Jump to content

Recommended Posts

நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் பட்டியல்

 

50B500A3-BEE2-40C8-A628-B359F09DC3A9.jpe

2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் 40 வேட்பாளர் பட்டியலை மார்ச் 23 அன்று சீமான் அறிவித்தார். அவர்கள் விவரம்….

பெண் வேட்பாளர்கள்
“””””””””””””””””””””””””””””””

1.வட சென்னை – பி.காளியம்மாள் B.com, MBA

2.தென் சென்னை – அ.ஜெ.ஷெரின் MSC,Mphil

3.திருவள்ளூர் (தனி) –
ம.வெற்றிச்செல்வி
BA

4.காஞ்சிபுரம்(தனி) –
த.ரஞ்சனி
BCOM,MBA

5.புதுச்சேரி –
நி.ஷர்மிளாபேகம்
BA

6.வேலூர் –
தீபாலட்சுமி
BBA

7.விழுப்புரம்(தனி) –
பிரகலதா
BSc,MA,M.Ed

8.ஆரணி –
அ.தமிழரசி
MA.,Tamil

9.தருமபுரி –
ர.ருக்மணிதேவி
MSC,PHY.

10.ஈரோடு –
மா.கி.சீதாலட்சுமி
M.A.M.Phil

11.பொள்ளாச்சி –
அ.சனுஜா
MA.,M.phil

12.நீலகிரி(தனி) –
சே.மணிமேகலை
BE.

13.பெரம்பலூர் –
க.சாந்தி
MA,TAMIL,B.ED

14.கடலூர் –
சா.சித்ரா
Bcom.

15.மதுரை
க.பாண்டியம்மாள் –
MSc,Mphil,Phd

16.மயிலாடுதுறை –
கு.சுபாஷினி
BA

17.இராமநாதபுரம் –
தி.புவனேஸ்வரி
BSC

18.சிவகங்கை –
வே.சக்திப்பிரியா
MCA

19.நாகபட்டிணம்(தனி) –
பொ.மாலதி
B.Sc,B.L.

20.திருநெல்வேலி –
பா.சத்யா
Bsc

ஆண் வேட்பாளர்கள்
“”””””””””””””””””””””””””””””

1.கோவை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் M.Phil.,

2.திருப்பூர் – ப.ஜெகநாதன்
தொழிலதிபர்

3.கரூர் – மருத்துவர் கருப்பையா MBBS.,MS (ortho)mch

4.திருச்சி – வி.வினோத் Msc., Mphil

5.திண்டுக்கல் – மன்சூர் அலிகான் D.F.T.,

6.தென்காசி(தனி) – சி.ச.மதிவாணன் B.A.,

7.தேனி – சாகுல் அமீது தொழிலதிபர்

8.விருதுநகர் – கா.அருள்மொழிதேவன்L.L.M.,

9.தூத்துக்குடி – ச.கிறிஸ்டன்டைன்ராஜாசேகர் தொழிலதிபர்

10.கன்னியாகுமரி – வ.ஜெயன்றீன் DEEE.,

11.தஞ்சாவூர் –
புலவர் கிருட்டிணகுமார்
B.A

12,சிதம்பரம்(தனி) –
மு.சிவா ஜோதி
M.com

13.நாமக்கல் –
மருத்துவர் பாஸ்கர்
M.vsb.,.PHD

14.சேலம் –
ராஜாஅம்மையப்பன் இயற்கை விவசாயி

15.திருவண்ணாமலை –
மருத்துவர் ரமேஷ் பாபு
MDS

16.கள்ளக்குறிச்சி –
சர்புதீன்
B.A., L.L.B

17.அரக்கோணம் –
யு.ரா.பாவேந்தன்
M.A.,B.L.,

18.கிருட்டிணகிரி –
ந.மதுசூதனன்
M.C.A.,

19.மத்திய சென்னை –
கார்த்திகேயன்
மருத்துவர்

20 .திருப்பெரும்புதூர் –
ஈ ரா.மகேந்திரன்
B.com.,

Link to comment
Share on other sites

  • Replies 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்காக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும்: நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

