Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்

by கார்வண்ணன்in செய்திகள்

rajitha-senaratne-300x200.jpgசிறிலங்காவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

”தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணித்திருந்தன.

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில் 2018 நொவம்பர் 30ஆம் நாள்  இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தாக்குதலை குறைந்தது 4 இராணுவ அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி,  வவுணதீவுத் தாக்குதலின் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டதாகும்.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குறைந்தது 26 உறுப்பினர்கள் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்துள்ளனர். இவர்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் புலனாய்வுப் பிரிவிடம் ஊதியம் பெறுபவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஆமி மொஹிதீன் எனப்படும், பத்ருதீன் மொகமட் மொகிதீனை சிறிலங்கா காவல்துறை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/05/01/news/37725

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறங்கினாலும் ஒரு நாள் வெளி வரும் - ஆலாலசுந்தரம், தருமலிங்கம், ராஜினி திரனகம படுகொலைகள் பற்றிய உண்மைகள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

உண்மைகள் உறங்கினாலும் ஒரு நாள் வெளி வரும் - ஆலாலசுந்தரம், தருமலிங்கம், ராஜினி திரனகம படுகொலைகள் பற்றிய உண்மைகள் போல.

உங்களின் இந்த கருத்தின் நோக்கம் உண்மையில் பிடிபடவில்லை. இந்த கட்டுரைக்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? அவர்களும் அரசாங்கத்தின் payroll இல் நேரடியாக இருந்தவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

உங்களின் இந்த கருத்தின் நோக்கம் உண்மையில் பிடிபடவில்லை. இந்த கட்டுரைக்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? அவர்களும் அரசாங்கத்தின் payroll இல் நேரடியாக இருந்தவர்களா?

ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியில் தனது காலத்தில் அரபு மொழியில் பாண்டித்தியம் கொண்ட  ஐயாயிரம் பேர் புலனாய்வாளராக இருந்தனர் என்றும் அவர்களை இந்த அரசு நீக்கி விட்டது என்றும் அதனாலேயே இந்த தாக்குதல் நடந்தது என்றும் சொன்னார். மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியும் மௌலவி ஒருவரும் இந்த பயங்கரவாதிகள் பற்றி கோத்தபாயவின் காலத்தில் அவரிடம் நேரடியாக முறையிட்டதாகவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேட்டிகளில் சொல்ல கேட்டேன். கோத்தாவின் அரபு புலனாய்வாளர்கள் இந்த பயங்கரவாதிகள் என்றும் அவர்களின் குற்ற செயல்கள் காரணமாகவே அவர்கள் நீக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். ஐஸிஸ் தலைவர் உரிமை கோரிய வீடியோ செயற்கையானது என அமெரிக்க அதிகாரிகள் சொன்னதாகவும் செய்தி வந்திருந்தது.  இந்த தாக்குதலால் இலாபம் அடைந்தவர் ஒருவர் மட்டுமே. உறங்கும் உண்மை ஒரு நாள் வெளிவரும்.

Edited by Jude

1 minute ago, Jude said:

ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியல் தனது காலத்தில் அரபு மொழியில் பாண்டித்தியம் கொண்ட  ஐயாயிரம் பேர் புலனாய்வாளராக இருந்தனர் என்றும் அவர்களை இந்த அரசு நீக்கி விட்டது என்றும் அதனாலேயே இந்த தாக்குதல் நடந்தது என்றும் சொன்னார். மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியும் மௌலவி ஒருவரும் இந்த பயங்கரவாதிகள் பற்றி கோத்தபாயவின் காலத்தில் அவரிடம் நேரடியாக முறையிட்டதாகவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேட்டிகளில் சொல்ல கேட்டேன். கோத்தாவின் அரபு புலனாய்வாளர்கள் இந்த பயங்கரவாதிகள் என்றும் அவர்களின் குற்ற செயல்கள் காரணமாகவே அவர்கள் நீக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். ஐஸிஸ் தலைவர் உரிமை கோரிய வீடியோ செயற்கையானது என அமெரிக்க அதிகாரிகள் சொன்னதாகவும் செய்தி வந்திருந்தது.  இந்த தாக்குதலால் இலாபம் அடைந்தவர் ஒருவர் மட்டுமே. உறங்கும் உண்மை ஒரு நாள் வெளிவரும்.

