Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரில் ஒரு வீடு வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம். ஆனால் தற்போதைய யேர்மன் சட்டதில் நாம் ஐரோப்பிய நாடுகள் ஒன்றின் இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே வேறு எந்த நாட்டுக்கு குடியுரிமை பெற்றாலும் யேர்மன் குடியுரிமையை இழந்துவிடுவோம்.

நான் மாறி வதிவிட உரிமை என்று எழுதிவிட்டேன்

மன்னிக்கோணும்....
நான் இந்த திரியிலை கவனிச்ச அளவுக்கு சொல்லுறதெண்டால்...
உங்களுக்கு போதுமெண்ட மனமும் இல்லை......இருப்பதை வைத்து திருப்திப்படுற குணமும் இல்லை.😄

நீங்கள் ஏன் அவுஸ்ரேலியா போக ட்ரை பண்ணக்கூடாது.சிலோனை மாதிரி நெல்லி  தென்னை பனை எண்டு அசத்தலாம்.வெதரும் அந்தமாதிரி🌞

Edited by குமாரசாமி
நான்

  • Replies 277
  • Views 41.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
46 minutes ago, nilmini said:

அப்படி ஒரு உணர்வு இல்லாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை. எனது எல்லா சிங்கள நண்பர் நண்பிகளிடமும் எனது அதிருப்தியை சொல்லியிருக்கிறேன். எனது அமெரிக்கா மாணவர்கள் , மற்றும் என்னுடன் வேலை செய்யும் எல்லோருக்கும் எமது பிரச்சனை பற்றி எப்போது சொல்வேன். 

உங்களுக்கு ஏற்கனவே அம்மொழியின் அறிமுகம் உள்ளதால் கற்பது இலகுவாகும். எனக்கு மனம் முழுவதும் அவர்கள் மேலும் அந்த மொழிமேலும் துவேசம் இருக்கவே செய்கிறது.🙂

அவர் ஒரு பேராதனை பல்கலை, கலை பட்டதாரி. வேலை இல்லாத படியால், வான் ஓட்டுனரானார். ஒரு நண்பனின் சிபாரிசில், கொழும்பு விமானநிலையத்தில் என்னை பிக் அப் பண்ணி யாழ் பயணமானோம். 

வீடு இடிந்து நொறுக்கப்பட்டிருந்தது. இந்திய, இலங்கை,  ராணுவத்தின் கைங்கரியம்... கண்களில் நீர் வந்தது.....

என்னை பார்த்த அவர் மௌனமானார்.... நீண்ட நேரத்தின் பின்னர் பேசினார். பல போராட்ட கால கதைகளை சொல்ல, சொல்ல திகைத்துப் போனார் அவர்.

இலங்கையின் தென் பகுதியில் ஜேவிபி காலத்தின் வன்கொடுமைகளுக்கு அதே இனத்தின் ராணுவமே பொறுப்பு. ஆனால் இலங்கையின் வடக்கே, கிழக்கே வாழும் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு வேறு இன ராணுவமும், வெளிநாடு ராணுவமும் பொறுப்பு. இரு வேறு நாட்டு ராணுவத்தினால் தமிழர்கள் பெரும் அவலமடைந்தது, சிங்களவர்களுக்கு மறைக்கப்படுள்ளது என்றேன்.

இன்றும் தொடர்பில் உள்ளார். அப்போது நினைத்தேன். எமது வலிகளை, சிங்கள மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே தெரியப்படுத்தாவிடில் எமக்கான விடுதலை துரிதமாகாது.

பிரித்தானியாவின் பேரரசு வரலாறில், அடிமைத்தனம் ஒழிய, பிரித்தானிய மக்களுக்கு அடிமைளது அவலம் தெரியப்படுத்தபட்டமையே காரணமாகியது.

நான் ஒரு மனிதனும், சகோதரனும், நான் ஒரு பெண்ணும், தாயும் போன்ற மனதை கரைய வைக்கும் தெரு ஓவியங்கள், பதாகைகள், இறுதியில் பிரித்தானிய அரசை அசைத்து, அடிமை வியாபார தடை சட்டத்தினை கொண்டு வர வைத்தது.

தென் ஆப்பிரிக்காவின் வைர சுரங்ககளை, டச்சு குடியேறிகள் பல ஆண்டுகள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து அதனை பிரித்தானியா கையகப்படுத்த நடந்த போர், போயர் யுத்தம், ஒரு கொடூர யுத்தம் 3 ஆண்டுகள் நடந்தது. இதற்க்கு பேரரசின் பல பகுதிகளில் இருந்து படையினர் கொண்டு செல்லப்பட்டனர்.