Published :  25 Mar 2019  12:44 IST
Updated :  25 Mar 2019  13:06 IST
D2F-sYdXcAES7w3jpg
 
மீனவ சமூகத்துக்கும், மீனவப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் எதிராக கடந்த ஐந்து வருடங்களாக வலுவாகக் குரல் கொடுத்து வருகிறார் காளியம்மாள், பி.காம்.பட்டதாரி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மாநில மீனவப் பெண் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளரரகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடசென்னை தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள்.

சாமானிய மக்களின் குரலை தனது பேச்சுகளில் வெளிப்படுத்தி தமிழகத்தின் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இடையே பலரின் கவனத்தை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் காளியம்மாளிடம் ’இந்து தமிழ் திசை’ சார்பாக  நடத்திய நேர்காணல்.

வடசென்னை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக நீங்கள் போட்டியிட இருக்கிறீர்கள். இங்கு கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்ற பிரதான கட்சிகள் மக்களுக்கு செய்யத் தவறியதாக நீங்கள் பார்ப்பது? நீங்கள் அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

குற்றச்சாட்டுகள் என்று ஒன்றுமில்லை. ஆனால் தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்களுடன் ஆலோசித்து அதற்கான தீர்வை எப்படிக் காண்பது என்பதன் அடிப்படையில்தான் வெளியிட வேண்டும். ஆனால் பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மக்களுடைய பங்களிப்பு இல்லை. மக்கள் பங்கேற்புள்ள ஒரு திட்டத்தை அமல்படுத்தினால்தான் அது சரியாக இருக்கும்.

இதை தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக கட்சிகளே ஒரு திட்டத்தைத் தயாரித்து அதனை மக்களிடம் திணிப்பது சரியானது அல்ல.

இவர்கள் மக்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளும் (எடுத்துக்காட்டுக்கு ஆர்கே நகரில் குப்பையை அகற்றுதல்) நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. மக்களின் தேவையை உணர்ந்துதான் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டு வந்திருந்தாலே வடசென்னை பின்தங்கி இருக்காது. இங்குள்ள தொழிற்சாலைகளை எல்லாம் பார்க்கும்போது இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தாலே இங்குள்ள மக்கள் வறுமையில் இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி வடசென்னையோடு தொடர்புபடுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? இதற்முன்னர் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து  நீங்கள் எவ்வாறு வேறுபடுவீர்கள்?

நாங்கள் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள். வடசென்னையில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு நாகப்பட்டினத்தில் இருப்பவர்கள் வரக்கூடாது என்ற பிரிவு இருக்கும்வரைதான் மக்களை ஏமாற்ற முடியும். வேறுபாடில்லாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபடுகிறார்களோ அப்போது மக்களால் அவர்களை ஏமாற்ற முடியாது. இங்கிருப்பவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன்.  அதுமட்டுமில்லாது நான் களத்திலிருந்து வந்திருக்கிறேன்.

எங்கு பிரச்சினை இருக்கிறதோ அங்கிருந்து வந்திருக்கிறேன். நான் மேலோட்டமாக யாரோ கொடுத்த தேர்தல் அறிக்கையைப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை. நான் மக்கள் முன் சென்று அவர்கள் பிரச்சனையைக் கேட்கிறேன். அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று அவர்களிடம் விவாதிப்பேன். அதன் அடிப்படையிலான திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகத்தான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். மக்களுக்கு எதிராக மசோதா நிறைவேறினால் அதற்கு எதிராக என் வாதத்தை வலுவான தகவலுடன் முன் வைப்பேன். நான் மக்களுக்குள் மக்களாக இருக்கிறேன். இதிலிருந்துதான்  நான் அவர்களிடமிருந்து வேறுபடுகிறேன். எங்கள் கட்சியின் திட்டங்களும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுதான் இருக்கும்.

