Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஓ  வாவ்" Wow

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்"

" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி"

"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்"

"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்"

" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்"

"ஊ ஊ ஊ "

"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்"

"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ"

"சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா"

"எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்"

"பிறகு"

"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"

"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"

"விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்"

 "அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்"

"அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது"

"வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது"

"போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்"

"புரியல்ல"

"அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,

அந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான்

ஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை"

"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

.."..வாவ்,"

"பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்"

"அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று

மயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் "

.."..வாவ்,"

"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",

"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"

"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"

"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"

"அது சரி மயிலரின்ட கடக்குட்டியை  எங்க க‌ண்டனீ? அவன்கன்ட பழைய வீட்டிலயோ" "

"சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்"

"அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா"

"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"

"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"

"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"

"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"

"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

"வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்"

"மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது  விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு"

"அப்படியே அக்கா! விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று  அம்மா  சொன்னவ"

" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "

"ஏன் அக்கா",

"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"

"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"

"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"

"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"

"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"

"அப்படியே"

"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

 

"ஓ  வாவ்"

"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"

 

 

 

 

 

 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வாவ் நாய்க் கதை அருமை வாவ வாவ்.

  • கருத்துக்கள உறவுகள்

நரியை பரியாக்கியவருடைய வழித்தோன்றலே நச்சென்று இருக்கு அக்கம் பக்கம் எல்லோரையும் வயிரவர் வாகனமாக்கியது......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

----"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"

"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"

------

"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

------

.."..வாவ்,"

"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",

"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"

"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"

"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"

------

"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"

"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"

"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"

"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"

"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

------

" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "

"ஏன் அக்கா",

"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"

"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"

"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"

"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"

"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"

"அப்படியே"

"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

 "ஓ  வாவ்"

"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"

 Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯   Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯

சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும்....  மினக்கெட்டு, அழகாக...  எழுதப்பட்ட   அருமையான கதை புத்தன்.  :grin: ? ?

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வாவ் , நான் கதையைச் சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்

கோணான் தோட்டத்தில....எட்டு மூலைப் பட்டம் பறக்கிற மாதிரி....இருக்குது....புத்தனுடைய கற்பனை!

அதுவும்....சும்மா...பறக்காமல்.....பனை நாரில...செய்த விண் கட்டின மாதிரி...ஒரே ஆரவாரம்!

மனித வாழ்க்கையும்....நாய்களின் வாழ்க்கையைப் போல அமைந்திருக்கலாம்!

பல பிரச்சனைகள் தோன்றாமலே போயிருக்கும்!

குறிப்பாக....சாதிப் பிரச்சனை.....சொத்துப் பிரச்சனை....கௌரவப் பிரச்சனை...என்று பல பிரச்சனைகள் இல்லாமலே வாழ்ந்திருக்கலாம்! 

மொத்தத்தில் அருமையான கதை.....புத்தனின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது!

இன்னும் சிரித்து முடியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

 

 ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

.."..வாவ்,"

 

 

சிரித்து  முடியவில்லை.tw_tounge_xd:tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

3_FF42_BD5-_B4_EB-4_B62-9_D97-10_B24_C04

  • கருத்துக்கள உறவுகள்

large.jpg

 

புத்தனின் கதை சம்மருக்கு ஊருக்கு போய் பீலாக் காட்டுபவர்களையும் நமது சமூகத்தின் பரிணாம மாற்றங்களையும் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளது.

வாவ்! 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது அண்ணா. அண்மையில் ஊருக்குப் போய்வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் தெருவெல்லாம் கட்டாக்காலி நாய்கள், ஒவ்வொரு சைசில், எலும்பும் தோலுமாய்ப், பார்க்கவே ஒருபக்கம் அருவருப்பும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. இங்கே கட்டாக்காலி நாய்களைக் கண்டறியாத எனது மகள், " அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

நாயின் கதையைக் கேட்டே மனம் உடைந்த பிள்ளை ஒட்டுமொத்த தமிழரின் கதையை முழுவதும் அறிந்தால் எப்படி துடிக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கொள்ளா காட்சிகளை கண்முன் நிறுத்திய புத்தனுக்கு ஒரு வாவ் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

நாய்....கெட்டிக்கார நாய்...தான்!