இதுக்கு எதிராக வீரமுடன் போராடிய, டச்சு காரர்களின் மீது, பெரும் அனுதாபம் பிரிட்டனில் உண்டாக்கியது. அதன் விளைவு, தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம்.

ஆகவே, சிங்கள மொழியினை முடிந்தளவு படித்து, சமூக வலைத்தளங்களில், எமது வலிகள் சொல்லப்படவேண்டும்.

இறுதி யுத்த காலத்தில், ஒரு சிங்களவர்கள் தளத்தில், சிங்களவர் போல இணைந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் கருத்துடையாடல்.... விடக்கூடாது... போட்டுத்தாக்கு என்று பலர் கூறிக்கொண்டிருந்தார். இறந்த பெண்ணின் வயித்தில் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்திருந்த படத்தினை போட்டேன். அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, MEERA said:
  1. If a German citizen acquires a non-EU or non-Swiss citizenship with the permission (Beibehaltungsgenehmigung or BBG) of the German Government (e.g., existing relative ties or property in Germany or in the other country or if the occupation abroad requires domestic citizenship for execution). The voluntary acquisition of a non-EU or non-Swiss citizenship without permission usually means the automatic loss of the German citizenship (but see Point 4). The permission is not necessary if the other citizenship is of another EU country or of Switzerland or if dual citizenship was obtained at birth.

இதனை தான் முன்னர் நாங்களும் விளக்கி இருந்தோம். பிறப்பால் வரும் இரட்டைக்குடியுரிமையை பொதுவாக பிற முதலாம்.. இரண்டாம்.. குடியுரிமை நாடுகள் நிராகரிப்பதில்லை.   

1 hour ago, nedukkalapoovan said:

நாதர் சொன்ன கணக்கா எங்கடை ஆக்கள் தற்துணிவான சட்டங்களை இயற்றி தங்களின் தொலைபேசிகளுக்குள்ளால்.. மற்றவர்களுக்கும் சொல்லி மாறி மாறி ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது அதிகம்.

நீங்கள் பிற நாட்டு/நாடுகளின் குடியுரிமை கொண்டிருந்தாலும்.. பிறந்தது சொறீலங்காவில் என்ற அடிப்படையில்.. இழக்கப்பட்ட சொறீலங்காவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.  நீங்கள் 150 நாட்டு குடியுரிமை வைத்திருந்தாலும்.. பிறப்பால் நீங்கள் சொறீலங்கன். நீங்கள் பிறந்த இடம் அல்லது நாடு என்பது எந்த நாட்டு பாஸ்போட்டிலும் சொறீலங்காவில் ஓர் ஊர் அல்லட்து சொறீலங்காவாத்தான் இருக்கும். 

  

1 hour ago, nedukkalapoovan said:

வதிவிட உரிமை வேறு குடியுரிமை வேறு.

மேலும்.. நீங்கள் இரண்டு நாட்டிலும் சொறீலங்கா குடியுரிமையை இழக்கவில்லை. எந்த நாட்டில் சொறீலங்கா குடியுரிமையை விட்டு அந்த நாட்டுக் குடியுரிமைக்கு போனீர்களோ... அங்கு தான் சொறீலங்கா குடியுரிமை இழக்கப்பட்டுள்ளது. ஆகவே மீளவும் அந்த இழந்த குடியுரிமையை பெறலாம். உங்களிடம் ஆயிரம் குடியுரிமை இருந்தாலும்.. முதலாவதாக மாற்றிப் பெற்ற குடியுரிமை நாட்டில் தான் பிறந்த நாட்டின் குடியுரிமை இழக்கப்பட்டிருக்கும்.

இப்படித்தான் சட்டம் பார்க்கிறது. 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இறுதி யுத்த காலத்தில், ஒரு சிங்களவர்கள் தளத்தில், சிங்களவர் போல இணைந்து கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் கருத்துடையாடல்.... விடக்கூடாது... போட்டுத்தாக்கு என்று பலர் கூறிக்கொண்டிருந்தார். இறந்த பெண்ணின் வயித்தில் இருந்து குழந்தை ஒன்று வெளியே வந்திருந்த படத்தினை போட்டேன். அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. 

