Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

Featured Replies

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

 

நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர்.

இதனால் மோட்டார் சைக்கிள் இரண்டையும் கைவிட்டு நால்வரும் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளை கொத்தி சேதப்படுத்தியதுடன் மற்றைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாள்வெட்டுக் குழுவினர் தலை மறைவாகியுள்ளதாகத் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் அந்தப் பகுதிக்கு வந்து கொத்தப்பட்ட நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டுச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://newuthayan.com/story/27296.html

  • தொடங்கியவர்

லீசிங் பணம் செலுத்தாமல் வாள்களுடன் நடமாடும் நபர்கள்: யாழில் சம்பவம்

 

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெல்லியடி கப்பூது வீதியில்  நேற்று காலை வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியமை தொடர்பாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும்  ஆயுதங்களுடன்  நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர்  நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரை குறித்த குழுவினர் வழிமறித்துள்ளதோடு, அவர்களைத் தாக்கவும் முயன்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதவர்கள் கூறியுள்ளனர்.    

அத்துடன், வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாயினும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த மோட்டார் சைக்கிளிற்கு ( லீசிங் )பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

https://news.ibctamil.com/ta/internal-affairs/Persons-walking-swords-without-leasing-money

  • கருத்துக்கள உறவுகள்

பினாஸ் கொம்பனி   முதலாளிமார்தான் வாள்வெட்டுக்கு காரணம் என்று கடைசியில் முடிக்கபோயினம் போல....:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும்  ஆயுதங்களுடன்  நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர்  நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முட்டாள்கள் அவங்களை வாளுடன் நிக்க சொன்னதே அந்த போலிஸ்தான் தானே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10.9.2017 at 7:38 AM, நவீனன் said:

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

 

அப்பப்ப சைக்கிள் செயினையும் பாவிக்குமாறு கேட்டுக்கொள்ளுறன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2017 at 9:38 AM, நவீனன் said:

நெல்லியடியில் வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம்

நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துள்ளனர் என்று நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்றுள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து இந்த வீதியூடாக பயணம் செய்த நால்வரை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் அவர்களை வெட்டுவதற்கு வாள்களை ஓங்கியுள்ளனர்.

......

http://newuthayan.com/story/27296.html

On 8/19/2017 at 0:22 PM, தமிழ் சிறி said:

ஐயா... ராஜவன்னியன், அவர்களே....
யாழ்ப்பாணத்தான் சண்டை பிடித்தாலும், டீசண்டாக தான்.. சண்டை பிடிப்பான் என்பதற்கு, இந்தக் காணொளி சாட்சி. :)
இதுவே.... மதுரையாக இருந்தால்,
"ங்கொய்யால..."  என்று  விட்டு, முதுகில் செருகி வைத்திருந்த, வீச்சரிவாளை  எடுத்து, 
நாலு தலையை... சீவி விட்டு,  போவாய்ங்க.. நம்ம பாசக்கார பசங்க. :grin: :D:

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

அடப்  பாவி.... செய்தியை வாசிக்காத மாதிரி. ஒழிச்சு திரிஞ்சாலும்.... :grin:
மேற்கோள் காட்டி, ஆளை உள்ளுக்கு இழுத்து.... "கையிலை.... வாளை"   கொடுத்து விட்டுத்தான்,
ராஜவன்னியன் போவார் போலை இருக்கு.  :D:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ராசவன்னியன் said:

 

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அடப்  பாவி.... செய்தியை வாசிக்காத மாதிரி. ஒழிச்சு திரிஞ்சாலும்.... :grin:
மேற்கோள் காட்டி, ஆளை உள்ளுக்கு இழுத்து.... "கையிலை.... வாளை"   கொடுத்து விட்டுத்தான்,
ராஜவன்னியன் போவார் போலை இருக்கு.  :D:

பாவம் தமிழ் சிறி....!! மதுரை வீரரிடம் வாள், வில்லம்பு, ஈட்டி என்று பலத்த ஆயுதபலம் உள்ளதை அறியாது மோதிவிட்டு... ஆயுதமும் இல்லாது ஓடி ஒழிச்சு திரிஞ்சாலும்...! கையில் வாள் கொடுத்து, ஆளை உள்ளுக்கு இழுத்து... நான் மறத்தமிழனடா என்று வீரம்பேசும் தமிழ்மரபைக் காண்பதிலும் ஒரு இன்பம் பிறக்கிறது..!! :8_laughing: :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

 

யாழ்ப்பாணத்தில் ஏதும் முறுகல் வந்தால், டீசண்டாகத்தான் விவாதிப்போமென ஒரு ஜென்டில்மேன் யாழ்க் களத்தில் செப்பினார்..! :unsure:

அவருக்கு ஒரு வாள் பரிசளிக்க  அவரை தேடுகிறேன்..! ! :grin: :innocent:

 

 

அவர் இப்போ அங்கே இல்லையல்லோ! அது தான் பிரச்சனை.

நாக பாம்புகள் ஆடிய இடத்தில்

இப்போ நாக்கிழி புழுக்கள் ஆடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!:grin:

 

எதையோ பெரிசா எதிர்பார்க்கிறார் போல :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தான் சண்டை பிடிச்சால்....உள்ளே பெரிய விசயமொண்டும் இருக்காது!

மிஞ்சி....மிஞ்சிப்  போனால்.....!

ஒரு பனங்காய் அல்லது தேங்காய் அடுத்த வளவுக்குள்ளை விழுந்திருக்கும்!

ஒரு மாமரம்...மறந்து  போய்....அடுத்த வளவுக்குள்ளை கிளை விட்டுக் காய்ச்சிருக்கும்!

ஒரு கோழி அடுத்த வீட்டுக் கடகத்துக்கை...முட்டையை இட்டுப்போட்டு...வீட்டுக் வந்து கொக்கரிச்சிருக்கும்!

வேலிக்குள்ளால ஆராவது ஒரு பொம்பிளைப்பிள்ளை குளிக்கிறதைப் பார்த்திருப்பினம்!

அல்லது ஒரு பெடியன்...ஒரு பெடிச்சியைச் 'சீதனமொண்டும்' பேசி முடிக்காமல் வீட்டை கூட்டிக் கொண்டு வந்திருப்பான்!

 

அதுக்கெல்லாம் வாளே தேவையில்லை..! 

வாயே போதும்!

தெய்வமே!
ஏன் சங்கக்கடை தலைவர் பிரச்சனையை தவறவிட்டாய்?
ஏன் கோவில் மணியகாரன் பிரச்சனையை தவறவிட்டாய்?
சொல் தெய்வமே சொல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.