Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்

ambika-satkunanathan-070320-seithy.jpg

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் தலைவர் உட்பட நால்வர் பெண்கள். தமிழர் அம்பிகா மாத்திரமே. அவர் இந்த ஆணக்குழுவின் இரண்டாவது ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தின் மத்தியிலேயே அதனை இடைநடுவில் துறந்திருக்கின்றார்.தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கம் இரண்டு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமையை ஆட்சேபித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அவர் பதவி விலகியுள்ளார்.பதவி துறந்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் களமிறங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-மனித-உரிமைகள்-ஆணை-3/

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகா வீர தமிழ் பெண்ணா..? அரசியல் நாடகம் நடக்கிறதாம் கட்சிக்குள்ளேயே குத்து வெட்டு ஆரம்பம்..!!

AMBIKA.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாா்பில் நாடாளுமன்ற தோ்தலில் மானிப்பாய் தொகுதியில் போட்டியிடுவதற்கு சந்தா்ப்பம் கிடைத்தமையினை தொடா்ந்து மனித உாிமைகள் ஆணைக்குழு உறுப்பினா் பதவியை அவா் இராஜினாமா செய்துள்ள நிலையில் ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலின் அனுசரணையில் இருந்து இலங்கை விலகியதால் தன் பதவியை துறந்த வீரத்தமிழ் பெண் அம்பிகா என்று போலியாக அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த அம்பிகா நேற்று தனது வேட்பாளர் ஆசனம் உறுதியானதை அடுத்து தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்து கொண்டார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை வகித்திராத கட்சிக்கு அப்பாற்ப்பட்ட ஒருவரான அம்பிகாவின் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் கடும் அதிருப்திக்கு இருக்கும் நிலையில் இவ்வாறான போலி பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பது பலரிடையிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://jaffnazone.com/news/16251

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்

 

இது தான் இன்றைய கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியல்  விளையாட்டு

அவர் விலகியது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில்  நிற்பதால்.

ஆனால் ஏதோ தமிழர்களுக்கு  தியாகம்  செய்ய  விலகியது போல தேர்தல் நேரம்  கதை  விடுகிறார்கள்

இது தமிழினத்தை  எங்கே  கொண்டு  போய் விடப்போகிறதோ????????

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ராதிகா குமாரசாமி...அமைச்சுப்பதவியும் ரெடி..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அடுத்த ராதிகா குமாரசாமி...அமைச்சுப்பதவியும் ரெடி..

ராதிகா குமாரசாமி அமைச்சராக இருக்கவுமில்லை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை. அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேலை செய்த பல்நாட்டவருள் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

 

இது தான் இன்றைய கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியல்  விளையாட்டு

அவர் விலகியது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில்  நிற்பதால்.

ஆனால் ஏதோ தமிழர்களுக்கு  தியாகம்  செய்ய  விலகியது போல தேர்தல் நேரம்  கதை  விடுகிறார்கள்

“ஏதோ தமிழர்களுக்கு  தியாகம்  செய்ய  விலகியது போல”  -செய்தியில் அப்படி காட்டத்தக்கதாக எதுவும் இல்லையே? 

3 hours ago, விசுகு said:

இது தமிழினத்தை  எங்கே  கொண்டு  போய் விடப்போகிறதோ????????

கவலைப்படும்படி எதுவும் நடக்காது - முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து விட்ட ஆயுதப்போராட்டம் போன்றவை தான் கவலைப்படும் அளவுக்கு ஆபத்தானவை. 

எதிர்கால நிகழ்வின் பாதகங்களை அறிய மறுக்கும் பொதுமக்கள், கற்றறிந்தவர்கள் எதிர்காலத்தை புரிந்துகொண்டு எடுக்கும் நடவடிக்கைகளை வெறுக்கிறார்கள். ஆனால் எதிர்காலம் நிகழ்காலமாவதை நாம் முள்ளிவாய்க்காலில் கண்டோம். வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற பொதுமக்களின் அணுகுமுறைக்கும், அந்த மக்களை காப்பாற்ற முயலும் நீலன் திருச்செல்வம், ராதிகா குமாரசாமி, இந்த அம்பிகா சற்குணநாதன், மதியாபரணம் சுமேந்திரன் ஆகியோரின் அணுகுமுறைக்கும் இடையே பாரிய இடைவெளி உண்டு. இறுதியில் மக்களின் விருப்பமே மேலோங்கும் - அது முள்ளிவாய்க்காலாக இருந்தாலும் கூட. டார்வின் சொன்னது போல தக்கன பிழைக்கும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கற்பகதரு said:

ராதிகா குமாரசாமி அமைச்சராக இருக்கவுமில்லை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை. அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேலை செய்த பல்நாட்டவருள் ஒருவர்.

