Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்!

Featured Replies

எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளும் நாமும்

காலம் தன்போக்கில் கடந்து செல்ல நாமும் எம் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் கடந்து எம் குழந்தைகளின் வளர்ச்சிகளில் மகிழ்வை காணும் தருணம் இப்போது.

எம்மில் பலருக்கு வரும் ஏக்கம் எமது குழந்தைகளின் எதிர் காலம் எப்படியிருக்கும்? எந்த துறையை தெரிவு செய்யப்போகின்றர்கள் என்பது.

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை. பெற்றோர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை ஆனால் அதை தம் குழந்தைகளிடம் திணிப்பது மிகவும் கவலையான விடயம்.

கடந்த சில வருடங்களில் எத்தனை பிள்ளைகள் தம் பெற்றோரின் ஆசைக்காக அவர்களின் வற்புறுத்துதல்களால் சில துறைகளை தெரிவுசெய்து அதை அவர்களால் சரியாக படிக்க முடியாமல் மனவுளைச்சளாகி தற்கொலை வரை போயுள்ளார்கள்?. அதே நேரம் தம் பிள்ளைகளின் விருப்பத்திற்கு அவர்களின் கல்வியை தொடர விட்டிருந்தால் அநியாயமாக தம் குழந்தைகளை அந்த பெற்றோர்கள் இழந்திருக்கமாட்டார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் நிச்சயமாக இருக்கும் அதில் அவர்கள் சாதிக்க விரும்பும் போது நாம் அதற்கு தடையாக இருப்பது முற்றிலும் தவறானது.

நாம் படிக்கமுடியாததை நம் குழந்தைகள் மூலம் நிறைவேற்றவேண்டும் என்று நினைப்பது சரியா?. பெற்றோர்கள் ஆசைப்படும் துறையை எந்த வற்புறுத்தலும் இல்லாமல் குழந்தையும் விருப்பி படித்தால் எந்த பிழையும் இல்லை ஆனால் அப்படி எத்தனை வீட்டில் நடக்கின்றது?

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

சில தொழில்களில் அதிக வருமானம் வரும் ஆனால் வருமானம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்வாக வாழ்ந்து விட வழிசமைக்காது. மனதுக்கு பிடித்த தொழில் செய்வதில் வரும் மகிழ்ச்சி வருமானத்தால் வரும் மகிழச்சியை விட பன்மடங்கு பெரியது.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 

53 minutes ago, தமிழினி said:

பிடிக்காத துறையை படித்து மனவுளைச்சலுடன் தன் எதிர்காலத்தை நகர்த்துவதை விட அவர்களுக்கு பிடித்த துறையில் முழு ஈடுபாட்டுடன் மகிழ்வாக அவர்கள் வாழ்க்கை அமையும் என்பதை நம்மில் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.

எம்மில் பலர் எம் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்க உறுதுணையாக இருப்போம் என்று நம்புகின்றேன். தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள்.

குழந்தைப் பருவத்தில் நல்ல ஒரு ஆரம்பத்தைக் கொடுக்க விரும்பும் பெற்றோர் - முக்கியமாக நமது ஈழத்தில் உள்ள பெற்றோர் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். 

தேவையான பதிவு. தொடருங்கள் தமிழினி. 😊

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் எந்த முடிவையும் எம்மைவிட எம் பிள்ளைகள் சரியாக முடிவெடுக்க பழகிவிட்டார்கள். அவர்களைப் புரிந்து கொண்டு நாம் சேர்ந்து நடக்கலாம் இல்லாவிட்டால் எம்மை விட்டு அவர்கள் தம் பாதையில் நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. அவர்களின் சிந்தனை வித்தியாசமானது. பெற்றவர்களாகிய நாம் எம் பிள்ளைகளின் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து செயற்படுவது சாலச் சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உயர்தரத்தில் வணிகவியல் கற்க இருந்தேன், பெற்றோரும் அதிபருமா உயிரியல் படிக்க வற்புறுத்தி அதோட முடிஞ்ச கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