100 க்கு 100% உண்மையான விடயங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு கோத்தபாய வழங்கிய செவ்வியில் தனது காலத்தில் அரபு மொழியில் பாண்டித்தியம் கொண்ட  ஐயாயிரம் பேர் புலனாய்வாளராக இருந்தனர் என்றும் அவர்களை இந்த அரசு நீக்கி விட்டது என்றும் அதனாலேயே இந்த தாக்குதல் நடந்தது என்றும் சொன்னார். மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியும் மௌலவி ஒருவரும் இந்த பயங்கரவாதிகள் பற்றி கோத்தபாயவின் காலத்தில் அவரிடம் நேரடியாக முறையிட்டதாகவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேட்டிகளில் சொல்ல கேட்டேன். கோத்தாவின் அரபு புலனாய்வாளர்கள் இந்த பயங்கரவாதிகள் என்றும் அவர்களின் குற்ற செயல்கள் காரணமாகவே அவர்கள் நீக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். ஐஸிஸ் தலைவர் உரிமை கோரிய வீடியோ செயற்கையானது என அமெரிக்க அதிகாரிகள் சொன்னதாகவும் செய்தி வந்திருந்தது.  இந்த தாக்குதலால் இலாபம் அடைந்தவர் ஒருவர் மட்டுமே. உறங்கும் உண்மை ஒரு நாள் வெளிவரும்.

கோத்தபாய சம்பந்தப்பட்ட இந்த விபரங்களைஅறிந்திருந்தேன், தொகுத்ததுக்கு நன்றி. நான் கேட்டது அதுவல்லது. "ஆலாலசுந்தரம், தருமலிங்கம், ராஜினி திரனகம" போன்றவர்களின் கொலைக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று குழப்பமாக இருந்தது.    

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நீர்வேலியான் said:

கோத்தபாய சம்பந்தப்பட்ட இந்த விபரங்களைஅறிந்திருந்தேன், தொகுத்ததுக்கு நன்றி. நான் கேட்டது அதுவல்லது. "ஆலாலசுந்தரம், தருமலிங்கம், ராஜினி திரனகம" போன்றவர்களின் கொலைக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று குழப்பமாக இருந்தது.    

சில கேள்விகளுக்கு பதில் தேடுங்கள் - குழப்பம் தெளியும்.

ஆலால சுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் யார் கொன்றது என்று ஆரம்பத்தில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கூறிவந்தனர்?

உண்மையான கொலைகாரரை பற்றிய தகவல் பின்னர் எப்படி பகிரங்கமானது?

இதே கேள்விகளை ராஜனி திரணகம கொலை பற்றியும் கேட்டுப். பாருங்கள்.

இந்த தேவாலய தாக்குதல் பற்றியும்  உறங்கும் உண்மைகள் ஒரு நாள் வெளி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இந்தக் கொலைகளைச் செய்தார்கள் என்கிறீர்களா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

புலிகள் இந்தக் கொலைகளைச் செய்தார்கள் என்கிறீர்களா இல்லையா?

இந்த கொலைகளை செய்தவர்களை அறிந்தவர்கள் அவர்களை பிற்காலத்தில் அடையாளம் காட்டி இருந்தார்கள். கொலைகாரர் புலிகள் அல்ல. ஆனால் புலிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. பொபி, தாஸ், அற்புதன் என்ற பெயர்களை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Jude said:

இந்த கொலைகளை செய்தவர்களை அறிந்தவர்கள் அவர்களை பிற்காலத்தில் அடையாளம் காட்டி இருந்தார்கள். கொலைகாரர் புலிகள் அல்ல. ஆனால் புலிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. பொபி, தாஸ், அற்புதன் என்ற பெயர்களை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அந்த இயற்கத்தின் பெயரையும் சொல்லுறது...😄

  • கருத்துக்கள உறவுகள்

பொபியும் தாஸும் டெலோ. அற்புதன் ஈ பீ டீ பீ என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

அந்த இயற்கத்தின் பெயரையும் சொல்லுறது...😄

சுற்றி சுற்றி புலிகளைத்தான் குற்றம் சொல்லுவார்  யூட்  சார் 

  • கருத்துக்கள உறவுகள்

யூட், சுற்றிவளைச்சு இது இஸ்லாமிய அடிப்படை வாதிகள் செய்ததில்லை என நிறுவ முயற்சிக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

பொபியும் தாஸும் டெலோ. அற்புதன் ஈ பீ டீ பீ என்று நினைக்கிறேன்.