அரசியல்ல அடிப்படை அறிவு இருக்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

“ஏதோ தமிழர்களுக்கு  தியாகம்  செய்ய  விலகியது போல”  -செய்தியில் அப்படி காட்டத்தக்கதாக எதுவும் இல்லையே? 

கவலைப்படும்படி எதுவும் நடக்காது - முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து விட்ட ஆயுதப்போராட்டம் போன்றவை தான் கவலைப்படும் அளவுக்கு ஆபத்தானவை. 

எதிர்கால நிகழ்வின் பாதகங்களை அறிய மறுக்கும் பொதுமக்கள், கற்றறிந்தவர்கள் எதிர்காலத்தை புரிந்துகொண்டு எடுக்கும் நடவடிக்கைகளை வெறுக்கிறார்கள். ஆனால் எதிர்காலம் நிகழ்காலமாவதை நாம் முள்ளிவாய்க்காலில் கண்டோம். வரும்போது பார்த்துக்கொள்வோம் என்ற பொதுமக்களின் அணுகுமுறைக்கும், அந்த மக்களை காப்பாற்ற முயலும் நீலன் திருச்செல்வம், ராதிகா குமாரசாமி, இந்த அம்பிகா சற்குணநாதன், மதியாபரணம் சுமேந்திரன் ஆகியோரின் அணுகுமுறைக்கும் இடையே பாரிய இடைவெளி உண்டு. இறுதியில் மக்களின் விருப்பமே மேலோங்கும் - அது முள்ளிவாய்க்காலாக இருந்தாலும் கூட. டார்வின் சொன்னது போல தக்கன பிழைக்கும்.

உங்களுடன் பேசிப்பலனில்லை

சும்மா  கடுப்பேத்த மட்டுமே எழுத உங்களைப்போல்   நேரத்தை எனக்கு ஒதுக்கமுடியவில்லை

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா குமாரசாமியை யாரென்றும் தெரியுமோ?

 

 

(அம்பிகா சற்குணநாதன் கூட்டமைப்பின் வேட்பாளராம்.

பாதி கதிர்காமரும் மீதி நீலன் திருச்செல்வமும் கலந்து செய்த கலவை அம்மணி.

சிங்கள விசுவாசத்தில் அம்மணிக்கு நிகர் அம்மணிதான்..

குறிப்பாகச் சொன்னால் சுமந்திரனின் பெண்பால் வடிவம்.

ஒரு சுமந்திரனையே சமாளிக்க முடியாமல் தமிழினம் தள்ளாடும் போது இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை- )   இது முகநூலில் பார்த்தது...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அரசியல்ல அடிப்படை அறிவு இருக்கோ...

அரசியல் அடிப்படை அறிவை நீங்கள் பெற உங்களுக்கு அடிப்படை தமிழ் அறிவிருப்பது தேவை அல்லவா?

4 hours ago, alvayan said:

அடுத்த ராதிகா குமாரசாமி...அமைச்சுப்பதவியும் ரெடி..

 

3 hours ago, கற்பகதரு said:

ராதிகா குமாரசாமி அமைச்சராக இருக்கவுமில்லை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை. அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேலை செய்த பல்நாட்டவருள் ஒருவர்.

அடிப்படை தமிழ் அறிவை பெற்றுக்கொண்ட பின் மேலே உள்ளவற்றை படித்து பாருங்கள்,  விளக்கம் கிடைக்க வாழ்த்துகள்.😄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து விட்ட ஆயுதப்போராட்டம்

பல தசாப்தங்களாக நடந்த இன அழிப்பை வைத்து அரசியல் நடத்திய நமது தமிழ்த் தலைமைகள்: சர்வதேசத்திடம் எடுத்துச்  சென்று தடுக்க முயலவில்லை, நிஞாயம் கேட்கவில்லை. மூடிய திரைக்குள் நடந்த இனவழிப்பை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து இலங்கை அரசின் முகத்திரையை கிழித்தது முள்ளி வாய்க்கால். தாம் செய்தது தவறு என காலந்தாழ்த்தியும் உலகம் உணர வைத்தது முள்ளிவாய்க்கால்.  இன்று அரசை ஓடி ஒழிய வைத்தது முள்ளி வாய்க்கால். முள்ளிவாய்க்காலில் முடிந்த ஆயுதப்போராட்டம் சும்மா முடியவில்லை, அதற்கு இன்னோரு வழியைத் திறந்து வைத்தே முடிந்தது. அதையே மூடிவிடும் சாமானியர்கள் நமது தலைவர்கள். இவர்களை நம்பி தமிழினம்?

