Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசித்திரத்தின்மேல் விசித்திரம்: அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தும் கணவன்… விவாகரத்து கோரிய மனைவி; யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் முன்னிலையாகினார். கணவன் சார்பில் சட்டத்தரணி செல்வி இராயப்புவின் அனுசரணையில், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய சட்டத்தரணி எஸ்.தியாகேந்திரன் முன்னிலையாகினார்.

இரு தரப்பு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, பகிரங்க மன்றத்தில் அந்தரங்க விவகாரங்கள் பேசப்படுவதால், விசாரணையை இடைநிறுத்தி, சமாதான அறையில் வழக்கை விசாரித்தார் நீதிவான்.

பெண் சார்பில் பிரிமனை பங்கு ஆரம்பத்தில் கோரப்பட்டபோதும், பின்னர் சமாதானமான விவகாரத்தை மட்டும் கோரினார். இரு தரப்பு வாதத்தின் பின்னர், விவாகரத்து வழங்கப்பட்டது.

https://www.pagetamil.com/85637/

  • கருத்துக்கள உறவுகள்

விவாகதின்  முக்கிய அம்சமான உடல் உறவை ஒரு சாரார் (மனைவி) சகித்து கொள்ளமுடியாத நிலையை அடைந்திருக்கிறார் , அந்த உடல் உறவே மறு  சாராருக்கு  (கணவன்) வேண்டி இருப்பதால், இதில் விவாகம் மீட்கப்பட முடியாத நிலையை அடைந்திருக்கிறது என்பது இலகுவாக நிரூபணம் ஆகிறது.

இதில் நீதிபதியின் perception உம் முக்கியமானது, உணர்வுகளோடு வாதாடும் உள்ள வழக்கை, sensitive ஆக நடத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

  • கருத்துக்கள உறவுகள்

இணையின் மனதை புரிந்துகொள்ளாத உறவு வீண்.

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für சின்ன வெங்காயம்

Ähnliches Foto

இதுக்குத்தான்... சின்ன வெங்காயம், முருங்கைக் காய்... போன்றவற்றை,
வீட்டில்,  அடிக்கடி சமைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.

சொந்தக் காசிலை.... சூனியம் வைத்து விட்டு... 
நீதிமன்றத்துக்கு எல்லாம் போக வேண்டி வந்திராது  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சமையலில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்..☺️

Bhagyarajs_famous.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

முன்புதான் வழி சொல்லுவது சிரமம் பாஞ்ச் ...... இப்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி கே.கே. எஸ் வீதியால் இரண்டெட்டு விசுக் விசுக்கென்று  எட்டி நடந்தால்  மல்லாகம் கோர்ட்தான்.......!  🏃‍♀️

பி.கு: அவசியம் போகத்தான் வேண்டுமா....அந்தாள் ஏதோ ஆடி அமாவாசை மாதிரி ஆண்டுக்கு ஒருக்காத்தானே வந்து போறார்.சும்மா வந்துட்டு போகட்டுமே......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பி.கு: அவசியம் போகத்தான் வேண்டுமா....அந்தாள் ஏதோ ஆடி அமாவாசை மாதிரி ஆண்டுக்கு ஒருக்காத்தானே வந்து போறார்.சும்மா வந்துட்டு போகட்டுமே......!   🤔

சும்மா எங்கடை பண்பாட்டைக் கெடுக்கக்கூடாது சுவியரே! ஆடிக்கழைப்பது எங்கள் மரபுவழி. அதனை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை சொல்வதுதான் நல்வழி. 🤗

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

இந்தப் பெண் மல்லாகம் கோட்டுக்குப் போக யாராவது வழிகாட்டுங்கப்பா..... 😎

 

 

மாரியத்தின்  பிள்ளை கணக்கு ..... உணவு கணக்கு .... கணவரின் வருகை கணக்கு 
ஒன்றுமே ஒன்றோடு ஒன்று பொருந்துது இல்லையே?
எனக்கு என்னமோ உள்ளூரில் ஒரு மைனர் குஞ்சு வாழ்ந்து வருகிறார் என்றுதான் தோன்றுகிறது. 

சரியான கல்வி அறிவு 
பொது அறிவு 
என்பது இல்லாமையால்  காமம்   பெண்  வாழ்க்கை என்பது பல ஆண்களால் புரியப்படாமலே போய்விடுகிறது.

நீங்கள் ஒரு நாளைக்கு 3 தரம் உடல் உறவு வைத்து காணும் இன்பத்தைவிட 
300 மடங்கு மேலான இன்பத்தை ஒரு வாரத்தில் 3 முறை வைத்தே காணலாம்.

இயந்திரதனத்துக்கும் இச்சைக்கு உள்ள இடைவெளி தெரியாமல் ஒரு சமூதாயம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. 

12 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்குத் தான் யோனிப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லுறது.

 

12 hours ago, புங்கையூரன் said:

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

துல்பனிட்ட வாங்கிக் கட்டிறதெண்டே....முடிவு பண்ணியாச்சிப் போல....!😀

 

23 minutes ago, tulpen said:

 

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

வந்துட்டான்யா வந்துட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

 

என்னப்பா இந்த பொருத்தம் செய்முறையில்  (practically) பாக்கிறேல்ல தானே! 😂

அதைத்தானே இப்ப எங்கடையள் செய்ய வெளிக்கிட்டினம். ஆறுமாதம் ஒரு வரிசமெண்டு ஒண்டாய் இருந்து யோனிப்பொருத்தம் பாப்பினம். சரி வரேல்லையெண்டால்  வெட்டிவிட்டுட்டு  வேறை ஒராளோடை யோனிப்பொருத்தம் பாத்துக்கொண்டு திரிவினம்.😜

யோனிப்பொருத்தம் பாத்து செய்யிற கலியாணங்கள் விவாகரத்து வரைக்கும் வாறது வலு குறைவு.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதைத்தானே இப்ப எங்கடையள் செய்ய வெளிக்கிட்டினம். ஆறுமாதம் ஒரு வரிசமெண்டு ஒண்டாய் இருந்து யோனிப்பொருத்தம் பாப்பினம். சரி வரேல்லையெண்டால்  வெட்டிவிட்டுட்டு  வேறை ஒராளோடை யோனிப்பொருத்தம் பாத்துக்கொண்டு திரிவினம்.😜

யோனிப்பொருத்தம் பாத்து செய்யிற கலியாணங்கள் விவாகரத்து வரைக்கும் வாறது வலு குறைவு.:cool:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள்?

50-100 வருடம் முன்பு யோனி பொருத்தம் பார்க்காத கலியாணங்கள் விவாகாரத்து ஆக்கிக்கொன்டு இருந்தனவா? 

8 hours ago, Maruthankerny said:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை சொல்கிறீர்கள்?

50-100 வருடம் முன்பு யோனி பொருத்தம் பார்க்காத கலியாணங்கள் விவாகாரத்து ஆக்கிக்கொன்டு இருந்தனவா?

 2000 வருடங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காதல் உள்ளது. 

காதல் தமிழரின்  மரபு

பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய 'காதல் வாழ்வை', களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு 'அவர்களின் இல்லற வாழ்வு', கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை சார்ந்த நிகழ்வுகளும், அதன் கதாப்பாத்திரங்களும் அகப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றது

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.