Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வீடு புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்!

Featured Replies

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் எமது வீதிக்கு 3 ஒழுங்கைகள் தொலைவில் இருக்கிறார். அவர் தனது மனைவி, மகனுடன் நேற்று மாலை எமது வீட்டுக்குள் சண்டியர் போன்று புகுந்தார். எமது கோழிப் பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு எனவும் அதனை உடனடியாக அகற்றுமாறும் அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தார்.

நாம் இந்தக் கோழிப்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் உரிய அனுமதி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம் என்று அவரிடம் கூறினோம். அதனை ஏற்க மறுத்த அவர், தான் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் என்றும் தனது மகனிடம் ஆவா குழு உள்ளது என்றும் மிரட்டி என்னை கொட்டனால் அடித்தார்.

பெண்களை தகாத வார்த்தைகளால் ஏசினார். அவரது அடாவடி தொடர்பில் பொலிஸ் அவசர சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் அங்கு சென்று கோழிப்பண்ணை நாற்றம் தொடர்பில் கேட்டேன். அத்துடன் அந்தப் பண்ணை பதிவு செய்யப்படவில்லை. மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் என் மீது கல்லால் எறிந்தார். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்று மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142390?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

இரா.செல்வவடிவேல்.. ஏன் இப்படி ஆனார்.

இவர் எதுக்கு ஈபிடிபி தேசவிரோதக் கும்பலோடு இயங்க ஆரம்பித்தார். கடந்த காலங்களை குறிப்பாக ஹிந்திய இராணுவத்தின் பிள்ளைபிடி காலத்தில் இவர் ஈபி கும்பலால் பட்ட துன்பத்தை எப்படி மறந்தார்..????!

ஒரு ஆசிரியர்.. பேச்சாளர் என்ற நிலைகளை எல்லாம் கடந்து இப்போ ஈபிடிபி சண்டியர் ஆகி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இவரின் மதிப்புக்குரிய மாணவனாக இருந்த காலத்தை இட்டு இப்போ வெட்கப்பட வைத்துவிட்டாரே.

 

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா ...

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா ...

தங்கத்தாத்தா நினைவு விழா | Nanilam

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொல்வது உண்மை? குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா? அரசியல் தலையீட்டில் வந்து முடியுமா? ஒரே குழப்பமாக  இருக்கு குமரேசா.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு முழுவதும் இரா.செல்வவடிவேல் உடையதே.

முழு நடைமுறைகளையும் தெரிந்த ஒரு பிரஜை என்ற வகையில்.. இன்னொருவரின் வீடு தேடி போய் குடும்பமா நின்று கத்த வேண்டிய அவசியமில்லை. 

பிரச்சனையை பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம்.. அல்லது சொறீலங்கா காவல்துறையில் முறையிட்டு அவர்கள் மூலமா விடயத்தைக் கையாண்டிருக்கலாம்.

மேலும்.. சமர்ப்பிக்கப்பட்ட காணொளியின் பிரகாரம்.. செல்வவடிவேலின் மகன் தான் முதலில் தாக்குதல் நடத்தியது தெரிகிறது. கல்லால் அடித்த எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை அல்லது வெளியிடப்படவில்லை. 

செல்வவடிவேல்.. வீட்டு வளவுக்குள் நுழைந்து தாக்கியதற்கு முன் அவரின் மகனோடு தான் பண்ணை உரிமையாளர் கைகலப்பில் ஈடுபட்டார். அதன் பின்னரே செல்வவடிவேல் வெளியில் இருந்து உள்நுழைந்து வீட்டு வளவுக்குள் வைத்து பண்ணை உரிமையாளரை தாக்கினார். அதன் பின் அவரின் மகனும் வளவுக்குள் நுழைந்துவிட்டார். 

இவை அனைத்துமே.. செல்வவடிவேல் மற்றும் அவரின் குடும்பத்தினரின் தவறே ஆகும்.