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அடிப்படை அறிவை நீங்கள் பெற உங்களுக்கு அடிப்படை தமிழ் அறிவிருப்பது தேவை அல்லவா?`

எந்தப் பள்ளிக்கூடத்தில் தமிழ் படித்த னீங்கள்...பரீட்சை முடிந்தபின்  பேப்பர் எடுத்து திருத்திற பழக்கம்.

அடிப்படை தமிழ் அறிவை பெற்றுக்கொண்ட பின் மேலே உள்ளவற்றை படித்து பாருங்கள்,  விளக்கம் கிடைக்க வாழ்த்துகள்.😄

அரசியல் கதைக்க தமிழ் வேணுமென்றால் குடை பிடித்துக்கொள்ள முன்னால் திரியிற அய்யாமாரே அரசியல் செய்ய முடியாதே...தேர்த்லிலும் நிற்கமுடியாதே..

16 hours ago, கிருபன் said:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேறியமையை ஆட்சேபித்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து அவர் பதவி விலகியுள்ளார்.

1: வேறு ஆங்கில ஊடகங்களில் இவ்வாறு காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

2. http://www.hrcsl.lk/ : என்ற தளத்தில் எதுவுமே தமிழில் இல்லை. 'விரைவில்' என உள்ளது. தமிழ் மொழிக்கு உரிய இடத்தை தான் 7 வருடங்கள் சேலை செய்த அமைப்பில் செய்ய முடியாதவர் என்ற பெருமையை கொண்டவராகின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎7‎/‎2020 at 2:53 PM, விசுகு said:

 

இது தான் இன்றைய கூட்டமைப்பின் சுத்துமாத்து அரசியல்  விளையாட்டு

அவர் விலகியது கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில்  நிற்பதால்.

ஆனால் ஏதோ தமிழர்களுக்கு  தியாகம்  செய்ய  விலகியது போல தேர்தல் நேரம்  கதை  விடுகிறார்கள்

இது தமிழினத்தை  எங்கே  கொண்டு  போய் விடப்போகிறதோ????????

உண்மை தான் இந்த பதவியில் இருக்கும் போதே ஒன்றும் செய்து கிழிக்கவில்லை ...இதிலை வேற தேர்தலில் நின்று தமிழருக்கு சேவை செய்யப் போறாராம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

உண்மை தான் இந்த பதவியில் இருக்கும் போதே ஒன்றும் செய்து கிழிக்கவில்லை ...இதிலை வேற தேர்தலில் நின்று தமிழருக்கு சேவை செய்யப் போறாராம் 

அதைவிட ஆபத்தும் அநியாயமும்

தமிழர் நலனுக்காக பதவியை தூக்கி  எறிந்தவர்  என்ற திமுக வின்  வழிப்பிரச்சாரம்

தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டு

தேர்தலில்  இவரது பெயர் கூட்டமைப்பால் வெளியிடப்படும்வரை

அப்பதவியில்  ஒட்டிக்கொண்டிருந்து விட்டு....???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்வி எண்டுறாங்கள்!!!!!!
உவவுக்கு எத்தினை வயதாம்?😎

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குத்தி முறிவான் தீர்ப்பு எங்கள் விரல்களில் தானே இருக்குது அதாவது ஒட்டுத்தான் வாங்கோ எல்லாரும் சேர்ந்து புது யுகம் படைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டைய புடிடா.. அடுத்து சச்சி 'வீரத் தமிழ் இந்துன்'னு சொல்லிட்டு வருவான்.. ஒரே அடியா அடிச்சு காலி பண்ணிறனும்..

(படம் இணைக்க அனுமதியில்லை இன்னமும்.அதனால் கீழ் லிங்கை அமத்தவும்👇 அல்லது யாரும் இணைத்துவிடவும்)

https://www.facebook.com/photo.php?fbid=1338571516247000&set=a.101543176616513&type=3

23231534_1338571516247000_88812934418801

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

செல்வி எண்டுறாங்கள்!!!!!!
உவவுக்கு எத்தினை வயதாம்?😎

நல்ல புரோக்கரா பார்த்து பிடித்தால் நேரிலேயே கேட்டு ஏற்பாடு செய்வாரே? 😄

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.