மிகச்சிறப்பான பதிவு. நடந்தது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிங்களவர்களின் முதல் பிரச்னை சிங்களவருக்கு என்று ஒரு நாடு இல்லை என்பது. எமக்கும் இல்லைதானே? சொல்லும்போது தான் யோசிக்கிறார்கள் 

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பையன்26 said:

தாத்தா அடுத்த‌ வென்னைக‌ள் என்ன‌ க‌தைச்சாலும் இந்த‌ காதால் கேட்டு ம‌ற்ற‌ காதால் விடுவ‌து ந‌ல்ல‌ம் / 

உங்க‌ளுக்கு ஒரு ஆசை இருந்தா அத‌ நீங்க‌ள் என்ன‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தாலும் உங்க‌ட‌ ஆசையை நிறைவேற்ற‌னும் தாத்தா , நீங்க‌ள் வாழ்வ‌து உங்க‌ளுக்காக‌ உங்க‌ குடும்ப‌த்துக்காக‌ , 

திண்ட‌ சோறு செமிக்காட்டி எங்க‌டைய‌லுக்கு அடுத்த‌வையை ப‌ற்றி வெட்டியா க‌தைக்கிற‌து தான் வேலை / உப்ப‌டியான‌ ஆட்க‌ளை வீட்டு நீண்ட‌ தூர‌ம் த‌ள்ளி வ‌ந்திட்ட‌ன் , என் வ‌ழி த‌னி வ‌ழி என்ற‌ ரேஞ்சில் போய்கிட்டு இருக்கிறேன் /  தூற்றுவார் தூற்ற‌ட்டும் போற்றுவார் போற்ற‌ட்டும்  😁

இல்லை அப்பன்! ஜேர்மனியிலை இருக்கிற ஆக்கள் பந்தாவுக்காக சிலோனிலை வீடு கட்டி வைச்சிருக்கினம். இப்ப வெறும் வீடாய் இருக்கு. பராமரிக்க சம்பளம் குடுத்து ஆக்களை வைச்சிருக்கினம்.😄
 

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kaalee said:

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

இது பேச்சலவில் மட்டுமே, யாரும் திரும்பி போய் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.

அடிக்கடி போய் வர அங்கு வரவேற்பிருக்கும், நிரந்தரமாக இருந்தால் பல பிரச்சனை தேடி வரும், நிம்மதியிருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

அண்ணன் இறக்கவில்லை.. குடும்பத்தோடு கனடாவில் இருந்து புதிய வீட்டிற்கு குடியேறப் போன போது வீடு கட்டப்பட வேண்டிய இடத்தில் இல்லாததால்.. மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

பின்னர் ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து தம்பி தான் தன் சொந்தக் காணியில் கட்டி இருந்த அந்த வீட்டை அண்ணனுக்கு கொடுத்ததாக அந்தச் செய்தியை இங்கு யாழில் படித்தது ஞாபகம். 

ஓ கோ நன்றி நானும் படிச்ச ஞாபகம் அதான் எழுதினேன் அது பத்திரிகையிலா அல்லது யாழிலா என ஞாபகம் இல்லை 

 

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன நீங்களே இப்பிடிப் பயப்படுத்திறியள்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏற்கனவே கட்டியிருக்கிற வீட்டை வாங்குவது நல்லது போல் இருக்கே.ஆனால் எமது விருப்பத்துக்கு அமையாது அது.

கட்டியிருக்கிற வீட்டை வாங்கி நமக்கு தகுந்தால் போல் மாற்றியும் அமைக்கலாம் பல வழிகள் உண்டு ஆனால் இங்கே மீதிக்காலம் முழுவதும் வாழும் முடிவை திடமாக எடுங்கள் பிறகு ஏன்டா இங்கு வந்தோம் என மனம் வருந்தக்கூடாது நடக்கும் சம்பவங்களை வைத்து சொல்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு சிறு சம்பவங்கள் கூட மன உளைச்சலை உண்டாக்கும்  பக்கத்து வீட்டுக்காரன் சொப்பினில் குப்பையை கட்டி நம்ம வாசலில் வச்சிட்டு போவான் கேட்டால் சண்டை பிடிப்பான் நீங்கள் நான் வச்சத பார்த்தீங்களா என்று

 

சனம் நடமாட்ட

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுமே அத்திவாரம் வெட்ட தொடங்கியாச்சா.கெதியா வாங்கோ எங்களுக்கும் பொழுது போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் யேர்மன் நாட்டுக் குடியுரிமை எடுத்தபோது அவர்கள் கூறினார்கள் நீங்கள் இலங்கைக் குடியுரிமையையும் வைத்த்திருப்பீர்களானால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படும்போது நாம் உடனே முன்வரமாட்டோம். எமது நாட்டுக்கு குடியுரிமை மட்டும் வைத்திருந்தால் உங்களுக்கு உடனே உதவுவோம் என்று. அதனாலேயே அப்போது 93 இல் நாம் இலங்கைக்கு குடியுரிமை தேவையில்லை என்று எண்ணினோம்.

