Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட்  பின்னேரம்  வாறீயா போய் சந்திப்போம்"

"யார் மச்சான் சுதா"

"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா,   அவளோட போவள் 'இரட்டை பின்னல்'  அவளைத்தான் சொல்லுறன்"

"கலா ...."

" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை"

"யாரப்பா போனில் சுதா,கலா என்று  முழுசிக்கொண்டிருக்கிறீயள்"

 

"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்"

"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்."

"போய் மீட் பண்ணுங்கோவன்"

"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்"

"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே"

" ஏனப்பா அப்படி கேட்கிறீர்"

"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'

அதுகளா தான் இருக்கும்"

"ஓமடியாத்த ஞாபகம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று"

"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்? போத்தலை வாங்கி கொண்டு போவமோ"

"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்"

"அப்ப நான் கட்டாயம் வாரன்"

 

"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்"

" இல்லை நானும் உங்களாடவாரது என்றால் வாரன்"

"அவள் தனியா ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்"

"யாருடன் வந்து நிற்கிறாளாம்"

"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்"

"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்"

சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.

"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி  நல்லா ஒட்டவெட்டிவிடவோ"

"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி"

வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து

"இந்த வெட்டு சரியோ"

"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு"

"டை அடிச்சு விடட்டே"

"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு"

"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்"

"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்"

"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ,யார் வெள்ளைக்காரங்களின்ட கலியாணமோ"

"ஒம் ஒம் வெள்ளையின்ட "

சொல்லியபடியே கண்ணடியை பார்த்து 'லுக் சொ ஸ்மார்ட்' என மனதில் நினைத்து சிரித்து கொண்டான்.

"எவ்வளவு தம்பி"

"40 டொலர்"

"வழமையா 15டொலர்தானே எடுக்கிறனீர்"

.

"டை அடிச்சது மீசை டிரிம்ப் பண்ணினது அதுதான் ஐயா"

கடன் ட்டையை தேச்சுப்போட்டு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான்.

"இது என்னப்பா புதுசா இன்றைக்கு டை அடிச்சு இருக்கிறீயள் "

"சும்மா ...பாபர் கேட்டான் அடிக்கட்டோ என்று ஒம் என்று சொல்லி போட்டன்"

"நான் எத்தனை தரம் சொன்னனான் டை அடியுங்கோ எண்டு "

"அது இன்றைக்கு பின்னேரம் சுதா வை மீட் பண்ணவேணும் "

"நான் சொல்லும் பொழுது,புத்தர் சொன்னவர் இயற்கையோட வாழவேண்டும் எண்டு சொல்லி போட்டு இப்ப டை அடிச்சிருக்கிறீயள்"

"கி கி கி ம்ம்ம்ம்ம்ம்"

" போர போக்கை பார்த்தால் சுதாவுடன் ஒடிவிடுவியள் போல கிடக்கு.. பின்னேரம் நானும் வாரன்"

"போடி விசரி ,கண நாளைக்கு பிறகு சந்திக்க போறன் அதுதான்"

"இஞ்சருங்கோ உங்களான, என்னோட படிச்ச பெடியள் யாரும் வந்து நான் கொஞ்சம் மெக்கப் போட்டுக் கொண்டு தனியா போறன் என்றால் விடுவியளே"

"நீ அப்படி போக மாட்டாய் என்று தெரியும் தானே ,நீ டமிழ் பெண்ணாச்சே"

"ஆம்பிளைகள் எல்லாம் சிங்களேமே"

"சரியப்பா நீரும் உம்மட பெடியள் வந்தா போய் ந்தியும்"

"எனக்கு வேற வேலையில்லை,உந்த 96 படம் வந்திச்சிதே அதுக்கு பிறகு உந்த கிழடுகளுக்கு எல்லாம் சுதி ந்திட்டுது"

எனகூறியபடியே சமையல் வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

 

"இஞ்சாரும் இந்த பாண்ட்ஸ்க்கு இந்த சேர்ட் மச்ச பண்ணுமே"

"மாப்பிள்ளை இன்றைக்கு ஒரே குசியா தான் இருக்கிறார், மட்ச் பண்ணுது போடுங்கோ"

