Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன்

Featured Replies

நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு: சம்பந்தன்

 

article_1477667905-sa.jpgஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம். தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” எனவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/184968/நல-ல-ட-ச-ய-ல-நம-ப-க-க-ய-ண-ட-சம-பந-தன-

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டிசம்பர் 16 ....இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தீபாவளிக்காம்.tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது”

தந்தை செல்வா தொடக்கம் இன்றுவரை உள்ள தமிழ் தலைவர்கள் அடுத்த தீபாவளிக்கு ஒளிவீசும் என்று சொல்லுயினம் இன்று வரை வீசவில்லை .......ஒருத்தரும் இந்த தீபாவளிக்கு ஒளி வீசும் என்று இதுவரை சொல்லவில்லை....

  • தொடங்கியவர்

வெளிச்சமான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்

வெளிச்சமான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்

 

 
இருளான காலத்தில் இருந்து வெளிச்சமான காலத்தை நொக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

எனினும் தாம் வெளிச்சத்தை முழுமையாக அடைந்து விட்டதாக கூறமாட்டேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்நது உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தி கீழ் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் ஒருமித்தும் வாழக் கூடிய தீர்வொன்று கிடைக்குமென்ற அவர் கூறுகின்றார்.

தற்போதைய நல்லாட்சியில் வெளிச்சம் தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்தமுறை தீபாவளி பண்டிகையின் போது, இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84868

  • தொடங்கியவர்

அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம்: இரா.சம்பந்தன்

 

 

அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம்: இரா.சம்பந்தன்

அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…

 

http://newsfirst.lk/tamil/2016/10/அடுத்த-முறை-தீபாவளி-கொண்/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு சந்திரிக்கா மீது தீராத காதல் உள்ளது. அது இவர் சாகும் வரை தீராது. அந்த வகையில்.. உப்படியான நம்பிக்கைகள் அவருக்கு சில எலும்புகளை பொறுக்க உதவும். அந்த எலும்புகளில் ஒன்று எதிர்கட்சி தலைவர் பதவி. ஐயா ஏலவே பதவித் திமிருக்கு அலையுற ஒரு பேர்வழி. அந்த வகையில்.. உந்த அற்பனெல்லாம்.. அபாரமாகவே தெரியும். வெளில அப்படி காட்டியும் ஆகனும். மொக்குக் கூட்டம்.  tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

வெளிச்சமான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்

வெளிச்சமான காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்

 

 
 

எப்ப நீங்கள் வெளிச்சமே நெருங்க முடியாத இடத்திட்க்கு போறிங்களோ 
அப்பத்தான் ஈழ தமிழனுக்கு ..... கோடியிலாவது விடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் அல்வா குடுத்திட்டாரு!!!

 

யாழ்ப்பாணத்தில்2 பல்கலைக்கழக மாணவர்கள் சிங்'கள பொலிசாரால் கொல்லப்பட்டதைத்தான் வெளிச்சமான காலம் என்கிறார் -சம்பந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:
இருளான காலத்தில் இருந்து வெளிச்சமான காலத்தை நொக்கி நாம் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

எனினும் தாம் வெளிச்சத்தை முழுமையாக அடைந்து விட்டதாக கூறமாட்டேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிருபர் : ஈழதமிழர் உரிமைகளுக்கு எதிராக பெரும்பான்மை சிங்களவாதிகள் இருப்பதாக கருதுகிறீர்களா..?

தற்போதைய தலைமை : நிச்சயம் கிடையாது ..அவர்களும் எமக்கான நீதியை உணர்ந்து உள்ளர்கள்.,.. அவர்களும் எங்கள் சகோதரர்கள்.. ஆனால் பெரும்பான்மையோர் இதற்கு மாறு பாடான எதிர் மனஉளவியலில் உள்ளார்கள்  ..

இதை  திருப்பி திருப்பி படித்தீர்கள் என்றால் மரை கழண்டு ஏர்வாடி தர்க்காவில் தான் சேரணும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28.10.2016 at 5:32 PM, நவீனன் said:

“தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம். தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” எனவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

நீங்கள் விருப்பமெண்டால் நக்கி பிழையுங்கோ........
உங்கள் அரசியல் பிழைப்புக்காக ஒரு இனத்தை அடகு வைத்து அழிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை த.டவை அவனும் சொல்லிப்போட்டான். இவருக்கு இன்னும் காதில விளெல்லை போலிருக்கு. அல்லது அந்தச் சொல்லை விட வேறு சொல் தெரியாத பிரச்னையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.