Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இரெண்டு காணொலிகள் ஒன்று இது - இதைதான் நான் மேலே இன்னொரு பதிலில் விபரம் தெரியாக் காணொளி என்று சொல்லி இருந்தேன்.

மற்றயது (கள்ள உறவு) ஒரு தாடி வைத்த இளஞர் வத்தளையில் பிடிபட்டது.

அதுசரி இன்றைக்கு என்ன ஒரேஆள்-பல ஐடி காரரின் அட்டகாசம் அதிகமாய் இருக்கு. எல்லா குருவிகளும் ஒரு சேர கீச்சிடுகிது?

 

Edited by goshan_che

  • Replies 141
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!
 

original-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

பிரபாகரன் (விடுதலை புலிகள்) மட்டுமில்லை ...
தமிழை ஆண்ட அனைத்து மன்னர்கள் வரை தனிப்பட நான் வரலாறை 
வாசிக்கும்போது முடிவுகளை ஏற்கனவே தெரிந்துகொண்டு வாசித்தாலும் 
இறுதி பக்கங்களை நெருங்கும்போது வாசிப்பில் என்றாலும் ஐயோ இப்படி இருக்க கூடாது என்ற 
சின்ன எதிர்பார்ப்பும் நப்பாசையும் வந்துபோகும்.

இத்தனை தொடர் தோல்விகள் என்றாலும் நான் தமிழன் என்பதில் எனக்கு 
எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முக்கிய காரணம் எந்த தமிழ் மன்னனும் (சைவ மதம் சார்ந்தோ என்னமோ) அறம் தவறியது இல்லை 
இன்னொரு இனத்தை வேடடையாடியது இல்லை.

முஸ்லிம்கள் விட்ட அதே தவறை நாமும் விடலாகாது 
இன்னொரு சிறுபான்மை இனத்தை எக்காரணம் கொண்டும் பழி  தீர்ப்பதிலும் 
தட்டி கொடுப்பதில் எப்போதும் பெருமை உண்டு.

சாதாரண மனித எண்ணம் சிந்தனைகளோடு கடைபிடித்தல் கடினம் 
நானே முஸ்லிம்தரப்பு பற்றி சாடி பல கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன் 
விழிப்புஉணர்வு தேவை நாம் சுரண்ட படுகிறோம் என்ற உண்மை புரிய வேண்டும்.
ஆனால் அழிக்க வேண்டும் என்ற வன்மம் கூடாது.

 

மிகநியாயமான நிலைப்பாடு.

இங்கே திசை திருப்பவிரும்பவில்லை, ஆனால் தமிழ் மன்னர்கள், செய்த கொலைகள் அறப்பிழைகள் பற்றியும் ஒரு பட்டியல் தேவை என்றால் சொல்லவும்.

சங்கிகியன் மதம் மாறிய 600 தமிழ் கத்தோலிக்கரின் தலையை மன்னாரில் சீவியதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மிகநியாயமான நிலைப்பாடு.

இங்கே திசை திருப்பவிரும்பவில்லை, ஆனால் தமிழ் மன்னர்கள், செய்த கொலைகள் அறப்பிழைகள் பற்றியும் ஒரு பட்டியல் தேவை என்றால் சொல்லவும்.

சங்கிகியன் மதம் மாறிய 600 தமிழ் கத்தோலிக்கரின் தலையை மன்னாரில் சீவியதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

 

ராஜேந்திர சோழன் மக்களை அடிமையாக்கியே தஞ்சை பெரியார் கோவிலை கட்டினான் 
இதில் பெருமை என்ன இருக்கிறது? என்று வினவுவோர்களும் உண்டு 

நாம் இன்று ராஜேந்திர சோழனை காட்டிலும் 1000 வருடம் வளர்ந்து நாகரீகம் அடைந்த  மனிதர்கள் 
இன்றும் அதைவிட கொடூரம் ஈழம் பாலஸ்தீனம்  சிரியா ஜெமனில் எம் கண் முன்னே தொடர்கிறது.

எபிக்ஸ் & மோரல் ரீதியாக நீங்கள் தர்க்கம் செய்துகொள்ளலாம் 
அப்போதைய கால சூழ்நிலைகளை கருத்தில் எடுக்காது கொலையை மட்டுமே எடுப்பதில் 
அர்த்தம் இல்லை. சங்கிலியன் அவர்களை துரோகியாகவே பழி  தீர்த்தான் அந்த கால சூழலில் அது பச்சை துரோகமும் என்பதே எனது நிலைப்பாடும். 