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

இதுவே, இறைமையுள்ள அரசும், அதன் இறைமையுள்ள நிலப்புலத்தின்  அடிப்படை. இதற்கு விதி விலக்கு, பெரும்பாலும் வலோற்கரமாக அளிப்பது, un security council இல் நிறேவேற்றப்படும் peace and  security resolutions under chapter 7.     

எனவே, சொறிலங்காவில் உங்களுக்கு பிரச்னை என்றால், ஜேர்மன் (இந்த குடி உரிமையை நீங்கள் அநேகமாக இழப்பீர்கள் சொறி லங்காவின் குடியுரிமை பெற்றால்)   அல்லது UK உதவ முயற்சிக்கலாம். இது கூட உறுதியாக சொல்ல முடியாது. அதை ஏற்பதும், நிராகரிப்பதும் சொறிலங்காவின் முடிவு.     

உங்களின் பிரசன்னம் இருக்கும் நாட்டில்  (சொறி லங்கா) உங்களுக்கு குடியுரிமை இருக்குமாயின், வேறு எந்த குடியுரிமை உள்ள அரசும், அது பிறப்பால் dual ஆக இருந்தாலும், கதைப்பதற்கு கூட முன்வராது.    

9 hours ago, Kaalee said:

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 

 

சுமோ அக்கா,

உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன்
நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்!

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது

 

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் விசித்திரமானது. மனித வாழ்க்கையும் நிகழ்வுகளால்/சம்பவங்களால் ஆக்கப்பட்டதே. இதை மனித மூளை ஏற்ருக்கொள்வதில்லை கொள்வதில்லை. இன்று இலங்கையில் இருக்கும் ஒரு 21 வயது வாலிபனிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் நான் எப்படியாவது ஏஜென்சிக்கு காசு கட்டி ஜெர்மன்போய் உழைத்து குடியுரிமை பெறவேண்டும் என்பர். அவரில் குற்றமில்லை அவருடைய சூழல் அவர்களை உந்திதல்ளுகின்றது. இதையே நான் 1980 இல் 8  வயது சிறுவனாக இருந்தபோது 
அம்மம்மாவின் வீட்டில் ஒரு 19 வயது யாழ் இளைஞர் வந்து வாடகைக்கு  இருந்தார் அவரிடம் நான் ஏன் நீங்கள் இங்கு வந்து தங்கியுள்ளீர்கள் என கேட்டபோது, தான் ஜெர்மன் போக வந்து கொழும்பில் தங்கி இருப்பதாக கூறினார்.40 வ‌ருடங்களுக்கு முன்.  அன்றும் அப்படித்தான் இன்றும் இப்படித்தான். எந்த ஒரு குடியுரிமையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் அல்ல தாழ்ந்தது அல்ல. உலகில் எல்லா மனிதரும் ஒரே மாதிரி சமமானவர்களே. 

வாழ்க்கையில் எல்லாம் ஒரு விடயத்தை அடையும் வரைக்கும்தான், அடைந்தபின் இது இவ்வளவுதானே என ஒரு சலிப்பு எற்படும். உங்களுக்கு இப்பொழுது அதுதான் எற்பட்டுள்ளது, இது எல்லோருக்கும் வயதுபோகும்போது ஏற்படும். வெளி நாடுகளில் வாழும் வய‌தானவர்களின் நிலையும் இதுதான் அவர்களின் மனமெல்லாம் இலங்கையில்தான் உள்ளது, உடல் மட்டும்தான் அங்குள்ளது. 

இப்பொழுது இருக்கும் சிங்கள இளம் சமூகம் மிகவும் மாறிவிட்டது. தமிழர்களுடன் நேசமாக பழகுகின்றது. இப்பொழுது இலங்கை முஸ்லீம்களை பற்றிதான் அவர்களுக்கு கவலை. 
சிங்கள அரசியல்வாதிகள் எப்பொழுதுமே இந்த இனவாதத்தைதான் கையில் எடுப்பார்கள். இதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதற்கு பயந்து எமது வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது.