ஆடைகள அணிந்து வாசனை திரவியங்களை அடித்து விட்டு இரண்டு மூன்று தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு

"டார்லிங் எப்படி ஸ்மார்ட்டா இருக்கிறனோ"

"ஓம் நல்ல  ஸ்மார்ட்டா இருக்கிறீயள் என்ட கண்ணே பட்டிடும் போல கிடக்கு ,உங்களையா குகனையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிறது  என கொன்வூயூஸ் ஆக போறாள் சுதா"

"தாங்ஸ்"

"உந்த செல்லத்துக்கு குறைச்சல் இல்லை,அது சரி நீங்கள் குகனை கூட்டிக்கொண்டு போறீயளோ அல்லது அவர் வருவாரோ"

"அவன் தன்னூடைய பெண்ஸ் காரை கொண்டு வாரன் என்று சொன்னவன் ,அதில போவம்"

" இப்ப இரண்டு பேருக்கும் போட்டி வரும் போல் கிடக்கு"

குகனின் கார் குறித்த நேரத்திற்கு முதலே வந்துவிட்டது.

"குகன் வந்திட்டான் நான் போயிட்டு வாரன்"

"ஒம் ஒம் போன மாதிரியே திரும்பி வந்திடுவேணும்"

"பயப்பிடாதயும், சுதா தான் வந்திருக்கிறாள் கலா வந்திருந்தால் சில நேரம் அவளோட ஒடியிருப்பேன் கி கி கி கி"

"அடி செருப்பால , போயிட்டு வாங்கோ போன உடனே டெக்ஸ்ட் பண்ணுங்கோ"

குகன் அழைப்பு மணியை அடித்தான்.சுதாவின் அக்கா கதவை திறந்து இருவரையும் வரவேற்றாள்.

"இருங்கோ சுதா பிள்ளைகளோட டெலிபோனில் கதைக்கிறாள் வந்திடுவாள்"

சொல்லி முடிக்க முதலே மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுதா

சுதாவை கண்டவுடன் இருவரும் திகைத்து விட்டார்கள் முன்பு  இருந்ததை விட மிகவும் அழகாக இருந்தாள்,இரட்டை பின்னல் போய் தலைமுடி  மிகவும் அழகாக  வெட்டப்பட்டிருந்தது ,உடல் நிறமும் கொஞ்சம் கூடியிருந்தது அத்துடன் லண்டன் ஆடை அவளின் அழகை மேலும் மெருகூட்டியது.

"ஹலோ குகன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்"

"ஹலோ சுரேஸ் உங்களில் அவ்வளவு மாற்றமில்லை அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறீயள்"

"அவன் மார்க்கண்டேயர் பரம்பரையை சேர்ந்தவன்" என்றான் குகன்

,

மூவரும் பழைய நண்பர்கள் நண்பிகளை பற்றி விசாரித்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார்கள்.

"உங்களுடன் வரும் கலா இப்ப எங்க இருக்கிறாள்"

"எனக்கு வடிவாய் தெரியவில்லைஊரில் தான் இருக்க வேணும் என்று நினைக்கிறன்"

 

"ஏன் அவளுக்கு வெளிநாடுகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ"

"அவள் அங்க டீச் பண்ணுவதாக கேள்விப்பட்டனான் ஆனால் ஒரு தொடர்புமில்லை"

 

"வட்ஸ் அப், பேஸ் புக் என்றும் ஒரு தொடர்புமில்லையோ"

"சீ சீ"

"நாங்கள் பெடியங்கள் எல்லாம் சேர்ந்து 72 கிளப் என்று வைச்சிருக்கிறோம் நீங்களும் ஜொய்ன்ட் பண்ணலாம்" என்றான் குகன்.

"நோ நோ ,  இதால நான் பெரிய பிரச்சனையில் மாட்டுப்பட்டு இப்ப தான்  வாழ்க்கை சுகுமா போகுது"

"அப்படி என்ன பிரச்சனையை நாங்கள் தரப்போறம்"

"எல்லா ஆண்களும் ஒரு மாதிரியில்லை...."

