Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்…

May 17, 2020

Covid-19-Quar.jpg

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார்.

யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

நீதவானின் கட்டளையை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிசார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் கைகளில் கையளித்துள்ளனர்.
 

http://globaltamilnews.net/2020/143076/

சொறிலங்கா சிங்கள அரச பயங்கரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் உட்பட 11 பேர் தனிமைப்படுத்தல் – நீதிமன்றம் பரபரப்பு கட்டளை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஸ், வரதராஜா பார்த்தீபன் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் ஊடாக பொலிஸாரால் கட்டளை பெறப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி நினைவேந்தல்களை அனுஷ்டித்ததாக குறித்த 11 பேரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கண்காணிக்கப்பட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கட்டளையிடுவதாக குறித்த நீதிமன்ற கட்டளையில் நீதிபதி பீட்டர் போல் தெரிவித்துள்ளார்.

  • கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
  • செல்வராஜா கஜேந்திரன்
  • விஸ்வலிங்கம் மணிவண்ணன்
  • கனரட்ணம் சுகாஷ்
  • நடராசா காண்டீபன்
  • வரதராஜன் பாா்த்திபன்
  • தனுசன்
  • கிருபாகரன்
  • கனகசபை விஸ்ணுகாந்
  • சுதாகரன்
  • தமிழ்மதி

ஆகியோருக்கே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்த அஞ்சலி நிகழ்வுகளின் எதிரொலியாக இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றமசுமத்தியுள்ளது.

  • FB_IMG_1589735842530.jpg?189db0&189db0
  • or1-1-696x934-1.jpg?189db0&189db0
 
 

 

 

எல்லோரும் சடடத்தை மதிக்க வேண்டும். இது சடடப்படி எடுத்த நடவடிக்கை என்பதால் சொல்வதட்கு ஒன்றுமில்லை. இடை வெளியை பின்பற்றி நிகழவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்; ‘தனிமைப்படுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்

Bharati May 18, 2020 சங்குப்பிட்டியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்; ‘தனிமைப்படுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்2020-05-18T07:45:50+00:00Breaking news, உள்ளூர்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் அங்கிருந்து தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் தடுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “தனிமைப்படுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


 
தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் முள்ளிவாய்காலுக்குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். இருந்த போதிலும், மேலிடத்துடன் தொடர்புகொள்வதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக தினக்குரலுக்குத் தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்த வாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்துப் பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்துப்பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகின்றது.

http://thinakkural.lk/article/42181

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-court-720x447.jpg

நீதிமன்றம் கட்டளை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த நீதிமன்றம் கட்டளையிட்டது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து, மன்றிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் நேற்று கட்டளையிட்டிருந்தார்.

யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ, தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதவான், 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணிக்கப்பட்டு மன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://athavannews.com/நீதிமன்றம்-கட்டளை-தொடர்ப/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

  •  
  • or1-1-696x934-1.jpg?189db0&189db0

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

இதில் என்ன பிழையை கண்டு பிடித்தீர்கள்.நடைமுறைக்கு ஏற்றவாறு எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நீதி வழங்கவும் நிதி வேண்டும் என்பதை புரியாதவரா நீங்கள்......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

Court-Order.jpg

11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்றது யாழ் நீதிமன்றம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

“தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உலைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக் கூடும்

அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், மீளாய்வு விண்ணப்பம் மீது கட்டளை வழங்கினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையிலான சட்டத்தரணிகளும் பொலிஸ் தரப்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்வைத்த நீண்ட சமர்பணத்தினை முன் வைத்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உள்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாள்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ. பீற்றர் போல் நேற்று கட்டளையிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் செயலாளர் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ , தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நீதிமன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்த நீதிவான் , 11 பேரையும் அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து 14 நாள்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை மீள அழைக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைக்கப்பட்டு மன்றிடம் விண்ணப்பம் விடுத்தனர். அதனடிப்படையில் வழக்கு திறந்த மன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அழைக்கப்பட்டே குறித்த கட்டளை வழங்கப்பட்டது.

http://athavannews.com/11-பேரையும்-வீடுகளில்-தனிம/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் உள்ள.... நீதவானின் உத்தரவிலேயே... 
எத்தனை எழுத்துப் பிழைகள்... உள்ளதை கவனித்தீர்களா?

