Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி

Featured Replies

யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி

 
59a37668dfd28-IBCTAMIL.jpg
59a37669b1b47-IBCTAMIL.jpg
59a3766a39e79-IBCTAMIL.jpg

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டுக்குள் 2உஅ நீளமான புழு இருந்ததை அவதானித்த ஒருவர் அது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் சுட்டிக்காட்டி வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளரும் ஊழியர்களுமாக சேர்ந்து குறித்த நபரை கடையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியதோடு ஹெல்மற் மற்றும் கொட்டான் தடிகளாலும் தாக்கியுள்ளனர்.

குறித்த கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுகின்றதெனவும் இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் யாழ் நகரப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/In-Jaffna-Restaurant-Worm-in-a-dish

59a373ed57d62-IBCTAMIL.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

கடையின் பெயரை சொல்லாவிடின் அது பொய்யான செய்தியாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற செய்திகளை பத்திரிகையிலும் கருத்துக்களங்களிலும் இடத்தை நிரப்புவதற்காக போடுவதுண்டு.
நீங்கள் யாழில் எந்த உணவகத்திற்கும் சென்று சுகாதாரத்துடனும் தரமாகவும் உணவை சாப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

3 hours ago, vanangaamudi said:

சைவ உணவகம் போலுள்ளது.
அந்தச்  சாப்பாட்டு கடையின்... பெயரை சொல்லுங்கோப்பா.... tw_warning:
இனி போற சனம் ஆவது, அந்தப் பக்கம்  போகாமல்  இருக்கும். tw_astonished:

 

கடையின் பெயரை சொல்லாவிடின் அது பொய்யான செய்தியாகத்தான் இருக்கும்.
இதுபோன்ற செய்திகளை பத்திரிகையிலும் கருத்துக்களங்களிலும் இடத்தை நிரப்புவதற்காக போடுவதுண்டு.
நீங்கள் யாழில் எந்த உணவகத்திற்கும் சென்று சுகாதாரத்துடனும் தரமாகவும் உணவை சாப்பிடலாம்.

செய்தி உன்மைதான் போல் இருக்கு அந்த மனுசனை விரட்டி விரட்டி அடிக்கிறாங்கள்  ஏதோ   பால்கடல் பவானம் இது தான் பெயர் கண்டு பிடியுங்கள்  பல இணையத்தளங்களில் போட்டிருக்காங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள, இந்திய வடவர் வணங்கும் கடவுளின் பெயர்கொண்ட உணவகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊரிலுள்ள எனது மைத்துனர் தெரிவித்தார். 

(உணவகத்தின் பெயர் தெரிந்தாலும் வலுவான சாட்சியமின்றி அதனை வெளியிட முடியவிவ்லை)

 

Edited by நியானி
இணைக்கப்பட்ட செய்தி ஒரு வருடத்திற்கு முன்னர் வெளிவந்தது

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளியேலே இவ்வளவு கட்டுப்பாடுகள்.. இருந்தும்.. தமிழர் உணவங்களில் நிலைமை மோசம். யோசிச்சுப் பார்க்கனும்.. தாயகத்தில்.

எம்மவர்களை சில விடயங்கள் தொடர்பில் அடிப்படையில் இருந்து அறிவூட்ட வேண்டி இருக்கிறது. அதில் பொதுச் சுகாதாரம்.. உணவு வழக்கம்.. சுகாதாரம் முக்கியமானதாகியுள்ளது.

1990 ஆரம்பங்களில் டெங்கு வந்து மரணம் சம்பவித்ததில்லை. உள்ளூர் வாசிகளிடம் எயிட்ஸ் இருக்கவில்லை. போதைப் பொருள் பாவனை இருக்கவில்லை. அநியாய விபத்து மரணங்கள் வெகு குறைவு. வாள் வெட்டு.. அந்த வெட்டு இந்த வெட்டு வன்முறைக் குழுக்கள் இருக்கவில்லை. திட்டமிட்ட களவுகள் இருக்கவில்லை. காடு வெட்டல்.. மரம் கடத்தல் இருக்கவில்லை. கள்ளக் காணி பிடிப்பு இருக்கவில்லை. பெண்கள் மீதான சேட்டைகள் வன்முறைகள் மிகக் குறைந்த அளவில் இருந்தது. மதுபானப் பாவனை மட்டுப்பட்டிருந்தது.  கல்வியில் உயர் பெறுபேறுகள் எட்டப்பட்டுக் கொண்டிருந்தன. 

இன்று.. எல்லாம் தலைகீழாகி உள்ளது. இதனை சிலர் சுதந்திரம் என்றும் போதிக்கினம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

 

செய்தி உன்மைதான் போல் இருக்கு அந்த மனுசனை விரட்டி விரட்டி அடிக்கிறாங்கள்  ஏதோ   பால்கடல் பவானம் இது தான் பெயர் கண்டு பிடியுங்கள்  பல இணையத்தளங்களில் போட்டிருக்காங்கள் 

 

 

5 hours ago, Paanch said:

யாழ்ப்பாணம் கே. கே. எஸ் வீதியில் அமைந்துள்ள, இந்திய வடவர் வணங்கும் கடவுளின் பெயர்கொண்ட உணவகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊரிலுள்ள எனது மைத்துனர் தெரிவித்தார். 

(உணவகத்தின் பெயர் தெரிந்தாலும் வலுவான சாட்சியமின்றி அதனை வெளியிட முடியவிவ்லை)

 

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

  • தொடங்கியவர்

கடையின் படமே இருக்கு இணையத்தில்..tw_blush:

10 minutes ago, Maruthankerny said:

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் சரவணவபனுக்கு கிளை இருக்கா...