52865297_389121391636982_123531514360102912_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-syd2-1.xx&oh=c8ba54a6d6194e36d874ede2cf90220d&oe=5D1C199Aகாலத்திற்க்கு ஏற்ற படைப்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கல்விமுறை அதிக வருமானத்தை நோக்கியே பிள்ளைகளை நகர்த்துகின்றது. அன்று டாக்டர் , என்ஜினியர் எல்லோரினதும் கனவு. ஆனால் இன்று அவற்றைவிட அதிக வருமானம் தரக்கூடிய அநேக தொழிற்துறைகள் வந்து விட்டன. அதனால் இன்று படிக்கும் பிள்ளைகளுக்கு அநேக தெரிவுகள் வேலை விடயத்தில் கிடைக்கின்றது......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழினி said:

 

 

எம்மில் எத்தனை பேர் எம் குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற துறையை தெரிவு செய்ய விட்டுவிடுகின்றோம்? அப்படி விடுவதில் பெற்றோருக்கு சிலவேளைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது ஆனால் உறவினர் அயலவர்  என்ன சொல்லுவார்களோ என்ற கவலை தான் பெரிது. 

இது இன்னமும் எமது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.காலம் கடந்த பின்பு தான் கவலைப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/27/2019 at 7:05 PM, தமிழினி said:

தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நீங்களே அடக்கிவிடாதீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை படிக்கவிடுங்கள் …..எதிர்காலத்தில் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

ஒரு குடும்பத்தில்  தந்தை பெரிய உத்தியோகம். தாயும் நல்ல வேலை. ஒரு களியாட்ட நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வு ஒன்று வந்தது. அதில் பெரிய உத்தியோககாரரின் மகனும் பங்கு பெற்றார். அப்போது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தவர்  எல்லா பிள்ளைகளிடமும்....நீங்கள் பெரியவர் ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது பெரிய உத்தியோகக்காரரின் மகனிடமும்....நீங்கள் பெரியவன்
 ஆனால் என்ன தொழில் செய்ய விருப்பம் என கேட்டார்.அதற்கு அந்த சிறுவன் நான் பெரியவன் ஆனால் கார் மெக்கானிக் ஆக வேண்டும் என்று சொன்னார். அப்போது அந்த பிள்ளையின் தாய் தந்தையரின் முகத்தில்  வந்த கடுப்பு வர்ணிக்க முடியாத கடுப்பு.
தற்போது சம்பந்தப்பட்ட பிள்ளையின் தாயார் அப்பாவை விட நீ நல்ல ஜொப்பிலை ஜொயின் பண்ண வேணுமெண்டு ஒரே நச்சரிச்சலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக  தங்களின் விருப்பத்துக்கு தெரிவு செய்யும் துறை(கள்) இறுதியில் பெற்றோரையும் பிள்ளைகளையும் கவலையில் ஆழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம். பிள்ளைகள் எத்துறையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என சிறுவயதில் இருந்தே அவதானித்தால்  தெரியும்.அவர்களுக்கு விருப்பமான துறையை  தெரிவு செய்ய முழு உரிமையையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல்  மகிழ்சியாகவும் இருப்பார்கள். 

குறிப்பிட்ட துறையில் தான்  உழைக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கு பொருந்தாது. சகல துறைகளிலும் நிபுணத்துவம் பெறும் போது அதிக பணம் உழைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு மட்டுமல்ல வாழ்க்கை விடயத்திலும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் அவர்களுக்கு பிடித்தவழியில் அவர்களைப்பயணிக்க விட்டால் நம் சமூகம் அதி விரைவாக முன்னேறும். விருப்பமில்லாத துறையில் பெற்றோருக்காக திணிக்கப்பட்ட பலர் அத்துறையில் எதையும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணப்பாங்கு இல்லாதவர்களாகவே உள்ளார்கள்.

