Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி

Featured Replies

நேற்று, புதன்கிழமை. தமிழ்க்கடைக்கு புது மரக்கறியள் வந்திருக்கும். முருங்கைக்காய்க்கு, பிலாக்கொட்டை போட்டு சமைத்துச் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். நினைக்கவே வாயூறியது. நானே தனியப் போய் வேண்டியிருக்கலாம். மனுசியையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற நினைப்பில் 'தமிழ்க்கடைக்குப் போறனப்பா. வாவன்" என்றன். 
 
"உதிலை போறதுக்கு நானேப்பா"
 
"நீயெண்டால் பாத்து நல்ல மரக்கறியளா எடுப்பாய்..."
 
அவளுக்கு உச்சி குளிர...  உடனையே வெளிக்கிட்டிட்டாள்.
 
தனிய போயிருப்பன். பிறகு
"நீங்கள் அதை வேண்டேல்லையப்பா, இதை வேண்டேல்லையப்பா. வெண்டிக்காய் என்ன முத்தலாக் கிடக்கு. முறிச்சுப் பார்த்து வேண்டத் தெரியாதோ...'  என்று ஆயிரத்தெட்டு கதை சொல்லி எனக்கு உச்சியிலை கொதிப்பேத்துவாள். 
 
அதுதான் ... அவளையும் கூட்டிக்கொண்டு அங்கை போனால் கடைக்காரியோடை ரொஜினா கதைச்சுக் கொண்டு நிற்கிறாள். பெயரைப் பார்த்து எந்த நாடோ என்று யோசிக்காதைங்கோ. எங்கடை நாட்டுத் தமிழ்ப்பிள்ளைதான். சாதாரணமா பார்க்கிற போது அவள் அப்பிடியொண்டும் அழகில்லை. இண்டைக்கு முகத்துக்கு பவுடர் பூசி, கண்ணுக்கு மை தீட்டி, வாய்க்கு நல்ல சிவப்புச்சாயம் பூசி கலாதியாக நின்றாள். அந்தச் சிவப்பு கொஞ்சம் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நின்றாலும் வழக்கம் போல இல்லாமல் ஏதோ பளிச்செண்டு வடிவாத்தான் இருந்தாள்.

என்ரை மனுசிக்கும் வாய் சும்மா கிடவாது. உடனையே "ரொஜினா என்ன பிள்ளை? இவ்வளவு வடிவா இருக்கிறாய். வர வர நீ .."
 
ரொஜினா வாய் எல்லாம் பல்லாக நெளிந்தாள். சந்தோசத்தில் குளிர்ந்தாள். 
 
இது அந்தக் கடைக்காரப் பிள்ளைக்கு துளியும் பிடிக்கேல்லை. அவளின்ரை முகம் அப்பிடியே மாறிப் போச்சுது. உண்மையைச் சொல்லப் போனால் இந்த ரொஜினாவை விட அந்தக் கடைக்காரப்பிள்ளை நல்ல வடிவு. மேக்கப் இல்லாமலே ஜொலிப்பாள்.எனக்கு கடைக்காரப்பிள்ளையைப் பார்க்க யோசினை வந்திட்டுது. இப்ப இந்தக் கோபத்திலை அதுதான் ரொஜினாவை வடிவு என்று சொன்ன கோபத்திலை வேண்டுற சாமானுக்கெல்லாம் அறாவிலை போடப் போறாளோ!
 
நான் அவசரமா கடைக்காரப்பிள்ளையைப் பார்த்து  " பிள்ளை நீ எப்பவும் வடிவுதான். மகாலட்சுமி மாதிரி..."
 
துலஞ்சுது போ. மனிசி என்னை வெட்டிச் சாய்க்கிற போலை அப்பிடியொரு பார்வை பார்த்தாள்.  அதோடை எல்லாக் கலகலப்பும் சரி. வெடுசுடென்று நின்றாள். 
 
சாமான்களை வேண்டிக் கொண்டு வெளியிலை வந்ததும் வராததுமா அவள் கேட்டது 'உதுக்குத்தான் தமிழ்க்கடை  தமிழ்க்கடை என்று  ஓடி வாறனியோ?" 
 
அவளுக்கு உச்சக்கோபம் வந்தால் இப்பிடித்தான் மரியாதையும் குறைஞ்சு போகும்.
 
