Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பாதுகாத்த புலிகளே ராஜீவையும் 1500 இந்தியப் படைகளையும் கொன்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

image-15.png?zoom=1.2100000262260437&res
இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
சுய நலன்களுக்காக செயற்பட்ட சிலரினால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, 1980களிலும் 2014இலும் இந்தியா இலங்கை உறவு முறிவடைந்ததாகவும் கூறியுள்ளார்.
 
ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புடன் போரிடடபோது இந்தியாவின் சினேகபூர்வ ஆதரவு காணப்பட்டதாகவும், தற்போது ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசாங்க மாற்றங்களினால் உறவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்

February 9, 2019
 

mahi.png?zoom=1.2100000262260437&resize=
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக தன்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சிறந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் பின்னர் தான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள அவர் பெங்களுரில் வைத்து இந்து நாளிதழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழ்ர்களே எதிர்த்தனர் எனவும் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மக்களை திருப்தியடையச் செய்யலாம் என்ற போதிலும் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் எனவும் அதுவே தனது பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2019/112690/

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவுக்கு துவக்கால் தலையில் அடித்தவர் யார்? இந்தியாவின் இரட்டை வேடத்தை புலிகள் இனம் கண்டனர். தமிழ் இனத்தை அழித்தவர்களை கொல்லாமல் கொஞ்சுவதா?

ஆரிய / பிராமண மனோநிலையில் உள்ள குழுமத்தால் நடத்தப்படும் இந்திய 3ம் தர பத்திரிகையே "இந்து" (The Hindu) பத்திரிகை ஆகும்.

இந்த இந்திய இனவெறி ஊடக பயங்கரவாதக் குழுமமும், இலங்கையிலுள்ள மகாவம்ச மனோநிலையில் உள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதக் குழுமங்களும் உலகின் மூத்த குடிகளான தமிழின அழிப்பில் ஒன்றாக இணைகின்றன. இதற்கு ஆதாரமே இந்த நிகழ்வும், இந்திய இனவெறி ஊடக பயங்கரவாதக் குழுமத்தால் அதில் கலந்துகொள்ள  இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட தமிழின அழிப்பை மிக மோசமாக செய்த மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் இந்திய விஜயமும் ஆகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்

அன்று எதிர்க்காமல் விட்டு இருந்தால் தமிழன் நிம்மதியாய் இருந்து இருப்பான் சிங்களவர் ஜேவிபி அப்பிடி இப்படி என்று நான்கு பிரிவாய் பிரிந்து சண்டை போட்டுகொண்டு இருப்பீர்கள் .

அதை சாட்டி இந்தியப்படை இன்றும் நிலைகொள்ளும் யாரும் கதைக்க ஏலாது.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அனாதை ஆகிறார். உலகத்தில் மிக சொற்ப நண்பர்களே இவருக்கு இப்ப இருக்கிறார்கள். சில நேரம் இவரே பணம் கொடுத்து இந்த கூட்டத்துக்கு போய் இருக்கலாம். சும்மாவா சொன்னார்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று, இந்த செய்தியை பாருங்கள் :

இலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்

கோவா: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் இலங்கைக்கு நேர்ந்த கதி தான் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 
https://tamil.oneindia.com/news/india/congress-will-meet-the-fate-sri-lanka-if-bjp-workers-come-together-says-manohar-parrikar-340931.html

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒன்றும் புலிகளை பாதுகாக்கவில்லை. ஆயுதக்களுக்களை மாேதவிட்டு தமிழ்விடுதலையை சீரழிக்கவும், சிங்களவனையும் தமிழரையும் மாேதவிட்டு நாட்டின் வளங்களை தான் சுரண்டவுமே, பாதுகாப்பதுபாேல் நடித்தது. எல்லா ஆயுத்குழுக்களையும் தன்கைப்பாெம்மையாக தப்புக்  கணக்குப் போட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

அன்று எதிர்க்காமல் விட்டு இருந்தால் தமிழன் நிம்மதியாய் இருந்து இருப்பான் சிங்களவர் ஜேவிபி அப்பிடி இப்படி என்று நான்கு பிரிவாய் பிரிந்து சண்டை போட்டுகொண்டு இருப்பீர்கள் .

அதை சாட்டி இந்தியப்படை இன்றும் நிலைகொள்ளும் யாரும் கதைக்க ஏலாது.

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யான நுட்பமான பிரச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு எதிராக ஹிந்தியர்களை தொடர்ந்து வைத்திருக்கும் கேவலமான பிரச்சாரம் இது.