உங்கள் முடிவு நல்ல முடிவு. வாழ்த்துக்கள். ஒரேடியாக போகாமல் ஒரு 3 அல்லது 6 மாதம் இலங்கையில் வாழ்ந்து பார்த்துவிட்டு சிறிது, சிறிதாக முடிவெடுங்கள். மேலும் சிங்கள இலக்கியவாதிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திகொள்ளுங்கள், உங்கள் ஆக்கங்களை அவர்களுக்கு மொழிபெய‌ர்த்து காட்டுங்கள், மொழி தெரியாவிட்டாலும் அவர்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் பரஸ்பர புரிந்துண‌ர்வு ஏற்படும்.

 

1 hour ago, Kadancha said:

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

 


இது எல்லா சந்தர்பங்களில் பொருந்தாது. இரஜதத்திர கடவு சீட்டை கொண்டவர்களுக்கு இது பொருந்துமா? அவர்களுக்கு diplomatic immunity உண்டல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

இது எல்லா சந்தர்பங்களில் பொருந்தாது. இரஜதத்திர கடவு சீட்டை கொண்டவர்களுக்கு இது பொருந்துமா? அவர்களுக்கு diplomatic immunity உண்டல்லவா?

Diplomatic immunity கூட இறைமைக்கு உட்பட்டது.  

நீங்கள் சொல்வது Sovereign immunity, அல்லது இப்போதைய நவீன அரசுகளுக்கு அது State Immunity எனவும் அழைக்கப்படுகிறது. 

இது அரசுகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் எல்லா அரசுக்களாலும் மற்ற அரசுகளுக்கோ அல்லது  sovereign (அரசுக் குடும்பங்களுக்கோ) வழக்கப்படுவதில்லை.

இது சமீபத்தில் நடைமுறையில் பார்த்தோம், US Missouri state சீன மீது நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த  போது சீன அரசு மற்றும் அரசாங்கம் என்ற பதத்தை தவிர்த்து, C hinese C ommunist P arty மீது வழக்கு தொடுத்தது.

ஏனெனில், US Federal State மற்றைய அரசுகளுக்கு sovereign immunity வழங்குவதால், அதன் மூலம் வழக்கு தானாகவே தள்ளுபடியாகாமல், நீதி மன்றம் வழக்கை கையில் எடுப்பதற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 00:53, உடையார் said:

 

இனி ஊரில் போய் இருக்க எம்மால் முடியுமா? இரண்டு தோனியில் கால் வைத்த நிலையில்தான் நாங்கள் இப்ப. அங்கு பாதுகாப்புமில்லை, இடைக்கிடை போய்வர சரி.

நிரந்தரமாக தங்குவதின்றால், ஒரு பழைய வீட்டில் வருடம் தங்கி நிலைமைகளை அவதானித்து புதுவீடு கட்டுவது நல்லது.

நான் இங்குதான் பெரியகாணி வாங்கி தோட்டம் வைத்து நிம்மதியாக வாழ ஆசை. ஊருக்கு இடைக்கிடை போய் வரலாம்.

ஊரில் இப்ப எல்லாரும் வியாபர நோக்குதான், சொந்த உறவுகள் கூட, யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். 

 

நாம் ஊரில் போய் இருக்க முடியாமைக்கான முதலாவது காரணம் பயம். இரண்டாவது பொருளாதாரம், மூன்றாவது எமது பிள்ளைகளை விட்டுவிட்டு எப்படிப் போவது என்பது மற்றும் இந்த நாடுகளின் வசதி. இப்படி இன்னும் பல தேவையற்ற காரணிகளும் உள்ளனதான். ஆனாலும் மனதில் போகாத துணிவு இருந்தால் போய்ப்பார்களாம். பல குடும்பங்களில் ஆண்கள் அங்கு போய் இருக்க ஆசை கொண்டாலும் பெண்கள் பிள்ளைகளுடன் பேரப்பிள்ளைகளுடன் இருக்கவே ஆசை கொள்வது. அடுத்தது பிள்ளைகள் நாம் இல்லாவிட்டால் கஷ்டப்படுவார்கள் என நம்புவது. இவை இரண்டையும் தாண்டி மனதை சமாதானம் செய்துவிட் டால் போய் இருக்கலாம். நாம் விரும்பிய நேரம் இங்கே வந்துவிடலாம் என்னும் ஒரு பெரிய சாதகமான காரணமும் உண்டே. ஆனாலும் நீங்கள் கூறியவாறு ஒரு ஆண்டு போய் நிலைமைகளைப் பார்த்தபின் தான் வீடு கட்ட வேண்டும்.
கணவர் ஓஸ்ரேலியா பொய் இருந்துவிட்டு வரலாமா என்றும் கேட்டார். நான் இன்னும் அங்கு வராத படியாலும் இனி வந்தாலும் எல்லாம் புதிதாக அங்கு ஆரம்பிக்கவேண்டும் என்பதாலும் ஒருவித பயம் எனக்கு இருக்கிறது.
அங்கு வீடுகள் விலை அதிகமா ?? எல்லாத்தையும் கூறுங்கள்😀

