Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரம் விட்டு மறுவாரம்

ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு

பெங்களூரில் இரண்டாவது மனைவி வீட்டில் லாக்டவுனால் சிக்கிக் கொண்ட கணவனை தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முதல் மனைவி போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இறுதியில் கணவரோ யாரும் வேண்டாம், லாக் டவுன் முடியும் வரை நண்பர் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டார்.

பெங்களூரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மாதுரி (பெயர் மாற்றம்) திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவ்வப்போது தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தார். இதுகுறித்து முதல் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மனைவியிடம் கெஞ்சினார்.

இதையடுத்து போலீஸார் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டனர். இதையடுத்து கணவன், இரு மனைவிகள் தங்கள் உறவினர்களுடன் பேசினர். அப்போது இரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் தான் செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும் இருவர் வீடுகளிலும் ஒரு வாரம் ஒரு வாரம் தங்குவதாக ஒப்பந்தம் போட்டு கொண்டனர்.

இந்த நிலையில் மார்ச் 21-ஆம் தேதி 2ஆவது மனைவியின் வீட்டுக்கு சென்ற கணவன் 28 ஆம் ஆண்டு முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் அவரால் திரும்பவில்லை. இதனால் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு தங்க நேரிட்டு விட்டது. வீட்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தீர்ந்து போய்விட்டதால் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அவரும் வருவதாக கூறியிருந்த நிலையில் வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவர் காவல் உதவி மையத்தை அணுகினார். இது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய நிலையில் கணவர் நவீன் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அதாவது இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து வெளியேறிய கணவர், விஜயநகரில் உள்ள நண்பருடன் இந்த லாக்டவுன் முடியும் வரை தங்கியுள்ளார். ஒருவழியாக இந்த இரண்டு பொண்டாட்டி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/lockdown-bengaluru-first-wife-calls-to-get-back-her-husband-382385.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு, லக் டவுன் முடிந்தபின் என்ன செய்யப் போகின்றார். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

நல்ல முடிவு, லக் டவுன் முடிந்தபின் என்ன செய்யப் போகின்றார். 😀

அவர் முதலில்... எந்த மனைவி வீட்டுக்கு போனாலும்... 
அடி விழும்... என்பது உறுதி, உடையார். :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அவர் முதலில்... எந்த மனைவி வீட்டுக்கு போனாலும்... 
அடி விழும்... என்பது உறுதி, உடையார். :grin:  🤣

🤣🤣கட்டாயம் கொரோனா பயத்தைவிட அவருக்கு இந்த தர்ம அடி பயமிருக்கும் இப்ப இருந்தே

மூன்று கிழமை ஒரு மனைவி  வீட்டில் நின்றதன் விளைவு 10 மாதத்தால் எதிரொலிக்கும் போது  கண் முன்னே குழந்தை மட்டும் அல்ல வேறு பல விடயங்களும் வந்த நிற்க போகுது பாவம் மனிசன்

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Love GIFs | Tenor

அவங்க காலையில்  அடிச்சுக் கொண்டாலும்  மாலையில் அணைச்சுக் கொள்ளுவார்கள் ......நீங்கள் என் புலம்புறீங்கள், அப்படி வாழ முடியவில்லை என்றா....எனக்கும்தான் கண்ணில வேர்க்குது காட்டிக் கொள்ளுறேனா.....!   😪

  • கருத்துக்கள உறவுகள்

லொக்டவுண் முடியவிட்டு நண்பி வீட்டை நண்பர்  வீடு என்று தவறுதலாக கூறியதாக அறியவரும். 😂

உடம்பெல்லாம் மச்சம் இந்தக் கள்ளனுக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாலே தப்பிச்சு வந்தாலும் சாவு நிச்சயம்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்காதலி அமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்

நாகை: அமுதாவை பார்ப்பதற்காக "டாக்டர்" என காரில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த அப்துல் அகமது என்ற முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது அங்கிருந்து விடிகாலை நேரத்தில் தப்பி ஓடி வந்த மலேசிய ஹோட்டல் அதிபர்தான் இந்த அப்துல் அகமது!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா.. இவருக்கு 37 வயதாகிறது.. கணவனை பிரிந்து வாழ்பவர்.. பிழைப்புக்காக மலேசியா நாட்டு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போதுதான் ஹோட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் என்பவர் பழக்கமானார். அப்துல் அகமது வயது 57 ஆகிறது!! இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்... இவருக்கு மலேசியாவில் மட்டும் 4 ஹோட்டல்கள் உள்ளன... இதை தவிர ராமநாதபுரத்தில் 5 ஹோட்டல்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமுதா மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதனிடையே அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அப்போது அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பினார்.. ஊரடங்கு உள்ளதால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கவும், தன்னுடைய சொகுசு காரில் (EMERGENCY DOCTOR) "மருத்துவம் அவசரம்" என்று ஒரு போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அமுதா வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

அதிகாரிகள்

200 கிலோ மீட்டர் காரை ஓட்டிக் கொண்டு வந்த இந்த விஷயம் சுகாதார துறையினர், போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அமுதா வீட்டிற்கு விரைந்தனர்.. அப்துல் அகமது அங்குதான் இருந்தார்.. அவர்களுடன் அமுதாவின் மகள், மகனும் என 4 பேரும் வீட்டில் இருந்தனர்.. வீட்டிற்குள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினர்.