இதே மகிந்த ராஜபக்ச.. அக்காலத்தில்.. இந்திய அமைதிப் படைக்கு எதிராக.. வெளியிட்ட.. காணொளி ஒன்று இப்பவும் உலவுகிறது சமூக வலையில்.

ஹிந்தியர்கள் ஏமாளிகள் என்பதை ராஜபக்ச குடும்பம் நன்கு உணர்ந்துள்ளது. சிங்களவனுக்கும் உணர்ந்துள்ளான்.

கொழும்பில்.. சீன ஆதிக்கம்.. என்பது வெளிப்படையாக உள்ளது. அதை முதலில் ஹிந்தியர்கள் வந்து பார்த்து உணர்ந்தால்.. மிகுதி மிச்சம்.. தானா வெளிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில்.. சீன ஆதிக்கம்.. என்பது வெளிப்படையாக உள்ளது. அதை முதலில் ஹிந்தியர்கள் வந்து பார்த்து உணர்ந்தால்.. மிகுதி மிச்சம்.. தானா வெளிக்கும். 

சீன ஆதிக்கத்தை மறைத்து, தமிழா்மேல்இந்தியாவுக்குள்ள குராேதத்தை வளர்த்து,  இந்தியாவை புகழ்ந்து, தனது அரசியலுக்கு அதனிடம் இருந்து எவ்வளவு ஆதரவு கிடைக்குமென்று நாடி பிடித்துப் பார்க்கவுமே இந்தப் பாேடு பாேடுறார். கடந்த ஆண்டு இதன் ஆதரவு மட்டும் இவருக்கு கிடைத்திருந்தால் இன்று பிரதமராக விஜயம் செய்திருப்பார்.
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

பொய்யான நுட்பமான பிரச்சாரம்.

எதை சொல்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எதை சொல்கிறீர்கள் ?

மகிந்த சொன்னத சொன்னேன்.

On 2/9/2019 at 10:02 PM, nunavilan said:

ராஜீவுக்கு துவக்கால் தலையில் அடித்தவர் யார்? இந்தியாவின் இரட்டை வேடத்தை புலிகள் இனம் கண்டனர். தமிழ் இனத்தை அழித்தவர்களை கொல்லாமல் கொஞ்சுவதா?

ராஜீவைக் கொன்றது, புலிகள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, Maruthankerny said:

 

 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்தும் காணொளி!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மறைவிற்குப் பிறகும்கூட, பிராமணர்கள் தமிழர் மீது காழ்ப்புணர்வுடன் இருக்கவேண்டிய தேவை என்ன?

ராம் மாணிக்கலிங்கம் ஒரு காலத்தில் புலிகளின் அனுதாபியாக இருந்தவர். பிரபாகரனுடனான தனிப்பட்ட கசப்புணர்வால், புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று புறப்பட்டு, இன்று மொத்த தமிழினத்திற்கும் எதிரியாக மாறியிருக்கிறார். இல்லாவிட்டால், உலகறிந்த ஒரு இனக்கொலையாளியை வரவேற்று கெளரவப்படுத்தவேண்டிய தேவை இந்துக் குழுமத்திற்கு ஏன் வந்தது? உள்நாட்டில் பேசும் அதிகாரம் அற்ற ஒரு போர்க்குற்றவாளிக்கு இந்தியாவில் களம் அமைத்து தனது அக்கிரமத்தை நியாயப்படுத்த சந்தர்ப்பம் கொடுக்கவேண்டிய தேவை என்ன? 

ஆக, இவர்கள் எதிர்ப்பது புலிகள் என்கின்ற தமிழ் அடையாளத்தையல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களையும்தான் என்பது தெளிவாகிறதே? இது தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக திராவிடர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்துவரும் பகைமையுணர்வின் ஒரு வெளிப்பாடென்று எடுத்துக்கொள்ளலாமா? தமிழ்நாட்டில் திராவிடத்தின் மூலம் பலமிழந்துபோன தமது பிராமண ஆதிக்கத்திற்கான பழிவாங்கலை இலங்கையில் தமிழர் இனவழிப்பில் பங்குகொள்வதன் மூலம் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கொள்ளலாமா? 

மகிந்த எனும் இனக்கொலையாளிக்குக் களம் அமைத்து, தனது செயலை நியாயப்படுத்த இந்து கொடுக்கும் முக்கியத்துவத்தில் எத்தனை வீதம் தமிழர்கான உரிமைகள் பற்றிப் பேச கொடுத்திருக்கிறது ? 

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.