அந்த பதிலுக்கு பிறகு சுரேஸ் கலாவைப்பற்றி கேட்கவில்லை.

தேனீர் அருந்திய பின்பு இருவரும் விடை பெற்றனர்.

காரில் பயணிக்கும் பொழுது

"மச்சான் இப்பவும் கலா ஊரில் தான் இருப்பாளே"

"என்னை கேட்கிறாய்,அவளின்ட சினேகிதி சுதாவுக்கே தெரியவில்லையாம் பிறகு எனக்கு எப்படி தெரியும்"

 

"அடுத்த மாதம் ஊருக்கு போறன் போய் பார்க்கலாம் என்று யோசிக்கிறன்"

" தனிய போறீயோ குடும்பத்துடன் போறீயோ"

"குடும்பத்தோட போறன்"

"மனிசி விட்டால் போய் சந்திச்சு போட்டு வா"

"மனிசி ஒன்றும் சொல்லமாட்டாள்"

"பிறகு என்ன ,போய் அப்ப சொல்லாத லவ்வை இப்ப சொல்லி பார்

கி கி கி ....."

வீட்டில இறக்கும் பொழுது குகன் நக்கலாக

"குட் லக் மச்சி"என்றான்.

 

"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்"

"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

யாவும் கற்பனை என்று போட மறந்து போனேன்......😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

நம்ம நடிப்பு அப்படி😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

நம்ம நடிப்பு அப்படி😄

நானும் ஒரு வசனம் சேர்க்க மறந்திட்டன். முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி  தீபாவை நம்பிய மாதிரி......!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

"இஞ்சாரும் உவள் கலா ஊரில் தான் இருக்கிறாளாம்"

"அப்ப அடுத்த மாதம் ஐயா கலாவை சந்திக்கப்போறார்"

ஐயா கலாவை சந்திப்பாரோ? 

கடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி  காட்சி குடுக்காமல் இருக்கவேணும். :grin:

au_zpsmkbobp7y.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

பரவாயில்ல நல்ல மனைவியா இருக்கிறாவே! தரவுகள் சேகரிக்கப்படுதோ?!

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்....தரவுகள் சேகரித்தாச்சு

18 hours ago, suvy said:

மனிசி நல்லா நம்புது கலாவை...... !  😁  

சுரேஸின்ட மனிசியை சொல்லுறீயள் போல....

4 hours ago, குமாரசாமி said:

ஐயா கலாவை சந்திப்பாரோ? 

கடவுளேயெண்டு ஆட்டோகிராப் கமலா மாதிரி  காட்சி குடுக்காமல் இருக்கவேணும். :grin:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....குமாரசாமி...ஐயா சந்திக்காமல் இருப்பாரே

4 hours ago, பெருமாள் said:

உள்குத்து ஒன்றும் இல்லைத்தானே ?

சீ சீ எல்லாம் வெளிகுத்து தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

இதனை ஆமோதிக்கிறேன்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா? பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாவை சந்திக்கும்போது ...
காலவும் காதலை ஏற்றுக்கொண்டு 
சேர்ந்துவாழுவோம் என்றால் 
படத்தின் பெயர் 69 என்றா வரும்?

ஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

எங்களுக்கு இவவை சந்தித்த கதை வேணாம்😪...உங்கட ஆளை சந்தித்த கதையை எழுதுங்கள்😉

 

அமைதி அமைதி கலாவை சந்திச்ச கதை வரும்....

5 hours ago, nunavilan said:

இதனை ஆமோதிக்கிறேன்.😃

100 டொலர் கடன் கொடுங்கோ என்றால் ஆமோதிக்க மாட்டிங்கள் ...சுரேஸின் விடுப்பை கேட்க ஆமோதிக்கிறீயள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavallur Kanmani said:

அப்ப புத்தன் ஊருக்குப் போனது கலாவப் பார்க்கத்தானா? பவர்பாண்டியும் 96ம் கலந்து நல்லதொரு மிக்சர். இந்த இரு சினிமாவும் பலரை பாடாய் படுத்துவது அதன் விமர்சனங்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. ஏதோ நடத்துங்க. பாராட்டுக்கள் புத்தன்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்... சீ சீ .....புத்தன் போனது பிள்ளைகளின் சங்கீத நிகழ்சிக்காக ......சுரேஸ் சில நேரம் அப்படியான எண்ணத்துடன் போய் இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2019 at 4:49 AM, putthan said:

ஹலோ குன் எப்படி சுகம் ஒடி வந்து கையை குழுக்கினாள்"

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

சனம் கிண்ட   வெளிக்கிடுது....:cool:
முருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதை ...புத்தன்!