நாம் தமிழர் கட்சி ஆரம்பத்திலிருந்தே நீங்கள் தேர்தலைத் தனித்து சந்திக்கிறீது. கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? கடந்த தேர்தலில்  நீங்கள் அதிமுகவைத்தானே ஆதரித்தீர்கள்?

நான் முதலில்  ஒருகட்சியைப் பற்றி விமர்சிக்கிறேன்.. அதே நேரத்தில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதில் எனக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக  நான் வைத்த விமர்சனத்தை அந்தக் கட்சி மாற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே நான் அவர்களுடன் கூட்டணி வைப்பது முரணாகத்தானே இருக்கும். அதுமட்டுமில்லாது நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கிறோம். கருத்தியல் ரீதியான விமர்சனங்களை அவர்கள் மீது வைத்தோம். அதிமுகவும் பாஜகவை விமர்சித்திருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றால் இது சந்தர்ப்பவாத கூட்டணி. இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது சரியானதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

சூழியலுக்கு கேடு விளைவிக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் பிரதானமாக வடசென்னையிலேயே ஒதுக்கப்படுவதால் இங்கு சூழல் மாசு அதிகம். இதற்கும் வடசென்னை மக்கள் எதிர்கொள்ளும்  தண்ணீர் பிரச்சினைக்கும் நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள்?

வடசென்னையில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பல தொழிற்சாலைகள் உள்ளன. உதாரணத்துக்கு இரும்புத் தொழிற்சாலைக்குக் கூட தண்ணீர் தேவைப்படும். ஏன் அவை பெரும்பாலும் வடசென்னையின் கடலோரங்களில் அமைக்கப்படுகின்றது.இதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளை எளிதாக கடல் தண்ணீரில் கொட்டிவிடலாம் என்ற நோக்கமும்,  தண்ணீர் தேவையும் அந்த தொழிற்சாலைகளுக்கு இருக்கிறது.

நம் நாட்டை எப்படி பிற நாடுகள் குப்பைத் தொட்டியாகப் பார்க்கிறதோ அதே மாதிரி நம் நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் கடலை குப்பைத் தொட்டியாகப் பார்க்கின்றன. இவ்வாறே மக்களுக்குத் தேவையான  நிலத்தடி நீரை உறிஞ்ச தொழிற்சாலைகள் இங்கு ஒதுக்கப்படுகின்றன. இங்கு தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. இத்தொழிற்சாலைகள் எவ்வளவு ஆழம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்துகிறார்கள்? ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இவர்கள் அளிக்கக் கூடிய ஆய்வறிக்கைகள்  எல்லாம் சரியாகச் சென்று சேர்கிறதா? அவர்களது தொழிற்சாலைகள் மாசு சார்ந்து சோதனை நடத்தி இருக்கிறார்களா?  இதன் முடிவுகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதா? இந்தத் தொழிற்சாலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் அனுமதி இருக்கிறதா? என இம்மாதிரியான விஷயங்களை எல்லாம் யாரும் கவனிப்பது இல்லை. இதனுடைய விளைவுதான் நெருக்கடியான நிலையிலும் தொழிற்சாலைகள் அங்கு வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் குடிசை வாழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பெரிய முரண்பாடுதானே. இங்கு மக்களுக்கு பட்டா இல்லாததால் சொந்த மண்ணிலே அகதிகளாக இருக்கிறார்கள். மக்கள் வாழ்வதற்கான சூழலைக் கெடுத்து தொழிற்சாலைகள் அமைக்க நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. சூழலைக் கெடுக்காத இடங்களிலேயே தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றினாலே தண்ணீர்  பிரச்சினை தீர்க்கப்படும். எங்கெங்கு குளங்கள், ஆறுகள் எல்லாம் அபகரிக்கப்பட்டுள்ளதோ அவற்றை எல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இதைச் சொன்னால் இதுவெல்லாம் நடக்கற காரியமா என்று சிலர் சிரிப்பார்கள். ஆனால் கேரளாவில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.  இதனை நடைமுறைப்படுத்தும்போது நிலத்தடி நீர் நிச்சயம் பாதுகாக்கப்படும். 