புலிகள் யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதை தவறு என்று நான் ஒருபோதும் 
எங்கும் ஒத்துக்கொள்ள மாட்டேன் மன ரீதியாக வருத்தம் அடைகிறேன். அன்று கூட ஒரு முஸ்லீம் தாய் 
அழுததை பார்க்க எனக்கும் அழுகை வர நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடடேன் என்று ஏற்கனவே முன்பு ஒருமுறை உங்களுக்கு எழுதி இருக்கிறேன். காரணம் அன்றைய சூழ்நிலையை புலிகள் பலத்தை 
காத்திருந்த ஆபத்தை நேரில் பார்த்தவன் நான் ... தீவில் இறந்த 49 போராளிகளில் கூடுதலானவர்கள்  ரவைகள்  முடிந்த பின்பு சயனைட் அருந்தி இறந்துதான் அதிகம்... எட்டி தொடும் தூரத்தில் கூட சென்று ஏற்றிவர முடியாது  மறு  கரையில் நின்று தவித்த புலிகளை நான் எனது கண்ணால் பார்த்தவன். முஸ்லிம்கள் தொடர்ந்தும் அங்கு இருந்து இருந்தால்  மக்களிடம் அடிவாங்கி இருப்பார்கள் ... அந்த பழி புலிகளை சேர்ந்து இருக்கும்  என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. 

குமுதினி படகில் சிங்கள காடையர்கள் வெட்டியபோது 
ஆத்திரத்தில் புலேந்தி அம்மான் வெலிஓயா பகுதியில் ஒரு சிங்கள கிராமத்தில் 
பொதுமக்களை பழி தீர்த்தார்கள். புலிகள் அதில்  ஈடுபட்ட எல்லோர்க்கும் பனிஸ்மான் கொடுத்தார்கள் 
புலேந்தி அம்மான் திருமலை தளபதி பதவியை பறித்து சஞ்சேயை தளபதி ஆக்கினார்கள். எனக்கும் உங்களுக்கும்தான்   புலேந்தி அம்மான்  வெளியில் இருப்பவனுக்கு  புலிகள் தான். 
இப்படி தவறுகளும் பட்டியலும் உண்டு ...... 
ஆனால் திட்டம் போட்டு வேட்டை ஆடியது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

1. மனோ கணேசன் ஒன்றும் கூ முட்டை அரசியல்வாதி இல்லை. மிகத் தெளிவாக, ஹிஜாப் அணிந்து போனது சட்டவிரோதம் இல்லை என்றும், அப்படித் செல்வோரை தடுப்பதே சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

2. மனோ சொல்லும்வரை, ஆசிரியர்கள் உடற்சோதனைக்கு உட்பட மறுத்தது நமக்கு யாருக்குமே தெரியாது. ஆகவே இப்போ அதைப் பிடித்து தொங்கியபடி, நான் அப்பவே சொன்னேன் என்பது அரிவரிப் பிள்ளையள் சொல்லுமாப் போல இருக்கு. ஆசிரியர்கள் உடற் சோதனைக்கு மறுத்தது பிழை, ஆனால் பெற்றார்கள் அதைதான் வலியுறுத்தி கேட்டிருக்க வேண்டும், இல்லாமல் ஹிஜாபோடு வராதே என்று, கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் செய்தது காடைத்தனமே.

3. இதில் சம்பந்த பட்ட எந்த தரப்புமே ஆசிரியர்கள் முகத்தை, மூடும் நிகாப், புர்கா அணிந்து வந்தாதாக இன்னும் கூட சொல்லவில்லை. ஆகவே “தடை செய்யப்பட்ட” ஆடையில் ஆசிரியர்கள் வந்தார்கள் என்பது, பதிவை இட்டவரின் விளக்கமின்மையால் விழைந்தது என்பதும், அதையே இன்னும் சில கருதாளர்கள் பிடித்து தொங்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

4. இலங்கையில் 48 க்கு பின் அரசியல் செய்த, ஆயுத போரட்டம் நடத்திய எந்த தலைவரையும் விட மேல்வீட்டில் சரக்குக் கூடிய ஆள் மனோ. இந்த விசயத்தை, சுமூகமாக தீர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

அதாவது, ஆசிரியர்கள் முன்னர் போல ஹிஜாப் அணிந்து பணிக்கு திரும்புவர். பிள்ளைகளின் படிப்பும் பாழாகாது. 

தொடக்கம் முதல் ஜஸ்டினும் நானும் வலியுருத்தியது இதையே.

 

காணும் அரைச்சது அந்த பெற்றோருக்கு தங்கட பிள்ளைகள் மேல் இல்லாத அக்கறையா உங்களுக்கு?...மனோ அவர்கள் அந்த பெற்றோருக்கு ஆதரவாய் கதைத்ததையும் வசதியாய் மறைத்து விடுகிறீர்கள்...நான் சொல்ல வந்தது இது தான்  அவர்கள் தங்கட இட  மாற்றத்திற்காகவோ அல்லது தங்கட தேவைக்காகவோ நாடகம் ஆடுகிறார்கள் என்றேன்...அது தான் நடந்தது 

வரும் கிழமை அனைத்து ஆசிரியர்களும்  பொதுவான உடை உடுத்துவது சம்மந்தமாய் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப் போறார்கள்...பொறுப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சதுகள் படிக்காததுகள் எல்லாம் இங்கால(வெளிநாடு)வந்தால் இப்படித்தான் மற்ற இனத்திடம் கை ஏந்த வேண்டி வரும்.நான் உட்ப்பட.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பிரபாகரன் (விடுதலை புலிகள்) மட்டுமில்லை ...
தமிழை ஆண்ட அனைத்து மன்னர்கள் வரை தனிப்பட நான் வரலாறை 
வாசிக்கும்போது முடிவுகளை ஏற்கனவே தெரிந்துகொண்டு வாசித்தாலும் 
இறுதி பக்கங்களை நெருங்கும்போது வாசிப்பில் என்றாலும் ஐயோ இப்படி இருக்க கூடாது என்ற 
சின்ன எதிர்பார்ப்பும் நப்பாசையும் வந்துபோகும்.

