Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்'

Featured Replies


'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்'
 
 

article_1492506802-cv-new.jpgகத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த  குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட  பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது என்றும் அவரை  கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால், 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்துக்கும் பொதுவானதொரு பதவியாகும். அவ்வாறு இருக்கின்ற போது, வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இயேசுக் கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/194970/-ச-வ-பக-ரங-க-மன-ன-ப-ப-க-ர-வ-ண-ட-ம-#sthash.Oa49DuqH.dpuf

தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.

  • தொடங்கியவர்

சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்-அமைச்சரவை ஊழல்மோசடி விசாரிக்கப்படவேண்டும், இதில் பாரபட்சம் காட்ட முடியாது

April 14, 2017 3,553 Views

 

சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் – அமைச்சரவை ஊழல்மோசடி விசாரிக்கப்படவேண்டும் இதில் பாரபட்சம் காட்ட முடியாது.

 

 

வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பாக நான் தவறு இழைக்கவில்லை அதற்காக அமைச்சர் சத்தியலிங்கத்தின் மூன்று அமைச்சுப்பதவிகளையும் பறிக்கவும் இல்லை சமகால அரசியல் தொடர்பாக முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்  -வவுனியா பொருளாதார மத்திய மையம் தொடர்பாக நான் தவறு இழைக்கவில்லை. அதற்காக அமைச்சர் சத்தியலிங்கத்தின் மூன்று அமைச்சுப்பதவிகளையும் பறிக்கவும் இல்லை. சரியான திட்டமிடல் இன்றி அரசியல் வாதிகள் தமது சொந்த இடத்தில் சொந்த காணிக்கு அருகாமையில் அமைக்க முனைந்ததன் விளைவே இவ்வாறு ஓமந்தையிலும், தாண்டிக்குளத்திலும் பொருளாதார மத்திய மையம் அமையமுடியாமல் போனது

வடமாகாண சபைக்கு வருகின்ற அபிவிருத்திகளை நீங்கள் வேண்டும் என்றே தடுத்து நிறுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? இல்லை தவறான குற்றச்சாட்டு – முதலமைச்சர் CV விக்னேஸ்வரன் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

ஆயுதகட்சிகளுடன் இணைந்து நான் அரசியலில் பயனிக்க முடியாது என கூறிய நீங்கள் இன்று தமிழ்மக்கள் பேரவையில் இருக்கக்கூடிய ஆயுதக்கட்சிகளுடன் இணைந்து தமிழரசு கட்சிக்கு எதிராக செயல் வடிவம் கொடுக்கிறீர்களே அது ஏன் ?நீங்கள் சிங்களப்பேரினவாதிகளுடன் இரண்டறக் கலந்தவர் என்று கூறியவர்களும் இவர்கள் தான் நினைவிருக்கிறதா? அது …

வடமாகாணசபையின் அமைச்சர்கள் ஊழல்மோசடி செய்தார்கள் என்றார்ல் பிரதி முதலமைச்சர் பதவியை ஏன் அமைச்சர் ஜங்கரனேசநிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றீர்கள் நீங்கள் அவரை மாத்திரம் காப்பாற்ற ஏன் முனைந்தீர்கள்? நேர்காணலில் அதிர்ச்சி தகல்களை வெளியிட்டார்  முதலமைச்சர் CV விக்னேஸ்வரன்.

தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

 

2000 வருடங்ளுக்கு முன் இயேசு கிறீஸ்து ஒரு குற்றவாளி, பாவி. அவருக்கு மரணதன்டனை வழங்கப்பட்டது. அதேபோல் பாலியல் கொலை வழக்கில் ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியும் அவரை கடவுளாக மனிதர்கள் வணங்குவதில் தவறு இல்லை – வடமாகாண முதலமைச்சர் தினப்புயல் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய பரபப்பு பேட்டி.

புனித இயேசு நாதரை பாலியல் பிறேமானந்தாவுடன் இறைவன் என ஒப்பிட்டுப்பேசிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

 

 

http://www.thinappuyalnews.com/archives/113419

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

 

 

கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் இயேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

குறித்த கருத்து தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைக்கு செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு திருச்சபை என்னும் பெயர் பெற்றது.

இன்று பெரும்பான்மை கத்தோலிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒட்டு மொத்த கத்தோலிக்க சமூகமும் இணைந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களின் கருத்திற்கு வலுவான கண்டனத்தினை தெரிவித்து நிற்கின்றது.

அதேவேளை ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்களும் வடமாகாண முதல்வர் அவர்களின் மதவாதத்தை தூண்டும் கருத்திற்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு நிற்கின்றது.

கடந்த வாரம் வடமாகாண முதலமைச்சர் ஆண்டவர் யேசுநாதரை, ஒன்பது சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு இணையத்தளங்களில் வெளியிட்ட கருத்திற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றோம்.

ஆண்டவர் யேசு உலகத்திலே அவதரித்து மக்களின் பாவங்களை போக்க கல்வாரி சிலுவையில் பாடுப்பட்டு மக்களுக்காக உயிர் விட்ட ஆண்டவர் யேசு கிறிஸ்துவை பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டுப் பேசியதை கத்தோலிக்க இறைமக்களும், கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாக எதிர்த்து நிற்கின்றோம்.