இளமைக்கால நினைவுகள்...மிகவும் வலிமையானவை! எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்!

கல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்?

அங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம்! ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்!

ஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது! தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத்  தொடர்கிறோம்!

அதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது!

அது தான் வாழ்க்கை!

தொடர்ந்தும் எழுதுங்கள்! நன்றி....!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2019 at 11:44 PM, Maruthankerny said:

கலாவை சந்திக்கும்போது ...
காலவும் காதலை ஏற்றுக்கொண்டு 
சேர்ந்துவாழுவோம் என்றால் 
படத்தின் பெயர் 69 என்றா வரும்?

ஏன் என்றால் கிளப் 72 என்று இருக்கிறதே ....

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

யார் புத்தனுக்கா ?...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது🙄 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

யார் புத்தனுக்கா ?...ரொம்ப ஓவராய் இல்லை...புத்தனுக்கு 50 வயசு எப்பவோ முடிஞ்சிட்டுது🙄 

 

அப்படியா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அப்படியா ????

அவரே எதோ ஒரு திரியில் சொன்னதாய் நினைவு...பிறந்த நாளுக்கும் வாழ்த்தி இருந்தோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2019 at 1:23 AM, ஈழப்பிரியன் said:

லண்டனில் இருந்து வந்த சுதா கக் பண்ணாமல் எப்படி கை கொடுத்தா?

சுதாவின் கணவன் ஒரு சந்தேக பேர்வழி .....என்று நினைச்சுக்கொள்ளுங்கோவன்....:14_relaxed:

On 2/9/2019 at 1:48 AM, குமாரசாமி said:

சனம் கிண்ட   வெளிக்கிடுது....:cool:
முருகப்பெருமான்ரை மறுபெயர் குகன் எண்டும் சொல்லுவினம்.......அரோகரா 😂

சனம், நான் கலாவை சந்திச்ச கதையை எழுத முதல அவையள் எழுதி போடுவினம் போல இருக்கு

On 2/9/2019 at 10:50 AM, புங்கையூரன் said:

நல்ல ஒரு கதை ...புத்தன்!

இளமைக்கால நினைவுகள்...மிகவும் வலிமையானவை! எனக்கும் பல நினைவுகள்...அவ்வப்போது வந்து போகும்!

கல்லறையோ அல்லது காஸ் அடுப்போ.....யாருக்குத் தெரியும்?

அங்கு செல்லும் வரை...நினைவுகளைப் பொத்தி வைத்திருக்கத் தான் விருப்பம்! ஏனெனில்...அவை புனிதமானவை என நாம் நம்புகிறேன்!

ஓரு புகையிரதப் பயணத்தைப் போன்றே...வாழ்க்கை நகர்ந்து செல்லுகின்றது! தரிப்பிடங்களில்...இறங்கி மீண்டும் பயணத்தைத்  தொடர்கிறோம்!

அதே புகையிரதப் பாதையில்....திரும்பிக் பயணிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள்......முன்னையது போல இருக்காது!

அது தான் வாழ்க்கை!

தொடர்ந்தும் எழுதுங்கள்! நன்றி....!

 

 

 

வருகைக்கும்  கருத்து பகிர்வுக்கும் ந‌ன்றிகள் ....தொடரும் என‌து கிறுக்கள்கள் 

17 hours ago, பெருமாள் said:

பிறந்த வருடமாயும் இருக்கலாம் தானே .

கலாவை சந்திக்கும் பொழுது விபரமாய் எழுதுகிறேன்:14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அபராஜிதன் said:

நம்பிட்டம் 

நன்றிகள் வாசித்தமைக்கு நம்ப‌வேணும்:14_relaxed:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.