33 minutes ago, Maruthankerny said:

 

கடைசி எழுத்து "ன்" 
யார் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம்  

கண்டு பிடிப்பவர்களுக்கு 
அந்த கடையில் மூன்று மரக்கறி சாப்பாடு இலவசம்.

3 புளுவை இலவசமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று பார்க்கிறிர்களே இது நியாயமா...?

இப்படி படத்தை போட்டு செய்திகளை எழுதி ஒப்பாரி வைப்பதில் ஒரு பிரயோசனம் இல்லை!

பெரும்பாலும் தமிழர்களின் மனநிலை இதுதான்.

பாதிக்கப்பட்டவர்கள் உணவுச் சுகாதாரப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யும் பழக்கம், அல்லது நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் இல்லை.

கீழுள்ள செய்தியை வாசித்தால் சிங்களவனுக்கும், எப்போதும் கோட்டைவிடும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் விளங்கும்!

 

 

 

கேகாலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர்கள் விடுவிப்பு

பெண்ணொருவருக்கு தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இரு வைத்தியர்களையும் கடந்த வார இறுதியில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதில் ஒருவர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மற்றும் ஒருவர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு வைத்தியர்களும் மதுபோதையில் அந்த பெண்ணை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/156607?ref=home-feed

 
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மையானது தான். கடையின் பெயர் விஷ்ணுபவன், இந்த சம்பவம் நடந்தபோது தானும் கடையில் இருந்ததாக எனது நெருங்கிய நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் படங்களுடன் போட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thumpalayan said:

செய்தி உண்மையானது தான். கடையின் பெயர் விஷ்ணுபவன், இந்த சம்பவம் நடந்தபோது தானும் கடையில் இருந்ததாக எனது நெருங்கிய நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் படங்களுடன் போட்டிருந்தார்.

 

இதுதானா?

 

Untitled.png

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

 

இதுதானா?

 

Untitled.png

சாப்பாட்டுக்குள்ளை  புழு, இருந்ததை  கேள்விப்  பட்டும்,:rolleyes:
நம்ம சனங்கள்....  இவ்வளவு சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வந்து.... 
சாப்பாட்டை... ஒரு பிடி பிடிக்கிறாங்கள் என்றால், நல்ல  ருசியான சாப்பாடு போலுள்ளது.  :grin: :D:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சாப்பாட்டுக்குள்ளை  புழு, இருந்ததை  கேள்விப்  பட்டும்,:rolleyes:
நம்ம சனங்கள்....  இவ்வளவு சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வந்து.... 
சாப்பாட்டை... ஒரு பிடி பிடிக்கிறாங்கள் என்றால், நல்ல  ருசியான சாப்பாடு போலுள்ளது.  :grin: :D:

புழு சாம்பாரின் ருசி கண்டவன் சும்மா இருப்பானா ?? 
போக கிடைத்தால் நீங்களும் ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள் 
அப்பத்தான் புழுவின் ருசி தெரியும் 

13 hours ago, நவீனன் said:

கடையின் படமே இருக்கு இணையத்தில்..tw_blush:

 

நீங்கள் இணைக்கவில்லையே ? 

  • தொடங்கியவர்

உணவில் சீர்கேடு: கேட்டதால் தாக்குதல் என முறைப்பாடு

உணவில் சீர்கேடு: கேட்டதால் தாக்குதல் என முறைப்பாடு
 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்பாண நகரில் இயங்கும் சைவ உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு இருக்கின்றது என்று கூறியபோது கடையில் வேலை செய்பவர்கள் தம்மை தாக்கினர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சாலையில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்றுக்கு நேற்றுமுன்தினம் உணவருந்தச் சென்றபோது அங்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதை அவதானித்தேன் என்றும் அது தொடர்பில் கடையில் பணி புரிபவர்களிடம் விளக்கம் கேட்டபோது அங்கிருந்த பணியாளர்கள் தம்மைத் தாக்கினர் என்றும் பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தாம் தாக்கப்படும்போது அருகில் இருந்தவர்கள் தம்மையும் தாக்கியவர்களையும் சமாதானப்படுத்தினர். நாம் அங்கு உணவு கேட்டமை அவர்கள் உணவு வழங்கியமை அதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை அனைத்தும் அந்தக் கடையில் உள்ள கண்காணிப்புக் கமராவில் பதிவில் உள்ளது. அதனை பொலிஸார் சோதனை செய்தால் அனைத்து விடயமும் வெளியில் வரும் எனவும் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட சைவ உணவகத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பல முறை தொடர்பினை ஏற்படுத்தியபோதும் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

http://newuthayan.com/story/23841.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன்ரை பேக்கரியாலை வாற அச்சுப்பாணுக்கை இருக்கிற வண்டு புளுக்கூடுகளை அப்பிடியே நுள்ளி எறிஞ்சுபோட்டு சம்பலோடை தொட்டு சாப்பிடுற சுகம் இருக்கே சொல்லிவேலையில்லை...tw_tounge:
அது சரி தெரியாமல் கேக்கிறன்?

தர்ம அடியெண்டால் என்ன? காசுவாங்காமல் ஓசியிலை அடிக்கிறதைத்தானே சொல்ல வாறியள்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலதிக படங்கள்..!

 

image.png

 

image.png

 

உணவு பட்டியல்..

image.png

 

 

விஷ்ணுவா..? விஷ்னுவா..?

ஏனிந்த கொலை..?

 

முகநூல் பக்கம் கூட இருக்கு..

https://www.facebook.com/VishnuBavan/

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ராசவன்னியன் said:

விஷ்ணுவா..? விஷ்னுவா..?

ஏனிந்த கொலை..?

 

image.png

அதுதான் னுவையும் பூச்சி புழு விட்டுவைக்கவில்லையே தெரியலையா...?? :grin:

 

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.