இருந்தாலும்....அது பிறந்த மண்ணின் குணமும்...அது தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

நாய்....கெட்டிக்கார நாய்...தான்!

இருந்தாலும்....அது பிறந்த மண்ணின் குணமும்...அது தான்!

சத்தியமா இதை நான் எழுத‌ வேணும்  என்று நினைத்தேன் நீங்கள் எழுதிவிட்டிங்கள்

11 hours ago, குமாரசாமி said:

கண்கொள்ளா காட்சிகளை கண்முன் நிறுத்திய புத்தனுக்கு ஒரு வாவ் :cool:

வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றிகள் கு.சா அண்ணா

14 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

ஊர் நாய் என்று சொல்லுறது உதுக்குத்தான்.....சிலந்தியின் கதையை நன்றாக படித்திருக்கிறது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:
 

 

காணோளி இணைப்புக்கு மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் ...மிகவும் அருமையான காணோளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 10:59 AM, ragunathan said:

நன்றாக இருக்கிறது அண்ணா. அண்மையில் ஊருக்குப் போய்வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் தெருவெல்லாம் கட்டாக்காலி நாய்கள், ஒவ்வொரு சைசில், எலும்பும் தோலுமாய்ப், பார்க்கவே ஒருபக்கம் அருவருப்பும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. இங்கே கட்டாக்காலி நாய்களைக் கண்டறியாத எனது மகள், " அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....எல்லாத்திலயும் முன்னேற்றம் உண்டு ஊரில், ஆனால் தெரு நாய்களுக்கு அதே நிலை தான் ....கிளிநோச்சியில் இவற்றுக்கு ஒரு காப்பகம் அமைக்கும் முயற்சியில் ஒருவர் இறங்கியுள்ளார் வெற்றி அடையும் என நம்புவோம்...

On 7/25/2018 at 7:40 AM, கிருபன் said:

large.jpg

 

புத்தனின் கதை சம்மருக்கு ஊருக்கு போய் பீலாக் காட்டுபவர்களையும் நமது சமூகத்தின் பரிணாம மாற்றங்களையும் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளது.

வாவ்! 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்

On 7/25/2018 at 2:41 AM, Kavi arunasalam said:

3_FF42_BD5-_B4_EB-4_B62-9_D97-10_B24_C04

நன்றிகள் கவி ....மிகவும் அருமையான சித்திரம்....

On 7/24/2018 at 3:57 PM, nunavilan said:

 

 

சிரித்து  முடியவில்லை.tw_tounge_xd:tw_blush:

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் Nuna

On 7/24/2018 at 2:13 PM, கந்தப்பு said:

வாவ் வாவ் , நான் கதையைச் சொன்னேன்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் அப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/24/2018 at 4:29 AM, suvy said:

நரியை பரியாக்கியவருடைய வழித்தோன்றலே நச்சென்று இருக்கு அக்கம் பக்கம் எல்லோரையும் வயிரவர் வாகனமாக்கியது......!  tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் சுவே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை வழங்கி அருமையான கருத்துக்களையும் காணோளிகளையும் இணைத்த அனைவ‌ருக்கும் நன்றிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை. புத்தனுக்கு ஒரு வாவ் ?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் அருமையான ஓர் உருவகக் கதை. புத்தனுடைய எழுத்து நடை பிரமாதம்.  நல்லதொரு சிந்தனை பாராட்டுக்கள் புத்தன்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கதை மிக்க அருமையாக இருக்கு புத்தா ?

வாசிச்ச பிறகும் சிரிச்சு முடியேல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.