இத்தனை தொடர் தோல்விகள் என்றாலும் நான் தமிழன் என்பதில் எனக்கு 
எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முக்கிய காரணம் எந்த தமிழ் மன்னனும் (சைவ மதம் சார்ந்தோ என்னமோ) அறம் தவறியது இல்லை 
இன்னொரு இனத்தை வேடடையாடியது இல்லை.

முஸ்லிம்கள் விட்ட அதே தவறை நாமும் விடலாகாது 
இன்னொரு சிறுபான்மை இனத்தை எக்காரணம் கொண்டும் பழி  தீர்ப்பதிலும் 
தட்டி கொடுப்பதில் எப்போதும் பெருமை உண்டு.

சாதாரண மனித எண்ணம் சிந்தனைகளோடு கடைபிடித்தல் கடினம் 
நானே முஸ்லிம்தரப்பு பற்றி சாடி பல கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன் 
விழிப்புஉணர்வு தேவை நாம் சுரண்ட படுகிறோம் என்ற உண்மை புரிய வேண்டும்.
ஆனால் அழிக்க வேண்டும் என்ற வன்மம் கூடாது.

 

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

அவர்கள் அடாவடித்தனம் மிகுந்தவர்கள் 
இன்னும் சொல்ல போனால் எமது நலிந்தவர்கள் பலவீனமானவர்கள் 
கிடைத்தால் கொலைகூட செய்வார்கள் .... செய்தவர்கள் இல்லை 
வீரமுனை எமக்கு  ஒரு சினிமா அத்திப்பட்டி மாதிரி எனது நெஞ்சில் ஆறாத வடுவாக இன்றும் உண்டு.
நாமும் அதே தவறை விட கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு 
முஸ்லிம்கள் என்ற பொது அடிப்படை கருத்துக்கள் தவறு என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது காணொளியில் தோன்றும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தில் ஊறின ஆசிரியை.. அணிந்திருக்கும் ஆடை உடலை மூடிய கறுப்பு அங்கியும்.. மற்றும் தலையில் முகத்தை மறைக்கும் அங்கியை அணிந்து பின்புறம் விட்டுள்ளார்.

இரண்டாவது கணொளியில் தோன்றுபவர்... அப்படியல்ல. அவர் அபாயா அணிந்திருக்கிறார்.

ஆக.. இது ஒருவர் சம்பந்தட்டதா..அப்படியாயின் முன்னர்... தலையில் இருந்த கறுத்தப் போர்வைக்கு என்னானது..??! எனவே இவர்களின் நடவடிக்கையில் வேறு நோக்கம் இருந்துள்ளது என்பதை.. பெற்றோர் சந்தேகித்திருப்பதும்..தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இவர்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடையோடு.. வரக் கோருவது முழுக்க முழுக்க நியாயமானதே. 🙄🙄

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

அவர்கள் அடாவடித்தனம் மிகுந்தவர்கள் 
இன்னும் சொல்ல போனால் எமது நலிந்தவர்கள் பலவீனமானவர்கள் 
கிடைத்தால் கொலைகூட செய்வார்கள் .... செய்தவர்கள் இல்லை 
வீரமுனை எமக்கு  ஒரு சினிமா அத்திப்பட்டி மாதிரி எனது நெஞ்சில் ஆறாத வடுவாக இன்றும் உண்டு.
நாமும் அதே தவறை விட கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு 
முஸ்லிம்கள் என்ற பொது அடிப்படை கருத்துக்கள் தவறு என்று எண்ணுகிறேன். 

 

1 hour ago, Nathamuni said:

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

நாமு,

முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கும் நிலையில் நாம் இல்லை. யாரோ குண்டுவைக்க, யாழ் பல்கலை சிற்றுண்டி சாலைகாரரை கைது செய்யும் நிலையில்தான் நாம் இபோதும் இருக்கிறோம்.

சும்மா நாமும் ரெளடிதான் என்பதை போல பேரினவாதத்தின் ஏவல் நாய்கள் போல் செயற்படவேண்டாமே என்பதுதான் என் நிலைப்பாடு.

இன்று கூட சுமண தேரோவுடன் சேர்ந்து மட்டில் சில இந்து குருமாரும் சிவில் பிரமுகர்களும் அடாத்து பண்ணுகிறார்கள்.

இதில் ரதி அக்காவின் அண்ணர் போன்ற அற்ப பிராணிகள் வேறு, சந்தர்பம் தேடித் திரியும் நரிகள் போல ஊளையிட்டுத் திரிகிறன.