குற்றச்சாட்டை சட்டத்துக்கு அப்பால் தன் கையில் எடுத்துக் கையாண்டது அவர்களின் மகா தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் ஒளி மயமான எதிர்காலம் தெரிகிறது....கோழி வளர்த்தும் தொழில் செய்து சாப்பிட முடியாத நிலை...e.p d.p கு 5 -6 சீற் கிடைத்தால்... எல்லாம் சிவமயமே

  • கருத்துக்கள உறவுகள்

தனது தகுதி ஆசிரியருக்குத் தெரியவில்லையா அல்லது ஆசிரியராக இருப்பதற்கு இவருக்குத் தகுதியில்லையா ?  ☹️

மாணவர்கள் இவரிடம் எதனைக் கற்கப் போகிறார்கள் 🤥

Edited by Kapithan
திருத்தம் ; பேராசிரியர் அல்ல - ஆசிரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி.  டி. பி  யின் சேவை  பெருகுகிறது. இதுதான் இன்றைய வடக்கின் நிலைமை. அடாவடி, ஆவா குழு இயக்கத்தின் இயக்குனர் யார் என்பதும், மக்களின் கவலை, நிம்மதி அற்ற தன்மைக்கு காரணம் என்ன? என்பது தெளிவாக தெரிகிறது. சொறிஞ்ச கை சொறிஞ்சு கொண்டுதானிருக்கும். வடக்கின் பொதுவான நிலைமையினைச் சொன்னேன். எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து, நீதிச் சேவையினைக் கையில் எடுப்பது, குழப்புவது. தகுதி அற்றவர் கையில் பதவி போனால், எல்லாம் குழப்பமே. 

இராமசாமி செட்டியார் செல்வவடிவேல் ஈபிடிபி காடையர் கோஷ்டியுடன் கலந்து தனது மிருக குணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோட ஆவா குழுவை இயக்குவதில் ஈபிடிபி காடையர் கோஷ்டியின் பங்களிப்பை தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

செல்வவடிவேல் என்று ஒருவர் என்னுடன் படித்தார்.
பின்னர் பயோலஜி ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு திரிந்தார்.
அவரும் இவரும் ஒரே ஆளோ தெரியலை?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

செல்வவடிவேல் என்று ஒருவர் என்னுடன் படித்தார்.
பின்னர் பயோலஜி ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு திரிந்தார்.
அவரும் இவரும் ஒரே ஆளோ தெரியலை?

அவரேதான் இவர், இவரேதான் அவர் 😀

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

12 hours ago, Ahasthiyan said:

யார் சொல்வது உண்மை? குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா? அரசியல் தலையீட்டில் வந்து முடியுமா? ஒரே குழப்பமாக  இருக்கு குமரேசா.

இன்னொருவர் வளவுக்குள் சென்று தாக்குவதட்கு யாருக்கும் உரிமை இல்லை। வீட்டுக்காரரில் தவறு இருக்குதோ இல்லையோ இன்னொருவர் வளவுக்குள் சென்று தாக்குதல் நடத்தினால் சட்ட்ப்படி குற்றம்। இதுவே இந்த மாநகர சபை உறுப்பினர்தான் பிழை விட்டிருக்கிறார்।

 இவர்தான் வெளிப்படையாக தனது மகனுடன் ஆவ குழு இருப்பதாக ஒத்துக்கொண்டு இருக்கிறாரே। அப்பறம் என்ன மடக்க வேண்டியதுதானே। இருந்தாலும் அவங்கட ஆட்சிதானே , ஒண்ணுமே பண்ண முடியாது।

மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது। நல்ல தீர்மானத்தை எடுத்தால் நல்லது। இல்லாவிடடாள் தொடர் கதைதான்।

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவரேதான் இவர், இவரேதான் அவர் 😀

 

1 hour ago, Kaalee said:

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

சரி சரி நன்றி கப்பிதான்.நன்றி காளி.