சிவ சிவா. தனிய வந்திருக்கலாம். இனி கொஞ்ச நாளைக்கு எந்தப் பிர்ச்சனை வந்தாலும் றிவைன் பண்ணி றிவைன் பண்ணி இந்த ஸ்லோகந்தான் போப்போகுது
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதை விட விலைக்கு கொஞ்சக்காசை குடுத்திருக்கலாம்😀

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைகாரப்பிள்ளையைப் பார்த்து வடிவு என்று சொன்னது தப்பில்லை, தப்பே இல்லை, அதுக்கு முன் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்.அந்த வார்த்தை "என் மனைவிபோல் நீயும் நல்ல வடிவுதான்" இனிமேல் கவனமாய் இருங்கோ......ஒரு ஆணின் மனசு ஆணுக்குத்தான் தெரியும்....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஆண்களுக்கு நேரகாலம் பாத்துக் கதைக்கத் தெரியாது எண்டுறது  😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நீங்கள் கடைகாரப்பிள்ளையைப் பார்த்து வடிவு என்று சொன்னது தப்பில்லை, தப்பே இல்லை, அதுக்கு முன் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்.அந்த வார்த்தை "என் மனைவிபோல் நீயும் நல்ல வடிவுதான்" இனிமேல் கவனமாய் இருங்கோ......ஒரு ஆணின் மனசு ஆணுக்குத்தான் தெரியும்....!  😂

உவற்ற கதையை நம்பாதேங்க்கோ.

அந்த கடைக்கார பெட்டையோடயே என்னை கொம்பியர் பண்ணின்னிங்கள் எண்டு உங்களுக்கு முருங்கைகாயாலேயே விழும்😆

பிகு: எதுக்கும் முருங்கைகாயை 1 கிழமை ப்ரீஸரில் வையுங்கோ. எல்லாட்டி வீண் அவஸ்தை😃

இதுக்குத் தான் நான் அனேகமான நேரங்களில் மகளை அல்லது மகனைக் கூட்டிக் கொண்டு போவது. அதுகளுக்கு கிறீம் சோடாவோ அல்லது நெக்டோவோ வாங்கிக் கொடுத்துட்டு எங்கட மிச்ச அலுவல்களை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நாஞ்சில் said:

நான் அவசரமா கடைக்காரப்பிள்ளையைப் பார்த்து  " பிள்ளை நீ எப்பவும் வடிவுதான். மகாலட்சுமி மாதிரி..."

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

அவ குறைத்து அடிக்கறது இருக்கட்டும்.வீட்டில் எப்படி அடித்திருப்பா என்டு யோசிச்சு பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

அவ குறைத்து அடிக்கறது இருக்கட்டும்.வீட்டில் எப்படி அடித்திருப்பா என்டு யோசிச்சு பாருங்கோ.

அதிலயும் எவ்வளவு சுகம் இருக்கு.
அடி வாங்கி பேச்சு வாங்கி இரண்டு மூன்று நாளுக்கு கதைக்காமல் இருந்து மீண்டும் சேரும் போது அன்றிரவு முதலிரவை விட பிரகாசிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

இந்தத் திரியோட அனுபவம் அமோகமாய் கிடைக்கும்.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

நேத்து ஒரு படம் பாத்தனான் இணையத்திலதான் அதாவது (tamilgun) தமிழ்கண்ணில் "ஓ மை கடவுளே" நல்ல படம் சொந்த மனைவியை விட்டு மற்றப் பெண்டுகளைப் பார்த்து ஜொள்ளு விடும் எம்போன்ற சிலதுகளுக்கு ஏதாவது செய்தி சொல்லும் படம் ஆனால் ஒருவிடையம் நான் இந்தப்படத்தை மனுசியோடு சேர்ந்து பார்க்கவில்லை (ஏதேச்சையாகத்தான் நடந்தது நல்லதாப்போச்சுது) 

இங்கையும் சிலவேளை விஜை அஜித் சூர்யா கமல் ரஜனி ஆகியோரது படங்களைப்போட்டு விசி அடிக்கிறவையள்தான் அந்தப்பக்கம் நான் போறதில்லை. 

ஆ... இப்ப நினைவுவருது கமில் விஸ்வரூபம் பார்த்தனான் காரணம் அதில் ஆரோ ஒலித்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த்யிருருக்க்கிறார்கள் என யாரோ சொன்னதை நம்பி அங்க போனால் அப்படியொண்டும் இல்லை ஏமாற்றமே.

முடிந்தால் ஓ மை கடவுளே படத்தை ஒருக்கால் பாருங்கள் ஒரு சில குறைகள் இருந்தாலும் எங்கள்போல் சபல புத்திக்காரருக்கு ஏதாவது ஒரு செய்தி கிடைக்கும். அதோட ஆரண்யகாண்டத்தையும் தவறவிடவேண்டாம்.