விருப்பப்பட்ட  விடயத்தை மட்டுமே அதிகமாக தேடலுக்கு உள்ளாக்கும் தீவிரம் மனதில் தோன்றும்.

திணிக்கப்படும் விடயங்களில் தேடல் தோன்றாது. நல்ல விடயம் தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் , இலங்கையில் தாய் தந்தையரின்  விருப்புக்களுக்குள் மட்டும் சிக்கி விடுறார்கள் பிள்ளைகள் அவர்கள் விருப்பமென்பது அமிழ்த்தி வைக்கப்படுகிறது  இந்த சமூகத்தின் நிலையை நிலையை காட்டி

 

கல்வி முறை இனிவரும் காலங்களில் மாறினாலும் ஆணும் பெண்ணும் கல்யாணம் முடிக்காமல் இருக்கும் வரைக்கும் அவர்கள் பெற்றோரை நாங்கள் அப்ப்டி இருக்க அவர்கள் விடவில்லை என குற்றம் சாட்டியவர்கள் அவர்கள் திருமணமாகி பெற்றோர்களாக ஆகும் போது அதே குற்றத்தையே செய்கிறார்கள் அவர்கள் பிள்ளைக்கும் இது சங்கிலி தொடராக வருகிறது ஒரே ஒரு காரணம் தான் எங்கள் பிள்ளைகளை நன்றாக படிப்பிக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் நல்ல பிள்ளையாக ஆக்க வேண்டும் என சிந்தனை மட்டுமே பிள்ளைகள் நலன் சார்ந்தது அல்ல

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/27/2019 at 6:05 PM, தமிழினி said:

வைத்தியர்  வக்கீல் போன்ற சில குறிப்பிட்ட தொழில்துறைகளைத்தான் எல்லோரும் தம் குழந்தைகளிடம் தெரிவு செய்யவேண்டும் என்பது அதிகமான பெற்றோர்களின் ஆசை.

குழந்தைகள் தமக்கு விரும்பிய துறையில் படிப்பதற்கு பெற்றோர் துணைநிற்கவேண்டும் தமது விருப்பங்களைத் திணிக்கக்கூடாது என்பது உண்மைதான்.

ஆனால் முதிர்ச்சி அடையாத குழந்தைகளை சரியான துறைகளை இனங்காட்டும் பொறுப்பும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் உள்ளது.

ஆனாலும் தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகள் அதிக சம்பாத்தியமும் புகழும் தரும் வைத்தியத்துறைக்கும், பொருளாதார/கணக்கியல் துறைக்கும், அல்லது சட்டத்துறைக்கும் எந்திரவியல் துறைக்குமே அனுப்பவிழைகின்றனர். இது தமது குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்ற காரணம்தான். தன்னம்பிக்கையையும், சமூக அக்கறையையும் குழந்தைகளிடம் வளர்த்துவிட்டால் அவர்கள் 16- 18 வயதுகளில் சுயமாகவே முடிவுகளை எடுக்கும் முதிர்ச்சியை அடைவார்கள்.

  • 2 weeks later...

மிக முக்கியமான, சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

பெற்றோர் கூறிய துறையை அவர்களுக்காக தேர்ந்தெடுத்து படிப்பில் கோட்டை விட்ட பலர் உள்ளார்கள்.

தற்போது தான் 'ஜீனியஸ்' என்ற தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்து முடித்தேன். உங்களின் இந்தத் திரி ஞாபகத்துக்கு வந்தது, தமிழினி.

பிள்ளைகளின் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் அளவுக்கதிகமான அழுத்தங்களைப் பெற்றோர் கொடுப்பதன் எதிர்மறை விளைவுகளை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. கண்டிப்பாக நமது பெற்றோர் பார்க்க வேண்டிய படம். 

(இருந்தாலும், சில பெற்றோர் இப்படியான படங்கள் தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது என வெகுண்டெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.