“ஆண்டவர் யேசு 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்றும் இவரை கத்தோலிக்க மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த பிறேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு பரபரப்பான பேட்டி அளித்துள்ளமை மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்து நிற்கின்றது.

முதலமைச்சர் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு 14.04.2017 அன்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஆண்டவர் யேசுவை விமர்சித்துள்ளார்.

இது முற்றிலும் பிழையான விடயம் என்பதுடன் வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதனையும் அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் பதவியானது சகல மதத்திற்கும் ஒரு பொதுவானதொரு பதவி.

அவ்வாறு இருக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் அனைத்து செயற்பாடுகளையும் இனம், மதத்திற்கு அப்பால் செய்வதே சால சிறந்த விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று வடமாகாணத்தை பொறுத்த மட்டில் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரவும் பகலும் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இவற்றை எல்லாம்

புறந்தள்ளிவிட்டு அவரின் மதம் சார்ந்த விடயத்தில் அக்கறை கொண்டு கத்தோலிக்க திருச்சபைக்கும் இந்து மதத்திற்கும் இடையில் இவ்வாறான பிரிவினைவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஒரு முதலமைச்சருக்குரிய பண்பும், தகுதியும் இல்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்று இலங்கை நாட்டில் கத்தோலிக்க தமிழ் சிங்கள மக்கள் பரவலாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் அவர்கள் வட மாகாணத்தில் சகல மத மக்களாலும் வாக்குகள் அளிக்கப்பட்டு தான் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு கதிரையில் அமர்ந்துள்ளார் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

வட மாகாண முதலமைச்சர் அவர்கள் வடமாகாணத்தில் சகல மத மக்களுக்கும் பொதுவானதொரு மனிதனாக இருந்து கொண்டு மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும், மதவாத

கருத்துக்களையும் வெளியிடுவதாக இருந்தால் அவர் வடமாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறி ஒரு பொதுவான தலைவர்களுக்கு இடம் விட்டுக்கொடுப்பதே பொருத்தமான விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவ்வாறு எமது கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு பற்றி வடமாகாண முதலமைச்சர் சரியான விடயங்களை அறிய வேண்டும் என்று சொன்னால் கத்தோலிக்க திருச்சபையின்

மேற்றாசனத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பதனையும் முதலமைச்சர் அவர்களுக்கு கூறிக்கொள்ளுகின்றோம்.

எனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உடனடியாக ஆண்டவர் யேசுக்கிறிஸ்துவை விமர்சித்து பேசியதற்கு கத்தோலிக்க திருச்சபையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் .

இல்லையெனில் இலங்கை முழுவதும் உள்ள தமிழ், சிங்கள கத்தோலிக்க மக்கள் அனைவருடைய கேள்விகளுக்கும், போராட்டத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதனை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், மன்னார், யாழ் மறைமாவட்ட சட்ட ஆலோசகருமான சிரேஸ்ட சட்டத்தரணி ப.அன்ரன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/143016?ref=lankasri-home-dekstop

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.

cv இறை நம்பிக்கையில் முட்டாளாக இருக்கலாம் தமிழரின் உரிமைகள் தொடர்பாக அங்கு தாங்கள்தான்தமிழர் தலைமை என்று சொல்லிகொண்டுசிங்கள அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறியும் கூட்டத்தை விட cv எவ்வளவோ மேல் .

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!

குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.

1983 கலவரத்தின் பின் திருச்சி சென்று விராலிமலை எனும் இடத்தில் ஆசிரமம் அமைத்து, பிரேமானந்தா சுவாமி என்ற புது அவதாரம் எடுத்தவர், அங்கு அகதிகளாக வந்த வறிய குடும்பத்து தமிழ் சிறுமிகளை ஆசிரமத்தில் தங்கவைத்து கல்விகற்பிப்தாக கூறி, அவர்களை தனது சுயஇச்சை  தேவைகளுக்கு பயன் படுத்தியதை எதிர்த்த ஒருவாரை கொன்று, ஆசிரம வளாகத்தில் புதைத்தது உட்பட தன் போன்ற சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த விடயங்களை, அங்கிருந்து தப்பிசென்ற சிறுமி பகிரங்கப்படுத்த பிரேமானந்தா கைதானார். மிகவும் பரபரப்பான அந்த வழக்கில் பிரேமானந்தா நல்லவர் அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு திட்டமிட்டு சிலரால் முன்வைக்கபட்டுள்ளது என, அவருக்கு சார்பாக சாட்சி சொல்ல இந்திய நீதிமன்றம் சென்ற, அந்த வழக்கின் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 , சாட்சாத் இன்றைய வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அவர்களே. அன்று அவர் நீதிபதி.

