Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.jpg

BMW காருக்கு ஆசைப்பட்டு பல இலட்சங்களை பறிகொடுத்த குடும்பத்தினர் – யாழில் சம்பவம்!

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாயை குடும்பம் ஒன்று இழந்துள்ளது.

யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி நின்று பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ் செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது, சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள், கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் மர்ம கும்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டு உள்ளனர்.

இதனையடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர், திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபாய் பணத்தினை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பண பரிசிலும், காரும் இலங்கை வந்து விட்டது எனவும் அதனை பெற்றுகொள்ள கொழும்பு வெள்ளைவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூகேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும், காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அத்துடன், வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பு தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும், திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை.

தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

இதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது, உடைந்த கண்ணாடி போத்தல்கள், பஞ்சு, நாணய தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம், நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன், ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும், அது தொடர்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

81020509_3909112472447530_6800583188499398656_n.jpg

http://athavannews.com/பி-எம்-டபிள்யூ-காருக்கும/

பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று.

யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும் , மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.

அந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு , லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும்  ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது , சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள் , கார் ,  காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை  மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று  அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் மர்ம கும்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர் , திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபா பணத்தினை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பணப் பரிசிலும் , காரும் இலங்கைக்கு வந்து விட்டது எனவும் அதனை பெற்றுக்கொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் , காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அத்துடன் , வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும்,  திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை. தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது , குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது , உடைந்த கண்ணாடி போத்தல்கள் , பஞ்சு , நாணய தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன் போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம் , நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன் , ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும் , அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

https://www.virakesari.lk/article/72219

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாற்றுகிறவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றி பிழைக்கும் பேர்வழிகள் இவ்வாறுதான் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

குருவிமாதிரிச் சேர்த்து, ஒரேயடியாய் அள்ளிக் குடுத்து விட்டு நடுத்தெருவில் ஒரு கண சபலம்.

  • கருத்துக்கள உறவுகள்

31 இலட்ச ரூபா அண்ணளவாக 13 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை இழந்துள்ளார்கள். லண்டனில் பல வருடங்கள் வசிக்கும் தமிழர்களே பலர் 6ஆயிரம், 7ஆயிரம் ஸ்ரேலிங் பவுணுக்கு பாவித்த கார் வாங்கி ஓடுகிறார்கள். இவர்கள் இலவசமாக கிடைக்கும் பரிசு காருக்கு 13 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்கள் கொடுத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://tenor.com/cdn-html/images/76c9e240571b0edfb07d88fb515d3314/tenor.gif

அப்பாவிகளை தேடி கண்டு பிடித்து நாமத்தை சாத்துகிறார்களப்பா..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

https://tenor.com/cdn-html/images/76c9e240571b0edfb07d88fb515d3314/tenor.gif

அப்பாவிகளை தேடி கண்டு பிடித்து நாமத்தை சாத்துகிறார்களப்பா..😢

31 லட்சத்தை கடன் வாங்கி தொலைத்தவர்கள் அப்பாவிகள் அல்ல, பேராசை கொண்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இலங்கையில் பரவலாகஎல்லோருக்கும் வந்தது ஆனால் ஏமாந்தவர்கள் இவர்களாகத்தான் இருக்கு போல

அண்மையில் இலங்கை சிம் ஒன்றை பாவிக்கும் எனது நண்பனுக்கு ஒரு கோல் உங்களது சிம்முக்கு ரூபாய் 100000 ரூபாய் விழுந்துள்ளது அதை நீங்கள் பெறவேண்டுமாக இருந்தால் நாங்கள் தரும் வங்கி இலக்கத்துக்கு உடனடியாக ரூபாய் 20000 வைப்பிலிடுங்கள் என்று சொன்னார்கள் நண்பனோ எனக்கு அழைத்து கேட்டான் . ஏன்டா மச்சான் என்ட சிம்முக்கு காசு விழுந்திருக்கு உடனடியாக 20000 ரூபா அனுப்ப சொல்கிறார்கள் என நான் சொன்னது மச்சான் அந்த ஒரு லட்சத்தில 20000 ரூபாயை எடுத்திட்டு மிச்சம் 80000 ரூபாய அனுப்ப சொல்லி உன்ட எக்கவுண்ட் நம்பர தரவா என கேழு என்று சொன்னன் மீண்டும் வந்த கோலுக்கு நண்பன் அப்படி சொல்ல ஆட்கள் கோல் எடுப்பதில்லையாம். 

ஆனா; இப்படி இலங்கையில் ஏமாந்தவர்கள் கனபேர் இருக்கிறார்கள் இந்த ஒரு லட்சத்துக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இது எங்கட ஆக்களாகத்தான் இருக்குமென்று. முன்பு கள்ளமட்டை போட்டவர்கள் இப்போது Jaffna போய் அங்குள்ளவர்களை நாடிபிடித்து பார்த்து நாருக்கி என்ன விருப்பம் என்று பார்த்து custom made scam ஐ செய்கிறார்கள் போலும்

13 hours ago, ragaa said:

நான் நினைக்கிறேன் இது எங்கட ஆக்களாகத்தான் இருக்குமென்று.

உங்கட ஆக்கள் இப்படியும் செய்யினம் என்றா கொஞ்சம் கவனமா தான் இருக்கோணும்.

😅

On 12/31/2019 at 7:50 PM, கற்பகதரு said:

31 லட்சத்தை கடன் வாங்கி தொலைத்தவர்கள் அப்பாவிகள் அல்ல, பேராசை கொண்டவர்கள்.

பேராசை பெரும் தரித்திரம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.