ஆக  மிகப் பெரிய தவறு, கீழே... நீதிமான் நீதிமன்றம்  என்று எழுதுவதற்கு பதிலாக...
நிதிவான் நிதிமன்றம்   என்று  எழுதப் பட்டுள்ளது. 😲

பிள்ளை அவசரத்தில் டைப்பண்ணியிருப்பா, பெரிசு பண்ணி வேலைக்கு ஆப்பு வைச்சிடாதையுங்கோ... 😪

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் உள்ள நீதிபதிகளுக்கு என்ன பைத்தியமா..

சொறீலங்கா இராணுவம் அல்லது பொலிஸ் சொல்வதற்கு எல்லாம் ஆமாப் போடுவது என்றால்.. எதற்கு நீதிமன்றம். 

திட்டமிட்டு.. கொரோனா தனிமைப்படுத்தலை.. தவறாகப் பயன்படுத்தும் சொறீலங்கா இராணுவம் பொலிஸ் மற்றும் அரசுக்கு எதிராக நீதிமன்றம் எந்த கூற்றையும் பிறப்பிக்காதது கவலை அளிக்கிறது.

எந்த மருத்துவச் சான்றும் இன்றி..  அரச ஏவலுக்கு பொலிஸ் செய்யும் தில்லுமுல்லுக்கு ஏற்ப நீதிமன்றம் எப்படி கட்டளை பிறப்பிக்க முடியும்..???! 

இதில் நீதிபதியின் தவறும் உள்ளது.  இருந்தாலும் மீளாய்வு மனுவில்... அதனை வெளிப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகளை பாராட்டியே ஆக வேண்டும். 

1 hour ago, nedukkalapoovan said:

சொறீலங்காவில் உள்ள நீதிபதிகளுக்கு என்ன பைத்தியமா..

சொறீலங்கா இராணுவம் அல்லது பொலிஸ் சொல்வதற்கு எல்லாம் ஆமாப் போடுவது என்றால்.. எதற்கு நீதிமன்றம். 

திட்டமிட்டு.. கொரோனா தனிமைப்படுத்தலை.. தவறாகப் பயன்படுத்தும் சொறீலங்கா இராணுவம் பொலிஸ் மற்றும் அரசுக்கு எதிராக நீதிமன்றம் எந்த கூற்றையும் பிறப்பிக்காதது கவலை அளிக்கிறது.

எந்த மருத்துவச் சான்றும் இன்றி..  அரச ஏவலுக்கு பொலிஸ் செய்யும் தில்லுமுல்லுக்கு ஏற்ப நீதிமன்றம் எப்படி கட்டளை பிறப்பிக்க முடியும்..???! 

இதில் நீதிபதியின் தவறும் உள்ளது.  இருந்தாலும் மீளாய்வு மனுவில்... அதனை வெளிப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணிகளை பாராட்டியே ஆக வேண்டும். 

சரியான கருத்து. நீதியை தொலைத்துவிட்டு நிதிபதியாகிவிட்டதால் வந்த வினை.

திரு ஜயந்த குணரட்ன மற்றும் கிஷாலி, ஜெஹான் ஆகியோர் சுதந்திரத்துக்கு பின் இலங்கையின் நீதி துறையால் சிறுபான்மையினர் தொடர்பான வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் கூடுதலான சந்தர்ப்பங்களில் அந்த சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்ததை ஆதாரத்துடன் புத்தகமாக எழுதியிருந்தனர். (The Judicial Mind In Sri Lanka; Responding To The Protection Of Minority Rights By Jayantha de Almeida Guneratne, Kishali Pinto-Jayawardena and Gehan Gunatilleke). எனவே இந்த நீதித்துறை கலாச்சாரம் நன்றாக ஊறிப்போன ஒன்று.

இன்றைய இந்த உதாரணத்தில் சட்ட வல்லுநர்களை பாவித்து தீர்ப்பை இவர்கள் மறுபரிசீலிக்க வைத்துளார்கள். ஆனால் ஒரு தனிமனிதன் அதுவும் நிதி/பொருள் வளம் இல்லாத அப்பாவி தமிழ் குடிமகனால் அநீதிகளை சுமந்து வாழ்வுதான் ஒருவழி. இந்த நிலை மாறவேண்டும் என்ற காரணத்தால் தான் அன்று நார்வே பேச்சுவார்த்தை நேரத்தில் ஸ்தாபிக்கப்படட  சர்வதேச புலமையாளர் குழு (The International Independent Group of Eminent Persons (IIGEP)) பேராசிரியர் ஐவன் சேரர் (Prof. Ivan Sherer) சாட்சியாளர்களும் வழக்குத்தொடுநர்களுக்கும் நிதி மற்றும் சட்ட உதவிக்கு ஒரு கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தியிருந்தார்.