வெளிநாட்டு பக்தர்களின் பல லட்சம் பணம் செலவிடப்பட்டு மிக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடியும், இலங்கை நீதிபதியும் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13ம் ஆன சி வி விக்னேஸ்வரன்  அவர்கள், பிரேமானந்தா நல்லவர் குற்றமிளைதிருக்கமாட்டார் என சாட்சி சொல்லியும், தகுந்த ஆதாரங்களுடன் அவர் செய்த லீலைகள் அம்பலபடுத்தபட்டு, மூன்று மேன்முறையீட்டு விசாரணை  நடந்த பின்பு, பிரேமானந்தா குற்றவாளி என இந்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட சிறை வாசத்தின் பின் செய்த பாவங்கள் எல்லாம் உடல் நோயாக மாறி, பிரேமானந்தா சிறையிலேயே இறந்தார். நீதிபதி என்ற தன் கௌரவத்தை கைவிட்டு கொலை, தமிழ் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒருவருக்காக, குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த சி வி விக்னேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதியரசராக ஒய்வு பெற்றார். 

பிரபாகரனை நம்பியும் பலவந்தமாகவும் வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்று, முள்ளிவாய்க்காலில் பேரவலத்தை சந்தித்த மக்கள் இராணுவ பிடியில் இருந்து தாமக்கும், தமது வாழ்விடங்களும் விடியல் வரும் என்ற நம்பிக்கையில், வட மாகாண சபை தேர்தலில் வாக்களித்ததால் முதல்வர் ஆனா சி வி விக்னேஸ்வரன், தனது முதலாவது தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் போது திருச்சி விராலிமலை சென்று, கொலை மற்றும் தன் பராமரிப்பில் இருந்த தமிழ் சிறுமிகள் மீது பாலியல் குற்றம் புரிந்தவர் என, இந்திய நீதி தண்டித்த ஒருவரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு வாய்க்கரிசி போட்டார். யுத்த அத்துமீறல் செய்த ராணுவத்தின் செயலை போன்ற செயலை செய்தவருக்கு அஞ்சலி செய்தவரா, தேர்தல் காலத்தில் எம் பிரதேசத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவேன் என கூறியதை செயல்படுத்துவார், என மக்கள் நம்பிக்கை இழந்தனர். இன்றுவரை அதுதான் நிலைமை.

இதில் வினோதமான விடயம் ஒன்றும் உள்ளது. முதல்வரின் தமிழக விஜயம் தனிப்பட்ட விஜயமாக இருந்த போதும், அதனை ஒழுங்குசெய்து சகல பயண செலவினம் உட்பட அனைத்தையும் ஏற்பாடு செய்தவர்கள், மறைந்த இந்தியாவின் பிரபல மனித உரிமைகள் வக்கீலான கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை ஆற்றவே, சி வி விக்னேஸ்வரனை அழைத்திருந்தனர். அந்த பயணத்தின் போது தனக்கு கிடைத்த கால அவகாசத்தை பயன்படுத்தி திருச்சி விராலிமலை சென்று, இந்திய நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட கொலைகாரன், செக்ஸ் சாமியார் என அனைவராலும் அறியப்பட்ட, மூன்று மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு தண்டனை பெற்று, இறுதிவரை சிறையில் இருந்து மரணித்த பிரேமானந்தாவின் சமாதிக்கு அஞ்சலி செய்தார். எந்த மனித உரிமை வக்கீல் கண்ணபிரான் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த சென்றாரோ, அதே மனித உரிமை வக்கீலான கண்ணபிரான் தான் அந்த வறிய தமிழ் சிறுமிகள் சார்பில் வாதாடி, அவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பிரேமானந்தாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தவர் என்பது பலர் அறியாத வினோதம். 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்ற பொது விதியின்படி, மாற்று ஆள் சார்முறை [ Adversarial  system ] அடிப்படையில், சி வி விக்னேஸ்வரன் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 அவதாரம் எடுத்த செயலை தவறென கொள்ளாவிட்டாலும், இந்திய நீதிமன்றில் மூன்று மேன்முறையீட்டின் பின்பும் குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவருக்கு அஞ்சலி செய்தது, அவரது சுய முடிவு என கொண்டாலும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமிகளுக்காக ஆஜராகிய, இந்தியாவின் பிரபல மனித உரிமை வக்கீல் அவர்களின் நினைவு பேருரை நிகழ்த்த என அழைக்கப்பட்டவர், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றசாட்டுககள் நிரூபிக்கப்பட்டு,    கொலை மற்றும் தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என தண்டிக்கப்பட்ட  பின்பும், அஞ்சலி செய்தது அந்த வழக்கில் வாதாடிய அமரர் கண்ணபிரான் அவர்களை, அகௌரவ படுத்தியதாகவே விமர்சிக்கப்பட்டது. 

  

அன்று நீதிபதியாக இருந்தபோது பிரேமானந்தா விசாரணைக்கு 13 வது சாட்சியாக செயல்பட்டவர், இன்று முதல்வராக விசாரணை இன்றியே அமைச்சருக்கு சார்பாக தீர்ப்பு சொல்ல முயல்கிறார். அமைச்சர் ஐந்கரநேசனுக்கு எதிராக ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டை வைப்பவர் இலங்கையின் முதல்தர செயல்ப்பாடு கொண்ட நகரசபை என, வவுனியா நகரசபை பாராட்டு பெறும் வண்ணம் நகரசபையை நடத்திய, அதன் தலைவராக இருந்த ஜி ரி லிங்கநாதன். முதல்வர் கூறுவது போல வெறும் சேறுபூசும் செயல் என்றால் ஏன் தான் வைக்கும் குற்றசாட்டுகள் தவறு என்றால், பதவி விலகுகிறேன் என உறுப்பினர் சபையில் கூறவேண்டும். தனது அமைச்சர் பற்றிய பதிலை சபையில் கூறாமல் ஏன் முதல்வர் முழங்காவிலில் நடந்த பொது கூட்டத்தில், பனங்காட்டு நரி என அமைச்சரை பாராட்ட வேண்டும். அன்று நீண்ட நீதிபரிபாலன அனுபவம் கொண்டவர் வடக்கின் முதல்வர் ஆகிறார் என்றவுடன், முன்நாள் ஜனாதிபதி மகிந்தவே சற்று கலக்கம் அடைந்தார். ஆனால் இன்று?