வடசென்னையைப் பொறுத்தவரை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்கான தீர்வாக எதை முன்மொழிவீர்கள்?

இதுவரையில் இருந்த அரசியல் கட்சிகள் அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றுவதற்கான பணியைச் செய்வோம் என்றுதான் கூறியுள்ளன. ஆனால் அந்தக் குப்பைகளை மறு சுழற்சி செய்து எப்படிப் பயன்படுத்த முடியும், எதைப் பயன்படுத்த முடியாது என்று அறிவியல் தொழில்நுட்பமாகப் பார்க்கும் திட்டத்தை இதுவரை யாரும் சமர்ப்பித்ததாக நான் பார்க்கவில்லை.

நீங்கள் மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் குப்பைகளை மறுசுழற்சி செய்து அதனை உரமாகத் தயாரிக்கிறார்கள். ஆனால் குப்பைகளை அகற்றும் விவாதமே இங்கு வைக்கப்படுகிறது.

இங்கிருந்து குப்பைகளை அகற்றி இன்னொரு இடத்தில்தான் வைக்கப்போகிறார்கள். எனவே அந்தந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி மையம் அமைத்திருந்தார்கள் என்றால், இவ்வளவு குப்பை இங்கு சேர வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகாலத் திட்டத்தை வரையறை செய்வேன்.

வடசென்னையில் சிறு குறு தொழிலாளர்கள் அதிகம்.அவர்கள் பெரும்பாலும்  தனித்து இயங்குகின்றனர். அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன?

இன்றைக்கு தொழிலாளர் நலச் சட்டம் உள்ளது. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு உள்ளது. ஆனால் இவர்களது தரவு தமிழக அரசிடம் இருக்கிறதா? முதலில் அந்தத் தகவல் தேவை. வெறும் நல வாரியம் அமைப்பது மட்டுமே போதாது. வடசென்னையில் ஒருங்கிணைக்கப்பட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் பெரும்பாலும் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. தரவுகள் இல்லாததால் உறுப்பினர்களைக் கண்டறிவது கடினமாகிறது. எனவே இவர்களைப் பற்றிய முறையான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்களது தேவையை நாம் நிறைவேற்ற முடியும்.

முதல்கட்டமாக இந்த தொழிலாளர்களை நான் ஒன்று சேர்க்க நினைக்கிறேன். அதன்பின்னர்தான் அவர்களுக்கான திட்டங்களை வரையறை செய்ய முடியும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் எண்ணிக்கை வடசென்னையில் அதிகம். இதன் காரணமாக இங்கு குற்றப் பின்னணி கொண்ட இளைய தலைமுறை காலம் காலமாக உருவாகிக் கொண்டுதான் வருகிறது? இவர்களை அரசியல் கட்சிகளும் காலம் காலமாகப் பயன்படுத்திதான் வந்திருக்கின்றன.  இப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் பார்வை என்ன?

நல்ல வீடு, பொருளாதாரச் சுமை இல்லாத வாழ்க்கை இருந்தால் யாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களாக நிச்சயம் உருவாக மாட்டார்கள். சிறையில் இருக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா? இதற்கு அவர்களையே குற்றம் சொல்ல முடியாது. இந்த வாழ்க்கையைத் தராதது அரசின் குற்றம் தான். 

படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் திறன் சார்ந்த அரசு வேலை வழங்க வேண்டும். ஒவ்வொருவரின் தனித்திறமையைக் கண்டறிய வேண்டும். இதை நிறைவேற்றினால் அந்த இளைஞர்கள் குற்றப் பின்னணியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மீனவப் பின்னணியைச் சேர்ந்த நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக உங்கள் குரல் எவ்வாறு ஒலிக்கும்?