யாரிந்த சுமணே? புலி இருக்கும் வரை மூச்சு காட்டாமல் இருந்து விட்டு, 09 க்கு பின், பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைக்க வெளிகிட்ட ஆள். ஒரு கிரேட் 1 தமிழ் இன விரோதி. இப்போ இவரின் தலைமையில் நாம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று சுத்த பைத்தியக்காரத்தனம் பண்ணுகிறோம்.

அரிய நேந்திரன் எனும் ஒரு கூமுட்டை எம் பி, தமிழ் பகுதியில் முன்பு செய்தது போல் இப்போ முஸ்லீம் பகுதியில் ஆமி அடாவடி செய்வதில்லை என்று கொம்பிளைண்ட் பண்ணுறார்! இது என்ன மாதிரியான மனநிலை?

இந்த பைத்தியகாரத் தனங்களை விட்டு விட்டு, நமக்குரிய கண்ணியத்துடன் சும்மா இருங்கள் என்பது என் நிலைப்பாடு.

தவிர தமிழ் பேசும் சமூகமாக ஒன்றாக சேர்வதெல்லாம் நடவாத காரியம். 

அவர்களுக்கு நியாயமானதை (இன்றை நிலைப்படி) அவர்களுக்கு கொடுத்து, பிரிந்து ஆனால் சமாந்தரமாக வாழ்வதே, எம் எதிர்கால இருப்புக்கும் அவர்களின் எதிர்கால இருப்புக்கும் நல்லது.

ரதி அக்கா,

மட்டில் 90 களின் இறுதியில் நடந்த வெசாக் குண்டு வெடிப்பு நியாபகம் இருக்கும். இப்படி பல உயிராபத்துகளுக்கு மத்தியிலும் நாம் சாதாரண வாழ்வு வாழ்ந்தவர்கள்தான்.  முந்தி ஆமி மல்டி பெரல் அடிக்கேக்க ஏன் போய் முறையிடேல? முறையிட்டா, முறையிட போன ஆள், பற்பொடி கேம்பில, பொடியாப் போயிருக்கும் எண்ட பயம். இப்ப சோனகனுக்கு ஆப்படிக்கிரெண்டா எல்லாரும் வீரர். இந்த பிள்ளையளுக்கு பாதுகாப்பு இல்ல எண்டதெல்லாம் சும்மா பம்மாத்துக் கதை.

மருதர்,

நாம் முன்பே கதைத்ததுதான். தக்காளி சோஸ். ரத்தம் மேட்டர். எம் சார்பினர் செய்யும் போது அதற்கு ஒரு நியாயம் எமக்கு இயல்பாகவே எழும். எமக்கு சம்பந்தமற்றோர் செய்யின் எழாது.

One man’s freedom fighter is another’s terrorist.     

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

பாதுகாப்பு நெருக்கடி நேரத்திலும் இந்த முஸ்லீம் ஆசிரியைகள் இடமாற்றம் வேண்டி சுயநலப் போக்கோடு போடும் இஸ்லாமிய மதவெறி வேடம் தான் ஏனோ?! பெற்றோருக்கு பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்.

48 minutes ago, nunavilan said:

 

 

 

காணொளிகளைக் காண்க. 

முதலாவது காணொளியில் குறித்த ஆசிரியை அதன் 1.36 நிமிடத்தில் இருந்து தோன்றுகிறார்.

இரண்டாவது காணொளியில் கிட்டத்தட்ட முழுக் காணொளியிலும் இன்னொரு வடிவில்.. ஆசிரியை தோன்றுகிறார். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂 இந்த சிதம்பர ரகசியம் என்று ஒரு விசயம் கேள்வி பட்டிருப்பியள். சிதம்பரத்துக்கு போனா, ரகசியத்த காட்டுறம் எண்டு பிராமணியள் கூட்டிப்போய், ஒரு திரையை விலக்கி, காட்டிவிட்டு, ரகசியம் தெரிஞ்சிதா எண்டு கேப்பினம். 

இல்லை எண்டு சொன்னா நீ துஸ்டாத்மா உனக்கு தெரியாது என்பீனம். ஓமெண்டா நீ புண்ணியாத்மா, என்ன தெரிஞ்சதெண்டு யாருக்கும் சொல்லாதே இது தெய்வ ரகசியம் என்பீனம் 😂

இது போலத்தான் காணொளி 1 இன் மேலெ தரப்பட்டுள்ள screen shot உம். 

உங்களுக்கு, முகத்தை மூடிய, நிகாப் அல்லது புர்கா அணிந்த பெண் தெரிந்தால் - நீங்கள் அக்மார்க தமிழ் தேசியவாதி. 

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தோன்றினால்- நீங்கள் ஒரு இனத்துரோகி, நடுநிலைவாதி, சோனகனுக்கு வக்காளத்து வாங்குபவர், ரோ, மலையாளி, பாகிஸ்தான் உளவாளி etc, etc 😂

பிகு: அதிகம் சத்தம் போட்டு சிரிச்சிட்டன் போல, டியூப்ல முழுசனமும் வித்தியாசமாய் பார்க்குது என்னை:

பிகு2: கறுப்பு உடைக்கு பிரவுண் handbag மேட்சிங்கே சரியில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

 

One man’s freedom fighter is another’s terrorist.     