மிகுந்த எதிர்பார்க்கையுடன் தான் வடபகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். நந்தவனத்து ஆண்டிபோல அந்த நம்பிக்கைக்கு நடந்தது என்ன? குற்றவாளிக்கு விராலிமலை வரை சென்று அஞ்சலி செய்தவர், முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர மரம் நட்ட இடம் அமைச்சர் குருகுலராஜா அவர்களின் உத்தியோக வாசஸ்த்தல பின்புறம். அதனை தேர்ந்தெடுத்தவர் அமைச்சர் ஐங்கரநேசன் என்பது உள்வீட்டு செய்தி. ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் தன் செயல்ப்பாட்டின் மூலம் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நோகடிக்க தொடங்கிவிட்டார். பிரபாகரனை மாவீரன் என வெறும் வாக்கு பெறும் நோக்கிலேயே சொன்னார் என்பது, போக போக அவர் செயல் மூலம் தெரியவந்தது. ஆயுதம் எந்தியவர்களுடன் ஒவ்வாமை கொண்டார். அரசியலுக்கு அழைத்து வந்தவர்களை விடுத்து மாற்று கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக அறிக்கைவிட்டு, வாக்காளரை குழப்பமடைய செய்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக முதல்வராக இருந்து எதனை சாதித்தார் என தேடவைத்தார்.

பிரதம செயலாளர், இராணுவ பின்புல ஆளுநர் மாற்றம் நிகழ்ந்தபின்பும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. தனக்கு வேண்டியவரின் நியமனத்துக்காக முன்னாள் ஜனாதிபதி உட்பட, ஐநா அதிகாரி வரை சிபார்சு செய்தவர் தன்னை தெரிவுசெய்த மக்களுக்காக என்ன செய்தார் என்ற கேள்வியை  எதிர்கட்சி முன்வைக்கும் போதெல்லாம் அவருக்கு ஆதரவாக சபையில் பேச ஒரு அணியை வைத்திருந்தார். இன்று அவர்களே எதிர்க்கும் நிலை வந்தபோது அமைச்சரை காக்க வாதாடுகிறார். சுன்னாக நீர் மாசு விடயத்தில் முதல்வர் அமைத்த நிபுணர் குழு பற்றிய விடயத்தை, மல்லாகம் நீதிவான் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். இரணைமடு நீர், கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் எல்லாம் பலத்த கண்டனம், மற்றும் விமர்சனத்துக்கு உட்பட்டன. மாகாண சபைக்கான நியதிசட்டங்களை உருவாக்கும் திறனற்ற அதே வேளை, தமிழ் மக்கள் பேரவை தயாரித்த அரசியல் தீர்வு வரைவை பெற்று பெருமிதம் கொண்டார். சுமந்திரனும் மாணவன் புவிதரனும் மாணவன். ஒருவர் துரோகி மற்றவர் அனுதாபி என்ற மாறுகண் பார்வை கொண்டார்.

அன்று அமைச்சு பதவிக்காக முரண்பட்டவர், இன்று அமைச்சர் ஐங்கரநேசன் விடயத்தில் தன்பக்கம் பேசுவதால் அவருக்கு நல்வரவு கூறுகிறார். முதல்வர் கூற்றுப்படி அமைச்சர் பனங்காட்டு நரி என்றால் அவர்மீது குற்றசாட்டு வைப்பவர் என்ன வளையில் மறையும் எலிகளா? அறிவும் அனுபவமும் கொண்ட ஒருவர் இவ்வாறு செயல்பட முடியுமானால், சாதாரண பின்புலம் கொண்டவர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தபோதுவிட்ட தவறுகளை சுட்டிக்காட்டி, முன்பு நடந்தது போல் நாட்டாண்மை அரசியல் நிர்வாகத்துக்கு இனி இடமில்லை என, ஏன் முன்னாள் அமைச்சரை சாடினார்? இன்று முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை விசாரிக்காமலே தட்டிக்களித்து தீர்ப்பு சொல்ல முற்படுவது நாட்டாமைதனம் இல்லையா. மத்திய அரசுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் செயல்பட்டதை விமர்சித்தவர், இன்று வட மாகாண அரசின் முதல்வராக இருந்து செய்யும் செயல் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள் என்பது மாகாண அமைச்சருக்கும் பொருந்துமா?

ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் நிறைந்து காணப்பட்ட வட மாகாணத்தின் நிர்வாகத்தை, மாற்றுவார் என நம்பியே மக்கள் முன்னாள் நீதி அரசரை முதல்வராக தெரிவு செய்தனர். இராணுவம், அரச சார்பு அரசியல்வாதிகள், அவர்கள் ஆசிபெற்ற அதிகாரிகள், உயர்கல்வி நிலைய கல்வியாளர், பிரதேசசபை ஊழியர் என அனைத்து மட்டத்திலும், மணல் தொடங்கி யாழ் பல்கலைகழக நிர்வாகம்  வரை எங்கும் எதிலும் மறைகரங்களின் இறுக்கமான பிடி இருந்த வேளையில்தான், வட மாகாண சபை தேர்தல் வந்தது. மாற்றம் வேண்டியே மக்கள் பேராதரவை கொடுத்தனர். தனது தனிப்பட்ட தவறால் பதவி இழந்த முதலாவது எதிர்கட்சி தலைவர் இருக்கும்வரை, முதல்வரின் செயலாமை வெளிவரவில்லை. ஆனால் புதிய எதிர்கட்சி தலைவரின் வருகையின் பின் மாகாண சபைபற்றிய சலசலப்பு தொடங்கியது. தூங்கி வழிந்த முதல்வரை தன் கேள்விக்கணைகளால் துயில் எழுப்பினார் இன்றைய எதிர்கட்சி தலைவர். அதுவரை தீர்மானங்களை நிறைவேற்றி பத்திரிகைக்கு தீனிபோட்ட சபை திணற தொடங்கியது. 

முதல்வர் மீது நேரடி கணைகளை, அவர் நியமிக்க விரும்பிய அவுஸ்ரேலிய பிரஜை பற்றிய விபரம் கேட்டு எதிர்கட்சி தலைவர் எய்தபோது முதல்வர் தடுமாறினார். அடுத்தடுத்து அவர் எழுப்பிய கேள்விகளால் அதுவரை மெத்தனமாக இருந்த ஆளும்தரப்பு உறுப்பினர்கள், வினைத்திறன் உள்ள மாகாண சபை முறைமை வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன்வைத்தனர். அவர்கள் கேள்விகளால் வேள்வி செய்ய ஊழல் அதிகார துஸ்பிரயோகம் வெளிப்பட்ட வேளையில், அதில் முதலில் வெளிச்சத்துக்கு வந்தவர் அமைச்சர் ஐங்கரநேசன். ஜி ரி லிங்கநாதன் முன்மொழிந்த பிரேரணையை விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய முதல்வரே, பிரேமானந்தாவின் கொலை, தமிழ் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக ஆஜராகி, அவர் நல்லவர் போற்றுதலுக்கு உரியவர் என கூறியது போல, அமைச்சருக்கு விசாரணை இன்றியே நற்சான்றிதழ் வழங்குகிறார். பிரேமானந்தா வழக்கு விசாரிக்கப்பட்டபோது நீதிபதியாக இருந்தவர் குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 ஆக முன்வைத்தவர், தனது அமைச்சர் மீதான குற்றசாட்டை விசாரிக்கவே விரும்பாது, தீர்ப்பை முதல்வராக இருந்து முன்வைப்பது விநோதமானது. 

  

அமைச்சர் ஊழல் மற்றும் நிதி துஸ்பிரயோகம் செய்தாரா என்பது, அவருக்கும் அவர் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அதை மக்கள் அறிய நியாயமான விசாரணை தேவை. வீணடிக்கப்பட்ட தாக கூறப்படும் நிதி மக்களின் வரிப்பணம். அவர்களின் மீள் எழுச்சிக்கு என ஒதுக்கப்பட்ட பணம். எனவே குற்றம் இடம்பெற்றதா என அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு. அமைச்சர் ஐந்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சு, பெரும்பாலான விவசாயம் மற்றும் அதனோடு சம்மந்தபட்ட துறை சார்ந்தது என்பதால், அது வடக்கின் பொருளாதாரத்தோடு பின்னிப்பிணைந்தது. நிலத்தடி நீர் மாசு, அதிக இரசாயன உர பாவனை மற்றும் சீரற்ற கால நிலை மட்டுமல்ல வளமான பயிர் நிலங்கள் இராணுவ பிடியில் இருப்பதால், அதனை நம்பி ஜீவனோபாயம் செய்யும் சாதாரண மக்களின் கண்ணீரோடு சம்மந்தபட்ட விடயம் என்பதால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என இதனை எடுக்காது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் திறந்த மனதுடன் இந்த விடயத்தை கையாண்டு, உண்மையை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஆடிய ஆட்டம், பேசிய வார்த்தை, தேடிய செல்வம் காரணமாக விசாரணை கமிசனுக்கு செல்லும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர், நீதிமன்ற படியேறி விளக்க மறியல் விஜயம் செய்தவர், இன்றும் விளக்க மறியலில் இருப்பவர் என முன்னாள் அமைச்சர், கடல்படை அதிகாரி, முன்னாள் கிழக்கு முதல்வர் அவரின் சகபாடிகள், பரணகம அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்டதால், நாளை என்ன நடக்கும் என பயந்து முந்திக்கொண்டு, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என கூச்சல் இடுபவர் எல்லாம், விசாரணைக்கு முகம் கொடுக்கும் புதிய சூழல் நாட்டில் உருவாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதிப்படி சுழலும் பூமியில், முதல்வர் மட்டும் விசாரணை தேவையில்லை என அமைச்சருக்கு புனித நீர் தெளித்து, திருநிலை படுத்தும் செயல் மக்களை, எம்மோடு வந்ததும் அது, எம்முடன் இருந்ததும் அது, எமக்காக சம்மந்தர் கூட்டி வந்ததும் அது, என்று வருந்தச்செய்யும்.       