நஞ்சிலார் கதையை சுருக்கமாக நல்லா முடிச்சிருக்கிறியள்.

34 minutes ago, Elugnajiru said:

எங்கள்போல் சபல புத்திக்காரருக்கு ஏதாவது ஒரு செய்தி கிடைக்கும். அதோட ஆரண்யகாண்டத்தையும் தவறவிடவேண்டாம்.

.

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

அது ஒண்டுமில்லை எங்களுக்கு நாங்களே வெள்ளையடிக்கக்கூடாதுதானே மத்தப்படி எனக்கும் உங்களது கருத்துத்தான் 

நாங்கள் கலைப்பொருதளை ரசிக்கும் பாவனையும் திறனும் ஒருபடி மேலேயே கலைப்பொருளை வைத்திருக்கும் உரிமையாளனை நினைத்து "என்னடாப்பா இப்படி மெய்ன்டேன் பண்றான்" என நான் நினைத்ததுமுண்டு. அவனுக்கு என்ன கிணத்துத் தண்ணிய ஆத்து வெள்ளம் அடித்துக்கொண்டு போகவா போகுது எனும் நினைப்பு, அவரும் வேரு ஒரு கலைப்பொருளை ரசிக்கப்போயிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

உஷ்ஷ்ஷ்.😄

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 2:56 PM, குமாரசாமி said:

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

அதானே...

பின் பக்கமா கூல் ரூமில நல்ல முருக்கைகாய் இருக்குதாம்... போய் எடுத்துக்கொண்டு வாருமன்.... எண்டு அனுப்பிப்போட்டெல்லே  வாயை திறந்திருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:59 PM, நாஞ்சில் said:

ரொஜினாவை வடிவு என்று சொன்ன கோபத்திலை வேண்டுற சாமானுக்கெல்லாம் அறாவிலை போடப் போறாளோ!

விலை பொருளுக்கு அருகில் இருக்கும் விலையை விட்டு எப்படி அறவிலை  அடிப்பார்கள் ?

  • தொடங்கியவர்
13 hours ago, பெருமாள் said:

விலை பொருளுக்கு அருகில் இருக்கும் விலையை விட்டு எப்படி அறவிலை  அடிப்பார்கள் ?

நீங்களும் என்ரை மனிசியைப் போல மடக்கல் கேள்வியெல்லாம் கேட்கிறிிங் கள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நாஞ்சில் said:

நீங்களும் என்ரை மனிசியைப் போல மடக்கல் கேள்வியெல்லாம் கேட்கிறிிங் கள் 

நல்லா நொந்து போய்  உள்ளீர்கள் இனி கேள்வி வராது .😃

  • கருத்துக்கள உறவுகள்

அட பச்சை நாஞ்சில் இரண்டுமுறை குத்தினாலும்  ஒன்று கணக்கில் தான் கூடுது இன்றுதான் கவனித்தேன் .

  • தொடங்கியவர்
On 3/20/2020 at 3:20 PM, ஈழப்பிரியன் said:

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

உங்கட கதையைக் கேட்டு, மனசுக்குள்ளை பட்டாம் பூச்சியைப் பறக்கவிட்டுக் கொண்டு தனியா கடைக்குப் போனால் அவ கடையைப் பூட்டிக் கொண்டு போட்டா. கொரோனானானா...

Edited by நாஞ்சில்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 10:35 AM, ஈழப்பிரியன் said:

அதிலயும் எவ்வளவு சுகம் இருக்கு.
அடி வாங்கி பேச்சு வாங்கி இரண்டு மூன்று நாளுக்கு கதைக்காமல் இருந்து மீண்டும் சேரும் போது அன்றிரவு முதலிரவை விட பிரகாசிக்கும்.

ச்சீ .. நீங்க ரொம்ப மோசம். 😍

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 2:05 PM, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

ஐயா... இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நானும் ஒரு ரௌடி தான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:59 PM, நாஞ்சில் said:

சாமான்களை வேண்டிக் கொண்டு வெளியிலை வந்ததும் வராததுமா அவள் கேட்டது 'உதுக்குத்தான் தமிழ்க்கடை  தமிழ்க்கடை என்று  ஓடி வாறனியோ?"

மனைவியை பக்கத்தில வைத்துக்கொண்டு இன்னொருத்தியிடம் வழிவது இலேசான காரியம் இல்லை. ஆனால் ஆண்புத்தி எப்பவும் அலைபாயும்தானே!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.