Jump to content

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"


Recommended Posts

Image may contain: 1 person, closeup
Image may contain: 2 people, people standing, tree and outdoor
Image may contain: 1 person
Image may contain: 2 people, people standing
பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani Kandan.
 

"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவுகச்சியா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி ப்ரேம் ரஞ்சன் கன்வார். இவரது பகுதியில் விவசாயிகள் மிகப் பலரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இருவருமே கூட ஒரு வாழை விவசாயி தான். அடிக்கடி வெள்ளம் பாதிக்கப்படும் பகுதி இது என்பதால் இளம் வாழைக் கன்றுகள் தண்ணீர் தேங்கி அழுகிப் போவது ஆண்டுதோறும் தொடர்கதையாகவே நடந்து வந்தது. அடிக்கடி பெருமளவில் சூறைக் காற்றும் இங்கு வீசும். இதனால் பெரிய மரங்கள் காற்றில் வீழ்ந்து போக விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே என்றும் இருந்து வந்தது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் ஏழ்மையிலும் சோகத்திலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

ப்ரேம் ரஞ்சன் மகன் கோபால் சிறுவயது முதலே ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு பள்ளிப் படிப்போடு புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வந்தார்.வாழை விவசாயிகளின் துயர் துடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார் கோபால்.
துள்சிபூரிலுள்ள மாடல் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற கோபால், 2013-2014-இல் 'வாழை பயோசெல்' கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு இன்ஸ்பையர்டு விருது கிடைத்தது. அந்த ஆண்டும் வழக்கம்போல் அவரது கிராமத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.அப்போது கண்ணீர்க் கடலில் மூழ்கித் திளைத்த வாழை விவசாயிகளுக்குக் கைகொடுத்தது கோபாலின் கண்டுபிடிப்பு.

வெள்ளத்தால் அழிந்து போன இளம் வாழைக் கன்றுகளின் உயிர்த் திசுக்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பெரிய மரங்களை மீண்டும் இளமையாக்கி அதிக மகசூலைத் தரும் யுக்தி ஒன்றைத் தனது நுண்அறிவு, வேளாண் அனுபவம் மூலம் உருவாக்கி வாழை சாகுபடியில் புரட்சி செய்தார் கோபால். இந்தத் தொழில் நுட்பத்துக்குதான் 'வாழை பயோசெல்' எனப் பெயரிடப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தன்னால் படிக்கவைக்க இயலாது என்று கோபாலின் தந்தையும் விவசாயியுமான பிரேமரஞ்சன் குமார் கூறினார். ஆனால், கோபால் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அரசின் உதவித்தொகை பெற்று படிப்பதற்கான மற்றும் கண்டுபிடிப்புகளை தொடர்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் பிரதமர் மோடியை சந்தித்தார் கோபால்.

இதன் மூலம் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷனுக்கு அனுப்பப்பட்டார் கோபால். அங்குதான் ஆறு புதிய கண்டுபிடிப்புகளை அவர் சாத்தியமாக்கினார்.

இவருடைய நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பம் குறித்து அமெரிக்க "நாசா" கழகத்துக்குத் தெரிய வர 3 முறை இவருக்குப் பணியாற்ற வாய்ப்பளித்து, அழைத்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இது போன்று இதுவரை 8 நாடுகள் இவரை தொடர்பு கொண்டு அழைப்புகளை விடுத்தன. அவற்றையும் இவர் புறக்கணித்து விட்டார். "நான் கோடீஸ்வரன் ஆவது முக்கியமல்ல, எனக்கு இந்திய விவசாயிகள்தான் முக்கியம். எனது தொழில் நுட்பம் குறித்து இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது. இந்திய அளவில் விவசாயிகளின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயத்தில் ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள் தங்கள் பகுதி விவசாய பிரச்னைகளை புரிந்து கொண்டு என்னிடம் பகிர்ந்தால் எனது கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாட்டுக்கு உதவுவேன்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த தன்னலமற்ற வாலிபர்.

19 வயது இளம் விஞ்ஞானி கோபால், 'நாசா' மூன்று முறை வழங்கிய ஆய்வுப்பணி வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டதோடு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பையும் நிராகரித்துவிட்டார். இந்த மறுப்புகளுக்கு அவர் கூறும் ஒற்றைக் காரணம்:"தாய்நாட்டில் சேவைபுரிவதே என் லட்சியம்."

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 100 குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற மகத்தான குறிக்கோளை மனதில் கொண்டிருக்கிறார் கோபால். இதற்கான பணிகளை 2019-இல் தொடங்கியும் விட்டார்.

இதுவரை 8 சிறுவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றிருக்கும் கோபால், தற்போது டேராடூனில் உள்ள அரசு கிராஃபிக் ஈரா இன்ஸ்டிட்யூட்டின் சோதனைக் கூடத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். ஜார்கண்டில் ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்து, அங்கு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தற்போது, உலகின் 30 ஸ்டார்ட்-அப் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்கிறார் கோபால். அபுதாபியில் 2020 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள உலகின் மிகப் பெரிய அறிவியல் கண்காட்சியில் தலைமை உரையாற்றப் போகிறவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கண்காட்சியில் உலக அளவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

வாழைப்பழச் சாறு மூலம் ஹேர் டை உருவாக்குவது, காகிதக் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதலானவை கோபாலின் தனித்துவமான கண்டுபிடிப்புகள்.

5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தரக்கூடிய 'ஜி ஸ்டார் பவுடர்', 50 ஆயிரம் வால்ட் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய 'ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்', சூரிய சக்தியையும் காற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட 'சோலார் மைல்' எனும் இவரது கண்டுபிடிப்பு மூலம் காற்று 2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால்கூட மின்சாரத்தை சேமிக்க முடியும்.