 

On 7/5/2020 at 21:25, Kali said:

இப்பவே போய் இறங்கிடுங்கோ, மனுஷன் பின்னால ஓடி வந்திடுவார் 😀

அப்பிடிப்பட்ட மனிசன் எண்டால் நான் எப்பவோ ஓடியிருப்பனே 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 21:50, குமாரசாமி said:

மன்னிக்கோணும்....
நான் இந்த திரியிலை கவனிச்ச அளவுக்கு சொல்லுறதெண்டால்...
உங்களுக்கு போதுமெண்ட மனமும் இல்லை......இருப்பதை வைத்து திருப்திப்படுற குணமும் இல்லை.😄

நீங்கள் ஏன் அவுஸ்ரேலியா போக ட்ரை பண்ணக்கூடாது.சிலோனை மாதிரி நெல்லி  தென்னை பனை எண்டு அசத்தலாம்.வெதரும் அந்தமாதிரி🌞

இன்னும் நான் அவுசுக்குப் போகேல்லை. இந்த ஆண்டு திட்டமிட்டது. அந்தக் கொரோனாவாலை எல்லாம் பாள். அவுஸ் தூரம் என்பதும் ஒன்று. அடுத்தது எங்கள் வாழ்ந்த அயலில் எம்மவருடன் இருப்பதுதானே மகிழ்ச்சி.  ஒருவரின் பதிவுகளைப் பார்த்து அவர் பற்றி முடிவெடுக்க முடியாது.  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 22:10, nedukkalapoovan said:

இதனை தான் முன்னர் நாங்களும் விளக்கி இருந்தோம். பிறப்பால் வரும் இரட்டைக்குடியுரிமையை பொதுவாக பிற முதலாம்.. இரண்டாம்.. குடியுரிமை நாடுகள் நிராகரிப்பதில்லை.   

 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.  யேர்மன் வதிவிட உரிமை வைத்திருப்பவர் ஐரோப்பாவுக்கு வெளியே இன்நொரு குடியுரிமை வைத்திருந்தாள் யேர்மன் குடியுரிமை இராததாகும் என்றுதானே போட்டிருக்கு நெடுக்ஸ்.

On 8/5/2020 at 00:49, Kaalee said:

சுமோ அக்கா,
 சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது 
உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா  கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,

ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ 😂😃

On 8/5/2020 at 01:49, உடையார் said:

இது பேச்சலவில் மட்டுமே, யாரும் திரும்பி போய் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.

அடிக்கடி போய் வர அங்கு வரவேற்பிருக்கும், நிரந்தரமாக இருந்தால் பல பிரச்சனை தேடி வரும், நிம்மதியிருக்காது

இப்பிடி பயப்பிடித்தினால் எப்பிடி?? 

On 8/5/2020 at 10:11, Knowthyself said:

 

சுமோ அக்கா,

உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன்
நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள்!

உங்களுக்கு  உது சரிப்பட்டு வராது

 

நீங்களுமா ?????எங்கை இருந்து நீங்கள் எல்லாம் கிளம்பி வாறியள் எண்டு தெரியேல்லையே 😂😎

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 22:10, nedukkalapoovan said:

The permission is not necessary if the other citizenship is of another EU country or of Switzerland or if dual citizenship was obtained at birth.

  

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.  யேர்மன் வதிவிட உரிமை வைத்திருப்பவர் ஐரோப்பாவுக்கு வெளியே இன்நொரு குடியுரிமை வைத்திருந்தாள் யேர்மன் குடியுரிமை இராததாகும் என்றுதானே போட்டிருக்கு நெடுக்ஸ்.

பிறப்பால் பெறப்படக் கூடிய இரட்டை குடியுரிமைக்கு ஜேர்மனிய அனுமதி தேவையில்லை. சொறீலங்கா குடியுரிமை உங்களுக்கு பிறப்பால் வரப்பட்ட ஒன்று.