– ராம் –

தினக்கதிர்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்  மனுசன்

பென்சனை  எடுத்துக்கொண்டு

இன்னொரு வாழ்வை வாழ்வோம் என்று நினைத்திருக்கும்

இப்ப பென்சனில்  நினைத்திருந்த வாழ்வையும் பேசமுடியல..

வேலையும் செய்ய முடியல...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

யாரோ ஒரு அமைச்சரின் ..கை  ஒரு கடிதத்துக்கு ஒரு பெண்ணை கூப்பிட்ட  கைபேசியின் சாட்சியும்  வந்ததே  இதுவும் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, முனிவர் ஜீ said:

யாரோ ஒரு அமைச்சரின் ..கை  ஒரு கடிதத்துக்கு ஒரு பெண்ணை கூப்பிட்ட  கைபேசியின் சாட்சியும்  வந்ததே  இதுவும் இருக்கு 

நாம  இப்ப செய்வது   இந்தியஅரசியல்

அவர்களே  எல்லாமே...

அப்போ  இதெல்லாம்  இல்லாமலா???

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?

மண் கேட்டா அந்த மழை பொழியும்,
மேகம் பொழியாமல் போவதுண்டா?
கரை கேட்டா அந்த அலைகள் வரும்,
அலைகள் தழுவாமல் போவதுண்டா?
கண்ணீர் மழையில் உந்தன் முன்னே முன்னே,

காலம் காலம் சொல்ல வேண்டும்,
யாரோ உண்மை அறிவார்?

தமிழ் ஈழத்துக்கான பாதை ....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில்  குற்றவாளிகளென்று அப்பாவிகளைத் தண்டிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.  ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி எத்தனைபேர் சிறையில் வாடுகிறார்கள். அப்படிப் பிரேமானந்த சுவாமியின் கேசும் இருக்கக்கூடும்.   முதலமைச்சர் சிவி அவரை நிரபராதியென்கிறார்.  அவர் ஒரு பழைய சுப்பிரீம் கோட் நீதிபதி.  அரசியல் ஆதாயம் பதவியென்று எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கிறாரென்றால் அதையிட்டுச் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்தறிவதே மெய்.  அதை இந்திய நீதிமன்றம் செய்ததா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, karu said:

இந்தக் காலத்தில்  குற்றவாளிகளென்று அப்பாவிகளைத் தண்டிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.  ராஜீவ் கொலையில் சம்பந்தப்படுத்தி எத்தனைபேர் சிறையில் வாடுகிறார்கள். அப்படிப் பிரேமானந்த சுவாமியின் கேசும் இருக்கக்கூடும்.   முதலமைச்சர் சிவி அவரை நிரபராதியென்கிறார்.  அவர் ஒரு பழைய சுப்பிரீம் கோட் நீதிபதி.  அரசியல் ஆதாயம் பதவியென்று எதையும் அவர் பொருட்படுத்தாமல் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கிறாரென்றால் அதையிட்டுச் சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்தறிவதே மெய்.  அதை இந்திய நீதிமன்றம் செய்ததா என்று தெரியவில்லை.

வக்காலத்து வாங்கவில்லை.

ஆனாலும், அவர் இறந்த போது வந்த கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் வாசித்தேன். 

அவரது வீழ்ச்சிக்கு பெரிய இடத்தின் பொல்லாப்பே காரணம் என்று சொல்லியிருந்தார்கள்.

இந்தியாவில், 'குமாரசாமிக் கணக்குகள்' மூலம் தப்பவும் முடியும், மாட்டவும் முடியும்.

ஜெயலலிதா தப்பினார்.... சசிகலா மாட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ஜெயலலிதாவையும் மாட்டிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, karu said:

தற்போது ஜெயலலிதாவையும் மாட்டிவிட்டார்கள்.

ஆனாலும், அது உண்மையானால், அந்தப் பொல்லாப்புக்கு உரியவர்கள், பின்னர் வினையினை அறுத்துக் கொண்டார்கள்.

தோழியை தன்னுடன் வைத்துக் கொண்டதால், தோழியின் கணவர், 'நடந்து' போய், ஜனனி என்ற இளம் பெண்ணை வைத்துக் கொள்ள, 'கஞ்சா' வைத்திருந்தார் என அந்த அப்பாவிப் பெண்ணை உள்ளே நீண்ட நாள் வைத்திருந்த புண்ணியவதிகள், அறுத்த வினை தான் தெரிந்ததே.

  • தொடங்கியவர்

கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி இருந்தால் மனவருந்துகிறேன் – சி.வி.

wikky.jpg
கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
 
முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
 
நான் தினப்புயல் என்ற பத்திரிகைக்குக் கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
 
முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர்.
 
மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார். ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன. அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.
 
செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.
 
இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார். அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.
 
அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு  (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன். அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன்.
 
கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன். இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன். நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை.
 
குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன். இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள். இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே.
 
நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன்; அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/archives/24424

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

சிங்கள தலைவர்கள் தம் செயற்திறன் குறைந்து மக்களால் அது உணரப்படும் வேளைகளில் இனவாதக் கருத்துகளை வெளிவிட ஆரம்பிப்பார்கள். சிங்கள மக்களும் தம் தலைவர்களின் இயலாமையை கணக்கெடுக்காது இனவாதத்தினை ஆதரிப்பார்கள்.

தன் சக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க முடியாத அல்லது அவர்களை வெளியேற்ற துணிச்சல் இல்லாத, செயற்திறன் அற்ற சி.வி.யும் சிங்கள தலைவர்கள் போல் இனவாதம்/ மதவாதம் கதைத்து மக்களிடம் ஆதரவை எதிர்பார்க்கின்றார் போலிருக்கு.

இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில்

6 hours ago

இயேசு கிறிஸ்துவை நான் ஒருபோதும் அவமதித்து கூறவில்லை, அந்த செவ்வியை வேண்டும் என்றே மாற்றி வடிவமைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார்.

ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன.

அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.

இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.

அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன். கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன்.

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன்.

நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை. குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன்.

இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன். அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன்.

ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

2 hours ago, பெருமாள் said:

இயேசு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : முதல்வரின் பகிரங்கமான பதில்

6 hours ago

இயேசு கிறிஸ்துவை நான் ஒருபோதும் அவமதித்து கூறவில்லை, அந்த செவ்வியை வேண்டும் என்றே மாற்றி வடிவமைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் பத்திரிகை ஒன்றிக்கு கொடுத்த செவ்வி சம்பந்தமாகச் சில தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. நான் இயேசு கிறிஸ்து நாதரை அவமதிக்கும் விதத்தில் கருத்துக்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

முதலில் இணையத் தளத்தில் வந்த செய்தியை யாரும் பார்த்தார்களானால் அதில் வரும் கடைசி சட்டம் (frame) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

செவ்வி எடுத்தவர் முதல் சட்டங்களில் பேசியவாறு கடைசி சட்டத்தில் பேசவில்லை. அவர் தெளிவாகப் பேச முடியாதவர். மிகவும் பதிவான குரலில்த்தான் முன்னைய சட்டங்களில் கேள்வி கேட்டு வந்தார். என்னிடம் கடைசி சட்டத்தின் நிகழ்வின் போதும் அவ்வாறே பேசினார்.

ஆனால் வெளிவந்த இணையத்தளச் சட்டத்தில் அவர் மிகத் தெளிவாகப் பேசியுள்ளார். என் முன்னிலையில் அவர் அவ்வாறு பேசவில்லை. அத்துடன் அவர் கேட்டதாக ஒளிபரப்பாகியிருக்கும் கேள்விக்கு நான் தந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என் பதில்கள் வேண்டுமென்றே ஒலியைக் குறைய வைத்து நேயர்களுக்குக் கேட்காத வகையில் தரப்பட்டிருக்கின்றன.

அவரின் கேள்வி மட்டும் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனம் என்று அவர் கூறியதாக எனக்கு ஞாபகமில்லை. எது எவ்வாறு இருப்பினும் நடந்தது இதுதான்.

செவ்வி எடுத்தவர், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம். நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது முதலமைச்சர். இது தவறானதல்லவா என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளி எனக் காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன்.

அதைத்தான் இயேசுவையும் பிரேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டு விட்டார் என்று சிலர் கூறி எனக்கெதிராக கிறீஸ்தவ சகோதரர்களை ஏற்றி விட எத்தனித்துள்ளார்கள்.

இயேசு கிறிஸ்து நாதரின் பரம அபிமானி காலஞ்சென்ற பிரேமானந்த சுவாமி. பல பேச்சுக்களில் இயேசு நாதரின் வாழ்க்கையில் இருந்து மேற்கோள்களை எடுத்துரைப்பார்.

அன்னை வேளாங்கன்னியைப் போய் தரிசித்து வாருங்கள் என்று எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அறிவுரை வழங்கியவரே அவர்தான். இன்று பல்லாயிரக்கணக்கான மேலைநாட்டு கிறிஸ்தவ அன்பர்கள் அவரின் அபிமானிகளாக உள்ளார்கள்.

அது போக 1958ம் ஆண்டிலேயே நான் றோயல் கல்லூரியில் சமய ஒப்பீட்டு பரிசு (Comparative Religion) பெற்றவன். பைபிளில் இருந்து Gospel according to St. Mathew என்பதே கிறீஸ்தவம் சம்பந்தமான பாடம். இதே போல் இஸ்லாம், பௌத்தம் இந்து மதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும் பாட விதானம் தரப்பட்டு அவற்றில் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலேயே பரிசு பெற்றவன்.

அன்று தொடக்கம் இன்று வரை எல்லா மதங்களையும் அனுசரித்துப் போற்றி வருபவன். கிறீஸ்தவ நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவன்.