பாதுகாப்பு

அமுதா, அப்துல் அகமது மைதீன், அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உடனடியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். ஓட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.. அவரை தீவிரமாகவும் கண்காணித்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

இந்நிலையில், நேற்று விடிகாலை 4 மணிக்கு அப்துல் அகமது அவர் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் வீட்டுக்கு வெளியே இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோதுதான் அவர் தப்பி சென்றது தெரியவந்தது... இப்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமுதாவை பார்க்க ரிஸ்க் எடுத்து வந்த அப்துல் அகமதுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்!
 

thatstamil.com

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

கள்ளக்காதலி அமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்

நாகை: அமுதாவை பார்ப்பதற்காக "டாக்டர்" என காரில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த அப்துல் அகமது என்ற முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது அங்கிருந்து விடிகாலை நேரத்தில் தப்பி ஓடி வந்த மலேசிய ஹோட்டல் அதிபர்தான் இந்த அப்துல் அகமது!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா.. இவருக்கு 37 வயதாகிறது.. கணவனை பிரிந்து வாழ்பவர்.. பிழைப்புக்காக மலேசியா நாட்டு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போதுதான் ஹோட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் என்பவர் பழக்கமானார். அப்துல் அகமது வயது 57 ஆகிறது!! இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்... இவருக்கு மலேசியாவில் மட்டும் 4 ஹோட்டல்கள் உள்ளன... இதை தவிர ராமநாதபுரத்தில் 5 ஹோட்டல்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமுதா மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதனிடையே அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அப்போது அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பினார்.. ஊரடங்கு உள்ளதால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கவும், தன்னுடைய சொகுசு காரில் (EMERGENCY DOCTOR) "மருத்துவம் அவசரம்" என்று ஒரு போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அமுதா வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

அதிகாரிகள்

200 கிலோ மீட்டர் காரை ஓட்டிக் கொண்டு வந்த இந்த விஷயம் சுகாதார துறையினர், போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அமுதா வீட்டிற்கு விரைந்தனர்.. அப்துல் அகமது அங்குதான் இருந்தார்.. அவர்களுடன் அமுதாவின் மகள், மகனும் என 4 பேரும் வீட்டில் இருந்தனர்.. வீட்டிற்குள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினர்.

பாதுகாப்பு

அமுதா, அப்துல் அகமது மைதீன், அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உடனடியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். ஓட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.. அவரை தீவிரமாகவும் கண்காணித்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

இந்நிலையில், நேற்று விடிகாலை 4 மணிக்கு அப்துல் அகமது அவர் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் வீட்டுக்கு வெளியே இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோதுதான் அவர் தப்பி சென்றது தெரியவந்தது... இப்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமுதாவை பார்க்க ரிஸ்க் எடுத்து வந்த அப்துல் அகமதுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்!
 

thatstamil.com

வயித்தெரிச்சல உண்டாக்கிற செய்தியளத்தான் இணையுங்கோ 😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வயித்தெரிச்சல உண்டாக்கிற செய்தியளத்தான் இணையுங்கோ 😡

வீட்டை சீல் பண்ணி, ஒருத்தரும் வெளில போகேலாது எண்டு சொன்ன வெங்காய அதிகாரிகள், கார் திறப்பை வாங்கிக் கொண்டு போகேல்ல.

இப்ப மலேசிய 'மு' தனக்கு தூக்கத்திலே கார் ஓடுற வியாதி  இருக்குது எண்டு கதை விடப்போறார்...

ஏற்கனவே இரண்டு... இதுக்குள்ள மூண்டாவது... வைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

kc-2.png 

விட்டா ஆளாளுக்கு பயோ மேற்றிக் வருகை பதிவேடு கேட்பினம்.. ☺️..😊

எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்து கூடி கும்மியடித்தால் பிரச்சினை இல்லை கண்டியலோ..👌

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்..?

உள்ளே செய்தி விவரணையில் காதலி என எங்குமே குறிப்பிடபடவில்லையே..?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

ஏன் இப்படி தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்..?

உள்ளே செய்தி விவரணையில் காதலி என எங்குமே குறிப்பிடபடவில்லையே..?

நம்ம வன்னியருக்கு எல்லாம் விவரணமாக போடடால் தான் புரியும் போல...😄

அட பச்சைப்புள்ளையா இருக்கிறாரே... 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு தங்க நேரிட்டு விட்டது. வீட்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தீர்ந்து போய்விட்டதால் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அவரும் வருவதாக கூறியிருந்த நிலையில் வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவர் காவல் உதவி மையத்தை அணுகினார்.

பேசாமல் அரிசி பருப்பு சீனி எல்லாத்தையும் மாதுரிக்கு ஒழுங்காய் வாங்கிக் குடுத்திருந்தால் நவீனுக்கு ஒரு சோலியும் வந்திருக்காது.
நவீன் மூளையை பாவிச்சிருக்கலாம் 🕵🏾‍♂️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.