இது தவறான கருத்து 
நாம் ஒன்றும் அவர்கள் வீட்டுக்குள் இடம் கேட்கவில்லை 
எங்கள் வீட்டில் எங்களை நிம்மதியாக விடும்படிதான் கேட்க்கிறோம்.

அவர்கள்தான் ஆக்கிரமிப்பு அடாவடித்தனம் செய்வது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2019 at 7:09 AM, goshan_che said:

 நாம் விரும்பியோ விரும்பாமலோ மிக விரைவில் முஸ்லீம்கள்தான் இலங்கையில் 2வது இனம். இப்பவே ஆகிவிட்டதாயும், சென்சஸ்சை வேண்டும் என்றே manipulate பண்ணி வைதுள்லதாயும் வேறு பேசிக்கிறார்கள்.

இதற்கான விடை எனக்குத் தெரியும் என்று நான் சொல்லலை. ஆனால் தமிழ் பேசும் தரப்பு என முஸ்லீம்களை எமக்கு கீழ் வகைபடுத்தும் ஒரு தீர்வு இனிமேல் சாத்தியமில்லை. பார்க்கலாம்.

இதற்கான தீர்வு தமிழ் மக்களும் முஸ்லிம்கள் போல இனப்பெருக்கம் செய்வதுதான். போர் காரணமாக எங்கள் மக்கள் தொகை குறைந்து விட்டது. ஆண்கள் காணது. பல தார திருமணங்கள் சட்டபூர்வமானதாக வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் இருவர் தாங்கள் நேரில் நின்று காட்சிகளைக் கண்ட கணக்கா கதையளந்து திரிகிறார்கள். தாங்கள் பலதுறை வித்துவக் குஞ்சுகள் என்ற காட்சிப்படுத்தலுக்கு முக்கி முக்கி எழுதித் திரிகிறார்கள். இவர்களின் வெற்று வேட்டுக்களை யாழ் களம் நன்கு அறியும்.

இப்போ.. அவர்களின் கதையை எல்லோருமே நிராகரித்துவிட்ட நிலையில்.. தாங்களா எதை எதையோ கற்பனை செய்து புலம்பிக் கொண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு இது பொழுதுபோக்கு. இவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பது வீண் வேலை. 

ஆனால்.. நாட்டில் இஸ்லாமிய மத அடிப்படைப் பயங்கரவாதிகளாலும்.. அதற்கு துணை போகும் இஸ்லாமிய மத கடும்போக்காளர்களாலும்.. தமிழ் மக்களுக்கு உள்ள அச்சுறுத்தல் மற்றும் மொத்த இலங்கைக்கும் உள்ள அச்சுறுத்தல் சார்ந்து நாடே ஸ்தபிதம் அடைந்து.. கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்..

இந்த முஸ்லீம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் திணிப்பில் புகுத்தப்பட்ட அடையாளங்களை நேரம் காலம் தெரியாமல்.. காவிக் கொண்டு.. தமது சுயநலத்தை முன்னுறுத்தி செயற்படும்.. கஸ்டப் பிரதேசத்துக்கு தெரிவான இந்த முஸ்லிம் ஆசிரியைகள்.. உடனடி இடமாற்றம் வேண்டி.. போடும் தில்லுமுல்லுகள்.. பொது மக்களின்.. பள்ளிப் பிள்ளைகளின் பாதுகாப்போடு விளையாடும் செயல் என்பதால்..

இந்த ஆசிரியைகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு.. இவர்களுக்கு தகுதியற்ற நிலையிலும் உடனடி இடமாற்றம் வழங்கி செயற்பட்ட முஸ்லிம் மத அடிப்படை அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கட்டாயம் ஆகும்.

மேலே இந்த முஸ்லிம் பெண்களின் தில்லுமுல்லை எடுத்துக்காட்டும் படங்களுக்கான காணொளிக் காட்சிகள் தோன்றும்.. காலங்கள் வெளியிடப்பட்டே உள்ளன. பார்வைக் குறைபாடுள்ளவர்கள்.. அதில் ஓரளவு தெளிவாகக் காட்சிகளை காணலாம். 

வெளியிடப்பட்ட காணொளியின் தரத்துக்கு ஏற்பதான் படங்களை உருவாக்க முடியும். பலருக்கு இது விளங்கி இருக்கும். சில விளக்கம் கெட்டவர்களுக்கு விளக்கியும் பிரயோசனம் இல்லை.

......................

இந்த நிகழ்வுகள் எனியும் நிகழாமல் இருக்க.. சொறீலங்கா நாட்டில் தேசிய அளவில் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உள்ளது போன்று.. ஆசிரியர்.. ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு விதிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அரச வேலைத் தலங்களிலும் இதனை அமுலாக்க முனையலாம். 