இவை சரியானவை. தாஸ்  குழுவினரை பொபி குழுவினர் யாழ் பெரிய ஆஸ்பத்திரியில் வைத்து கொன்றார்கள். மாணவர்கள் தாஸுக்கு பல்கலைகழகத்தில் மரணச்சடங்கு நடத்தினர். தாஸ் குழுவின் குற்றங்களை விபரிக்கும் துண்டுபிரசுரத்தில் ஆலால், தர்மர் கொலையை பொபி குழு போட்டு இருந்தது. பதிலுக்கு தாஸ் குழு அப்போது டெலோவில் நாங்கள் ஒன்றாக இருந்தோம் என்று பிரசுரம் வெளியிட்டது.

ராஜினி , அற்புதன் பற்றி அடுத்த பதிவில். இந்த களத்தில் எழுதும் றோ முகவர்கள் அவசியம் படிக்க வேண்டியது அது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Jude said:

ராஜினி , அற்புதன் பற்றி அடுத்த பதிவில். இந்த களத்தில் எழுதும் றோ முகவர்கள் அவசியம் படிக்க வேண்டியது அது.

அற்புதன் ஈபிடிபி இல் இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளர்.
ஈபிடிபி தான் தனது ஆளையே போட்டுத் தள்ளியது என்கிறார்கள்.

1 hour ago, Jude said:

 

ராஜினி , அற்புதன் பற்றி அடுத்த பதிவில். இந்த களத்தில் எழுதும் றோ முகவர்கள் அவசியம் படிக்க வேண்டியது அது.

ஆ அப்படியா?

ரா மட்டுமல்ல, சி.ஐ.ஏ, மொஸாட், KGB,CSIS வற்றின் முகவர்களும் இக் களத்தில் எழுதுகின்றனர என்று சொன்னால் தான் எங்களுக்கும் ஒரு கெத்தாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆ அப்படியா?

ரா மட்டுமல்ல, சி.ஐ.ஏ, மொஸாட், KGB,CSIS வற்றின் முகவர்களும் இக் களத்தில் எழுதுகின்றனர என்று சொன்னால் தான் எங்களுக்கும் ஒரு கெத்தாக இருக்கும்.

எழுதுகினமோ இல்லையோ வாசிப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஆ அப்படியா?

ரா மட்டுமல்ல, சி.ஐ.ஏ, மொஸாட், KGB,CSIS வற்றின் முகவர்களும் இக் களத்தில் எழுதுகின்றனர என்று சொன்னால் தான் எங்களுக்கும் ஒரு கெத்தாக இருக்கும்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் வந்தது பற்ற கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஏதோ விநோத உடை போட்டியை பார்த்துவிட்டு நான் இந்நிய இராணுவம் என்று நினைத்து விட்டேன் என்று நீங்கள் எழுதினால் எனக்கு அது ஆச்சரியமாக இருக்காது.

11 hours ago, ஈழப்பிரியன் said:

அற்புதன் ஈபிடிபி இல் இருந்தாலும் நல்லதொரு எழுத்தாளர்.
ஈபிடிபி தான் தனது ஆளையே போட்டுத் தள்ளியது என்கிறார்கள்.

மிகவும் உண்மையான கருத்து. ராஜினியை கொன்றவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்னிருந்த இந்திய இராணுவ முகாமில் இருந்த ஈ.பீ. ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் என்றும், அவர்கள் அதே முகாமில் இருந்த சுரேக்ஷ்குமார் என்ற றோ அதிகாரியின் கட்டளைப்படியே ராஜினியை கொன்றார்கள் என்றும் தனது பத்திரிகையில் எழுதிய சில நாட்களின் பின் அற்புதன் கொல்லப் பட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Jude said:

இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் வந்தது பற்ற கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஏதோ விநோத உடை போட்டியை பார்த்துவிட்டு நான் இந்நிய இராணுவம் என்று நினைத்து விட்டேன் என்று நீங்கள் எழுதினால் எனக்கு அது ஆச்சரியமாக இருக்காது.