4 hours ago, Kaalee said:

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

இவர் கம்பன்கழக பேச்சாளர் என்டு நினைக்கிறன். ஜெயராஜின் குணம் அப்பிடியே இருக்கு போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

இவர் கம்பன்கழக பேச்சாளர் என்டு நினைக்கிறன். ஜெயராஜின் குணம் அப்பிடியே இருக்கு போல.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் இருந்த போதே இவர் கம்பன்கழகப் பேச்சாளர் தான். அப்போதெல்லாம்.. மக்களுக்கு போராட்ட நியாயங்களை சொன்னவர் இன்று அதே போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க உதவியோர் கூட கைகோர்த்திருப்பது.. எம்மவர் பலரின் இரட்டை வேடத்தின் குணத்தையே இயம்பி நிற்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பால் போராட்டமும், அதன் நிஞாயமும், தோற்றுவிட்டதால் அதர்மம் தலை விரித்தாடுவது இயற்கையே. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் இருந்த போதே இவர் கம்பன்கழகப் பேச்சாளர் தான். அப்போதெல்லாம்.. மக்களுக்கு போராட்ட நியாயங்களை சொன்னவர் இன்று அதே போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க உதவியோர் கூட கைகோர்த்திருப்பது.. எம்மவர் பலரின் இரட்டை வேடத்தின் குணத்தையே இயம்பி நிற்கிறது. 

எவராக இருந்தாலும் யாரோடு சேருகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் செயல்பாடுகள் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் உதவியை நாடாமல் ஈபிடிபி காரர் வீடு தேடிபோய் தனிமனித சண்டித்தனம் காட்டியது ஏற்கமுடியாத ஒன்றுதான்,

அதேநேரம் குடிமனைகளுக்கு நடுவில் கோழி பண்ணை வைத்திருத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே.

கோழி பேன், கோழி எச்சங்களின் நாற்றம், அதுவும் மழை காலங்களில் கரைந்து ஓடினால் அந்த பகுதியை சூழ உள்ளவர்கள் மூச்சே விடமுடியாது.

ஓரிரு கோழிகள் வீட்டு தேவைக்காக வளர்ப்பது வேறு பண்ணை என்பது வேறு. பண்ணை தனியாக ஓரிடத்தில்தான் வைக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இங்கே சின்னதா ஒரு மணம் வீட்டுக்குள்  வந்தாலே Fan-ஐ போட்டும் ஜன்னல்களையும் திறந்துவிடும் நாங்கள் இதை எப்படி சரியென்று ஏற்றுக்கொள்கிறோம்.

சூழ வசிப்பவர்களின் அசெளகரியங்கள்பற்றி கவலையே இல்லையா?

ஈபிடிபி காரர் சொல்றமாதிரி அவரை கல்லால் அடிச்ச எந்த சம்பவமும் காணொளியில் இல்லை, 

அதேநேரம் ஈபிடிபி காரரின் மகனை முதலில் அடிக்கபோனது கோழிபண்ணைக்காரர்தான் என்பது காட்சியில் தெளிவாகவே உள்ளது.

அதன்பின்னர்தான் அப்பனும்மகனும் சேர்ந்து தாக்குகிறார்கள்.

வீடுதேடிபோய் தகராறு பண்ணிய அவர்கள்மேல்தான் முதல் குற்றம், ஆனால் அவர்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கேயோ எழுதின ஞாபகம் ஆடு மாடு கோழி வளர்க்க முடியாது வளர்த்தால் மணம் அடிக்கிறது  கத்துகிறது கூவுகிறது என பொது சுகாதார பரிசோதகர்களிடமும் பொலிசசிலயும் முறைப்பாடு செய்கிறார்கள் வட கிழக்கில் 

காலி , ஹபாராடுவா என்னுமிடத்தில் ஒரு வீடுதிடடம் நடைபெறுகிறது। இது பெரிய ஒரு திடடம்। இருந்தாலும் அந்தப்பக்கம் போக முடியாத நாற்றம்। நிச்சயமாக வாந்தி எடுக்க நேரிடும்। ஆடு மாடு , கோழி என்றாலும் பரவாயில்லை। இது ஒரு பெரிய பன்றி பண்ணை। இந்த திடடம் முடிவடையும் முன்னர் இதை நிச்சயமாக அகற்றி விடுவார்கள்। இருந்தாலும் கோழி பண்ணை அகற்ற முடியுமோ தெரியவில்லை। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.