பொறுத்திருந்து பார்ப்போம்.. இன நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் என்ன செய்யப் போகிறார் என்று. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

😂😂😂 இந்த சிதம்பர ரகசியம் என்று ஒரு விசயம் கேள்வி பட்டிருப்பியள். சிதம்பரத்துக்கு போனா, ரகசியத்த காட்டுறம் எண்டு பிராமணியள் கூட்டிப்போய், ஒரு திரையை விலக்கி, காட்டிவிட்டு, ரகசியம் தெரிஞ்சிதா எண்டு கேப்பினம். 

இல்லை எண்டு சொன்னா நீ துஸ்டாத்மா உனக்கு தெரியாது என்பீனம். ஓமெண்டா நீ புண்ணியாத்மா, என்ன தெரிஞ்சதெண்டு யாருக்கும் சொல்லாதே இது தெய்வ ரகசியம் என்பீனம் 😂

இது போலத்தான் காணொளி 1 இன் மேலெ தரப்பட்டுள்ள screen shot உம். 

உங்களுக்கு, முகத்தை மூடிய, நிகாப் அல்லது புர்கா அணிந்த பெண் தெரிந்தால் - நீங்கள் அக்மார்க தமிழ் தேசியவாதி. 

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தோன்றினால்- நீங்கள் ஒரு இனத்துரோகி, நடுநிலைவாதி, சோனகனுக்கு வக்காளத்து வாங்குபவர், ரோ, மலையாளி, பாகிஸ்தான் உளவாளி etc, etc 😂

பிகு: அதிகம் சத்தம் போட்டு சிரிச்சிட்டன் போல, டியூப்ல முழுசனமும் வித்தியாசமாய் பார்க்குது என்னை:

பிகு2: கறுப்பு உடைக்கு பிரவுண் handbag மேட்சிங்கே சரியில்லை😂

ஒரு சிறு திருத்தம்:

உங்களுக்கு முகத்தை மூடும் புர்கா/நிகாப் தெரிகிறதா? சபாஸ் உங்கள் கண்பார்வை சூப்பராக இருக்கிறது. உங்கள் விளங்குதிறனும் அபாரம்.

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தெரிகிறதா?

அடப்பாவமே சீக்கிரம் ஒரு கண்வைத்தியரை பாக்கவும்( பல்வைத்தியரை அல்ல). ஏன் இப்படி விளக்கம் கெட்டவர்களா இருக்கிரீர்கள் 😂

# emperor’s clothes.

# அம்மண மகாராஜாவின் அதிசய உடை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒப்பீடும் இல்லை.. ஒரு பொது அறிவும் இல்லை.. பார்வையிலும் கோளாறு போலும்.

படத்தில் உள்ள காட்சியில்.. கறுப்பு உடையில் தோன்றும் ஆசிரியையின் முன் பக்கமே போடப்பட்டுள்ளது. அதனை ஒப்பிட்டு பார்க்க முதலாவது காணொளியில் இந்தக் காட்சி தோன்றக் கூடிய கால அளவும் போடப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச ஒப்பீட்டு அறிவு கூட இன்றி.. சிலர் இங்கு தங்களை தாங்களே வித்துவக் குஞ்சுகள் என்ற தோறணையில்.. தங்களின் புலம்பல் வாதங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோறணையில் எழுதுவது தெரிகிறது.

இதற்கு யாழ் களம் இடமளிப்பதில்லை. மிக விரைவில் இவர்கள் மீண்டும்.. கருத்தாடற் பண்பற்றவர்கள் என்ற பெயரோடு.. காணாமல் போகும் நிலை தான். திருந்தவே மாட்டார்கள் போலும்.  😁

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அப்பதானே ஆளில்லாத கடைல ஈசியா டீ ஆத்தலாம் 😂

வர வர கருத்தாடல் பண்பை பற்றி யார் பேசுறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு.

# சாத்தான் ஓதும் வேதம்.

பிகு: இந்த வாட்சப்பில வருமே, உங்களுக்கு நீலம் தெரியுதா பச்சை தெரியுதா எண்டு படங்கள், அதமாரி, உங்களுக்கு தெரிவது?

