Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கருணா கோரிக்கை

Featured Replies

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கருணா கோரிக்கை

karuna.jpg
வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், புலனாய்வுப் பிரிவினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு நேரடியாக தாம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 14,000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் எனவும் இவர்களை கண்காணிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் போராளிகள் என்ன செய்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்ளாவிட்டால் , அவர்கள் மீளவும் வன்முறைப் பாதையில் பயணிக்கக்கூடிய சாத்தியமுண்டு என சுட்டிக்காட்டியுள்ள கருணா பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட நாட்டில் மீளவும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/20156

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அப்பு, உங்களை வாழ்த்தி வரவேற்றவர்களை செருப்பால அடிக்க வேண்டும் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை எடுபிடிகளும் முன்னாள் போராளிகள் தானே ...ஏன் நீங்களும் மு. போ தானே 
என்ன தைரியத்தில கட்சி ஆரம்பித்தீர்களோ தெரியாது .... உங்களை சொல்லி குற்றமில்லை அப்பு 
உங்களையும் நம்பி வோட்டு  போட்ட மட்டக்களப்பு சனத்திற்கு முச்சந்தியில் நிற்கவைத்து ஒருசெருப்பை வாயில் கவ்வ கொடுத்து மற்ற செருப்பால முழக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர்  காட்டிக்கொடுத்து .பின்னர்  கூட்டிக்கொடுத்து , மீண்டும் காட்டிக்கொடுத்து . என்ன பிழைப்படா  சாமி 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின்ற மேடையில முழங்கின இவர், அடுத்தவாரமே கட்சி ஆரம்பிக்கும் போதே, 'என்ன, நரி கோவனத்தோட போகுதே' என்று நினைத்தேன்.

இப்ப விளங்குது, மகிந்த கும்பல்... துன்னாறு அடிச்சு அனுப்பியிருக்கு.

நக்கிற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன? :224_monkey:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்.......... அம்மானுக்கு முன்  வேறை எந்த தெரிவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எதோ கட்சியோ பட்சியோ ஆரம்பிச்சிட்டு 
சென்ற கிழமை பேசிச்சு ............ எதோ முன்னாள் போராளிகளுக்கு குடை பிடிக்க போறேன் என்று.

இந்த கிழமை இப்பிடி பேசுது .......

வார கிழமை 
தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விழும் நாலைந்து வாக்குகளும்  விழாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

வடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும்

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அடி வாங்கியும் அம்மானின் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவரை தூத்துவதிலேயே<_< புலம் பெயர் தமிழ்ஸ் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் இதையும் அரசியல் என்று நம்ப புலம்பெயர் தமிழ்ஸ் இருக்கினம் ?

13 hours ago, அக்னியஷ்த்ரா said:

உங்கடை எடுபிடிகளும் முன்னாள் போராளிகள் தானே ...ஏன் நீங்களும் மு. போ தானே 
என்ன தைரியத்தில கட்சி ஆரம்பித்தீர்களோ தெரியாது .... உங்களை சொல்லி குற்றமில்லை அப்பு 
உங்களையும் நம்பி வோட்டு  போட்ட மட்டக்களப்பு சனத்திற்கு முச்சந்தியில் நிற்கவைத்து ஒருசெருப்பை வாயில் கவ்வ கொடுத்து மற்ற செருப்பால முழக்க வேண்டும் 

அப்படியாயின் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் டக்ளஸ் க்கு வாக்களிக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன தண்டனை கொடுக்க உத்தேசம் ?கருணாவோ சிங்கள இனவாத காட்சிகளில் தேர்தலில் குதிக்கும் எந்த தமிழரும் வெல்லும் அளவிறகு வாக்குகள் விழப்போறதில்லை .இப்படியான சிலரது கருத்துக்களை எழுதி கிழக்கு மாகாண மக்களின் மனதுகளில் நஞ்சை விதைக்காதீர்கள் .இதட்குள்ள like ????

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Gari said:

அப்படியாயின் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் டக்ளஸ் க்கு வாக்களிக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன தண்டனை கொடுக்க உத்தேசம் ?கருணாவோ சிங்கள இனவாத காட்சிகளில் தேர்தலில் குதிக்கும் எந்த தமிழரும் வெல்லும் அளவிறகு வாக்குகள் விழப்போறதில்லை .இப்படியான சிலரது கருத்துக்களை எழுதி கிழக்கு மாகாண மக்களின் மனதுகளில் நஞ்சை விதைக்காதீர்கள் .இதட்குள்ள like ????

 

2004 இல் கிழக்கு மக்களும் இவரின் பிரதேசவாத்த்திற்குள் இழுபட்டு போனார்கள்.

இன்றும் கூட வட கிழக்கு இணைப்பிற்கு கிழக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அக்னி மட்டக்களப்பில் இருப்பது கனடாவில் இருக்கும் ஹரிக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

இவ்வளவு அடி வாங்கியும் அம்மானின் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவரை தூத்துவதிலேயே<_< புலம் பெயர் தமிழ்ஸ் இருக்கினம்

சரி தங்கச்சி! கொம்மான்ரை அரசியல் தந்திரங்களிலை ஒன்றை  எடுத்து விடுறது? :(

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Gari said:

அப்படியாயின் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் டக்ளஸ் க்கு வாக்களிக்கும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன தண்டனை கொடுக்க உத்தேசம் ?கருணாவோ சிங்கள இனவாத காட்சிகளில் தேர்தலில் குதிக்கும் எந்த தமிழரும் வெல்லும் அளவிறகு வாக்குகள் விழப்போறதில்லை .இப்படியான சிலரது கருத்துக்களை எழுதி கிழக்கு மாகாண மக்களின் மனதுகளில் நஞ்சை விதைக்காதீர்கள் .இதட்குள்ள like ????