மிகவும் உண்மையான கருத்து. ராஜினியை கொன்றவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்னிருந்த இந்திய இராணுவ முகாமில் இருந்த ஈ.பீ. ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் என்றும், அவர்கள் அதே முகாமில் இருந்த சுரேக்ஷ்குமார் என்ற றோ அதிகாரியின் கட்டளைப்படியே ராஜினியை கொன்றார்கள் என்றும் தனது பத்திரிகையில் எழுதிய சில நாட்களின் பின் அற்புதன் கொல்லப் பட்டார். 

இதேபோல, புலிகளால் செய்யப்படாத, ஆனால் புலிகள்மேல் சுமத்தப்பட்ட படுகொலைகள் வேறு இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

இதேபோல, புலிகளால் செய்யப்படாத, ஆனால் புலிகள்மேல் சுமத்தப்பட்ட படுகொலைகள் வேறு இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

ராஜீவ்காந்தி கொலை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ராஜீவ்காந்தி கொலை.

எங்களால் உறுதியாக இதை நிரூபிக்க முடியுமா அண்ணா? இதைச் செய்தது யாரென்று நீங்கள் நம்புகிறீர்கள்? சி ஐ ஏ? இந்திய ஆயுதத் தரகர்கள்?

ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், 2009 இனவழிப்பு போரில் இதற்குப் பழிவாங்குவதற்காகவே இந்தியா பங்களிப்புச் செய்தது என்று நம்பும் பலர் இருக்கிறார்கள். ஆகவே, புலிகள் செய்யாத ஒன்றிற்காக விதவை சோனியா தமிழர்களைப் பழிவாங்கவேண்டிய தேவை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இதேபோல, புலிகளால் செய்யப்படாத, ஆனால் புலிகள்மேல் சுமத்தப்பட்ட படுகொலைகள் வேறு இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

பல கொலைகளுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறேமதாசவின் மகள் பிறேமதாசாவை புலிகள் கொல்லவில்லை என்று பகிரங்கமாக பல வருடங்களாக கூறி வந்தார். லலித் அத்துலத்முதலியை புலிகள் கொல்லவில்லை என்று அவரின் பல ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பல கொலைகளுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறேமதாசவின் மகள் பிறேமதாசாவை புலிகள் கொல்லவில்லை என்று பகிரங்கமாக பல வருடங்களாக கூறி வந்தார். லலித் அத்துலத்முதலியை புலிகள் கொல்லவில்லை என்று அவரின் பல ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

ஜூட்டண்ணா கலாய்க்கிறார் போல!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பல கொலைகளுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறேமதாசவின் மகள் பிறேமதாசாவை புலிகள் கொல்லவில்லை என்று பகிரங்கமாக பல வருடங்களாக கூறி வந்தார். லலித் அத்துலத்முதலியை புலிகள் கொல்லவில்லை என்று அவரின் பல ஆதரவாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.

லலித்தைக் கிருலப்பனை மைதானத்தில் வைத்து தேர்தல் கூட்டமொன்றில் போட்டது பிரேமதாசா என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்பாவித் தமிழர் ஒருவரைக் கடத்திக் கொன்றுபோட்டு அவரது அடையாள அட்டையை வீதியோரத்தில் எறிந்துவிட்டுப் புலிகள்மேல் பழியைப் பிரேமா போட்டார் என்று சொல்கிறார்கள்.

அதேபோல, 93 மேதின ஊர்வலத்தில் தன்மேல் அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறியதாக ஒரு அசம்பாவிதத்தைச் செய்து காயத்துடன் தப்பித்துக்கொள்ள பிரேமா எடுத்த முயற்சியை புலிகள் கொலையாக மாற்றினார்கள் என்று சிங்களவர்கள் சொல்கிறார்கள்.

Edited by ரஞ்சித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.