இதோபோல தான் அமெரிக்காவிலும் நீதிமன்றுகளின் தீர்ப்புகள் கறுப்பினத்தவருக்கு எதிரான இனவாதத்தை கூர்மைப்படுத்தியது என்று பல ஆய்வுகள் உள்ளன. இப்படியான அடிப்படை காரணிகளின் (root causes of a conflict) தாக்கத்தால் ஒடுக்கப்படட ஒரு இனம் தன்னை மீட்க எல்லாவழிகளையும் தேடி தனது பயணத்தை தொடர்கிறது. ஆனால் சிலர் மற்றவர்கள் கடந்தது வந்த அநீதிகளையும் அதன் விளைவுகள், எதிர்வினைகளை புறக்கணித்துவிட்டு எழுந்தமானமாக பேட்டி கொடுப்பதும் அதட்கு பின்னர் விளக்கம் கொடுப்பதிலும் தம்மை திருப்திபடுத்திக்கொள்வது தெரிகிறது. 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கல்  நேற்றுத் தெரியாத நீதிபதிக்கு இன்றுதான் தெரிந்திருக்கின்றது
எல்லாம் அவன் செயல்
அவன் என்றால் யாரும் இல்லை
அவனேதான்

அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம், பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கின்றோம் கஜேந்திரகுமார்

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன.

எனவே எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம் பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில்  இன்றுவரை நாம் சோரம் போகாமல் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாலும் எம்மை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதாலும் எமக்கு பல்வேறு முட்டுக்கடடைகளை போட்டு எம்மை அழிக்க துடிக்கின்றனர்.

அதற்காக சட்ட விரோதமாக சட்டத்தை பாவிக்கின்றனர், எனினும் எமது பயணம் ஓயாது. நாம் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பலரும் பல இடங்களில் நினைவு கூர்ந்தனர். எனினும் எமது கட்சியையும் எமது உறுப்பினர்களையும் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றினை காரணம் காட்டி அரசு அரசியல் பின்நோக்கத்திற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும் எமது கட்சியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மீது இராணுவத்தினரும் பொலிஸாரும் பல வழிகளில் அச்சுறுத்தல்களை பிரயோகித்துள்ளனர்.

சிலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களை இராணுவத்தின் ஊடாக சுடுவோம் எனவும் பொலிஸார் மிரட்டியுள்ளனர்.

எனவே எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம், பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம். மிக விரைவில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/அச்சுறுத்தல்களை-மேற்கொண/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

சம் சும் மாவை கும்பல் கூவித்திரிந்த நல்லாட்சி சனாதிபதி மைத்திரியும் கூட உட்கார்ந்திட்டார்.

அடிப்படையில் தமிழனை அழிப்பதில் அடிமைப்படுத்துவதில் சிங்களவர்கள் ஒத்தகருத்தில் இருக்கின்றனர்.

ஆனால்.. தமிழர்களின் விடுதலையில் உரிமை மீட்பில்.. தமிழர்களிடையே ஒத்த கருத்தில்லை.. ஒற்றுமையும் இல்லை.

இதுதான் தமிழர்களின் சாபக்கேடு. இதுவே அவர்களை சிங்களவர்களிடம்.. அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

 

Bild

கொரோனாவை காரணம் காட்டி தமிழர்களை  முள்ளிவாய்க்கால்  நினைவு நாளை அனுஷ்டிக்க விடவில்லை. அதே நேரம் போர் வெற்றி கொண்டாட எவ்வித தடையுமில்லை.

சிங்களவருக்கு ஒரு நீதி/சட்டம்
தமிழருக்கு ஒரு நீதி/சட்டம்

கண்ணுக்கு முன்னால் இவ்வளவு நடக்கும் போதும்  சிங்களத்துக்கும் சம்சும் கோஷ்டிக்கும் வக்காளத்து வாங்கும்  ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

97313238_879053229224828_1345837451129651200_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=WwFpwBSUOQ4AX-3yAZO&_nc_ht=scontent-frx5-1.xx&oh=84e6319bb803b34138c48d0822699485&oe=5EE9BA7C

98343036_879051832558301_4048866554702462976_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=XwIFo8k0vUkAX_4selV&_nc_ht=scontent-frt3-1.xx&oh=1698ac1be54a3017b7ccd717da9ad2a6&oe=5EE9D67D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.