மேலும் விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டின்.. பிரித்தானியாவில் உள்ள ஜேர்மனி தூதரக உதவியை நாடலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 11:03, colomban said:

மனித மனம் விசித்திரமானது. மனித வாழ்க்கையும் நிகழ்வுகளால்/சம்பவங்களால் ஆக்கப்பட்டதே. இதை மனித மூளை ஏற்ருக்கொள்வதில்லை கொள்வதில்லை. இன்று இலங்கையில் இருக்கும் ஒரு 21 வயது வாலிபனிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் நான் எப்படியாவது ஏஜென்சிக்கு காசு கட்டி ஜெர்மன்போய் உழைத்து குடியுரிமை பெறவேண்டும் என்பர். அவரில் குற்றமில்லை அவருடைய சூழல் அவர்களை உந்திதல்ளுகின்றது. இதையே நான் 1980 இல் 8  வயது சிறுவனாக இருந்தபோது 
அம்மம்மாவின் வீட்டில் ஒரு 19 வயது யாழ் இளைஞர் வந்து வாடகைக்கு  இருந்தார் அவரிடம் நான் ஏன் நீங்கள் இங்கு வந்து தங்கியுள்ளீர்கள் என கேட்டபோது, தான் ஜெர்மன் போக வந்து கொழும்பில் தங்கி இருப்பதாக கூறினார்.40 வ‌ருடங்களுக்கு முன்.  அன்றும் அப்படித்தான் இன்றும் இப்படித்தான். எந்த ஒரு குடியுரிமையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததும் அல்ல தாழ்ந்தது அல்ல. உலகில் எல்லா மனிதரும் ஒரே மாதிரி சமமானவர்களே. 

வாழ்க்கையில் எல்லாம் ஒரு விடயத்தை அடையும் வரைக்கும்தான், அடைந்தபின் இது இவ்வளவுதானே என ஒரு சலிப்பு எற்படும். உங்களுக்கு இப்பொழுது அதுதான் எற்பட்டுள்ளது, இது எல்லோருக்கும் வயதுபோகும்போது ஏற்படும். வெளி நாடுகளில் வாழும் வய‌தானவர்களின் நிலையும் இதுதான் அவர்களின் மனமெல்லாம் இலங்கையில்தான் உள்ளது, உடல் மட்டும்தான் அங்குள்ளது. 

இப்பொழுது இருக்கும் சிங்கள இளம் சமூகம் மிகவும் மாறிவிட்டது. தமிழர்களுடன் நேசமாக பழகுகின்றது. இப்பொழுது இலங்கை முஸ்லீம்களை பற்றிதான் அவர்களுக்கு கவலை. 
சிங்கள அரசியல்வாதிகள் எப்பொழுதுமே இந்த இனவாதத்தைதான் கையில் எடுப்பார்கள். இதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதற்கு பயந்து எமது வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியாது.

உங்கள் முடிவு நல்ல முடிவு. வாழ்த்துக்கள். ஒரேடியாக போகாமல் ஒரு 3 அல்லது 6 மாதம் இலங்கையில் வாழ்ந்து பார்த்துவிட்டு சிறிது, சிறிதாக முடிவெடுங்கள். மேலும் சிங்கள இலக்கியவாதிகளுடன் தெடர்புகளை ஏற்படுத்திகொள்ளுங்கள், உங்கள் ஆக்கங்களை அவர்களுக்கு மொழிபெய‌ர்த்து காட்டுங்கள், மொழி தெரியாவிட்டாலும் அவர்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் பரஸ்பர புரிந்துண‌ர்வு ஏற்படும்.

 

நீங்கள் கூறுவது சரிதான். எனக்கு ஒருவித சலிப்பும் தான். இந்தக் கொரோனாவால் தான் இப்ப உடனே போக முடியாமல் இருக்கு. பெரிதாக நட்டம் வந்துவிடப் போவதில்லை. அங்கு இருப்பதற்கு வீடு இருக்கு. போய் இருந்துபார்த்து பிடித்தால் தொடரலாம். ஆனாலும் என் அம்மாவின் தங்கை இப்பவே வா என்று மகிழ்வாகக்  கூறினார். என் கணவரின் தங்கைக்கு பெரிதாக வரவேற்கவில்லை.