1. ஒரு பெண்ணின் முன் பக்கம்

2. பின் பக்கம்

3. ஒரு மண்ணும் தெரில

எண்டு சாய்ஸ் கொடுத்து இந்த படத்தை பகிர்ந்தால் செம வைரல் ஆகும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாயிருங்கப்பா ...நமக்கு நாமே மருத்துவம் பார்க்கத்தான் லாயக்கு , சுய பரிசோதனை நல்லது தான் 
ஆனால் அது ஒரு அளவுக்கு மேல் போனால் அதற்க்கு பெயர் முற்றிய மன நோய் , சிங்களவன் அவனுக்குரிய வகையில் கனகச்சிதமாக போட தொடங்கிட்டான் , என்ன அவன் தெளிவானவன் சிறுக சிறுக அரித்து அடியையே காலி செய்யும் சூட்சுமம் தெரிந்தவன் நாம் அதில் படு வீக்  , நாம் இப்போது வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.. என்ன எங்கட அரசியல்வாதிகள் கோமாவிலிருந்து எழும்பி இசுலாமிய சகோதரன் என்று கூத்தடித்து வீதியால் போன சனியனை இழுத்து வேட்டிக்குள் விடாதவரை ஓகே. முடிந்தவரை எம்மை இஸ்லாமியர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக்காட்ட முயற்சிப்போம், இது அவர்களது பிரச்சினை நமக்கு அவசியமற்றது, அதிகளவில் எமக்கிடையே  நடுநிலை நக்ஸ்கள் பெருகிவிட்டதும் எமக்கு சாபக்கேடுதான். ஒரு காத்தான்குடி பள்ளிவாசலை வைத்துக்கொண்டு எத்தனை வருடமாக அரசியல் செய்கிறார்கள் 
எப்படியெல்லாம் செய்கிறார்கள், உலகம் முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்த இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றதும் கணப்பொழுதில் எப்படி  தலைகீழாக ****** ***** அரசியல் செய்கிறார்கள் இவையெல்லாம் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியவை, நமது அரசியவாதிகள் அவர்களது அரசியல்வாதிகளின்  மூச்சா குடித்தேனும் அறிவை வளர்க்க வேண்டும்     

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய கணத்தை எடுத்துக் கொண்டால் , நாமெல்லோரும் கற்பனைக்கெட்டாத ஒரு வேகத்தில் எமது சொந்த கருத்துளையில், ஒன்றில் ஒடுங்கியோ அல்லது விரிந்து கொண்டோ இருக்கிறோம் ( ஒருவருக்கும் தெரியாது) ।   இந்த கரும்துளை இன்னொரு பெரிய (?) கருந்துளை தொகுதியின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் (  ஒருவருக்கும் தெரியாது) । அந்த பெரிய தொகுதி ஒடுங்குகிறதா அல்லது விரிவடைந்து கொண்டிருக்கிறதா    (  ஒருவருக்கும் தெரியாது)।
எமது இந்த கேவலமான அறிவு நிலவரத்தில் நாம் மற்றயவரை தனிப்பட்ட ரீதியில் பொது வெளியில் கேவலப்படுத்தி எழுதுவதை நினைக்க  - ஓம் அல்லா , பிரித் சாந்தி , பரிசுத்த ஆவி , இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அதுசரி இன்றைக்கு என்ன ஒரேஆள்-பல ஐடி காரரின் அட்டகாசம் அதிகமாய் இருக்கு. எல்லா குருவிகளும் ஒரு சேர கீச்சிடுகிது?

 

அண்ணை நான் ஒரே ஒரு பெயர்ல தான் இங்க இருக்கிறன், நான் யாருடையதும் பினாமி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

அண்ணை நான் ஒரே ஒரு பெயர்ல தான் இங்க இருக்கிறன், நான் யாருடையதும் பினாமி இல்லை.

சரியப்பு. நான்தான் தப்பா நினச்சிட்டன் போல. மன்னிக்க வேண்டுகிறேன்.

13 hours ago, Maruthankerny said:

இது தவறான கருத்து 
நாம் ஒன்றும் அவர்கள் வீட்டுக்குள் இடம் கேட்கவில்லை 
எங்கள் வீட்டில் எங்களை நிம்மதியாக விடும்படிதான் கேட்க்கிறோம்.

அவர்கள்தான் ஆக்கிரமிப்பு அடாவடித்தனம் செய்வது. 

உண்மைதான். எங்கள் பார்வையில் 100% உண்மைதான். ஆனால் சிங்களர்னதும் முஸ்லீகளதும் பார்வை அப்படி இல்லை.

உங்களை போல் அவர்களுக்கு இன்னொரு நியாயம் இருக்கும்.

உதாரணமா பிரையன் செனவிரட்னவை நியாயவாதி என போற்றும் நாமே, தமிழர் மத்தியில் இருந்து எழும் அப்படி ஒரு குரலை, நடுநிலை நக்ஸலைட் என்று பழிப்பதில்லையா? 

10 hours ago, அக்னியஷ்த்ரா said:

சும்மாயிருங்கப்பா ...நமக்கு நாமே மருத்துவம் பார்க்கத்தான் லாயக்கு , சுய பரிசோதனை நல்லது தான் 
ஆனால் அது ஒரு அளவுக்கு மேல் போனால் அதற்க்கு பெயர் முற்றிய மன நோய் , சிங்களவன் அவனுக்குரிய வகையில் கனகச்சிதமாக போட தொடங்கிட்டான் , என்ன அவன் தெளிவானவன் சிறுக சிறுக அரித்து அடியையே காலி செய்யும் சூட்சுமம் தெரிந்தவன் நாம் அதில் படு வீக்  , நாம் இப்போது வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.. என்ன எங்கட அரசியல்வாதிகள் கோமாவிலிருந்து எழும்பி இசுலாமிய சகோதரன் என்று கூத்தடித்து வீதியால் போன சனியனை இழுத்து வேட்டிக்குள் விடாதவரை ஓகே. முடிந்தவரை எம்மை இஸ்லாமியர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக்காட்ட முயற்சிப்போம், இது அவர்களது பிரச்சினை நமக்கு அவசியமற்றது, அதிகளவில் எமக்கிடையே  நடுநிலை நக்ஸ்கள் பெருகிவிட்டதும் எமக்கு சாபக்கேடுதான். ஒரு காத்தான்குடி பள்ளிவாசலை வைத்துக்கொண்டு எத்தனை வருடமாக அரசியல் செய்கிறார்கள் 
எப்படியெல்லாம் செய்கிறார்கள், உலகம் முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்த இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றதும் கணப்பொழுதில் எப்படி  தலைகீழாக ****** ***** அரசியல் செய்கிறார்கள் இவையெல்லாம் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியவை, நமது அரசியவாதிகள் அவர்களது அரசியல்வாதிகளின்  மூச்சா குடித்தேனும் அறிவை வளர்க்க வேண்டும்     

உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை.  இங்கே ஆசிரியர்களை துரத்தியது சரி என்கிறீர்களா பிழை என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2019 at 5:41 AM, colomban said:

இலங்கை முஸ்லீம்களுகென ஓரு தனியான கலாச்சாரம் இருந்தது.
மேலே சசி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்கள் அரபி கலாச்சரத்தை பின்பற்ற போனதாலெயே இந்த விளைவு வந்தது.

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் இருக்கும் உம்மிச்சி பள்ளி வாசலில் சிறுவயதில். நான் சுகவீனப்பட்டால் அம்மம்மா என்னை தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்கள் ஏதோ ஒதி பிள்ளை பயந்துள்ளான் என முகத்தில் தண்னீர் தெளித்து நூல் போட்டு அனுப்புவார்கள். அவ்வளவு தமிழ் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்தார்கள். 

இப்பொழுது பிறந்தநாள்/புதுவருட‌ வாழ்த்து கூறுவது கூட ஹராம் என்கிறார்கள். 

லெப்பை ஒருவர்  துவா கேட்டு ஓதி, கிண்ணம் ஒன்றில் தண்ணீரை தந்து அதில் ஒரு ஆணியையும் போட்டு மருந்தாக குடிக்கச்சொல்லுவார். எங்கள் வீட்டில் இது தான் முதல் மருந்து... 7ஆம் நம்பர் வீட்டில் இருந்த எங்களுக்கு, 4 ஆம் வீட்டில் இருந்த லெப்பை தான் ஆசான் , மருத்துவன் , நல்வழிகாட்டி எப்படி எல்லாமே . 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2019 at 8:24 PM, goshan_che said:

அஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு சசி பாய்,

உங்கள் பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு கண்டேன்.

முன்னெப்போதோ என்னுடன் ஏற்பட்ட கடுப்பில், என்னை நடுநிலையாளர் என பழித்திருந்தீர்கள்.

அல்லாவின் விளையாட்டை பார்த்தீர்களா, இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்த எனக்கு, இது இஸ்லாத்தின் பிழை அல்ல அரேபியஸ்தின் பிழை எண்டு blame deflect செய்த நீங்கள் தரும் பட்டம் “நடுநிலைவாதி”.😂

சரி எனி விடயத்துக்கு வருவோம்.

நீங்கள் புதிதாக கற்பனை செய்திருக்கும் அரேபியிசத்தின் உண்மை பெயர் வஹாபியிசம். இதுவே உண்மையான இஸ்லாமிய வழி என்றும், நீங்கள் கூறிய 40 வருடத்துக்கு முந்திய கந்தன் கருணை பார்த்த முறை தவறானது என்றும் கடந்த 25-30 வருடங்களில் பலத்த போதனை மூலம் மாற்றல் ஆகி விட்டது.

நீங்கள் சொல்வது இருந்தவர்கள் இவர்கள் பார்வையில் முஸ்லீம்களே இல்லை. அப்படியானவர்கள் உங்கள் ஆட்டோகிராபில் இருக்கலாம், ஆனால் இன்றைய இலங்கையில் மிக குறைவு.

தவிர வஹாபியிசத்தின் அத்தனை கடுபிடிகளும் நேரடியாக குரான் அல்லது ஹதீஸ் ஆதாரத்துடந்தான் வருகிறது. ஆகவே இந்த பொறுப்பு கூறலில் இருந்து இஸ்லாம் தப்பிக்கவியலாது.

தவிர, நீங்கள் கற்பனை செய்தது போல் ஹவுஸ் மெய்ட் இன் மெக்சியில் தொத்தியபடி வரவில்லை வஹாபியிசம். சவுதியில் இருந்து பணம் ஆறாக பாய்கிறது. அல்லும் பகலும் மெளவிகள் மண்டையை கழுவுகிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

அல்லாட காவல்.

கருத்து எழுதுவதற்கு முதல் போதையில் இருந்து வெளியே வாங்க பாஸ்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேணுமோ அதை எல்லாம் தாண்டி ...பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு என்று எழுதினீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது உங்கள் "இண்டெர்லேக்ட்" தராதரம்...  🤣
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.