நிச்சயம் மீனவர்களுக்குகாக என் குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும். 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது எனது முதல் கோரிக்கையாக இருக்கும். இரண்டாவது சாகர் மாலா திட்டம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நீக்கப்பட வேண்டும். மூன்றாவது பழங்குடி மக்கள் பட்டியலில் எங்களையும் சேர்த்து எங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

கடலோரங்களில் வாழும் பூர்வீக மக்களுக்கு அவர்கள் வாழும் இடத்துக்கு நிரந்தரப் பட்டா வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் மீன் பிடிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும்.

கடலோரக் காவல்படையில் 70% பேர் மீனவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். மீனவப் பெண் தொழிலாளர்களை அங்கீரித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை ஒதுக்க வலியுறுத்தப்படும் என்ற கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன் வைப்பேன்.

நாம் தமிழர் கட்சி பொதுவாக தமிழர்களையே முன்னிறுத்துகிறது என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில்?

மொழி சாகும்போது அந்த இனமும் செத்துவிடும். தமிழ் மொழியை யார் நேசிக்கிறார்களோ அவர்களை முன் நிறுத்துவதுதான் நாம் தமிழரின் முக்கியக் கொள்கை. தமிழர் இனத்தை தமிழரே ஆள வேண்டும் என்பது நியாயம்தானே.இப்பவும் நாங்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள் என்றுதான் கூறுகிறோம். இங்குள்ள பிற மொழிகளுக்கான நலத்திட்டங்களையும் சேர்த்து தானே நாங்கள் குரல் கொடுக்கிறோம். இதில் சாதி, மதம், இனம் எதையும் நாங்கள் பார்க்கவில்லை.

இறுதியாக வடசென்னை மக்களுக்கு நீங்கள் கூறுவது?

நாம் மாற்றங்களைத் தேடுகிறோம். ஆனால் அதற்கான அடியை எடுத்து வைப்பதில்லை. நம்மிலிருந்து வரும் வேட்பாளர்களை இனம் கண்டு நமது பிரதிபலிப்பாக அவர்கள்  நாடாளுமன்றத்தில் பேசுவார்கள் என்று யாரை நினைக்கிறீர்களோ அவர்களை வாக்களித்துது தேர்ந்தெடுத்தால் மட்டுமே நமக்கான காலம் பிறக்கும். 

எனவே நிச்சயமாக வடசென்னை மக்கள் அடித்தட்டு சமூகத்திலிருந்து வந்த எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article26631563.ece

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையேல் சட்ட நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி காட்டம்

Published :  25 Mar 2019  16:31 IST
Updated :  25 Mar 2019  16:32 IST
 
download-7jpg

சீமான்: கோப்புப்படம்

 

தமிழ்ப் பெண்கள் குறித்துக் கீழ்த்தரமாகப் பதிவிட்ட ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்கிடையே ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.

5452476021122618290299564008321994708746
 

அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது.

அதில், ''பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகருக்கு இருந்த வக்கிரப் பார்வைக்குச் சற்றும் சளைத்ததல்ல மருத்துவர் ஷாலினியின் அபத்தப் பதிவு. தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திய (மனநல) மருத்துவர் ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இப்பிரச்சினையை கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

 

பாஜக குண்டர்கள் நாம் தமிழர்மீது தாக்குதல்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

 

சீமானின் சிந்திக்க வைக்கும் பேச்சு.
தமிழ்நாடே கொஞ்சம் சிந்தி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Nathamuni said:

 

இணைப்புக்கு நன்றி நாதம்.
இப்படியே ஆதரவு கூடிக் கொண்டு போனால் அதை சிதைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

15 வது நிமிடத்திலிருந்து கேழுங்கள்.தமிழநாட்டை தமிழனே ஆழ வேண்டுமென்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.