளம் அருகாக நடந்து சென்றார் என்றும் கூறப்படுகின்றது. தண்டவாளம் அருகாகக் கதைத்தவாறு சென்றவரை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-உதயன்- 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடியல் காலமை ஐந்து மணிக்கு அதுவும் தண்டவாளத்தில் படுத்து இருந்து காதில் கெட்செட் மாட்டி ரயிலில் அடிபட்டு சாக ஆடு மாடோ ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் பார்க்கவும்,  நடத்தவும்  படுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதப்பாதைகள் எப்போதும் ஊருக்கு வெளியே அமைந்திருப்பதே பாதுகாப்பானது.

ஆனால் வடபகுதியில் குடியிருப்புக்களை ஊடறுத்துப் புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் புகையிரத நிலையங்கள் கூட நகரை விட்டு வெளியேதான் அமைக்கப்பட்டிருக்கும். நகர்ப்பகுதிகளில் புகையிரத நிலையம் இருந்தால் அங்கு அது மிகவும் சிறந்த பாதுகாப்புக்களுடனேயே அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசின் சிரத்தையற்ற செயல் கண்டிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தேவி மற்றும் தென்னிலங்கை தொடரூந்துகள் வடக்கில் பலி எடுத்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் தடுக்க ஒரு மண்ணாங்கட்டி நடவடிக்கையும் இல்லை. 

மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில்..  வேகக் கட்டுப்பாடும்.. அதிஉச்ச அவதானமும் தொடரூந்து ஓட்டிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட வேண்டும். விபத்தில் ஈடுபடும் தொடரூந்து ஓட்டிகள் உடனடி பணி நீக்கம் செய்யப்பட்டு.. வேறு துறைகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

புகையிரத வீதிகளில் நடப்பது.. தூங்குவது.. புழங்குவது தொடர்பில் எச்சரிக்கைகள் அவசியம்.

உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பொதுமக்கள் போகாமல் இருக்க பல கிலோமீற்றர்களுக்கு வேலி போடவும் அறிவிப்புப் பலகைகள் வைப்பவர்களுக்கு இது ஒன்னும் முடியல்ல... என்பது... சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

புகையிரதம் மோதி இறந்தால் நேரே மோட்சத்துக்குப் போகலாம் என்று சொன்ன படுபாவியைத் தேடி உதைக்கவேண்டும்.:shocked:

முதலில் விதிகளை மதிப்போம் அப்புறம் கதைப்போம். 

14 hours ago, nedukkalapoovan said:

யாழ் தேவி மற்றும் தென்னிலங்கை தொடரூந்துகள் வடக்கில் பலி எடுத்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் தடுக்க ஒரு மண்ணாங்கட்டி நடவடிக்கையும் இல்லை. 

மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில்..  வேகக் கட்டுப்பாடும்.. அதிஉச்ச அவதானமும் தொடரூந்து ஓட்டிகளுக்கு கட்டாயப்படுத்தப்பட வேண்டும். விபத்தில் ஈடுபடும் தொடரூந்து ஓட்டிகள் உடனடி பணி நீக்கம் செய்யப்பட்டு.. வேறு துறைகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

புகையிரத வீதிகளில் நடப்பது.. தூங்குவது.. புழங்குவது தொடர்பில் எச்சரிக்கைகள் அவசியம்.

உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பொதுமக்கள் போகாமல் இருக்க பல கிலோமீற்றர்களுக்கு வேலி போடவும் அறிவிப்புப் பலகைகள் வைப்பவர்களுக்கு இது ஒன்னும் முடியல்ல... என்பது... சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. :rolleyes:tw_angry:

இதற்கு எம்மவர்கள் கொஞ்சம் மூளையை பாவித்தால் இவற்றைத் தடுக்கலாம், இதெல்லாம் சாதாரண பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் மக்களின் காணிகளை பிடித்து பல அடுக்கு, உயர வேலிகள் போட்டு மூடி மறைக்க முடியுது. புகையிரத கடவைகளுக்கு எதற்கு வேலியெல்லாம்? ஆயுதங்களை பாவிக்கிற வேலை குறைஞ்சுது, குற்றச் சாட்டுகளும் இல்லை. தமிழனின் காசு வேணும், பாதுகாப்பைபற்றி கவலையில்லை. பாதுகாப்பில்லாமல் ரெயின் ஓட விடக்கூடாது. எல்லாத்துக்கும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.