 

நஞ்சை விதைக்கிறோமோ ...நல்லா இருக்கே இது 
குருணாவுக்கு ஆரம்பத்தில் மட்டக்களப்பில் விழுந்த வாக்குகளையும் அதனால் ஐ ,ம ,சு,மு மட்டக்களப்பில் அள்ளிய கதிரைகள் எண்ணிக்கைகளையும் 
மறந்து விட்டீர்களோ ....கூத்தமைப்பே கிழக்கில் இல்லை  ..பிறகு தான் எங்கடை சனத்திற்கு தெரிந்தது ஆகா இது அதுல்ல என்று ....
திரும்ப இன்னொரு யாவாரத்தோடு வந்திருக்கிறார் ....நன்றாக காட்ட வேண்டியது தான் ...மட்டக்களப்பான் எங்களுக்கு குருணாவை பற்றி வகுப்பெடுக்காதைங்கோ சரியா .....
டக்கியை தேர்ந்தெடுக்கும் யாழ்ப்பாண மக்கள் நன்மையோ தீமையோ அதனை அனுபவிக்கட்டும் ...தூக்கியவர்கள் சுமக்கட்டும் 
எங்களுக்கு வேண்டாம் அவ்வளவுதான் ...குருணா கும்மான் என்றும்  மட்டக்களப்பின் அவமானச்சின்னம் ..

 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

நஞ்சை விதைக்கிறோமோ ...நல்லா இருக்கே இது 
குருணாவுக்கு ஆரம்பத்தில் மட்டக்களப்பில் விழுந்த வாக்குகளையும் அதனால் ஐ ,ம ,சு,மு மட்டக்களப்பில் அள்ளிய கதிரைகள் எண்ணிக்கைகளையும் 
மறந்து விட்டீர்களோ ....கூத்தமைப்பே கிழக்கில் இல்லை  ..பிறகு தான் எங்கடை சனத்திற்கு தெரிந்தது ஆகா இது அதுல்ல என்று ....
திரும்ப இன்னொரு யாவாரத்தோடு வந்திருக்கிறார் ....நன்றாக காட்ட வேண்டியது தான் ...மட்டக்களப்பான் எங்களுக்கு குருணாவை பற்றி வகுப்பெடுக்காதைங்கோ சரியா .....
டக்கியை தேர்ந்தெடுக்கும் யாழ்ப்பாண மக்கள் நன்மையோ தீமையோ அதனை அனுபவிக்கட்டும் ...தூக்கியவர்கள் சுமக்கட்டும் 
எங்களுக்கு வேண்டாம் அவ்வளவுதான் ...குருணா கும்மான் என்றும்  மட்டக்களப்பின் அவமானச்சின்னம் ..

 


அவருடைய கருத்தை நீங்கள் கொஞ்சம் தப்பாக விளங்கி இருப்பீர்கள் என்று 
எண்ணுகிறேன் ........
நேரம் காலம் பார்த்து பிரிச்சு விடுறது என்றால் சிலருக்கு அலாதிபிரியம்.
ஆனால் வாயை திறந்தால் .... வெட்டினம் புடுங்கினோம் என்று பாலும் தேனும் ஓடும். 

என்ன செய்ய 
சும்மா கிடந்த கல்லை தூக்கி தேரில் வைத்து தோட்டத்தில் நின்ற 
வாழையை வெட்டி வீதி வீதியாய்  கட்டி ஊரை சுற்றி இழுத்த சமூகத்தில் 
வளர்ந்துவிடடோம் ..... வாழை நின்று இருந்தால் வாழை பழமாவது மிஞ்சியிருக்கும்.

கொம்மான் வடக்கு மக்களை ஒருக்கா அடிச்சு விரட்டினவர் எல்லோ ?
அந்த பாசம் எமக்கு இப்போதும் உண்டு. 

20 hours ago, ரதி said:

இவ்வளவு அடி வாங்கியும் அம்மானின் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் அவரை தூத்துவதிலேயே<_< புலம் பெயர் தமிழ்ஸ் இருக்கினம்

மன்னிக்கணும் அக்கா !
தேவாரம் திருவாசகம் இயம்பும் அளவில் திறமை இல்லை.
பொறுத்தருள்வீர் ! 

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர இருப்புக்கு தன்னை இனம் காட்டிக்கொள்ள வேண்டாமா 

  • கருத்துக்கள உறவுகள்

 

20 minutes ago, Maruthankerny said:

கொம்மான் வடக்கு மக்களை ஒருக்கா அடிச்சு விரட்டினவர் எல்லோ ?
அந்த பாசம் எமக்கு இப்போதும் உண்டு. 

கொம்மான் வடக்கு மக்களை அடிச்சு விரட்டினவர், விரட்டிவிட்டு மட்டக்களப்பு மாநகரின் பெரும் வியாபார நிலையங்கள் அனைத்தையும்

 முசுலீம்களுக்கு தாரைவார்க்க வைத்துவிட்ட பெருமையும் அவருக்கு உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.