1 minute ago, nedukkalapoovan said:

  

பிறப்பால் பெறப்படக் கூடிய இரட்டை குடியுரிமைக்கு ஜேர்மனிய அனுமதி தேவையில்லை. சொறீலங்கா குடியுரிமை உங்களுக்கு பிறப்பால் வரப்பட்ட ஒன்று.

மேலும் விளக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டின்.. பிரித்தானியாவில் உள்ள ஜேர்மனி தூதரக உதவியை நாடலாம். 

அதுதான் நல்லது. நான் ஒருக்கா விசாரித்துப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்னும் நான் அவுசுக்குப் போகேல்லை. இந்த ஆண்டு திட்டமிட்டது. அந்தக் கொரோனாவாலை எல்லாம் பாள். அவுஸ் தூரம் என்பதும் ஒன்று. அடுத்தது எங்கள் வாழ்ந்த அயலில் எம்மவருடன் இருப்பதுதானே மகிழ்ச்சி.  ஒருவரின் பதிவுகளைப் பார்த்து அவர் பற்றி முடிவெடுக்க முடியாது.  😎

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

ஐயோ... அது தான் அவையள் காதல் கல்யாணம் பண்ணிட்டினமெல்லோ. அப்ப சீதனமா கொடுத்திருப்பினம்... 😄

51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ 😂😃

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kaalee said:

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:


அங்கு வீடுகள் விலை அதிகமா ?? எல்லாத்தையும் கூறுங்கள்😀

 

https://www.realestate.com.au/buy?rsf=sem:rea:brand:wa

மேலே உள்ள இணைப்பில் வீட்டு விலைகளை தேடிப்பார்க்கலாம்

வீடுகள் பல விலைகளில் இருக்கு, எங்கு வாழப்போகின்றீர்கள் என்பதை பொறுத்துதான் விலை,  எனக்கு இந்த இடங்களில் தான் ஏக்கர் கணக்கில் வாங்கி பிற்காலத்தை போக்க ஆசை : Western Australia - Bunbury, Busselton, Dunsbrough, Denmark, Margaret Rvier, ....;  தோட்டங்கள் பண்ணை வைப்பதற்கு நல்ல இடம், அமைதியாக வாழலாம்; அத்துடன் நல்ல மக்கள்;

நீங்கள் முதலில் முடிவெடுங்கள் இங்கு வந்து பார்த்தபின் எங்கு வாழப்போகின்றீர்களென்று, அதன்பின் பல தரவுகள் தரலாம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு சீதனமாய் வந்த வீடு எங்கை?   வித்துப்போட்டியளோ? 😁

அந்தக் கதை பெரிய கதை 😃

17 hours ago, nedukkalapoovan said:

ஐயோ... அது தான் அவையள் காதல் கல்யாணம் பண்ணிட்டினமெல்லோ. அப்ப சீதனமா கொடுத்திருப்பினம்... 😄

என் பேர் போட்டுத்தான் வீட்டு கேற் போட்டது முதல் வீட்டுக்கு. அப்ப அது என்னதுதானே😂

16 hours ago, Kaalee said:

உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும்  பழக்கபட்டுரிபியல் . 
                                   ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ .

நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.

மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று 

அதுவும் சரிதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

நானும் பெரிதாக்க கஸ்ரம் இருக்குமென்று எண்ணவில்லை

1 hour ago, உடையார் said:

https://www.realestate.com.au/buy?rsf=sem:rea:brand:wa

மேலே உள்ள இணைப்பில் வீட்டு விலைகளை தேடிப்பார்க்கலாம்

வீடுகள் பல விலைகளில் இருக்கு, எங்கு வாழப்போகின்றீர்கள் என்பதை பொறுத்துதான் விலை,  எனக்கு இந்த இடங்களில் தான் ஏக்கர் கணக்கில் வாங்கி பிற்காலத்தை போக்க ஆசை : Western Australia - Bunbury, Busselton, Dunsbrough, Denmark, Margaret Rvier, ....;  தோட்டங்கள் பண்ணை வைப்பதற்கு நல்ல இடம், அமைதியாக வாழலாம்; அத்துடன் நல்ல மக்கள்;

நீங்கள் முதலில் முடிவெடுங்கள் இங்கு வந்து பார்த்தபின் எங்கு வாழப்போகின்றீர்களென்று, அதன்பின் பல தரவுகள் தரலாம்

 

ஒன்லைன் இல் சரியான விலையாக இருக்கே.
எதற்கும் வந்து பார்த்துத்தான் முடிவு செய்ய வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.