இவரது கண்டுபிடிப்புகளில் 'கோபாலசகா' மிகவும் கவனத்துக்குரியது. இது அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படக்கூடிய ரேடியேஷனை குறைக்கவல்லது. அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ரேடியேஷன் நூறு ஆண்டுகளுக்கு தாக்கத்தைத் தரும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் அணு ஆயுத ரேடியேஷனை இந்தக் கண்டுப்பிடிப்பின் மூலம் அகற்றிடலாம்.

டயப்பர் தயாரிப்புகள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், டிஷ்யூ பேப்பர், ஹேர் டை என பல விதங்களில் பலன் தருகிறது இவரது 'பனானா நானோ ஃபைபர் அண்ட் கிறிஸ்டல்' கண்டுபிடிப்பு.

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின் ஒற்றை மந்திரச் சொல் இதுதான்:"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"

கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் தன் தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்போர்
எல்லையில் கடுங்குளிரில் இத்தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையாகச் சொல்லலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

சுவை
இவர் ஒரு பிராமணராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி.

இல்லாவிட்டால் பல இடங்களில் இவரை தட்டிக் கழிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

மேற்குலகின் அபிவிருத்தி development (இவரின் பிரத்தியேக துறையில்), ஒழுங்கு discipline  போன்றவற்றை பெறுவதினூடாக / கற்பதனூடாக  தனது மக்களுக்கு மிக அதிகமாகவே இவரால் உதவ முடியும். 

(கட்டுரையில் முக்கியமான பல விடயங்கள் தவறவிடப்பட்டுள்ளதாகப் படுகிறது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின்

 

8 hours ago, சுவைப்பிரியன் said:

மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

மேட்ற்குலகு இப்படி இருப்பவர் தனது திறமை, விட முயதர்சி, உழைப்பு மூலம் சமூகம் மற்றும் நாட்டிற்கு சேவைசெய்வதை வரவேற்படகுடன், அவரின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவரின் உழைப்பை அர்ப்பணித்து சேவை செய்யுமாறு அவரை ஒரு போதுமே எதிர்பார்க்காது.

கிந்தியாவில், எத்தனையோ பண முதலைகள் அர்ப்பணிப்பை செய்யாது, ஊழல்களில் தோய்ந்து இருக்கும் போது, வசதியில் குறைவான ஒருவரை அர்பணிக்குமாறு எதிர்பார்ப்பது சமூக குறைபாடு என்று தான் கருத வேண்டி இருக்கிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 

நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

 

 

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படிப்புக்காவது நாசாவுக்கு போயிருக்கலாம்.
போனால் சில நேரம் திரும்பி வரமாட்டார் கூகிள் பிச்சை போல 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎19‎/‎2020 at 11:27 PM, Kapithan said:

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

உண்மைதான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் துணிவும் நாட்டுப்பற்றும் பாராட்டிடப்படவேண்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்?

நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே?

உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை?

விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பிகு: இங்கே ஒரு கள உறவு, இதை வாசித்து விட்டு அவராகவே தன்னை இனம் காட்ட விரும்பினால் ஓகே, அவரின் ஒன்று விட்ட சகோதரன், ஏ எல் பரீட்சையில் 3 ஏ, 1பி எடுத்து மருத்துவ கல்லூரி அனுமதி வந்த மறுநாள் புலிகளோடு இணந்து யாழ் கோட்டை யுத்தத்தில் வீரச்சாவடைந்தார்.

இப்படி எத்தனையோ அற்புதமான அறிவாளிகளும், புத்திசாலிகளும் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தை மறந்து, போராளிகளான வராலாறு நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்படி கண்ணுக்கு முன் நடந்த போரில் பங்கெடுகாமல் கொழும்புக்கு பின் வெளிநாட்டுக்கு வந்த நாங்கள், தமிழ் ஈழம் என்றொரு நாடு இருந்தால் நாங்களும் வெட்டிக் கிழித்திருப்போம் என்று எழுதுவதை போல அந்த மாவீரர்களின் தியாகத்தை வேறு யாரும் கொச்சைப் படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 11:42 PM, goshan_che said:

அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்?

நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே?

உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை?

விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பிகு: இங்கே ஒரு கள உறவு, இதை வாசித்து விட்டு அவராகவே தன்னை இனம் காட்ட விரும்பினால் ஓகே, அவரின் ஒன்று விட்ட சகோதரன், ஏ எல் பரீட்சையில் 3 ஏ, 1பி எடுத்து மருத்துவ கல்லூரி அனுமதி வந்த மறுநாள் புலிகளோடு இணந்து யாழ் கோட்டை யுத்தத்தில் வீரச்சாவடைந்தார்.

இப்படி எத்தனையோ அற்புதமான அறிவாளிகளும், புத்திசாலிகளும் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தை மறந்து, போராளிகளான வராலாறு நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்படி கண்ணுக்கு முன் நடந்த போரில் பங்கெடுகாமல் கொழும்புக்கு பின் வெளிநாட்டுக்கு வந்த நாங்கள், தமிழ் ஈழம் என்றொரு நாடு இருந்தால் நாங்களும் வெட்டிக் கிழித்திருப்போம் என்று எழுதுவதை போல அந்த மாவீரர்களின் தியாகத்தை வேறு யாரும் கொச்சைப் படுத்த முடியாது.

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 2:34 PM, Kapithan said:

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

 

சூ.. இப்படி எல்லாம் கேக்கப்படாது.

முப்படைகள், மருத்துவ பிரிவு எல்லாம் ஏற்படுத்திய பிரபாகரன், புலம்பெயர் பல்மருத்துவர் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரியாது.

தெரியாது -ஏனென்றால் அது நெடுக்குக்கும் பிரபாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.