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன். வருடா வருடம் St. Antony Feast காலத்தில் சென்று வணங்கி வருபவன்.

நான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் சுவாமி பிரேமாநந்தரின் வாழ்க்கையும் எந்த விதத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை. குற்றவாளியொருவரை எவ்வாறு குருவாக ஏற்கலாம் என்பதற்கு யேசு கிறீஸ்துவை உதாரணமாகக் கூறினேன்.

இயேசு நாதரின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, சுவாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு, எவ்வாறு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று பலதைப் பற்றியும் பலர் எழுதியுள்ளார்கள்.

இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே. நான் என்னிடம் கேட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன். அவ்வளவு தான். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன்.

ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

ஹஹஹா... கடைசியில் ஒரு பாலியல் குற்றவாளியை கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டதை ஒப்புக்கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு நீதியரசர் என்பதால் அதை சுற்றி வளைச்சு ஒப்புக் கொள்கின்றார்.

தான் கூறியதை திரித்து கூறி வெளியிட்டமைக்காகவும், மூலப் பிரதியில் திருத்தம் செய்து இடைச்செருகலாக இன்னொரு வீடியோவை இணைத்தமைக்காகவும் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகின்றாரா அல்லது தன் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை போல செயல்திறன் அற்று சும்மா இருக்க போகின்றாரா என பொறுத்து இருந்து பார்ப்போம். :rolleyes:

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதில் குறியாகவுள்ள மதவெறியர்கள் மீண்டும் இந்துவாக உள்ள வடமாகாண முதலமைச்சர் மீது தங்கள் வசைமாரிகளி பொழிந்து வருகின்றனர்.

கல்லை கும்பிடுகிறார்கள், அது இது என்று இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் மதவெறியர்கள் விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய உண்மையை சகிக்க முடியாமல் ஓலமிடுகின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நல்லது செய்ய எவர் வந்தாலும் அவர்களை அழித்துவிடுவதே தமிழர் என்று கூறிக்கொள்ளும் சிலரின் தலையாய கடமையாக உள்ளது.

தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை அழித்துவிட்டு இன்று அழுது புலம்புவதுபோல், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களையும் அழித்துவிட்டு அழுது புலம்பும் நாள் வெகுதூரம் இல்லை. :unsure:
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதில் குறியாகவுள்ள மதவெறியர்கள் மீண்டும் இந்துவாக உள்ள வடமாகாண முதலமைச்சர் மீது தங்கள் வசைமாரிகளி பொழிந்து வருகின்றனர்.

கல்லை கும்பிடுகிறார்கள், அது இது என்று இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் மதவெறியர்கள் விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய உண்மையை சகிக்க முடியாமல் ஓலமிடுகின்றனர்.

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

கிறித்துவர்களாகட்டும், இந்துக்கள் ஆகட்டும் இவர்கள் தங்களது கடவுள்களை பாலியல் செயற்பாட்டுகளில் ஈடுபடுத்திச் சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளதை மறைத்துவிட முடியாது.

பாலியல் வன்முறையைக் குற்றமாகக் கொள்ளலாம்.

பாலியல் குற்றமென்றால் கடவுள்களும் குற்றவாளிகளே! 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

கிறித்துவர்களாகட்டும், இந்துக்கள் ஆகட்டும் இவர்கள் தங்களது கடவுள்களை பாலியல் செயற்பாட்டுகளில் ஈடுபடுத்திச் சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளதை மறைத்துவிட முடியாது.

பாலியல் வன்முறையைக் குற்றமாகக் கொள்ளலாம்.

பாலியல் குற்றமென்றால் கடவுள்களும் குற்றவாளிகளே! 
 

மிகவும் ஆளமாக பேசவேண்டிய  விடயமிது  அண்ணா

பேசலாமே...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

மிகவும் ஆளமாக பேசவேண்டிய  விடயமிது  அண்ணா

பேசலாமே...

என்னையும் ஒரு புலவனாக யாழில் உலவ ஏற்றுக்கொண்டீர்கள் ஆனாலும் நான் ஒரு தருமிதான் ஐயா. கேள்விமட்டும்தான் கேட்கமுடியும். கடவுள் விடயத்தில் என்னையே நான் கடக்க முடியவில்லை. பாலியல் விடயத்தில் அதி உச்சமாகத் தண்டிக்கப்பட்டு மேனிமுழுவதும் ஆயிரம் கண்கள் (பெண்குறிகள்) உடைய இந்திரனையும் தேவனாகக் கருதுவதிலிருந்து என்னால் மீள முடியவில்லை..... இதில் ஆழங்கள்....!! அந்த விட்ணு கடவுளாலும் காண முடியவில்லையே. :(
 

Edited by Paanch

  • 2 weeks later...
On 4/20/2017 at 4:46 PM, விசுகு said:

 ஒரு பாலியல் குற்றவாளியை

கிறிஸ்தவர்களின் கடவுளுடன் ஒப்பிட்டது சரியா  என்பதே கேள்வி??

 இது பற்றி  உங்கள் கருத்து என்ன?

விசுகு அண்ணை!
கிறிஸ்தவர்களின் கடவுள் யார்? கிறிஸ்தவர்களின் தூதுவர் யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.